நாகர்கோவில், ஜுன் 26- பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் மோடி அரசு பெண்களுக்கு 33 சத விகித இட ஒதுக்கீடுக்கான மசோதாவை நிறைவேற்றுவதில் ஏன் அக்கறை காட்ட வில்லை என கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை யில் ஞாயிறன்று (ஜுன் 25) மாலையில் நடை பெற்ற பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் பேசுகையில், “இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்கது, வாச்சாத்தி பெண் களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடு மைகள் தொடர்பான வழக்கை 16 ஆண்டு கள் நடத்தி 200 க்கும் மேற்பட்ட குற்றவாளி களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த வரலாறு. அந்த மாபெரும் இயக்கம் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் நந்தகோபால் அடித்து கொலை செய்யப்பட்டு அவரது மனைவி பாலியல் வல்லுறவுக்கு உள் ளாக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி போராடி அந்த குற்ற வாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத் தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இப்படி ஏராளமாக கூறிக் கொண்டே செல்லலாம். எந்த மூலையில் ஒரு பெண் பாதிக்கப் பட்டாலும் அதற்கு எதிராக போராடுகிறது இந்த இயக்கம். ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி னோம் என நின்று விடாமல் நீதியை பெற்றுத் தரும் வரை போராடுகிறது மார்க்சிய இயக் கம். இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிற போது பார்வையாளர்களாக பல கட்சிகள் இருப்பதைப் போல் அல்லாமல் அவர் களுக்கு நியாயம் கிடைக்க உணர்வுப்பூர்வ மாக இறுதிவரை போராடுகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசியதாவது:
பெண்களுக்கு எதிரான அநீதி, காலம் காலமாக நடத்தப்படுகிறது. மகாபார தத்தில், பஞ்ச பாண்டவர்கள் நாடு நக ரங்களை எல்லாம் வைத்து சூதாடுகிறார் கள். சொத்துக்களை எல்லாம் வைத்து சூதா டியவர்கள் கடைசியாக தங்களது மனைவி திரவுபதியை வைத்து சூதாடியதாக மகா பாரதம் சொல்கிறது. ஆண் சூதாடுவதற் கான பொருளாகவும் பெண் பயன்படுத் தப்படுகிறாள் என்பது தான் இதன் செய்தி. இராமாயணத்தில் சீதையை ராவணன் கடத்திச் சென்றபிறகு, மீட்டு வருகிறார்கள். நீண்ட நாட்கள் பிரிவுக்கு பிறகு கணவனை பார்க்க வருகிறாள். ஏக்கத்தோடு வந்த வளைப் பார்த்து ராமன் கேட்கிறான், அடுத்தவன் குடியிலே இத்தனை காலம் வாழ்ந்த நீ ஒரு யோக்கியமான பெண்ணா என்று கேள்வி எழுப்பி, தீக்குளிக்கச் சொல்லி கொச்சைப்படுத்திய காட்சி யைத்தான் இராமாயணம் சித்தரிக்கிறது. அடித்தட்டில் இருக்கும் சாதாரண பெண் மட்டுமல்ல, அதிகாரத்தின் உச்சத் தில் இருக்கும் பெண்கள் கூட ஆணா திக்க கொடுமைகளுக்கு தப்பவில்லை. தமிழ்நாட்டின் சமீபத்திய நிகழ்வு, காவல்துறை கண்காணிப்பாளராக பணி யாற்றிய ஒரு பெண் அதிகாரி காவல்துறை யின் உயர் அதிகாரியான டிஜிபியால் பாலி யல் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப் பட்டார். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியவர்- பெண்களுக் கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டி யவர். அப்படிப்பட்ட உயர்ந்த பொறுப்பில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி மீதான அந்த புகாரை பதிவு செய்வதற்கே பெரும் சிர மத்தை அந்த பெண் அதிகாரி அனு பவித்தார். தற்போது அந்த வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டி ருக்கிறது. அதிகாரியாக உள்ள பெண் காவல் கண்காணிப்பாளருக்கே இதுதான் நிலைமை என்றால் சாதாரண பெண்களின் நிலைமை என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றப் போவதாக கூறுகிறார்கள். ராஜ்நாத்சிங் சென்னைக்கு வந்தபோது இதை தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் மோடியும் ராஜ்நாத் சிங்கும் சட்டமன்றங்கள், நாடா ளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சத விகித இட ஒதுக்கீடுக்கான மசோதாவை நிறைவேற்றுவதில் ஏன் அக்கறை காட்ட வில்லை? பெண்கள் பற்றிய உங்களது பார்வையே அந்த சட்டத்தை திரும்பி பார்க்கவிடாமல் தடுக்கிறது. பெண்கள் தொடர்பான மனுநீதி கோட்பாடு தானே அதற்கு காரணம்? மக்களவையில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள சூழ் நிலையில் மாநிலங்களவையில் பாஜக வால் மிக எளிதாக அந்த சட்டத்தை நிறை வேற்றிவிட முடியும். பெண்களை அதிகா ரப்படுத்த முடியும். ஆனால், உங்களை வழி நடத்தும் மனுநீதி கோட்பாடுதான் ஒன்பது ஆண்டுகளாக அந்த மசோதாவை கிடப் பில் போட வைத்துள்ளது. ஆணுக்குப் பெண் அடிமை என்பது எல்லோரது சிந்தனையிலும் எழுதப்படாத நீதியாக உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் மநு எழுதி வைத்தான், ஒரு பெண் ஆணைச் சார்ந்துதான் இருக்க வேண்டும் என்று. ஆண் இல்லாவிட்டால் பெண் இருக்க முடியாது; பிறப்பிலே தந்தைக்கு அடிமையாக, வாழ்க்கையிலே கணவனுக்கு அடிமையாக, இறுதியாக மகனுக்கு அடிமையாக என ஆணைச் சார்ந்துதான் பெண் இருக்க வேண்டும் என்கிற மநு நீதி இன்றைக்கும் சிந்த னையில் ஏற்றப்பட்டிருக்கிறது. இத்தகைய மநுவாதத்தை தூக்கிப் பிடிக்கும் ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் செயல்படும் பாஜக ஆட்சியில் முள்ன னெப்போதும் இல்லாத வகையில் பெண்கள் மீதான கொடுமைகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவேதான், பெண்களின் உரிமை களைப் பாதுகாக்க இந்த மாநாடு நடத்தப் படுகிறது. பெண்களுக்கு சமத்துவ உரிமை வரவேண்டும். பாரதி பாடியது போல் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வ தும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று ஆண் பெண் சமத்துவ சமுதா யத்தை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இந்த மாநாட்டை நடத்து கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.