தலைநகர் சென்னையில் உள்ள கலாஷேத்ராவில் நடந்த பாலியல் துன்புறுத்தல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மதுரையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட மூன்று கல்வி நிறுவனங்களில் மாணவிகள் தங்கள் மௌனத்தை கலைத்து ‘மீ டூ’ (நானும் பாதிக்கப்பட்டேன்) என்று சொல்ல ஆரம் பித்திருக்கிறார்கள். கல்வி கற்பிக்கும் பேரா சிரியர்களே இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருப்பதும், குறிப்பாக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள வியல் துறையின் தலைவரே மாணவி களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள் ளாக்கி இருப்பதும் தான் இதன் உச்ச கட்டம். இந்த சம்பவங்களில் மாணவிகள் புகாரளித்தும் நிர்வாகம் கண்டு கொள்ளா மல் இருந்ததும், இதற்காக அமைக்கப் பட்ட உள் புகார்கள் குழுக்களின் அவல நிலையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
விசாகா/உள்புகார்கள் குழு உருவான பின்னணி
ராஜஸ்தானைச் சேர்ந்த பாவ்ரி தேவி, மாநில அரசால் உருவாக்கப்பட்ட பெண்கள் மேம்பாட்டு திட்டத்தில் ஒரு பணியாளர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஆயிரக்கணக்கில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறும். மாநில அரசு, பாவ்ரி தேவி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பணியாளர்களுக்கு, குழந்தை திருமணம் நடந்தால் காவல் துறை உதவியுடன் அதை தடுத்து நிறுத்த உத்தரவிட்டது. ஆதிக்க சாதியைச் சேர்ந்த குடும்பத்தில் ஒன்பது மாத பெண் குழந்தைக்கும் ஒரு வயது ஆண் குழந்தைக் கும் நடக்கவிருந்த குழந்தைத் திரு மணத்தை காவல்துறை உதவியுடன் பாவ்ரி தேவி தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர் ஐவர், பட்டப் பகலில் பாவ்ரி தேவியை கும்பல் பலாத்காரம் செய்தனர். தனக்கு நேர்ந்த கொடுமைக்கு புகார் கொடுக்கவே அவர் கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டி இருந்தது. இதற்கிடையில் பாவ்ரி தேவி தனது பணியைச் செய்ய முற்படும்போதுதான் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டார் என்பதை அடிப்படையாக வைத்து, விசாகா உள்ளிட்ட ஐந்து அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில், பணி யிடங்களில் நடைபெறும் பாலியல் துன் புறுத்தலை தடுத்து நிறுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கக்கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்தன. முதன்முறை யாக, பணியிடங்களில் பாலியல் துன்புறுத் தல் என்பது ஒரு குற்றம் என்றும் பெண்கள் பணி செய்யும் அடிப்படை உரிமையை பாதிக்கிறது என்றும் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையிலான அமர்வு வர லாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. (Vishaka & others vs State of Rajasthan & others. 1997). அரசாங்கம் சட்டம் இயற்றும் வரை பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுப்ப தற்கு ஏதுவாக கீழ்க்கண்ட வழிகாட்டு நெறி முறைகள் வழங்கப்பட்டன.
விசாகா வழிகாட்டு நெறிமுறைகள்
பத்து பெண்களுக்கு மேல் வேலை செய்யும் இடத்தில் உள்புகார்கள் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அந்த உள் புகார்கள் குழுவின் தலைவராக அங்கு வேலை செய்யும் பெண் உயர் அதிகாரியை நியமிக்க வேண்டும்; அந்தக் குழுவில் 50 சதவிகிதம் பெண் உறுப்பினர்கள் கண்டி ப்பாக இருக்க வேண்டும். இந்தக் குழுவில் மாதர் அமைப்பு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரும் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும். பாலியல் வன்குற்றங்கள் பற்றி யும் உள்புகார்கள் குழுவை பற்றியும் அந்த பணியிடத்தில் வேலை செய்யும் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன் பிறகு 2013இல், ‘பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவர்த்தி) சட்டம்’ இயற்றப்பட்டது. அந்த சட்டம் இன்னும் விரிவாக, பணியிடம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன; உள்புகார் குழுக்கள் எப்படி அமைக் கப்பட வேண்டும்; எப்படி செயல்பட வேண்டும்; நிர்வாகத்தின் கடமை என்ன என்பதையும் விளக்குகிறது.
பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன?
சட்டம் பாலியல் துன்புறுத்தலை கீழ்க் கண்டவாறு வரையறை செய்கிறது:
பிரிவு.2(n) பாலியல் துன்புறுத்தல் என்பது விரும்பத்தகாத, பாலியல் ரீதியான நடத்தைகளை (நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ) உள்ள டக்கியதாகும்: (i) உடல் ரீதியான தொடர்பு மற்றும் அதற்கான முயற்சி கள் (sexual advances) ; (ii) பாலி யல் ரீதியான கோரிக்கைகளை நிறை வேற்ற கட்டாயப் படுத்துதல்; (iii) பாலி யல் வண்ண கருத்துக்கள்; (iv) ஆபாச படங்களை காட்டுதல்; (V) வேறு எந்த விரும்பத்தகாத உடல் ரீதியான, வாய்மொழி அல்லது வாய்மொழி அல்லாத பாலியல் ரீதியான நடத்தை.
இது போன்ற பாலியல் துன்புறுத்தல் நடக்கும் போது அந்த பெண்ணிடம் தன்னு டைய பாலியல் தேவையை பூர்த்தி செய்தால் மட்டுமே அவளுக்கு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று உறுதி வழங்குவதோ, தனக்கு உடன்படாவிட்டால் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று மிரட்டுவதோ வேலை செய்ய முடியாத ஒரு எதிர்மறை/விரோதமான பணிச் சூழலை உருவாக்குவதோ குற்றமாகும். சட்டம் இவ்வாறாக இருக்க, பாலியல் துன்புறுத்தல் என்றால் விருப்பமில்லாத தொடுதல் மட்டுமே ; பாலியல் ரீதியான வாய் வார்த்தைகள் ஒரு பெரிய குற்ற மல்ல என்ற பார்வை மக்களிடையே மட்டு மல்ல, சட்டத்தை செயல்படுத்தும் அரசு இயந்திரங்களிடமே - அதாவது காவல் துறை, சட்டத்துறை, நீதித்துறையிலும் நிலவி வருகிறது. சில மோசமான உதாரணங்களைக் குறிப்பிடலாம். இவை பாலியல் ரீதியான வெறும் வாய் வார்த்தைகளா?
கல்வி நிலையம்.1
‘உன்னோட முகம் பார்த்து பேசவே தோண மாட்டேங்குது. அந்த அளவுக்கு உன் உடம்பு அழகா இருக்கு’ ‘அழகா ஒல்லியா இருக்க, மேட்ரி மோனியில் போட்டா உன்னை அள்ளி கொண்டு போயிருவான்’ ‘பெண் குழந்தை பிறக்க லேகியம் இருக்கு. ஆண் குழந்தை பிறப்பது பசங்க கையில தான் இருக்கு. அதுக்கு ஆவேசமா செய்யணும்’ ‘என் தம்பி ஐபிஎஸ், அண்ணன் ஐ ஜி, என் குடும்பத்தில் எஸ்பி இருக்காங்க. என்னை எதுவும் செய்ய முடியாது’ ‘இது என் மகனோட போட்டோ. உன்ன மாதிரியே அழகான பொண்ணு பார்த்து தர முடியுமா? ’ ‘நீ பத்து இட்லி சாப்பிடுவியா?? இந்த வயசுல உனக்கு ஷேப் இல்ல. உடம்பு மொத குறை’ ‘நீ ஜிம்முக்கு போறியா, உன்னோட வயிறு, பின் பக்கம் எல்லாம் குறைஞ்சி இருக்கு’ ‘வீட்ல பாத்து கல்யாணம் பண்ணி வச்சா லும் ‘அதைத்தான்’ செய்யப் போறீங்க! காதலிச்சு கல்யாணம் பண்ணாலும் ‘அதைத்தான்’ செய்வீங்க!’ ‘புதுசா துப்பட்டாவை ஒரு பக்கமா போட்டு இருக்க! சரி போட்டுக்க! உனக்கு அங்க என்ன இருக்கு மறைக்கிறதுக்கு!’ (45 நிமிடம் எடுக்கக் கூடிய வகுப்பில் 40 நிமிடங்களும் இதே போன்ற பாலியல் உறவு சம்பந்தமான பேச்சுக்களும் பெண் ணின் அங்கங்களை பற்றிய கமெண்ட்டுக ளும் தான் இடம்பெறுகின்றன)
கல்வி நிலையம். 2
‘உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்கள் வாழ்க்கையில் நன்றாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.’ ‘உங்கள் பேப்பர் திருத்தும் போது 100 மார்க் போட வேண்டும் என்று என் கை விரும்புகிறது.’ ‘என் சப்ஜெக்ட்டில் மட்டும் ஃபெயில் ஆகி விடாதீர்கள் என்னால் தாங்கவே முடியாது.’ ‘உன்னோடு கதை பேச எனக்கு ரொம்ப பிடிக்கிறது . நான் உன் எதிர் காலத்திற்கு பொறுப்பு எடுத்துக் கொள்கி றேன். என்னுடைய மனைவி ரெண்டு சிசேரி யன் ஆபரேஷன் செய்து கொண்டவர். அவளுடன் உறவு வைத்துக் கொண்டால் அவளுக்கு வலி வரும்.’ ‘எத்தனை பெண்களை வேண்டுமா னாலும் என்னால் கரெக்ட் செய்ய முடியும். ஆனால் உன்னைப் போன்ற ஒரு மாணவியிடம் எப்படி மனதை பறி கொடுத்தேன் என்று தெரியவில்லை.’ ‘என் மனைவியை விவாகரத்து செய்து விடுகிறேன். இல்லையென்றால் இரண்டு மனைவியுடன் வாழ்வது என்பது தவறல்ல. உனக்கு ஒரு வீடு எடுத்து இங்கு உன்னுடன் வாழ்கிறேன்.’ ‘எனக்கு உயர் பதவியில் உள்ளவர்கள் பலரை தெரியும். எட்டு வீடு வாடகைக்கு விட்டு இருக்கிறேன். நான் உயர்ந்த ஜாதியை சேர்ந்தவன் நீ கூட வெறும் லோக்கல் தான். இருந்தாலும் உன் மீது எனக்கு பிரியம் அதிகம். (இவ்வாறு பேசுவது தனக்கு பிடிக்க வில்லை என்றும் அதை நிறுத்தி விடுங்கள் என்று சொன்ன பிறகு) ‘என் வாழ்க்கையில் ஒரு முறை யாவது உன்னை ரேப் செய்யாமல் விட மாட்டேன்.’
‘நீ எங்கு இருந்தாலும் அங்கு வந்து உன்னை கடத்தி, காட்டுக்குள் தூக்கிப் போய் விடுவேன். அங்கு சேர்ந்து வாழ்வோம்.’ ‘என்னை விட்டு விலகினால் உனக்கு சாவுதான்.’ ‘இது புலிவாலை பிடித்த கதை தான்.’ ‘டீச்சருக்கு பவர் அதிகமா’ ‘ஸ்டூடண்டு க்கு பவர் அதிகமா, பார்த்து விடுவோம்.’ ‘ஜனவரி மாதம் ஒரு தேதி சொல்வேன். அந்த தேதியில் ஒரு ஹோட்டலில் ரூம் புக் செய்வேன். நீ ஒரு முறை வந்து விட்டால் பிறகு விட்டு விடுவேன். வர வில்லை என்றால் என்னுடைய வேறு ரூபத்தை நீ பார்க்க வேண்டி இருக்கும்.’ (தொடர்ந்து கல்லூரியில் தினசரி பார்க்கும்போது ஹோட்டலில் சந்திப்ப தற்கு எத்தனை நாட்கள் இருக்கிறது என்பதை நினைவுபடுத்தியிருக்கிறார்) ‘இன்னமும் 28 நாட்கள் இருக்கிறது... இன்றிலிருந்து மூன்று வாரத்திற்குள் அந்த நாள் வந்துவிடும். இரண்டு வாரத்திற் குள் நான் உன்னை சந்திக்க போகிறேன்.’ - மேலே குறிப்பிடப்பட்ட பேச்சுகள், பாலியல் வக்கிர வார்த்தைகள் மட்டுமல்ல; தணிக்கைக்கு உட்படாத ஒரு மூன்றாம் தர ஆபாசப் படத்தில் வரும் அரு வருப்பான வசனங்கள் போல தோற்ற மளிக்கிறது.
‘அவர் ரொம்ப நல்லவர்’
பொதுவாக பாலியல் ரீதியான குற்றச் சாட்டுகளுக்கு சில பள்ளி ஆசிரியர்களோ கல்லூரி பேராசிரியர்களோ உள்ளாகும் போது அவர் ரொம்ப நல்லவர்; 100 சதவீதம் ரிசல்ட் கொடுத்தவர்; நன்றாக பாடம் நடத்துவார்; மாணவ- மாணவி களை கண்டிப்புடன் நடத்துபவர்; அவர் இப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார் என்ற கருத்துக்கள் சமூகத்தில் வெளிப் படுகின்றன. வெளியில் பார்ப்பதற்கு தன்னை நல்லவராக காட்டிக் கொள்பவர் இதுபோன்ற பாலியல் ரீதியான குற் றங்களை செய்ய மாட்டார் என்பது என்ன நிச்சயம்; இது போன்ற பார்வை, பாதிக்கப்பட்ட பெண்கள் மீது தொடுக் கப்படும் வன்முறையை குறைத்து மதிப்பி டுவதோடு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றத்தை மேலும் மேலும் செய்ய கொடுக்கப்படும் ஊக்கமாக மாற வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மௌனம் உடைத்த மாணவிகள்
மதுரை காமராசர் பல்கலைக்கழ கத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் துறைத் தலைவரின் பாலியல் துன்புறுத்தல் எல்லை மீறிப் போகவும், பதிவாளரிடம் நேரில் மனு கொடுத்து இருக்கிறார்கள். அந்த மனுவில், பாலியல் துன்புறுத்தல் மட்டுமல்லாமல் அவர் ஓர் ஆசிரிய ராக தனது பணியை முறையாக செய்யா மல் இருந்தது தொடர்பாகவும் குறிப் பிட்டிருக்கிறார்கள். நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில் துணைவேந்தரைச் சந்தித்திருக்கிறார்கள். பின்னர் உள் புகார்கள் குழு விசாரணைக்கு பிரச்ச னையை உட்படுத்தி இருக்கிறார்கள். உள்புகார்கள் குழுவில் யார் உறுப்பி னர்கள் என்பதே பல மாணவிகளுக்கு தெரியவில்லை. எந்த விளம்பரமும் நிர்வாகத்தால் செய்யப்படவில்லை. ஒரு காலகட்டத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் உள்புகார்கள் குழுவுக்கு ஒரு ஆண் பேராசிரியரை, தலைவராக நியமித்த தாக தெரிகிறது. தற்போது கூட குற்றம் சாட்டப்பட்ட துறைத் தலைவர் பேராசிரி யர் என்றும் உள்புகார்கள் குழுவில் இருப்ப வர்கள் உதவி பேராசிரியர்கள் என்றும் பதவியில் தனக்கு மேலே இருப்பவர் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டை அவர்கள் எப்படி சுதந்திரமாக விசாரிக்க முடியும் என்றும் இந்தச் சம்பவங்களில் தலையீடு செய்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மற்றொரு கல்லூரியில், தன் உயி ருக்கே ஆபத்து வரும் சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட பெண், ஒரு பெண் பேராசி ரியரிடம் நடந்ததைச் சொல்ல, அவருடைய அறிவுறுத்தலின் பேரில் கல்லூரி முதல்வரிடம் இது குறித்துப் பேச, அவர் ஆலோசனையின் பேரில் நிர்வாகத்தில் மற்றொரு பொறுப்பில் உள்ளவரிடம் விளக்க, அவர் இன்னொருவரை கைகாட்ட, அங்கும் போய் முறையிட்ட பின்னர் உள்புகார்கள் குழு விசாரணை என்ற பெயரில் ஒரு ஆண் பேராசிரியர் மட்டும் விசாரித்துள்ளார். இதிலேயே சுமார் ஒரு மாத காலம் அலைக்கழிக்கப்பட்டு படிக்க முடியாமல் மனரீதியான அழுத்தத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்கள் ஆளாகி இருக்கிறார்கள். இந்தக் கல்லூரியில் மேலும் ஒரு வருடம் படிக்க வேண்டி இருப்பதால் தங்கள் கல்லூரி பெயரை குறிப்பிட வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் கேட்டுக் கொண்டார்கள்
குற்றம் சாட்டப் பட்டவர்களின் ஆத்திரம்
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில், முதன்முதலாக தன்னைப் பற்றிய ஒரு புகார் நிர்வாகத்திற்கு கொடுக் கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்ட துறைத் தலைவர் அனைத்து மாணவிகளையும் கட்டாயப்படுத்தி, தான் நல்லவர் வல்லவர் என்று புகழ்ந்து கடிதம் எழுதி வாங்கி இருக்கிறார். கவுரவ வருகையாளராக பணிக்கு வருகிற உளவியல் நிபுணரான ஒரு பெண் மூல மாக மிரட்டியுள்ளார். பிரச்சனையை வெளி யில் சொல்ல வாய்ப்பு இருக்கும் மாணவி கள் பட்டியலை உருவாக்கி அவர்களது பெற்றோர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு “உங்கள் பெண் முன்னுக்கு வருவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சகவாசம் சரி யில்லை; பையன்களோடு சுற்றுகிறாள்” என்று அவதூறாகக் கூற, துறைத் தலை வரை நம்பிய பெற்றோர்கள், தங்கள் மகள்கள் உண்மையைக் கூறிய போதும் கூட, காது கொடுத்து கேட்காமல் கண்டிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதையும் தாண்டி, வழக்குப் பதிவு செய்த பிறகு, துறைத் தலைவருக்கு ஆதரவாக சாட்சி களை கலைக்க அந்த பெண் உளவியல் நிபுணர் துணை போயிருக்கிறார். இத்துடன் நின்றுவிடவில்லை. இந்த விஷயத்தைப் பற்றி தொடர்ந்து பத்திரிகையில் எழுதிய பத்திரிகையாளர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி அவர்களுடைய நிர்வாகத்திற்கும் கடிதங்கள் அனுப்பப் பட்டிருக்கிறது. மற்றொரு கல்லூரியில், பாதிக்கப்பட்ட ஒரு மாணவிக்கு வர வேண்டிய ஸ்காலர்ஷிப் நிறுத்தப்பட்டி ருக்கிறது. மதிப்பெண்கள் குறைக்கப் பட்டிருக்கிறது.
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான குற்ற நடவடிக்கை
உள் புகார்கள் குழுவின் விசாரணை அறிக்கை அடிப்படையில் குற்றம் செய்த வர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்க முடியும். நிர்பயா சம்பவத்தைத் தொடர்ந்து 2013 இல் ஏற்படுத்தப்பட்ட குற்றவியல் சட்டத் திருத்தம், இந்திய தண்டனைச் சட்டத்தில் 354ஏ என்ற பிரிவை சேர்த்தது. இதன்படி பாலியல் துன்புறுத்தல் என்பது தண்டனைக்குரிய குற்றமாகும். பாதிக்கப் பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மதுரை மாவட்டக் காவல்துறை, இந்திய தண்டனைச் சட்ட பிரிவுடன் தமிழ்நாடு பெண்கள் மீதான துன்புறுத்தல் சட்டத்தின் கீழும் பிரிவுகளை சேர்த்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த சம்பவங்களில் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் புகார் கொடுக்க முன் வந்தவர்கள் ஒரு சிலரே.கல்லூரி நிர்வாகத்திற்கு மனு கொடுக்கத் தயாராக இருக்கும் மாணவி கள், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கத் தயங்குவதைப் பார்க்க முடிகிறது. பல்வேறு பொருளாதார நெருக்கடிக ளுக்கு இடையில் தங்களைப் படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு இது தெரிந்தால், தங்கள் படிப்பு தடைப்பட்டு விடும் என்று மாணவிகள் கருதுகிறார்கள். இரண்டாவதாக, காவல்துறையின் உயர் அதிகாரிகள் இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் உணர்வுப்பூர்வமான அணுகு முறையை கடைப்பிடித்தாலும், காவல் நிலையத்திற்கு அழைக்கும் போதெல்லாம் செல்வது, நீதிமன்றத்திற்கு வருடக் கணக்கில் அலைவது போன்ற சட்ட நடை முறைகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட வரின் மிரட்டல்கள் ஆகியவை பாதிக்கப் பட்டவர்கள் குற்ற நடவடிக்கை எடுப்ப தற்கு முட்டுக்கட்டையாக அமைந்து விடுகின்றன. சென்னை கலாஷேத்ரா விஷயத்திலும் மாநில மகளிர் ஆணைய தலைவரிடம் நூற்றுக்கணக்கில் புகார் கொடுத்த மாணவிகள் காவல்துறையிடம் புகார் கொடுக்க பின் வாங்கியது இந்தக் காரணத்தினால் தான்.
பிடியுங்கள் பிணை உத்தரவை!
மதுரை காமராசர் பல்கலைக்கழக சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்து நீதிமன்றத்தில், ரிமாண்ட் செய்ய காவல்துறையினர் முற்பட்டபோது, நீதிபதியோ அரசு வழக்குரைஞரின் ஆட்சேபணையைக் கண்டுகொள்ளாமல், குற்றத்தின் தாக்கத்தையும் பொருட் படுத்தாமல், உடனடியாக குற்றம் சாட்டப் பட்டவரின் கையில் பிணை உத்தரவை வழங்கியது புகார் கொடுத்த பெண்களுக்கு சோர்வையும் அச்சத்தையும் ஏற்படுத்திய தோடு, புகார் கொடுக்க முன்வந்த பல பாதிக்கப்பட்ட மாணவிகளை பின்னடைய செய்திருக்கிறது. பிணை வழங்கிய போது நீதிபதி, “இது வெறும் வார்த்தைகளால் செய்த துன்புறுத்தல் தானே; இதற்காக ஒருவரை ஏன் சிறைக்கு அனுப்ப வேண்டும்” என்று வினவியுள்ளார். இதன் பிறகுதான் காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்த பெண்களின் வீடுக ளுக்கு அவர்களை அவதூறு செய்யும் வகையிலும் அவர்கள் எதிர்காலம் பாதிக் கப்படும் என்று மிரட்டியும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. பிணை வழங்கிய அதே நீதிபதியிடம் (அவர் பெண் நீதிபதி என்பதால்) புகார் கொடுத்த மாணவி வாக்குமூலம் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது நமது சட்ட அமைப்பின் அவல நிலையை சுட்டிக் காட்டுகிறது. மதுரையில் நடந்த சம்பவங்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்தாலும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இந்த பிரச்சனையில் நீதி கிடைக்க உடன்படித்த மாணவர்கள் உதவியதும் பாதிக்கப்பட்ட மாணவிகளின் அடையாளங்களை வெளி யிடாமல் இந்த விஷயத்தை பதிவு செய்த பத்திரிகையாளர்களின் சமூகப் பொறுப் பும் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது.
தீர்வை நோக்கி?
‘2013 பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவர்த்தி)- சட்டம்’ சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். உள்புகார்கள் குழு முறை யாக அமைக்கப்படுகிறதா அல்லது சட்டப்படி இயங்குகிறதா என்பதை சம்பந் தப்பட்ட துறைகள் ஆய்வு செய்ய வேண்டும். அரசுக்கு கொடுக்க வேண்டிய ஆண்டறிக்கைகள் முறையாக சமர்ப்பிக் கப்படுகிறதா என்பதை பரிசீலிக்க வேண்டும். பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சகங்களில் இதைக் கண்கா ணிக்க தனி பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர் சமூகம் தங்களுக்குள் உலவும் கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். பெற்றோர்கள், பாலியல் துன்புறுத்தல் குறித்து தங்கள் பெண் குழந்தைகள் கூறு வதை காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களை நம்ப வேண்டும். கல்வி நிறுவனங்களில் பாலியல் துன் புறுத்தல் என்பது பாதுகாவலில் நடத்தப் படும் சித்ரவதைக்கு ஒப்பாகும். இதை முற்றிலுமாக அகற்ற அனைவரும் முற்பட வேண்டும்.