அரசியல் நிர்ணய சபை யின் கடைசி நிகழ்ச்சி யில், நல்ல அரசியல மைப்பு சட்டத்தை உருவாக்கியுள் ளோம். நிர்வாகத்திற்கு நல்லவர் களை மக்கள் தேர்ந்தெடுத்தால். நடைமுறையில் மக்களுக்குப் பயன்படும். மதம் போன்ற தனிப் பட்ட விருப்பங்கள் அடிப்படையில் அரசு தேர்வு செய்யப்படுமானால் மக்களுக்கு கேடு விளை யும் என்ற பொருளில் அம்பேத்கார் அன்று குறிப்பிட்டார். அது இன்று நடைமுறையாகி உள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல் வரி இந்தியா யூனியன் ஆப் ஸ்டேட்ஸ் என்று தான் உள்ளது. இன்று அந்த நிலை கேள்விக்குறியாகி யுள்ளது. காரணம் நாடாளுமன்றத் தில் கொண்டு வரப்படும் சட்டங்கள் அனைத்தும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிர்ப்பாகத் தான் உள்ளது. கூட்டாட்சி தத்துவம் இன்று சிதைந்து போய்க் கொண்டிருக்கிறது. மாநிலங்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படு கிறது. மொழி உரிமை, கல்வி உரிமை பறிக்கப்படுகிறது. முதல் நாடாளுமன்றம் இருந்தது போன்ற அமைப்புகள் தற்போது இல்லை. நேரு முதல் மன்மோகன் சிங் வரை இருந்த பிரதமர்கள் தவறாமல் நாடா ளுமன்றத்திற்கு வருவார்கள். உறுப்பினர்கள் பேசுவதைக் கேட்பார்கள். அவை நடவடிக்கை களில் கலந்து கொண்டனர். அனைத்து நடவடிக்கைகளிலும் பிரத மர்களின் பங்களிப்பு இருக்கும். இன்று நிலைமை மாறியுள்ளது. இன் றைய பிரதமர் நாடாளுமன்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. பெரும்பாலும் நாடாளுமன்ற கூட்டங் களுக்கு வருவதில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படா தவர்கள் ஒன்றிய அமைச்சர்கள். நாடா ளுமன்றத்தில் உறுப்பினர்கள் கருத்து கேட்கப்படுவதில்லை. முறையான விவாதம் இல்லை. ஆளுங்கட்சி பெரும் பான்மையைப் பயன்படுத்தி விவாத மின்றி சட்டங்களை நிறைவேற்றுகின் றனர். வேடிக்கை என்னவென்றால் இந்த ஆண்டின் நிதி நிலை அறிக்கை வைக்கப்பட்டது. அந்த நிதி நிலை அறிக்கையின் மீது விவாதமே இல்லாமல் நிறைவேற்றி விட்டனர். எனவே, நாடாளுமன்றத்தில் உறுப் பினர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய முடியவில்லை. அந்த சூழல் இன்றைய நாடாளுமன்றத் தில் இல்லை. நான் 3 ஆவது முறை யாக எம்பியாக உள்ளேன். அந்த அனுபவம் எனக்கு இருக்கிறது. இன்று அமைந்துள்ள அரசில் அமைச்சர்களாக இருப்பவர்களில் பலரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட் டவர்களே இல்லை. அதிகாரிகளாக இருந்து நாடாளுமன்றத்தின் பின்புற வழியாக, ராஜ்ய சபாவிலிருந்து வந்து அமைச்சர்களாகியுள்ளனர். இதுவே ஜனநாயகத்திற்கு சாவலாக உள்ளது. (அதுகுறித்து பட்டியலே எடுக்கலாம்) நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெ டுக்கப்பட உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை மாற்றப்படும் என்ற செய்திகள் வருகின்றன. இதுவரை ஒன் றிய அரசின் குடும்ப கட்டுப்பாட்டு திட் டத்தை முறையாக நிறைவேற்றியது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம், ஆந் திரா போன்ற தென் மாநிலங்கள் தான். அந்த மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைய வுள்ளது. வடமாநிலங்களில் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை முறையாக கடைப்பிடிக்கவில்லை. அதனால் அங்கே மக்கள் தொகை அதிகரித்தது. எனவே, வடமாநிலங்களிலிருந்து வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதி கரிக்கக்கூடும்.
தேர்தல் முறை இந்தியா
ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க் கட்சிகளின் ஒன்றுபட்ட அமைப்பிற்கு இந்தியா எனப் பெயரிடப்பட்டுள்ளது. அப்பெயருக்கு மோடி கண்டனம் தெரி விக்கிறார். ஆனால் இவர்கள் பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைத்துள்ள னர். வேடிக்கை என்னவென்றால் நமது நாட்டின் தேசிய மலர் தாமரை. அதனை அவர்கள் கட்சியின் சின்னமாக வைத் துள்ளனர். தேர்தல் ஆணையம் இதற் குத்தான் நடவடிக்கை எடுக்க வேண் டும். தில்லி யூனியன் பிரதேசத்தில் அதி காரிகளை கவர்னர் மாற்றலாம் என்பது குறித்து நீதிமன்றம் சென்றதில் அது தவறு என தீர்ப்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சரே அதிகாரிகளை நிய மிக்கலாம் என 5 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. அதை முடக்கும் வகை யில் நீதிமன்ற தீர்ப்பையும் முடக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட் டது. அவை நடவடிக்கைகள் இப்படித் தான் உள்ளன. இவை ஜனநாயகத் திற்கு கேடு விளைவிப்பவையாகும். இன்றைக்கு இருக்கிற நாடாளு மன்ற அமைப்பு முறை என்பது அன்று என்ன உணர்வோடு உருவாக்கப் பட்டதோ அதற்கு முற்றிலும் வேறு பட்டதாக உள்ளது. இதை தடுத்து மாற் றியமைக்க வேண்டிய பொறுப்பு (கூட் டாட்சி தத்துவ அமைப்போடு) மாற்றி யமைக்க வேண்டிய பொறுப்பு வாக்கா ளர்களிடம் தான் உள்ளது. தேர்தல் வர உள்ளது. முறையாக நாட்டு மக்க ளின் உணர்வுகளை விவாதித்து, அந்த உணர்வுகளுக்கு மரியாதை தந்து அதை நிறைவேற்றுகிற வகையில் சட்டத்தை உருவாக்குகின்ற நாடாளு மன்றம் அமைய வேண்டும். அது நம் நோக்கமாகவும், முயற்சியாகவும் இருக்க வேண்டும்.