articles

img

ஜஹாங்கீர்புரியில் நடந்தது என்ன?

புதுதில்லி, ஏப்.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), பார்வர்டு பிளாக் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் இணைந்து அனுப்பிய உண்மை அறியும் குழுவினர், தில்லி யின் வட மேற்குப் பகுதியில் ஜஹாங்கீர்புரி-சி பிளாக் பகுதிகளில் வன்முறை வெறியாட்டங் களால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளுக்கு, 2022 ஏப்ரல் 17 அன்று சென்று பார்வையிட்டனர்.  அவர்கள் அந்தப் பகுதியில் இரு சமூகத்தின ரையும் சேர்ந்த  பாதிப்புக்கு உள்ளானவர் களிடமும், அங்கே குடியிருந்து வருபவர்ளிட மும் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்ட றிந்தார்கள். இக்குழுவினர் சுமார் 50 குடும்பத் தினரிடம் விஷயங்களைக் கேட்டறிந்தார்கள். மேலும் இக்குழுவினர் அப்பகுதியைச் சேர்ந்த காவல்துறை கூடுதல் துணை ஆணையர், கிஷன் குமார் மற்றும் ஜஹாங்கீர்புரி காவல் நிலையத்தில் இருந்த இதர காவல்துறை அதிகாரிகளையும் சந்தித்தார்கள்.

16ஆம் தேதி நடந்தது என்ன?

அனுமான் ஜெயந்தி நடைபெற்ற தினத் தன்று சுமார் 150க்கும் 200க்கும் மேற்பட்டவர்கள், தங்கள் கைகளில் ஆயுதங்களுடன் வந்ததாக வும், அன்றைய தினம் மதியத்திற்குப்பின்னர் ஜஹாங்கீர்புரியின் வீதிகளில் ஒலிபெருக்கி யில் கோஷங்களை எழுப்பிக்கொண்டே, ஊர்வ லத்தினர் செல்லும்பாதையில் போய்க்கொண் டும் வந்துகொண்டும் இருந்ததாக, உண்மை அறியும் குழுவினரிடம் அன்றையதினம் நடந்த  விஷயங்கள் குறித்துக் கூறிய அனைவருமே தெரிவித்திருக்கிறார்கள். ஊர்வலத்தை வேடிக்கை பார்த்தவர்கள், ஊர்வலத்தில் சென்றவர்கள் தங்கள் கைகளில் வாள்களையும், பிஸ்டல்(துப்பாக்கி)களையும் வைத்திருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள்.ஊர்வலம் தொடர்பாக பல்வேறு தொலைக் காட்சி அலைவரிசைகள் ஒளிபரப்பியுள்ள வீடியோ காட்சிகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. ஊர்வலத்தினர் மிகவும் மூர்க்கத்தனமான முறையில் உரத்து கூச்சல் எழுப்பிக்கொண்டு சென்றிருக்கின்றனர். இந்த ஊர்வலம் அங்கே யிருந்த மக்களால் நடத்தப்படவில்லை என்றும், பஜ்ரங் தளத்தின் இளைஞர் அணியால் அந்தப் பகுதிக்கு வெளியேயிருந்து வந்த வெளியாட் களால் நடத்தப்பட்ட ஒன்று என்றும் உண்மை அறியும் குழுவினரிடம் அனைவருமே தெரி வித்துள்ளனர். ஊர்வலத்தினருக்குப் பாதுகாப்பிற்காக முன்னும் பின்னும் இரு போலீஸ் ஜீப்புகள் வந்ததாகவும், ஒவ்வொரு ஜீப்பிலும் இரண்டு போலீஸ்காரர்கள் மட்டுமே இருந்தார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

முதல் கேள்வி

ஊர்வலத்திற்கு போதிய ஏற்பாடுகளை காவல்துறையினர் ஏன் மேற்கொள்ளவில்லை? ஊர்வலத்தினர் ஆயுதங்களை ஏந்தி வர காவல்துறையினர் அனுமதித்தது ஏன்? ஊர்வலத்தினர் ஏற்கனவே இரு முறை ஜஹாங்கீர்புரி-‘சி’ பிளாக் வீதிகளில் ஊர்வல மாகச் சென்றிருக்கின்றனர். அந்தப் பகுதியில்  வங்கமொழி பேசும் முஸ்லீம்கள் ஏராளமாகக் குடியிருந்து வருகின்றனர். ஊர்வலத்தினர் மூன் றாவது தடவை ஊர்வலமாக வரும்போதுதான் சம்பவங்கள் நடந்துள்ளன. பாஜக தலைவர்கள் கூறுவதுபோன்று ஊர்வலத்தினர் மீது தாக்கு தல் தொடுத்திட அங்கே வசிக்கும் முஸ்லீம்  களால் “சதி” (“conspiracy”) செய்யப்பட்டது என்பது உண்மையானால், அத்தகைய தாக்கு தல் அவர்கள் அதற்கு முன்பு ஊர்வலமாக வந்தபோதே நடந்திருக்க வேண்டும். உண்மை  என்னவென்றால், அங்கேயிருந்த மசூதியில் தொழுகை ஆரம்பிக்கும் நேரத்தில், ஊர்வல மாக வந்தவர்கள் ஊர்வலமாகச் செல்லாமல் மசூதிக்கு வெளியே நின்றுகொண்டிருந்த போதுதான் சம்பவம் நடந்திருக்கிறது.

இரண்டாவது கேள்வி

ஊர்வலத்தினர் மசூதிக்கு முன் நிற்பதற்கு அனுமதிக்கப்பட்டது, ஏன்? மசூதிக்கு வெளியே நின்று கொண்டு முஸ்லீம்களுக்கு எதிராகக் கூச்சல் போட அனுமதித்தது ஏன்? இன்னும் குறிப்பாக ஆயுதந்தாங்கிய ஊர்வலத்தினர்  மசூதிக்கு வெளியே நின்றுகொண்டு, தொழுகை தொடங்கி முடியும் சமயத்தில், முஸ்லீம்கள் கூட்டமாகத் திரண்டபோது,  முஸ்லீம்களுக்கு எதிராக கோஷம் எழுப்ப அனுமதித்தது, ஏன்? உண்மையில் இந்தச் சம்பவம் நடைபெறுவதற்குக் காரணமான சதி இதுவேயாகும். இதற்குக் காவல்துறைக்கும் பொறுப்பு இருக்கிறது.  

  இரு தரப்பினருமே கற்கள் எறிந்ததாக, உண்மை அறியும் குழுவினரிடம் கூறப்பட் டது. ஊர்வலமாக வந்தவர்கள் மசூதிக்குள் நுழைவார்களோ என்ற அச்ச உணர்வு அங்கே  வசித்துவந்த குடியிருப்புவாசிகள் மத்தியில் இருந்ததாக, குழுவினரிடம் கூறப்பட்டது. போலீ சார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை; பெரிய அளவிற்குக் கூட்டமாகிவிட்டது. இந்த  நிலையில், சிறுபான்மை இனத்தவரில் சிலரும்  பின்னர் ஆயுதங்கள் கொண்டு வந்தனர். மக்கள்  கூட்டம் அதிகமான பின்னர் ஊர்வலத்தினர் ஓடிவிட்டனர் எனத் தெரியவந்துள்ளது. சில கார்களும் ஒரு மோட்டார் பைக்கும் எரிந்து சேதப்படுத்தப்பட்டிருந்ததை உண்மை  அறியும் குழுவினர் பார்த்தார்கள். இந்து  ஒருவருக்கு சொந்தமான கடை சூறையாடப் பட்டிருந்தது. அந்த இடத்திற்கு வந்த காவல் துறையினர் மீதும் கல்லெறி நடந்து, அவர்களில் சிலர் காயங்கள் அடைந்தனர். 16ஆம் தேதி இரவு அந்தப் பகுதியில் காவல் துறையினர் சோதனைகள் மேற்கொண்டு, வகைதொகையின்றி சகட்டுமேனிக்குப் பலரைக் கைது செய்திருக்கின்றனர். பெண்கள்  ஏன் எங்கள் வீட்டைச் சோதனை செய்கிறீர்கள்  என்று கேட்க முயற்சித்தபோது, ஆண் போலீ சார் அவர்களின் வயிற்றில் குத்தியும், தாக்கி யும் இருக்கிறார்கள் என்ற விவரங்களும் தெரியவந்துள்ளன. இடதுசாரிக் கட்சிகளின் ஆய்வுக் குழுவினர் காவல் நிலையத்திற்குச் சென்றனர். அங்கே பாஜக தலைவர் அதேஷ் குப்தா, நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் ஆகியோர் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். அவர்கள் காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே காவல்துறை அதிகாரிகளின் முன்னிலை யிலேயே பத்திரிகை யாளர் சந்திப்பை நடத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றியிருந்தவர்கள், ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

மூன்றாவது கேள்வி

போலீசார் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இது  தெளிவாகக் காட்டவில்லையா?  அங்கே ஒட்டு மொத்தப் பகுதியிலும் பாஜக தலைவர்களின் செல்வாக்கின்கீழ் போலீசார் ஒருதரப்பின ருக்குச் சாதகமாக, பாரபட்சமாகவே விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்ததிலிருந்து, போலீசார் மீது எவ்வித நம்பிக்கையும் ஏற்படவில்லை என்று குழுவினர் கண்டுள்ளனர். போலீசாரின் பங்கினை பாஜக வெளிப்படை யாகவே பாராட்டிக் கொண்டிருப்பதை இங்கே குறித்துக் கொள்ள வேண்டும். ஊர்வலத்தி னர் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டிருப் பதையும், ஆத்திரமூட்டும் விதத்தில் நடந்து கொண்டிருப்பதையும் வெளியாகியுள்ள வீடியோ சாட்சியங்கள் உலகம் முழுதும் வெளிச் சத்திற்குக் கொண்டுவந்துள்ள போதிலும், காவல்துறையினர் நடந்த சம்பவங்கள் தொடர்பாக, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே பிரதானமாகக் கைது செய்து கொண்டிருப்பதிலிருந்து, காவல்துறையினரின் நடவடிக்கைகள் முற்றி லும் அநியாயமானதும், ஒருதரப்பினருக்காகச் செயல்படும் நோக்கத்தைக் கொண்டவை என்பதும் தெளிவாகும். உண்மை அறியும் குழுவினர் காவல்துறை கூடுதல் ஆணையரிடம் இவை தொடர்பாக புகார் தெரிவித்தனர். தாங்கள் சந்தித்த குடி யிருப்புவாசிகள் காவல்துறையினரின் பாரபட்ச மான அணுகுமுறை குறித்துக் கூறியதையும், முஸ்லீம் இளைஞர்களை மட்டும் காவல்துறை யினர் பிடித்துச் செல்வது குறித்தும், ஊர்வல த்தில் வந்தவர்களுக்கு எதிராக எவ்வித நட வடிக்கையும் எடுக்காதது குறித்தும் தெரிவித்த னர். சோதனைக்கு வந்த  ஆண் போலீசார் பெண்களிடம் மோசமாக நடந்துகொண்ட விதம்  தொடர்பாக தங்களிடம் பெண்கள் கூறிய விவரங்களையும் அவரிடம் தெரிவித்தனர்.  

இந்தப் பகுதியில் வசித்துவரும் மக்கள்  மத்தியில் இதுநாள்வரையிலும் இதுபோன்று  வகுப்புவாத மோதல்கள் எதுவுமே நடந்தது  கிடையாது என்பதையும் உண்மை அறியும்  குழுவினர் கண்டார்கள். பல பத்தாண்டு களாக இந்துக்களும், முஸ்லீம்களும் இங்கே  நல்லிணக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். ஜஹாங்கீர்புரியில் வங்க முஸ்லீம்கள் அங்கே மறுவாழ்வு காலனி (resettlement colony) உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே, அதாவது குறைந்தபட்சம் நாற்பதாண்டு கால மாக, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள், வீதிகளில் வியாபாரம் செய்பவர்கள், சிறிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், மீன் விற்பவர்கள், குப்பைகளை சேகரிப்பவர்கள் போன்ற மிக மிக வறிய, எளிய மக்களே  ஆவர். இவர்களை, பாஜக-வினர் “சட்டவிரோத மானவர்கள்” அல்லது ரோஹிங்கியா அகதிகள் என்று குறிப்பிடுவது அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் தில்லியின் நேர்மையான குடிமக்கள் (bonafide citizens) ஆவார்கள்.

ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் தொடர் திட்டம்

மதம் சார்ந்த விழாக்கள் மற்றும் பண்டிகை களை, மதவெறித் தீயை விசிறிவிடுவதற்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சங் பரி வாரத்தின் சில அமைப்புகள் வகுத்துக் கொண்டுள்ள நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதியா கவே ஜஹாங்கீர்புரியில் இந்நிகழ்வுகள் நடந்திருக்கின்றன என்றே உண்மை அறியும் குழுவினர் காண்கிறார்கள். இதற்குமுன் தில்லியில் நடைபெற்ற நிகழ்வு களுடனும் இதனைப் பொருத்திப் பார்த்திட வேண்டும். பாஜக-வைச் சேர்ந்த  தெற்கு தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மேயர், அசைவ உணவுகள் விற்பதற்குத் தடை விதித்து அறிவித் திருப்பதையும், ஏபிவிபி மாணவர் அமைப்பு, ஜேஎன்யு கேன்டீனில் சைவ உணவு மட்டுமே  உண்ண வேண்டும் என்று திணிக்க முயற்சித்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது தாக்கு தல் தொடுத்ததையும்,  சாவ்லா கிராமத்தில் பசுவைக் கொன்றதாகக் கூறி பசுக் குண்டர்கள் ஒரு பண்ணை இல்லத்தில் காப்பாளராக இருந்த ராஜாராம் என்பவரைக் கொன்றிருப்பதையும், இவற்றின் தொடர்ச்சியாகவே இப்போது  சமீபத்திய அத்தியாயமாக ஜஹாங்கீர்புரி  வகுப்புவாத வன்முறை வெறியாட்டங்களை யும் பார்த்திட வேண்டும். ஜஹாங்கீர்புரி சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் பொறுப்பு தில்லிக் காவல்துறையினரின் குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளி யாகி இருக்கின்றன. இது ஒரு கண்துடைப்பே யாகும். இதனை ஏற்க முடியாது. உண்மையை  வெளிக்கொணர்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் நீதித்துறை விசார ணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். அதனால் மட்டுமே தலைநகரில் மக்கள் மத்தியில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவித்திட சங் பரிவாரங்களால் மேற்கொள்ளப்படும் நாசகர முயற்சிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடியும்.   

இடதுசாரிக் கட்சிகள் வேண்டுகோள்

மதவெறிப் பிளவுவாத சக்திகளின் இழி முயற்சிகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டு வது ஒன்றே பதிலாக இருந்திட முடியும் என்று மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் இழி முயற்சிகள் எவ்விதத்திலும் வெற்றி பெற அனுமதித்திடக் கூடாது என்பதே இப்போது காலத்தின் கட்டாய மாகும். நாடு எதிர்கொண்டுள்ள பொருளா தார முட்டுக்கட்டையிலிருந்தும், மக்களின் வாழ் வாதார நெருக்கடியிலிருந்தும் மீளமுடியாமல் தத்தளிக்கும்  மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக அவர்கள் மதவெறி நஞ்சைப்  பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய  மாற்று என்பது, மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திட, ஒன்றுபட்ட மக்கள் இயக்கங் களை மேற்கொள்வது என்பதும், மதவெறிக்கு  எதிராக வெகுஜனப் போராட்டங்களை நடத்துவது என்பதுமேயாகும். தில்லிக் காவல்துறையினரின் பாரபட்சமான அணுகுமுறையை மாற்றியமைத்திடும் விதத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகமும், குடியரசுத் தலைவரும் உடனடியாகத் தலை யிட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோருகின்றன. குற்றமிழைத்துள்ள காவல்துறையினருக்கு எதிராக உடனடியாக நட வடிக்கை எடுத்திட வேண்டும். காவல்துறை யினர், பிளவுவாத சக்திகளுக்கு எதிராக உடன டியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதில் ஏற்படும் காலதாமதம் இதுபோன்ற பிரச்சனை களில் அரசாங்கத்தின் நம்பகமற்ற தன்மையை யே விளக்கிடும். தில்லியின் துணை ஆளுநர் தன்னுடைய  மவுனத்தைக் கலைத்து உடன டியாகத் தலையிட வேண்டும்.  இவ்வாறு உண்மை அறியும் குழுவினர் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.  

(ந.நி.)

உண்மை அறியும் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள்

1. ராஜீவ் குன்வார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி; 2. ஆஷா ஷர்மா, தில்லி மாநிலச் செயலாளர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்; 3. மைமூனா முல்லா, தில்லி மாநிலத் தலைவர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்; 4. விபின், இடைக்கமிட்டி செயலாளர், வடதில்லி மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி; 5. சஞ்சீவ், தில்லி மாநிலத் துணைத் தலைவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்;  6. சுபாஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்; 7. ரவி ராஜ், செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்);  8. ஸ்வேதே ராஜ், ஏஐசிசிடியு; 9. பிரசன்ஜித், பொதுச் செயலாளர், அகில இந்திய மாணவர் சங்கம் (ஏஐசிஏ); 10. கமல்பிரீத்,வழக்குரைஞர்;  11. அமீத், பார்வர்டு பிளாக்; 12. விவேக் ஸ்ரீவஸ்தவா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி; 13. சஞ்சீவ் ரானா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.