articles

img

இரு கட்சி அரசியல் ஜனநாயக விரோதமானது! - அ.அன்வர் உசேன்

இந்தியாவில் இரு கட்சிகள் மட்டுமே இருக்கும் நடைமுறையைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்துவருவதாக ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா சமீபத்தில் கூறியிருக்கிறார். இந்தியாவுக்கு இரு கட்சி ஆட்சி முறைதான் சிறந்தது என பல ஆண்டுகளாக அவ்வப்பொழுது அரசியல்வாதிகளும் முதலாளித்துவ அறிவுஜீவிகளும் கூறிவந்துள்ளனர். இப்பொழுது பிரதமர் மோடியும் அந்த வழியில் சிந்திக்கிறார் என மனோஜ் சின்ஹா கூறுகிறார்.  மனோஜ் சின்ஹா, மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவர். பிரதமர் மோடிக்கு மிக  நெருக்கமானவர். மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பி னராகவும் ஒன்றிய அமைச்சராகவும் பதவி வகித்தவர். உத்தரப்பிரதேசத்தில் 2017ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்கள் முடிந்த பின்னர் இவர்தான் முதல்வர் என பரவலாக பேசப்பட்டது. பின்னர் திடீரென ஆதித்ய நாத் முதல்வராக ஆக்கப்பட்டார். எனவே மனோஜ் சின்ஹாவின் கூற்று தனிப்பட்ட ஒருவரின் கருத்து என ஒதுக்கிவிட முடியாது. மேலும் இதுவரை பிரதமர் மோடியோ அல்லது பா.ஜ.க.வோ இந்த கூற்றுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்த வஞ்சக கருத் தாக்கம் நடைமுறையில் உழைக்கும் மக்களுக்கும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிக ளுக்கும் எதிரானது ஆகும். இந்தியாவின் சார்நிலை தேசியங்களை உள்ளடக்கிய பன்மைத்துவத்தை சிதைக்கும் சூழ்ச்சியும் இதில் அடங்கியுள்ளது.

வாரிசு அரசியலைப் பேச பா.ஜ.க.வுக்கு அருகதை உள்ளதா?

ஏன் இரு கட்சி முறை இருக்க வேண்டும் என்பதற்கு கீழ்கண்ட காரணங்களை மனோஜ் சின்ஹா குறிப்பிடு கிறார்.

  1.     இந்தியா போன்ற பெரிய தேசத்துக்கு இரு கட்சி ஆட்சிமுறைதான் சிறந்தது.
  2.     வாரிசு அரசியலை ஒழிக்க முடியும்.
  3.     சாதியக் கட்சிகளை ஒழிக்க முடியும்.

வாரிசு அரசியல் மற்ற கட்சிகளில்தான் உள்ளது போலவும் பா.ஜக.வில் அது அறவே இல்லை என்பது போலவும் அந்த கட்சியின் தலைவர்கள் பேசி வருகின்ற னர். பா.ஜ.க.வின் சில அரசியல் வாரிசுகள் இதோ:

  1.     வேத் பிரகாஷ் கோயல்- பியூஷ் கோயல்.
  2.     ராஜ்நாத் சிங்- பங்கஜ் சிங்
  3.     தேபந்திர பிரதான்-தர்மேந்திர பிரதான்
  4.     பிரேம் குமார் துமால்- அனுராக் தாகூர்
  5.     ரிச்சின் காரு- கிரண் ரிஜிஜூ
  6.     எடியூரப்பா- ராகவேந்திரா
  7.     கங்காதர ராவ் பட்னாவிஸ்- தேவேந்திர பட்னாவிஸ்
  8.     வசுந்தரா ராஜே- துஷ்யந்த் சிங்
  9.     கல்யாண் சிங்- ரஜ்வீர் சிங்
  10.     சாஹிப் சிங் வர்மா- பரவேஷ் வர்மா
  11.     பிரமோத் மகாஜன்- பூனம் மகாஜன்
  12.     கோபிநாத் முண்டே- பங்கஜ் முண்டே
  13.     கோபிநாத் முண்டே- பிரிதம் முண்டே
  14.     ரவி சுப்ரமண்யம்- தேஜஸ்வி சூர்யா


இந்த பட்டியல் இன்னும் நீளமானது. இப்படி ஏராளமான அரசியல் வாரிசுகள் பா.ஜ.க.வில் உள்ள னர். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் மற்ற கட்சிகளை ‘வாரிசு அரசியல்’ என ஏகடியம் பேசுகின்றனர்.  இரு கட்சி ஆட்சிமுறை வாரிசு அரசியலை எப்படி ஒழிக்கும் என்பது பா.ஜ.க. தலைவர்களுக்கே வெளிச்சம். அமெரிக்காவில் இரு கட்சி ஆட்சிமுறை தான்! அங்கு  ஜான் கென்னடி/ ராபர்ட் கென்னடி/ எட்வர்டு கென்னடி என மூன்று சகோதரர்களும் அரசி யல் அரங்கில் முக்கியப் பங்காற்றினர். ஜனாதிபதி யாக இருந்த ஜான் கென்னடியும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய ராபர்ட் கென்னடியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த குடும்பத்தின் சில வாரிசுகள் இன்றும் அமெரிக்க அரசியலில் உள்ள னர். அங்கு தந்தை ஜார்ஜ் புஷ் ஜனாதிபதியாக பதவி வகித்தார். பின்னர் அவரது மகன் இன்னொரு ஜார்ஜ் புஷ்ஷும் ஜனாதிபதியாக பதவி வகித்தார். பில் கிளிண்டன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மனைவி ஹிலாரி கிளிண்டன் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார். டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து ஜனாதிபதிக்கும் போட்டியிட்டார்.

டிரம்ப்பின் மருமகன் குலுஷ்னர் எவ்வித அனுபவமும் இல்லாமல் வளைகுடா நாடுகள் பிரச்சனையை தீர்க்க முக்கிய நபராக நியமிக்கப்பட்டார். இன்றைய ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் உக்ரைனில் பல அமெரிக்க ஆய்வகங்களை நடத்தினார். முக்கிய பதவி யில் இருந்தார். எனவே இரு கட்சி ஆட்சி முறை வாரிசு அரசியலை அகற்றிவிடும் என்பது அனுபவத்தில் நிரூ பிக்கப்படவில்லை. வாரிசு அரசியலைத் தவிர்ப்பது என்பது மக்களின் கூர்மையான அரசியல் உணர்வும் அந்தந்த கட்சிகளின் செழுமையான உட்கட்சி ஜனநாய கத்தையும் பொருத்தே அமையும். தனது வாரிசு அரசி யலை மறைத்துவிட்டு மற்றவர்களை இழிவுபடுத்தும்  பா.ஜ.க.வின் குற்றச்சாட்டு தன்னை எதிர்க்கும் கட்சிக ளை சிதைக்கும் உள்நோக்கம் கொண்டது. இன்னொன்று, வாரிசுகள் அரசியலுக்கு வருவது தவறும் அல்ல.

இரு கட்சி முறை பன்முகத்தன்மைக்கு எதிரானது

இரு கட்சி முறை சாதியக் கட்சிகளை ஒழிக்க உதவும் எனவும் மனோஜ் சின்ஹா குறிப்பிடுகிறார். இந்தியாவில் சாதிய வாக்கு வங்கிகளைக் கொண்ட கட்சிகள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட அல்லது தலித் பிரிவு மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சிக ளாக உள்ளன. இதனால் உருவாகும் ‘அடையாள அரசி யல்’ மக்களின் ஒற்றுமையை பாதிக்கிறது என்பது உண்மையே! எனினும் சாதிய கட்சிகள் அல்லது சாதிய அரசியலை தொலைவில் நிறுத்தி வைக்கும் கட்சி அல்ல பா.ஜ.க. பல மாநிலங்களில் சாதிய கட்சிகளை  தனது அணியில் சேர்த்து அரசியல் செய்த கட்சி தான் பா.ஜ.க. உதாரணத்துக்கு பீகாரில் ராம்விலாஸ்  பஸ்வானின் இயக்கமான லோக் ஜன் சக்தி/ 1996ல் மாயா வதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் சேர்ந்து உ.பி.யில் கூட்டணி ஆட்சி/ தமிழகத்தில் சில கட்சிகளுடனும் கூட்டணி என பா.ஜ.க. தயங்கியது இல்லை. 2017 மற்றும் 2022 உ.பி. சட்டமன்ற தேர்தல்களில் அகி லேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியை தோற்கடிக்க யாதவ சமூகம் அல்லாத ஏனைய அனைத்து பிற் படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகளை திட்ட மிட்டு பெற்றதன் மூலம்தான் பா.ஜ.க. வென்றது. அதற்காக எல்லையில்லாத வகையில் சாதிய அரசியலை கையாண்ட கட்சிதான் பா.ஜ.க. தனது சுயநலத்துக்காக பல மாநிலங்களில் சாதிய வாக்கு வங்கிகளைப் பெற கூட்டணி அமைக்கத் தயங்காத பா.ஜ.க.,  சாதியக் கட்சிகளை ‘இரு கட்சி அரசியல்’ மூலம் ஒழிக்கப் போவதாகக் கூறுவதுகேலிக்கூத்து. 

சில மாநிலங்களில் மொழி  சார்ந்த தேசிய இன நலன் களை முன்வைக்கும் கட்சிகளும் உள்ளன. ஒரே மதம்/ ஒரே பண்பாடு/ ஒரே மொழி என பன்மைத்தன் மையை சிதைக்கும் சங் பரிவாரத்தின் அணுகு முறை காரணமாக இத்தகைய இயக்கங்கள் வலுப் பெறுகின்றன.  உழைக்கும் மக்களின் நலனை வலுவாக முன்வைப்பதும் இந்தியாவின் பன்மைத்தன்மையை உயர்த்திப் பிடிப்பதன் மூலமும் மட்டும்தான் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியும். இரு கட்சி அரசியல் மூலம் இத்தகைய சூழல்களை தடுக்க இயலாது.

அமெரிக்க அனுபவம்

இரு கட்சி அரசியல் முறைக்கு மிக மோசமான உதாரணம் அமெரிக்காதான்! பல நூற்றாண்டுகளாக அங்கு ஜனநாயக கட்சி/ குடியரசு கட்சி எனும் இரு கட்சிகள் அரசியல்தான் நிலவுகிறது. இரு கட்சிகளுமே அமெரிக்க முதலாளிகளின் பிரதிநிதிகளாகத்தான் தேர்தல்களில் போட்டியிடுகின்றன. ஆட்சி அமைத்த பிறகு முதலாளிகளுக்கு இசைந்த கொள்கைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றுகின்றனர். இதன் விளைவாக அமெரிக்க உழைக்கும் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பது இல்லை. அவர்களின் ஊதியமும் வாழ்வாதாரமும் வீழ்ச்சி அடைந்து கொண் டுள்ளன. இரு கட்சிகளுமே எந்த ஒரு முற்போக்கு இயக்கத்தையும் அனுமதிப்பது இல்லை. சில சமயங்க ளில் முற்போக்கு கோட்பாடுகளை முன்வைக்கும்  தனி  நபர்களையும் கூட அனுமதிப்பது இல்லை.

இதற்கு சிறந்த உதாரணம், பெர்னி சாண்டர்ஸ். முற்போக்கு  சிந்தனை கொண்ட பெர்னி சாண்டர்ஸ் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தொடக்கத்தில் சில மாநிலங்களில் ஜனநாயக கட்சி வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். ஆனால் அனைத்து முதலாளிக ளும் சேர்ந்து அடுத்தடுத்த ஜனநாயக கட்சி தேர்தல்க ளில் அவரை தோற்கடித்து ஜோ பைடனை வெற்றி பெற வைத்து வேட்பாளர் ஆக்கினர். இரு கட்சி அரசியல் உழைக்கும் மக்களுக்கு எவ்வித நன்மையும் பயக்க வில்லை என்பதே அமெரிக்க அனுபவம்.  வெளியுறவுக் கொள்கைகளிலும் அமெரிக்க முத லாளித்துவ நலனையே இரு கட்சிகளும் பின்பற்று கின்றனர். சீனா/ கியூபா போன்ற சோசலிச நாடுக ளை முடக்குவதில் இரு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை. ரஷ்யாவை சிதைக்க உக்ரைனை பகடைக் காயாக பயன்படுத்துவதிலும் ஈரான் மற்றும் பாலஸ் தீனத்துக்கு எதிராகவும் இரு கட்சிகளுக்கும் ஒரே நிலைதான்! இந்த சூழலில்தான் சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 40 சதவீதம் அமெரிக்க மக்கள் இரு கட்சிகளும் இல்லாமல் மூன்றா வது அரசியல் கட்சியும் இருக்க வேண்டும் என்பதை ஆதரிக்கின்றனர். குறிப்பாக இளைய தலை முறை யினர் 50சதவீதம் அவ்வாறு விருப்பம் தெரிவித்துள் ளனர். அமெரிக்காவில் மக்கள் ஆதரவை இழந்து கொண்டிருக்கும் ஒரு முதலாளித்துவ நடைமுறையை தான் இந்தியாவில் செயல்படுத்த பா.ஜ.க வினர் முயல்கின்றனர். 


இரு கட்சி அரசியலும்  இடது ஜனநாயக முன்னணியும்

1977ஆம் ஆண்டு இந்திய முதலாளிகள் மற்றும்  நிலப்பிரபுக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டாவது தேசிய முதலாளித்துவ கட்சியாக ஜனதா கட்சி உருவானது. காங்கிரஸ் மற்றும் ஜனதா கட்சி ஆகிய இரு முதலாளித்துவ கட்சிகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கும்  விருப்புரிமை மட்டுமே மக்களுக்கு இருக்கும் ஒரு சூழல் உருவாகக்கூடாது எனவும் முத லாளித்துவ கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டு உழைக்கும் மக்களின் கொள்கைகளை முன்வைக்கும் ஒரு இயக்கம் தேவை எனும் அடிப்படையில்தான் 1978ஆம் ஆண்டு ஜலந்தரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10ஆவது அகில இந்திய மாநாட்டில் வலுவான இடது ஜனநாயக முன்னணி உருவாக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 45 ஆண்டுகளுக்குப் பின்னர் பல அரசியல் மாற்றங் கள் ஏற்பட்டிருந்தாலும் இந்த முன்னுரிமைப் பணி இன்னும் அவசர அவசியத் தேவையாக உள்ளது. முதலாளித்துவ கொள்கைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட மாற்று வர்க்க அரசியலை முன்வைக்கும் இடது ஜனநாயக முன்னணி உருவாக்கப்படுவது இன்றைய முக்கிய கடமையாகும். மதவாதத்தை தனி மைப்படுத்த பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து மதச்சார் பற்ற ஜனநாயக சக்திகளையும் ஓரணியில் திரட்டும் அதே வேளையில், இடது ஜனநாயக வர்க்க அரசியல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை! அந்த நிலையை உயர்த்திப் பிடித்து, இரு கட்சி அரசியல் என்பதை கடுமையாக எதிர்ப்போம்!