செங்கல்பட்டு, அக்.7- அடையாள அரசியலை புறக்கணித்து வர்க்க ஒற்றுமையுடன் செயல்பட்டு கோரிக் கைகளை வென்றெடுப்போம் என்று அகில இந்திய அரசுஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஸ்ரீகுமார் கூறினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 40ஆவது மாணிக்க ஆண்டு மாநில பிரதி நிதித்துவப் பேரவை செங்கல்பட்டில் சனிக் கிழமை (அக். 7) மாநிலத் தலைவர் மு.அன்பரசு தலைமையில் நடைபெற்றது. வரவேற்புக் குழுத் தலைவர் என்.இளங்கோ வரவேற்றுப்பேசினார். பேரவை யை துவக்கிவைத்து ஸ்ரீகுமார் பேசியதாவது: உலக முதலாளித்துவத்தின் புதிய தாராள மயக் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட பண வீக்கம், தினசரி நாம் பயன்படுத்தும் நுகர்வுப் பொருட்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட் களின் விலையில் கட்டுப்பாடற்ற உயர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணவீக்கம் தொழில் துறையில் நெருக்கடியை ஏற்படுத்துவதோடு பொருளாதார வீழ்ச்சியை அதிகப்படுத்தி வருகிறது. ரஷ்யா- உக்ரைன் போரானது உலகப் பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறது. இதனால் கொரோனா காலத்தையடுத்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள போராட வேண்டியுள்ளது. இந்த மந்த நிலையின் சூழ்நிலையை சமாளிக்க முதலாளித்துவ நாடுகள் ஊதிய குறைப்பு, மக்களின் வேலை வாய்ப்பை குறைப்பது, வட்டி வீதங்களை உயர்த்துவது மற்றும் பொருட்களின் மீதான வரியை உயர்த்துவது போன்ற தொழி லாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றன.
இதற்கு எதிராக, அந்தந்த நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் தலைமையில் பல்வேறு துறைகளில் வேலைநிறுத்தங்கள் உள்ளிட்ட வலுவான போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. ஒன்றிய அரசில் 10 லட்சம் பணியிடங்களும், மாநில அரசுகளில் சுமார் 30 லட்சம் பணியிடங்களும் காலியாக உள்ளன. கடைநிலை பணியிடங்கள் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட்டன. உயர் பதவிகளில் கூட காண்ட் ராக்ட் முறையில் பணி நியமனங்கள் நடை பெறுகின்றன. ஒன்றிய அரசு அரசுத்துறைகளை மேலும், மேலும் சுருங்கச்செய்யும் திட் டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. புதிய தாராளமயக் கொள்கைகள் அரசின் சேவைத் துறைகளை மிகவும் சுருங்க வைக்கின்றன. அரசு நிறுவனங்களை, பொதுத்துறை நிறு வனங்களை நடத்துவது தனது கடமையல்ல என ஒன்றிய அரசு கூறுகிறது. இது புதிய தாராளமய சீர்திருத்தங்களின் பொதுவான அணுகுமுறை மற்றும் அடிப்படைக் கொள்கையாகும். பெரும்பாலான மாநில அரசு கள் நிரந்தரப் பணி நியமனங்களை நிய மித்து வந்தன. தற்போது அதற்கு பதிலாக தொகுப்பூதியம் , மதிப்பூதியம் , வெளிமுகமை முறையில் பணியிடங்களை நிரப்பி வரு கின்றன. இதனால் மக்களுக்கான சேவை அழிக் கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு தரமான சேவைகளை வழங்குவது ஒன்றிய, மாநில அரசுகளின் கடமையாகும். தேசத்தில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. படித்த இளைஞர்களுக்கு அரசு வேலைகள் மறுக்கப்படுகின்றன. பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாக் கப்பட்ட போது கடந்த காலங்களில் தொழிலா ளர்களின் போராட்டங்களின் மூலம் பெறப்பட்ட அனைத்து தொழிலாளர் உரிமை களும் பறிக்கப்பட்டு வருகின்றன. தேசிய பணமயமாக்கல் திட்டம் மூலம் அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் அதன் சொத்துக்களும் தனியார் வசம் ஒப்ப டைக்கப்படுகின்றன. அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறைகள் மற்றும் அதன் சொத்துக் களை பாதுகாப்பது நமது பிரதான கடமை யாகும்.
எந்தவொரு நியாயமான காரணமுமின்றி என்எப்பிஇ, எஎப்பிஇ, கிளாஸ் 3, மற்றும் இஸ்ரோ ஊழியர்களின் சங்கத்தின் அங்கீ காரத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுள் ளது. ஒன்றிய அரசும் பல மாநில அரசுகளும் ஜனநாயகப் பூர்வமாக செயல்படும் ஊழி யர்களின் சங்கங்களுக்கு ஆதரவாக இல்லை. அவர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்களின் சங்கங்களை அகற்ற விரும்பு கிறார்கள். இவற்றில் இத்துறைகளில் பணி புரியும் தொழிற் சங்கங்களின் பொறுப்பு மிகப் பெரியது. தொழிலாள வர்க்க அமைப்புகளிட யே வர்க்க உணர்வு இல்லாத நிலையில் மிகப்பெரிய கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு எதிரான எதிர்ப்பை கொண்டுவர இயலாது. ஏனெனில், கார்ப்பரேட் நிறுவனங்கள் அர சாங்கங்களின் ஆதரவை பெற்று வளர்ந்து வருகின்றன. இந்தப் பின்னணியில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் மற்றும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து வரும் நவம்பர் 3 ஆம் தேதி ஏழு கோரிக்கை சாசனத்தை முன்வைத்து தலைநகர் தில்லியில் பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். புதிய ஒய்வூதிய சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். மருத்துவம், சுகாதாரம், கல்வி, தபால் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காண்ட்ராக்ட், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும். ஒன்றிய, மாநில அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும். தொழிற்சங்க உரிமைகள் உத்தர வாதப்படுத்தப்பட வேண்டும் . என்எப்பிஇ, எஎப்பிஇ, கிளாஸ் 3, மற்றும் இஸ்ரோ ஊழியர் சங்கம் என பறிக்கப்பட்ட தொழிற்சங்க அங்கீ காரங்களை திரும்ப வழங்கிட வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். 8 ஆவது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும். நிலுவையில் உள்ள பஞ்சப்படி மற்றும் இதர படிகளை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெறவுள்ளது.
தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்த ஒன்றிய ஆட்சியாளர்கள் மதம், சாதி மற்றும் அடையாள அரசியலை பயன்படுத்துகிறார் கள். அவற்றை புறக்கணித்து வர்க்க ஒற்று மையை பாதுகாத்து ஒன்றுபட்டு செயல்பட்டு கோரிக்கைகளை வென்றெடுப்போம். அதற்கு அரசு ஊழியர்களின் இந்த பேரவை உதவும். இவ்வாறு ஸ்ரீகுமார் பேசினார்.
துவக்க நிகழ்ச்சிகள்
முன்னதாக தோழர்.எம்.ஆர்.அப்பன் பயிற்சி மைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கொடியை மாநிலத் தலைவர் மு.அன்பரசு, அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் கொடியை பொ துச் செயலாளர் ஏ.ஸ்ரீகுமார் ஆகியோர் ஏற்றி வைத்தனர். வேலை மற்றும் ஸ்தாபன அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம், வரவு- செலவு அறிக்கை மாநில பொருளாளர் மு.பாஸ்கரன் ஆகியோர் சமர்ப்பித்தனர். பேரவையை வாழ்த்தி தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்க தலைவர் கு.வெங்க டேசன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில் ஆகியோர் பேசினர். தீர்மானங்களை முன்மொழிந்து மாநிலத் துணைத் தலைவர்கள் மொ.ஞானத்தம்பி, ஆ.பெரியசாமி, சி.எஸ்.கிறிஸ்டோபர், துணைப் பொதுச் செயலாளர்கள் என்.வெங்க டேசன், மு.சீனிவாசன், வெ.சோமசுந்தரம், மாநிலச் செயலாளர்கள் சா.டானியல் ஜெய்சிங், ச.அம்சராஜ், சா.கோதண்டபாணி, அண்ணா குபேரன் ஆகியோர் பேசினர்.
மகளிர் சிறப்பு அமர்வு
இதனைத் தொடர்ந்து மாநில மகளிர் துணைக்குழு அமைப்பாளர் சி.பரமேஸ்வரி தலைமையில் மகளிர் சிறப்பு அமர்வு நடைபெற்றது. துணைப் பொதுச் செயலா ளர் தெ.வாசுகி, மாநில துணைத் தலைவர் கே.பழனியம்மாள், மாநில துணைத் தலைவர் எம்.செல்வராணி, மாநில செயலாளர் உ.சுமதி, ச.ஹேமலதா, இணைச் செயலாளர் எம்.கிரிஜா ஆகியோர் கருத்துரை வழங்கி னர். முன்னதாக மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் டி.ஜெயசுதா வர வேற்றார். செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் கே.பூங்குழலி நன்றி கூறினார்.