சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக ஒரு போஸ்டரை வெளியிட்டு பல்வேறு பகுதி களிலும் பெரிய அளவில் ஒட்டியுள்ளது. அதில், ஒன்றிய அரசாங்கம் ரேஷன் அட்டைகளுக்கு எவ்வளவு அரிசி வழங்குகிறது, அதில் மாநில அர சின் பங்கு என்ன என்று குறிப்பிட்டு, கேள்விஎழுப்பி யுள்ளனர். ஏதோ பிரதமர் நரேந்திர மோடிதான் எங்கி ருந்தோ கிடைத்த பணத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு அரிசி கொடுத்திருக்கிறார் என்பது போன்று மக்களை வழக்கம் போலவே திசைதிருப்பும் வேலையில் பாஜக வினர் ஈடுபட்டுள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், அடுத்த ஆண்டு வரவிருக்கிற தேர்தலை மனதில் வைத்து மோடி அரசாங்கம் முன்னுரிமை குடும்ப அட்டைக ளுக்கு இலவசமாக அரிசி வழங்குவதாக இந்த ஆண்டு தான் அறிவித்துள்ளது. இதுவரையிலும் மாநில அரசு தான் ஒன்றிய அரசிடம் விலை கொடுத்து வாங்கும் அரிசியை அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் கொடுத்து வருகிறது. இப்போதும் கூட தமிழகத்தில் முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு மட்டுமின்றி இதர பகுதியினருக்கும் விலையில்லாமல் தான் அரிசியை விநியோகித்து வருகின்றனர்.
திட்டம் போட்டு ‘வெட்டும்’ ஒன்றிய அரசு
மோடி அரசாங்கம் மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி, ஜி.எஸ்.டி. இழப்பீடு, வருவாய்ப்பற்றாக்குறை உட்பட, மாநிலங்களுக்குத் தர வேண்டிய நிலுவை களை ஒன்றிய அரசு தருவதில்லை. மாறாக, பல்வேறு திட்டங்களை பிரதமர் பெயரில் அறிவித்துவிட்டு பிறகு, அந்த திட்டத்திற்கான பங்கையும் வெட்டிச் சுருக்குவதை யும் வாடிக்கையாக வைத்திருக்கிறது ஒன்றிய அரசு. உதாரணமாக பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் என்கிற திட்டம் ஆரம்பத்தில் காப்பீட்டுத் திட்டங்களு க்கு கட்ட வேண்டிய பிரிமியம் தொகையை மாநில அரசும் ஒன்றிய அரசும் தலா 49 சதவிகிதமும், விவசாயி கள் 2 சதவிகிதமும் கட்டுவதாக அமல்படுத்திக் கொண்டிருந்தது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த விகிதம் தானடித்த மூப்பாக மாநிலங்களை பாதிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இதன் காரணமாக 2016-17 இல் மாநில அரசின் பங்கு ரூ.566 கோடியாகவும், ஒன்றிய அரசின் பங்கு ரூ.566 கோடியாகவும் இருந்த பிரிமியம் தொகையில் 2021-22ல் மாநில அரசின் பங்கு ரூ.1918 கோடியாக உயர்ந்தது. ஆனால் ஒன்றிய அரசின் பங்கு ஏறத்தாழ ரூ.500-600 கோடியாகவே நீடித்து வருகிறது. ஆயினும் அந்த திட்டத்திற்கு இப்போதும் ‘பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம்’ என்றே பெயர் நீடிக்கிறது.
இழுத்தடிக்கும் போக்கு
இதேபோன்று விடுதலை பெறுவதற்கு முன் பிருந்தே அமல்படுத்தப்பட்டு வந்த பட்டியல், பழங்குடி யின மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பிற்கு பிந்தைய கல்வி உதவித்தொகையில் ஒன்றிய அரசின் பங்கு 75 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக குறைக்கப் பட்டது. அந்த 60 சதவிகிதத்தையும் முழுமையாக மாநி லங்களுக்கு கொடுக்காமல் இழுத்தடிக்கும் போக்கை ஒன்றிய அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான், பொய்யைப் போஸ்ட ராக்கி மக்களை திசைதிருப்பும் வகையில் அந்த போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி
இந்தியாவில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது அதில் இந்தியா முழு மைக்கும் ஒட்டுமொத்தமாக கிராமப்புறத்தில் 75 சத விகிதமும், நகர்ப்புறத்தில் 50 சதவிகிதமும் இந்த திட்டத் தின் கீழ் வருவார்கள் என்று சொல்லப்பட்டது. அதே சமயம், மாநிலத்திற்கு மாநிலம் இது வேறுபடும். அதன டிப்படையில், கேரளாவில் கிராமப் பகுதிகளில் 52.6 சத விகிதம் பேரும், நகர்ப்புறத்தில் 39.5 சதவிகிதம் பேரும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படை யில் மானிய விலையில் அரிசி பெற தகுதி படைத்த வர்கள். தமிழகத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 62.5 மற்றும் 37.8 சதவிகிதமாகும். மாறாக பாஜகவினர் தங்க ளது ‘மாடல்’ என்று சொல்கிற குஜராத்தில் நகர்ப்புறத் தில் 74.6 சதவிகிதமும் கிராமப்புறத்தில் 48.3 சதவிகி தமும் இத்தகைய பயனாளிகள் இருப்பார்கள் என்று சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இவையெல் லாம் அந்த மாநில மக்களின் வாழ்நிலையை, வருமா னத்தை கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டவை. இதன் அடிப்படையில்தான் மாநிலங்களுக்கான ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு 36.78 லட்சம் டன் அரிசி மாதாந்திர ஒதுக்கீடாக நிர்ணயிக்கப்பட்டது. அப்படி நிர்ணயிக்கும் போதே நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி என்றும், (தமிழகத்தில் ஒரு நபர் அட்டைக்கு 12 கிலோவும், இருநபர் அட்டைக்கு 16 கிலோவும், 3 நபர் அட்டைக்கு 20 கிலோவும் வழங் கப்பட்டு வருகிறது) முன்னுரிமை அட்டைகளுக்கு வழங்கப்படுவதோடு ஏற்கனவே ஒன்றிய அரசிடமி ருந்து பெறும் ஒதுக்கீடுகள் குறைக்கப்பட மாட்டாது என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அப்படி அளிக் கப்பட்ட உத்தரவாதத்தின்படி முன்னுரிமை அட்டை தாரர்களுக்கான ஒதுக்கீடு போக மீதமுள்ளவற்றிற்கு ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் விலையில் அதே அளவிற்கான ஒதுக்கீடு நீடிக்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதற்கு ‘ஈடுசெய் இழப்பு (Tide Over)’ என்று சொல்லப்பட்டது. இந்த ஒதுக்கீட்டிற்கு ஒரு கிலோ அரிசி ரூ.8.30 விலைக்கு மாநில அரசுகளுக்கு கொடுக்கப்பட்டது.
அதிகரிக்கப்பட்ட விலை
இந்த பின்னணியில், விரும்புகிற அனைத்து அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்குவதை, அந்த அரிசியையும் விலையின்றி வழங்குவதை தமிழ்நாடு அரசு தொடர்ந்தது. தற்போதும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. இதன் காரணமாக அட்டைகள் மொத்தத் துக்கும் தேவையான அரிசியை ஒன்றிய அரசிடமி ருந்து ‘ஓபன் மார்க்கெட்டின் சேல்ஸ் சிஸ்டம்’ என்ற அடிப்படையில் ஒன்றிய அரசாங்கம், அதாவது இந்திய உணவுக் கழகம், நெல் கொள்முதல் செய்து அரிசி யாக்கி பாதுகாத்து வைப்பதற்கான செலவுகள் உள் ளிட்டு என்ன செலவாகிறதோ அந்த விலைக்கே மாநி லங்கள் வாங்கிக் கொள்ள முடியும். இந்த விலை கடந் தாண்டு வரை 23 ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு 50 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப்பட்டு 34 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இந்த விலை கொடுத்து ஒவ் வொரு ஆண்டும் சுமார் 2,25,000 டன் அரிசியை தமிழ்நாடு அரசாங்கம் ஒன்றிய அரசிடம் கொள்முதல் செய்து வருகிறது.
தமிழக அரசு கொடுக்கும் விலை
இது தவிர, மாநில அரசாங்கம் இந்திய உணவுக் கழகத்திற்காக தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்து கொடுக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ஒன்றிய அரசாங்கம் என்ன குறைந்தபட்ச ஆதார விலை நிர்ண யிக்கிறதோ அதற்கு மேலதிகமாக டன்னுக்கு ரூ.750-1000 ஆக வழங்குகிறது. இதன் காரணமாக மட்டும் தமிழக அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.500 கோடி செலவாகிறது. எனவே, ஒன்றிய அரசு கொடுத்தது போக, மாநில அரசு ஈடுசெய் இழப்பிற்கு வாங்கும் அரிசிக்கு ரூபாய் 8.30 விலை கொடுத்தும் மேலதிகமாக ஓபன் மார்க்கெட் சேல்ஸ் ஸ்கீமில் வாங்குகிற அரிசிக்கு ரூபாய் 34 கொடுத்தும் வாங்கித்தான் ரேஷன் கடைகளில் அனை வருக்கும் அரிசியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
அதாவது, இந்த ஆண்டுக்கு முன்னர் 3 ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட அரிசி தவிர இதர அரிசிக்கு சுமார் 12 லட்சம் டன்னுக்கு 8.3 ரூபாய் கொடுத்தும்; 2,25,000 டன்னுக்கு ரூபாய் 23 கொடுத்தும் வாங்கிக் கொண்டிருந் தது. இந்த ஆண்டு 3 ரூபாய் அரிசியை விலையின்றி ஒன்றிய அரசு கொடுக்கிறது. ரூ.8.3 க்கு வாங்கும் அரிசி யின் விலை அப்படியே நீடிக்கிறது. 2.25 லட்சம் டன் அரிசியை பொறுத்தமட்டில் இந்த ஆண்டிலிருந்து 11 ரூபாய் கூட்டப்பட்டு 34 ரூபாய் கொடுத்து மாநில அரசு வாங்குகிறது. இதைத் தாண்டித்தான் ஆண்டுக்கு 500 கோடி கூடுதலாக செலவழித்து நெல்கொள்முதல் செய்கிறது. இதுவரையிலும் 20 லட்சம் டன்னாக இருந் தது, இந்த ஆண்டு 28 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
அப்பட்டமான மோசடி
இத்தனை ஆண்டுகளாக மாநில அரசு காசு கொடுத்து வாங்கி இலவசமாக மக்களுக்கு கொடுத் ததை மறைத்துவிட்டு, அடுத்தாண்டு தேர்தலை மனதில் கொண்டு இந்த ஆண்டு கொடுப்பதை மட்டும் ஒட்டு மொத்தமான இலவசம் என்று மோடிக்கு புகழ் மாலை சூட்டுவது அப்பட்டமான மோசடியாகும். இதிலும் கூட தமிழ்நாட்டில் சராசரி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 3.5 மட்டுமே. மிகச் சில குடும்ப அட்டைகளில் மட்டுமே 7 பேர்வரை இருக்கக் கூடும். எனவே, அந்த குடும்பங்க ளுக்கு 35 கிலோ கொடுக்கிறோம். அவ்வளவும் இலவசம், அத்தனையும் மோடி கொடுத்தது என்று சொல்வது ஏமாற்று வித்தை.
அரிசி ஒதுக்கீடும் தொடர்ந்து வெட்டு
இது ஒருபுறமிருக்க, ஒன்றிய அரசாங்கம் புதிதாக சேர்ந்த மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கீடுகளை அதி கரிக்கவில்லை. 2016ல் 36.78 லட்சம் டன் என்று ஒதுக்கீடு செய்துவிட்டு, அந்த காலம் முழுவதும் 2018ல் 31.7 லட்சம் டன், 2019ல் 31.3 லட்சம் டன், 2020ல் 33.3 லட்சம் டன், 2021ல் 32.3 லட்சம் டன், 2022ல் 32 லட்சம் டன் என்று குறைத்தே கொடுத்துள்ளது. மாறாக, 2018ல் முன்னு ரிமை அட்டைகளின் மொத்தம் 95,64,540 ஆக இருந்தது, 2022ல் 1,14,25,794 ஆக உயர்ந்துள்ளது. முன்னுரிமை யற்ற அட்டைகளும் கூட 90,08,842 லிருந்து 1,02,63,336 ஆக உயர்ந்துள்ளது. அதாவது அரிசி பெறும் அட்டைக ளின் எண்ணிக்கை இந்த காலத்தில் 31,15,748 உயர்ந் துள்ளது. ஆனால், ஒதுக்கீடு மாதத்திற்கு 1,244 டன்; அதாவது ஆண்டுக்கு 14,928 டன் குறைக்கப்பட்டி ருக்கிறது. அதாவது, இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட 2016 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மக்கள் தொகை உயர்விற்கு ஏற்ப ஒதுக்கீடுகளை அதிகரிப்பதற்கு பதி லாக ஒதுக்கீட்டை குறைத்திருக்கிறார்கள். இதையும் சமாளித்து மாநில அரசுகள் பொது விநியோகத் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் பாஜக வினர், நரேந்திர மோடி அரிசியில் கணிசமாக இலவச மாக கொடுப்பதாகவும், அதையும் நரேந்திர மோடியே கொடுப்பதாகவும் பீற்றிக் கொள்வது வழக்கமான அவர்களின் ஏமாற்று வேலையே தவிர, உண்மை கிடையாது.