69 ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இயக்குநர் பி.லெனின் இயக்கிய சிற்பிகளின் சிற்பங்கள் என்ற ஆவணப்படத்திற்கு, கல்விக்கான சிறந்த ஆவணப்படம் என்ற தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. ஃப்யூச்சர் ஃப்லிம்(Feature film), நான்-ஃப்யூச்சர் ஃப்ளிம்(Non-feature film) என்ற இரண்டு வகைபாடுகளில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. ஃப்யூச்சர் ஃப்லிம் என்றால் திரை சான்றிதழ் அளிக்கும் மத்திய ஆணையத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட முழு நீள திரைச்சித்திரமாகும். 75 நிமிடத்திற்கு மேல் படமாக்கப்பட்டு, திரையரங்குகளில் வெளியிடக்கூடிய திரைப்படங்கள், வழக்கு மொழியில் இன்று நாம் காணும் சினிமாக்களை ஃப்யூச்சர் ஃப்லிம் என்று கருதலாம். திரையரங்குகளில் வெளியிடப்படாத ஆவணப்படங்கள், குறும்படங்கள் (75 நிமிடத்திற்குக் குறைவானவை), செய்தி வீடியோக்கள் ஆகியவை நான் ஃப்யூச்சர் ஃப்லிம் என்ற வகைபாட்டின் கீழ் அடங்கும். இவற்றுக்கும் திரை சான்றிதழ் அளிக்கும் மத்திய ஆணையத்தின் ஒப்புதல் தேவை. இந்த ஆண்டிற்கான நான் ஃப்யூச்சர் ஃப்லிம் வகையில் பி.லெனின் அவர்களின் சிற்பிகளின் சிற்பங்கள் ஆவணப்படத்திற்கு சிறந்த இயக்கத்திற்காகவும், இ.கணேஷ்பாபு தயாரித்து இயக்கிய கருவறை குறும்படத்திற்கு சிறந்த இசைக்காகவும் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆசியர்களின் மகத்தான பணிகள், அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு , அவர்கள் உருவாக்கிய, ‘மாணவர்களின் பார்வையில் அந்த ஆசிரியர்கள்’ என்ற நோக்கில் பல ஆசிரியர்கள் குறித்த ஆவணப்படம் சிற்பிகளின் சிற்பங்கள்.
ஆசிரியர் என்றால் பள்ளி, கல்லூரிகளில் ஏட்டுக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மட்டுமல்ல, ஒயி லாட்டம் கற்றுக்கொடுக்கும் கலைஞர், ஓவிய ஆசி ரியர், நாட்டுப்புற பாடல்களை, சொல்லிக் கொடுக்கும் கலைஞர் – ஆகிய அனைவரும் அர்ப்பணிப்புடன் தங்கள் ஆசிரியப்பணியை எவ்வாறு ஆற்றுகிறார்கள் என்று பதிவு செய்துள்ளதே இந்த ஆவணப்படத்தின் தனிச்சிறப்பு. இந்த ஆவணப்படத்தின் துவக்கமே, ஒயிலாட்ட ஆசிரியர் ஆறுச்சாமியின் மாணவர்கள் வழங்கும் ஒயி லாட்டத்துடன் துவங்குகிறது. ஆறுச்சாமி, பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒயிலாட்டக் கலைஞர், ஆசிரியர். இந்த கலை அழியக்கூடாது என்ற ஒரே எண்ணத்திற்காக எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இக்கலையை கற்றுத்தருபவர் எங்கள் ஆசிரியர் என்கிறார் அவரது மாணவரும் ஒயிலாட்டக் கலை ஞருமான சிவக்குமார். திருவிழாக்களில் நடக்கும் ஒயிலாட்டத்திற்கும் தேவராட்டத்திற்கும் என்ன வேறுபாடு, எத்தனை மாணவர்களை உருவாக்கி யுள்ளார் என்பது உள்ளிட்ட தன் ஆசிரியப்பணி குறித்து பகிர்கிறார் ஆறுச்சாமி. இமயம் ஏறுவது தொடங்கி கடலின் அடி ஆழத்தில் ஆராயும் வரை அனைத்தையும் கற்றுக்கொடுப்ப வர்கள் ஆசிரியர்கள்தாம் என்று பேராசிரியர் சிற்பி பாலசுப்ரமணியம் குறிப்பிடுகிறார். அதற்கேற்ற வகை யில் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தங் களை உருவாக்கிய ஆசிரியர்கள், தாங்கள் உரு வாக்கிய மாணவர்கள் குறித்து பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அவர்களது கருத்துக்கள், அவர்கள் பணி மீது அவர்களுக்கிருந்த அர்ப்பணிப்புணர்வு, மாணவர்கள் மீது அவர்களுக்கிருந்த அக்கறை, பரிவுடன் அவர்கள் சூழ்நிலையை புரிந்துகொண்டு கல்வி புகட்டுதல் என்ற நுணுக்கங்களை இயக்குநர் லெனின் ஆவணப்படுத்தியுள்ளார். வணிகவியல் பேராசிரியர் நடராஜன், தமிழா சிரியர் மணிவாசகன், ஓவிய ஆசிரியர் எம்.சின்னச் சாமி, பேராசிரியர் காந்த ராஜ், புலவர் மயில்சாமி, ஆசிரியர் ஜான் ஜெபராஜ், நாட்டுப்புற இசை ஆசிரி யர் பாப்பாத்தி அக்கா என்று பல்வேறு துறை களைச் சார்ந்த ஆசிரியர்களை உலகிற்கு வெளிப் படுத்தியுள்ளார் இயக்குநர்.
தமிழாசிரியர் பொள்ளாச்சி மாணிக்கவாசகம் கூறும்போது, “பல்வேறு தரப்பு மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறோம். ஐயர் வீட்டுக்குழந்தைகள் பல ருக்கு பல்வேறு விதமான வசதிகள் இருக்கும், அவர்கள் வீட்டில் படித்தவர்கள் இருப்பார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் குடும்பங்க ளில், அந்த மாணவன்தான் முதன் முதலாக பள்ளிக்கு வருபவனாக இருப்பான். அவன் பெறும் 50 மதிப்பெண்கள் ஐயர் வீட்டு பையன்கள் வாங்கும் 100 மதிப்பெண்ணுக்கு சமம். அவனுடைய சூழலில் கல்வி ஏற்கெனவே இருந்திருந்தால் மதிப்பெண் வாங்கு வதும் சுலபம். எனவே நீ 50 மார்க் வாங்குவது ஒன்றும் குறை இல்லை, என்று என் மாணவர்களை நான் ஊக்குவித்திருக்கிறேன்“, என்கிறார். எவ்வளவு எளிதாக இட ஒதுக்கீட்டுக் கொள்கையை விளக்கி யிருக்கிறார் ஓர் ஆசிரியர். பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே, என்று கணியன் பூங்குன்றனாரின் வரிகளைக்கூறி அதன்படி வாழ்ந்த வாழ்க்கையை நம் கண்முன் கொண்டுவருகிறார் இந்த மாமனிதர். ஓவிய ஆசிரியர் எம்.சின்னச்சாமியின் பெற்றோர் அம்மி, குழவி கல் கொத்துபவர்கள். அவர்கள் வாழ்க்கையில் உளியும் சுத்தியலும் முக்கிய பங்கு வகித்தது. நான் தூரிகையையும் வண்ணங்களையும் உபயோகித்து ஓவியம் தீட்டுகிறேன், விருது வாங்கு வதில் எனக்கு விருப்பமில்லை, என் மாணவர்களி டம் ஓவியத்திறமையை வளர்க்க வேண்டும் என்பதே என் இலட்சியம். மத ரீதியான ஓவியங்களை வரை வதில்லை என்று நான் உறுதியெடுத்திருக்கிறேன் என்று கூறும் ஓவிய ஆசிரியர், அவரது ஓவியங்களை யும் அவரது ஓவியப் பட்டறை மாணவர்களின் ஓவி யங்கள், அனுபவங்கள் ஆகியவற்றையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். கோட்டு ஓவியம், புள்ளி ஓவியம், பேஸ்டல் பெயிண்டிங், டிரான்ஸ்பரண்ட் பெயிண்டிங் ஆகியவற்றின் மாதிரிகளை அவர்களது மாணவர்கள் அழகாக வரைந்து காண்பிக்கிறார்கள். “பள்ளியில் நாட்டுப்புற இசைப் போட்டி என்றால், பாப்பாத்தி அக்காவை நாடி வருவோம். நாங்கள் நன்றாகப் பாட வேண்டும் என்பதை தவிர எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் எங்களுக்கு கல்வி புகட்டுபவர் பாப்பாத்தி அக்கா” என்கிறார்கள் அவர்கள் ஊர் மாணவச்சிறுமிகள்.
வணிகப் பேராசிரியர் நடராஜன், மதுரை வெள்ளச் சாமி நாடார் கல்லூரியில் பணிபுரிந்தவர். “நான் வணிகவியலில் பேலன்ஸ் ஷீட்(Balance sheet) குறித்து சொல்லிக் கொடுப்பேன், சொத்துக்கள் (assets) மட்டும் கடன்கள்(liabilities) குறித்து வகுப்பெடுத்திருக்கிறேன். இன்று வரை நான் சம்பா தித்த சொத்து என் மாணவர்கள்தான் என்கிறார். இந்த ஆவணப்படத்தை தயாரித்தவர் கே.கே.வி. குழுமத்தின் தலைவரான டி.கே.சந்திரன், இத்தகைய ஆவணப்படத்தை தயாரிக்கும் நோக்கம் பற்றி வினவு கையில், இவரது பேராசிரியர் காந்தராஜ், இவருக்கு அளித்த அறிவுரையை நினைவுகூர்ந்தார். அவரது பேட்டி, அவர் பணி, அவரது மாணவரான சந்திரன் உடன் உரையாடுவது குறித்தும் இந்த ஆவ ணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேராசிரியர் அவரது அந்நாள் மாணவர் மூலம் இந்நாள் மாண வர்களுக்கு நிதி உதவிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். வெள்ளச்சாமி நாடார் கல்லூரியின் முன்னாள் மாண வராக நினைவு கூர்கையில், சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் பற்றியும் குறிப் பிட்டுள்ளார். இந்த ஆவணப்படத்தில் பங்குபெற்ற ஆசிரி யர்கள் அனைவரும் வலியுறுத்துவது வாய்மை, தூய்மை, ஒழுக்கம், ஆகியவைதான். இவற்றை கடைப்பிடித்த மாணவர்கள், நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறியுள்ளார்கள் என்கின்றனர் இந்த ஆசிரியர்கள். நவில்தொறும் நூல்நயம் போன்ற ஆவணப்படம் சிற்பிகளின் சிற்பங்கள். இதை அனைவரும் கண்டு இன்புற்றல் இனிது. யூடியூபில் காணக்கிடைக்கிறது. ஒரு மணிநேர ஆவணப்படமாக தற்போது வெளி யிடப்பட்டுள்ளது. மேலும் மூன்று மணிநேர வீடி யோக்கள் தன் வசம் உள்ளதாக இயக்குனர் லெனின் குறிப்பிட்டுள்ளார். அவற்றையும் வெளியிட்டால் மேலும் பல ஆசிரியர்கள் குறித்து அறிந்துகொள்ள லாம். இன்றைய ஆசிரியர்களுக்கும் ஊக்கமளிக்கும் காணொலியாக இருக்கும். ஒன்றிய அரசு தேசிய விருது வழங்கி இயக்குநர் பி.லெனினையும் தயா ரிப்பாளர் டி.கே. சந்திரனையும் கௌரவித்துள்ளது. உண்மையில் இவர்கள் இருவரும்தான் இத்தனை ஆசிரியர்களுக்கும் அழியா கௌரவம் அளித்துள் ளார்கள். இவர்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.