articles

img

வங்கத்து புரட்சிக் கவிஞர்!

வங்கதேசத்தின் பர்த்வான் மாவட்டம் சுருளியா (churulia) கிராமத்தில் (தற்போது இந்தியாவின் மேற்குவங்கம்) ஒரு ஏழ்மையான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் காஜி நஸ்ருல் இஸ்லாம்.  இவர் கவிஞர், இசைக்கலை ஞர் மற்றும் புரட்சியாளர் என பன்முகத் திறமை கொண்டவர். இவரது கவிதைகள், பாடல்கள் இஸ்லாம் மற்றும் இந்துமத தத்து வத்தை ஆராய்ந்திருக்கின்றன. வங்கதேசத்தின் தேசியக் கவிஞரான இவரது, மதம், ஆன்மீகம், மனிதநேயம் மற்றும் புரட்சிகரமான படைப்புகள் பலரையும் ஈர்த்தன. இவர் படைத்த 4,000 பாடல்கள் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் மிகவும் பிரபலமானவை. இப்படைப்புகள் ‘நஸ்ருல் கீத்’ என்ற பெயரில் வெளிவந்தன. முதல் உலகப் போரின் போது பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இவர், பிறகு இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார்.

1922 இல் ‘பித்ரோஹி’ என்ற தலைப்பில் வங்காள மொழியில் புரட்சிக் கவிதை ஒன்றை எழுதினார். இவரது படைப்புகளில் இது மிகவும் பிரபலமானதாக கருதப்பட்டது. பின்பு, அதே ஆண்டு ஆக.12 இல் ‘தூமகேது’ என்ற இதழை துவக்கினார். இது அவரது புரட்சிகரப் படைப்புகளுக்கு சரியான தளமாக அமைந்தது. ஆங்கிலேய அரசு இவர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு களை சுமத்தி, 1923 ஜனவரி 23 அன்று கைது செய்தது. சிறையி லிருந்த காலக் கட்டத்தில் நஸ்ருல், பல பாடல்கள், கவிதை களை இயற்றினார். ஆனால் அவை பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டன. சிறந்த புரட்சிக் கவிஞராகத் திகழ்ந்தார் நஸ்ருல். சிறையிலிருந்து வெளி வந்தபின், ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட மக்களை ஊக்குவித்தார். இதற்காக நஸ்ருல், புரட்சியாளரும், கம்யூனிஸ்ட் இயக்க ஸ்தாபகத் தலைவர்க ளில் ஒருவருமான  முசாபர் அகமதுவுடன் இணைந்து சோசலிச அரசியல் கட்சி (Socialist Political Party) ஒன்றை ஏற்படுத்தி னார்.