articles

img

வெளியேறுங்கள், மிஸ்டர் ரவி! - டி.கே.ரங்கராஜன்

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத் திலேயே அடாவடியான செயலில் ஈடுபட்டுள் ளார். இந்தாண்டின் சட்டமன்ற முதல் கூட்டத் தொடரின் முதல் நாளான ஜனவரி 9 திங்களன்று ஆளுநர் உரையுடன் அவை துவங்கியது. ஆனால் ஆளுநர் ரவி, அரசின் உரையை முழுமையாக படிக்காமல் அதில் இடம் பெற்றிருந்த சில குறிப்பிட்ட அம்சங்களைத் திட்டமிட்டு தவிர்த்தார். இது உண்மையிலேயே சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், நேரலையாக பார்த்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த உரையில் இடம் பெற்றிருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்தார். அந்த உரையின் ஒரு பக்கத்தில் ‘‘வளர்ச்சியுடன் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்’’ என்ற வாக்கியம் இடம் பெற்றிருந்த நிலையில், உரையாற்றும் போது, ஆளுநர் அதை தவிர்த்தார். உரையின் 46ஆவது பக்கத்தில் ‘‘சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது’’ என்ற வாசகத்தையும் ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்தார். புதிதாக சில வார்த்தைகளை, வாக்கியங்களை தானாகவே சேர்த்துக் கொண்டார்.

ஆளுநரின் இந்தச் செயல் முற்றிலும் அராஜகமா னது. அருவருக்கத்தக்கது. அரசியல் சட்ட விரோதமா னது. ஆளும் அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்டது. அந்த அரசாங்கத்தின் அமைச்சரவை தயாரித்துக் கொடுத்த அறிக்கையை அப்படியே வாசிப் பது வெறுமனே மரபு மட்டுமல்ல, ஆளுநரின் அரசிய லமைப்புச் சட்டக் கடமையுமாகும். இதில் ஆளுநருக் கென்று தனிப்பட்ட விருப்பமோ அல்லது அவரது இசைவோ ஒரு பொருட்டே அல்ல. ஏனென்றால் இப்போது நடப்பது பிரிட்டிஷ் ராஜ்ஜியமல்ல; ஆளுநர் அந்த ராஜ்ஜியத்தின் பிரதிநிதியுமல்ல. இதற்கு அவையிலேயே உடனடியாக பதிலடி கொடுக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானம் கொண்டு வந்து வாசித்தி ருக்கிறார். இதற்காக முதலமைச்சரைப் பாராட்ட வேண்டும். அவர் தீர்மானத்தை முன்மொழிந்து கொண்டிருக்கும் போதே, ஆளுநர் அவையிலிருந்து வெளியேறியுள்ளார். இந்தச் செயல் தமிழ்நாட்டிற்கே அவமரியாதை ஆகும்.  ஒரு நொடி கூட அவர் இந்த மாநிலத்தில் ஆளுநர் பதவியில் நீடிக்கக்கூடாது. 

இதே ஆளுநர் ரவி சில நாட்களுக்கு முன்பு  ‘இது தமிழ்நாடு அல்ல, தமிழகம்’ என்று ஒரு திரியையும் கொளுத்திப் போட்டார்.  எரிகிற பிரச்சனைகளையெல்லாம் விட்டுவிட்டு, எல்லோ ரும் இதைப்பற்றி பேசுமாறு திசை திருப்புவதுதான் ஆர்எஸ்எஸ் ஊதுகுழலாக செயல்படுகிற ஆளுநர்க ளின் நோக்கம். இந்த விவாதங்கள் முன்னெழுகிற போது, மக்களின் முதன்மையான பல பிரச்சனைகள் பின்னுக்குப் போய்விட்டன. 

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டின் எல்லா மாநிலங்களுடனும் ஏதாவது ஒரு பிரச்சனையை உருவாக்கி மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியை உடைத்து, அங்கிருந்தவர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கைப்பற்றியது. இதேபோல, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, மேகாலயா, மணிப்பூர், கோவா, பீகார், ஜார்க்கண்ட், அருணாச்சலப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பணபலம், ஆள்பலம், ஆளுநர் பலம் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களைப் பயன் படுத்தி பிறகட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, வளைத்துப் போடுவது, மத்திய ஏஜென்சிகளை பயன்படுத்தி மிரட்டிப் பணிய வைப்பது, நயவஞ்சகமாக சதிவலையில் சிக்க வைப்பது என முற்றிலும் ஜனநாயகத்தைப் படுகொலை செய்து, அதிகாரத்தைக் கைப்பற்றியதுதான் கடந்த 8 ஆண்டுகால பாஜக அரசின் வரலாறு. ஆர்எஸ்எஸ்-பாஜக வின்  இத்தகைய இலக்குகளை நிறைவேற்றுவதில் பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகிறார்கள். 

மக்களை வாட்டும்  வாழ்வியல் பிரச்சனைகள்

ஆனால் இந்த பாஜக அரசு, மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளையோ, அவர்களை வாட்டி வதைத்து வரும் பொருளாதாரப் பிரச்சனைகளையோ பேச மறுக்கிறது. நாட்டின் மிகப்பெரும் பிரச்சனையாக இந்தஆண்டு தாக்குதலை நடத்தவிருப்பது தீவிர மடைகிற வேலையின்மை ஆகும். கடந்த 16 மாதங்க ளாக இல்லாத அளவிற்கு 2022 டிசம்பர் இறுதி யில் வேலையின்மை 8.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.  நகர்ப்புறவேலையின்மை 9.6 சதவீதமாக அதிகரித்துள் ளது. கிராமப்புற வேலையின்மை 7.8 சதவீதமாக அதி கரித்துள்ளது. நாட்டின் தொழில் உற்பத்தி  2022 அக்டோபர் கணக்குப்படி 4 சதவீதம் சுருங்கியுள்ளது. நுகர் பொருள்களின் உற்பத்தி 15.3 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. விலைவாசி விண்ணில் பறக்கிறது.2022 ஒரே ஆண்டில் வணிக சிலிண்டர் விலை நான்கு முறை கடுமையாக உயர்த்தப்பட்டு,தற்போது ரூ.1769 ஆக விற்கப்படுகிறது.பெட்ரோல்,டீசல் விலை  கணக்கின்றி அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தைப் பொறுத்தவரை எந்த பொரு ளுக்கும் விலை இல்லை.கடந்த சில ஆண்டுகளில் மட்டும் விவசாயம் கட்டுப்படி ஆகாததால் அதிர்ச்சி தரத்தக்க வகையில் 4.5 கோடி பேர் விவசாயத்தைக் கைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். 2021 ஆம் ஆண்டில் மட்டும் மேலும் 70 லட்சம் விவசாயிகள் நிலங்களை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். இதன் விளைவு, விவசாயக் கூலித் தொழிலாளர்கள், அத்துக்கூலிகள், புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.  சிறு குறு தொழில்கள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டு விட்டன. எஞ்சியிருக்கும் தொழில்களும் ஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் அழிவின் பிடியில் சிக்கி யுள்ளன. நாட்டின் செல்வ வளங்கள் அனைத்தை யும் மோடி அரசின் ஆதரவோடு அவரது கூட்டுக் களவாணிகளான அதானி, அம்பானி உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட்கள் சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

நவீன தாராளமயக்கொள்கையின் தீவிர அம லாக்கம் இந்தியப் பாட்டாளி வர்க்க மக்களை கொடுங் கரங்களின் பிடியில் சிக்க வைத்துள்ளது. ஆனால் மோடி ஆட்சியில் இதையெல்லாம் பேசுவதற்கு இட மில்லை. நாடாளுமன்றத்திற்குக் கூட நேரமில்லை. ஆண்டிற்கு 75 நாட்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடப்பது கூட அரிதாகிவிட்டது. 

திசை திருப்பும்  ஆர்எஸ்எஸ் ஆளுநர்

இந்தப் பிரச்சனைகளையெல்லாம் எதிர்த்து மாநி லங்களும் மக்களும் குரல் கொடுக்கும்போது அதை திசைதிருப்புவதற்காகவே ரவி போன்ற ஆளுநர்க ளை ஏவிவிட்டுள்ளது மோடி அரசு.  கேரளாவில் உள்ள ஆளுநர், இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக தனது எல்லையை மீறி குதர்க்கம் செய்கிறார். தெருவில் இறங்கி மல்லுக் கட்டும் அளவிற்கு செல்கிறார். தமிழ்நாட்டின் ஆளுநர் தினந்தோறும் ஒரு பிரச்சனையை கிளப்பி விடு கிறார். அவரது செயல்கள் அனைத்தும் திட்டமிட்ட வையே. தற்போது பிரச்சனையே அல்லாத ஒன்றை பிரச்சனையாக மாற்றி, அதைப்பற்றி பேசவிட்டு, குளிர் காய்வது ஆர்எஸ்எஸ்- பாஜகவின் சூழ்ச்சிகளில் ஒன்று. அதைத்தான் இங்கு ரவி செய்து கொண்டி ருக்கிறார்.

தமிழ்நாடு என்று பெரும் போராட்டத்திற்குப் பிறகு பெயர் சூட்டப்பட்டபோது அவர், அரைக்கால் டவுசர் அணிந்து பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டு இருந்திருக்கக்கூடும். தமிழ்நாடு என்று பெயரிட்டது தவறு என்றால், மகாராஷ்டிரம் என்ன? ஆந்திரப்பிரதே சம் என்ன? மத்தியப் பிரதேசம் என்ன?  இந்தியா என்பது பல தேசங்கள் இணைந்த கூட்ட மைப்புதானே தவிர, பல நாடுகளின் ஒன்றியம்தானே தவிர, இந்தியா என்பதே ஓர் ஒற்றைநாடு அல்ல. இதை  இந்திய அரசியலமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக வரையறை செய்துள்ளது. ஆனால் இதை சர்ச்சைக் குள்ளாக்கி, உண்மையில் பேச வேண்டிய வாழ்வி யல் பொருளாதாரப் பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளுவதே இவர்களின் நோக்கம்.

எந்த அதிகாரமும் இல்லை

அதுமட்டுமல்ல, ஆளுநர் ரவி போன்றவர்களின் தொடர்ச்சியான பேச்சுகள், அவர்களது அதிகார வரம் பெல்லையை மீறியது. மாநில அரசின் அதிகார வரம்பை சிதைக்கும் நோக்கத்துடனே இவர்களைப் போன்றவர்களை வம்படியாக பேசுமாறு மோடி அரசு  ஏவிவிட்டுள்ளது.  அத்தகைய அசட்டுத் துணிச்சலில் தான், தமிழக சட்டமன்றத்திலேயே  அவர் இன்றைக்கு அநாகரிகமாக, அரசியல் சட்ட விரோதமாக நடந்து கொண்டுள்ளார். உண்மையில்  ஆளுநர் என்பவர் இவ்வளவு அதிகாரம் படைத்தவரா? இல்லை.  இந்திய அரசியலமைப்புச் சட்டமும் உச்சநீதி மன்றத்தின் அரசியல் சாசன அமர்வுகளும் இது தொடர்பாக ஏற்கெனவே பல தீர்ப்புகளில் தெளிவான வரையறைகளை உருவாக்கியுள்ளன.

சட்டமன்றமும் அமைச்சரவையும்தான் உயர்ந்தது

1969 இல் நடந்த மகாவீர் பிரசாத் எதிர் பிரபுல்ல சந்திரா வழக்கில், ஆளுநரின் இசைவு (அல்லது மகிழச்சி) எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி உச்சநீதிமன்றம் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளது. 

அரசியல் சட்டப்பிரிவு 164 (1) இல் உறுதி செய்யப்பட்டுள்ள ஆளுநரின் திருப்தி அல்லது இசைவு என்பதன் தன்மை, பிரிவு 164 (2) இன் தன்மையை பொறுத்ததே; அதன்படி ஆளுநர் ஓர் அரசின் மீதான மகிழ் ச்சியை அல்லது இசைவை திரும்பப் பெற்றுக் கொள்வது என்பது, அந்த சட்டமன்றம், அந்த அமைச்சரவையின் மீது நம்பிக்கை இழந்து ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்வது என்ற நிகழ்வுடன் மட்டுமே கட்டாயம் இயைந்து செல்வதாக இருக்க வேண்டும். 

உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பின் பொருள், ஆளுநர் என்பவருக்கு அரசாங்கத்தின் மீது தனிப்பட்ட திருப்தியோ,அல்லது இசைவோ இருக்க முடியாது என்பதுதான்.  1974 இல் சம்ஷெர் சிங் மற்றும் இதரர்கள் எதிர் பஞ்சாப் அரசு- வழக்கில் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில், 

“ஜனாதிபதி மற்றும் ஆளுநர் என்பவர்கள் அரசியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் படி அனைத்து நிர்வாக மற்றும் இதர அதிகார அமைப்புகளின் பாதுகாவலர்களாக இருக்கி றார்கள்; அவர்கள் தங்களது அரசியல் சட்டப் பூர்வ அதிகாரங்களை, சில குறிப்பிட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலைகளைத் தவிர, அமைச்சரவையின் அறிவுறுத்தலின் அடிப்ப டையில் மட்டுமே பிரயோகிக்க முடியும்’’   

என்று கூறப்பட்டுள்ளது.

அம்பேத்கர் சொன்னது என்ன?

2016 இல் நபம் ரெபியா மற்றும் இதரர்கள் எதிர் துணை சபாநாயகர் (அருணாசலப் பிரதேசம்) மற்றும் இதரர்கள் வழக்கில் உச்சநீதிமன்றம், ஆளுநர்க ளின் அதிகாரம் குறித்து டாக்டர் அம்பேத்கரின் கருத் துக்களை சுட்டிக்காட்டியுள்ளது: 

‘‘அரசியலமைப்புச் ட்டத்தின் அடிப்படை யில் ஆளுநர் என்பவர் தானாகவே தனிப்பட்ட முறையில் நிறைவேற்றுவதற்கான எந்த வேலையும் இல்லை; உண்மையில் எந்த வேலையும்  இல்லை. அவருக்கு எந்த வேலை யும் இல்லை என்றாலும் அவர் செய்வதற் கென்று குறிப்பிட்ட கடமைகள் உள்ளன. இந்த வேறுபாட்டை அவையின் செயல்பாடு கள் அவருக்கு உணர்த்தும்.” 

டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்ட இந்த வழிகாட்டுத லைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், 

‘‘ஆளுநருக்கு அதிகாரம் அளிப்பதாகக் கூறப்படுகிற அரசியல் சட்டப்பிரிவு 163 என்பது, உண்மையில் ஆளுநர் என்ப வர் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அமைச்ச ரவை அளிக்கும் அறிவுரை இல்லாமலோ அல்லது அதற்கு எதிராகவோ செயல்படுவ தற்கு ஒரு பொதுவான தனித்த அதிகாரம் எதையும் அளிக்கவில்லை’’

என தெளிவாக குறிப்பிட்டுள்ளது.  எனவே எந்த அதிகாரமும் இல்லாத ஆளுநர் மாநில அரசின் விவகாரங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். மாறாக அத்துமீறி மாநிலத்தில் குழப்பம் விளைவிப்பதும் சர்ச்சையை ஏற்படுத்துவதும் அரசியல் சட்டவிரோதமானதாகும். இப்போது தமிழ்நாட்டில் ரவி செய்து கொண்டி ருப்பது அரசியல் சட்ட விரோதம். அவரை உடனே ஒன்றிய அரசு  திரும்பப் பெற வேண்டும்!