articles

img

‘ஆவினை’ பாதுகாக்கும் வழி - பி.பெருமாள்

ஆவின் பால் உற்பத்தியாளர்களின்  கொள்முதல் விலை உள்ளிட்ட இதர கோரிக்கைகளை  ஏற்று அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து கூடுதல் பால் கொள்முதல் செய்வதும், பொது மக்களுக்கு தரமான பாலைக் கொடுப்பதும் பலனளிக்கும்.

ஆவினுக்கு “அமுல்” வருகையால் மட்டும் ஆபத்து இல்லை. மாறாக பால் உற்பத்தி யாளர்களின் கொள்முதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதே தீர்வு. தமிழகத்தில் “அமுல்” நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளான வெண்ணெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது. தற்பொழுது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் குளி ரூட்டும் நிலையம் மற்றும் பதப்படுத்தும் ஆலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் சொசைட்டிகள் மற்றும் சுயநிதிக் குழுக்கள் மூலம் பாலை கொள்முதல் செய்ய திட்ட மிட்டுள்ளது.

அமுல் மூலம் ஆபத்தா?

இந்நிலையில் தமிழக முதல்வர் தமிழகத்தின் “ஆவின்” பால் கூட்டுறவு நிறுவனத்தின் பால் கொள் முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை தடுக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு வலியுறுத்தி உள்ளார். சமீபத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் கர்நாட கத்தின் அமுல் நிறுவனம் மாநில கூட்டுறவு பால் நிறு வனமான நந்தினி உடன் இணைந்து செயல்படும் என அறிவித்தார். இது கர்நாடக மாநில நந்தினி நிறு வனத்தை அழித்து விடும் என கர்நாடக விவசாயிகள் மத்தியில் அச்சமும் அம்மாநிலத்தில் அரசியல் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமித்ஷா கூட்டுறவு துறை அமைச்சர் பொறுப்பை தன் வசம் கொண்டு வந்த பிறகு குஜராத்தில் உள்ள “அமுல்” உள்ளிட்ட கூட்டுறவு அமைப்புகளையும் பால் உற்பத்தியாளர்களையும் தங்கள் வாக்கு வங்கியாக மாற்றும் முயற்சி குஜராத் சட்டமன்ற தேர்தலில் நடைபெற்றது. மத்திய பாஜக  ஆட்சியாளர்கள் கூட்டுறவு ஜனநாயகத்தை அழிப்ப தும், அந்த அமைப்புகளை வாக்கு வங்கியாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆவின் கடந்து வந்த பாதை

தமிழகத்தில் 1958இல் பால் வளத்துறையை அரசு ஏற்படுத்தியது. 1965இல் பால் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக கட்டுப்பாடுகள் பால்வளத்துறைக்கு கொண்டு வரப்பட்டது. 1972இல் இத்துறை வணிக நோக்கத் தோடு செயல்படும் வகையில் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. 1981 முதல் “ஆவின்” நிறு வனத்தின் கீழ் தமிழக அளவில் ஒரு இணையமும், 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றி யங்கள், தமிழகம் முழுவதும் 12000 (தற்பொழுது 9673) ஆரம்ப பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் என்ற மூன்றடுக்கு முறையில் செயல்பாட்டிற்கு வந்தது. இந்த மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்புகளும் 1983 முதல் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்படி நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

நிர்வாகச் சீர்கேடுகள்

தமிழகத்தில் கூட்டுறவு தேர்தல்கள் நடைபெறும் காலங்களின் ஆவினின் மூன்றடுக்கு முறைக்கும் நடைபெற்ற கூட்டுறவு தேர்தலில் ஒரு சில இடங்களில் தவிர பெரும்பான்மையான தேர்வுகளுக்கு தேர்தல் நடைபெறாமல் ஆளுங்கட்சியினரால் பொறுப்புகள் நிரப்பப்பட்டு திறமையான, கூட்டுறவின் மீது அக்கறை உள்ளவர்கள் பொறுப்புக்கு வராமல் தடுக்கப்பட்டு நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. ஆரம்ப பால் கூட்டுறவு சொசைட்டிகளுக்கு கூடுதல் வருவாய் இல்லாமல் சிதைத்தது. ஒன்றியம் மற்றும் இணையத்தில் தேவைக்கு அதிகமான கூடுதல் செலவுடன் கூடுதல் அதிகாரிகள் செயல்படு வது, துணை குளிரூட்டும் நிலையங்கள், ஒன்றியங்க ளில், வாகனம் மூலம் பால் கொண்டு செல்லும் போது பால் திருட்டு, கலப்படம் செய்வது, பால் விற்பனையில் மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத்தி வருமானத்தை உயர்த்தாதது போன்ற நடவடிக்கைகளால் “ஆவின்” கட்டமைப்பு பலகீனப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவு

ஆரம்ப சொசைட்டிகளில் பால் கொள்முதல் செய்யும் இடங்களிலேயே பாலின் தரமும், எடை அளவும் கணக்கிட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின்  25.10.2017 தீர்ப்பு அமலாக்கப்படவில்லை. மூன்று இடங்களில் பால் தரம், அளவு கணக்கிடப்பட்டு முறையான தொகை ஆரம்ப சொசைட்டிகளுக்கு கிடைக்காமல் அவை நலி வடைகின்றன. தமிழக அரசு விற்பனை விலையில் ரூ.3 குறைத்ததன் காரணமாக, ஆவினுக்கு ஆண்டுக்கு அரசு வழங்க வேண்டிய ரூ.300 கோடி வழங்கப்படாத தால் ஆவின் நலிவடைந்து பால் உற்பத்தியாளர்க ளுக்கு வழங்க வேண்டிய பால் பண பாக்கி 60 முதல் 70 நாள் வரை வழங்கப்படாமல் பால் உற்பத்தியா ளர்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். தற்போது கறவை மாடுகளுக்கு தீவன பற்றாக்குறை மேய்ச்சல் பரப்பு குறைந்தது போன்ற காரணங்களால் உலர் தீவனத்தை நாட வேண்டியுள்ளது. தற்போது ஆவினால் நடத்தப்பட்ட ஆம்பூர், மற்றும் மதுரை தீவன ஆலைகள் இயங்குவதில்லை. ஈரோட்டில் ஒரு பகுதி இயங்கி தினமும் 30 டன் அளவிற்கு தீவனம் தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்படுகிறது. தமிழ கத்தின் தேவைக்கு இது போதுமானதாக இல்லாத தால் கோத்ரெஜ் கே.எஸ். தீவனம், எஸ்கேஎம் தீவனம் சந்தோஷ் ஆர்யா, ஆய்ஸ், செவன்ஸ்டார், கிரீஸ் கூடுதல் விலை போன்ற தனியார் தீவனங்களை கூடுதல் விலை கொடுத்து வாங்கி பால் உற்பத்தியாளர்கள் நஷ்டப்படுகின்றனர்.

தனியார் நிறுவனங்களை நோக்கி

கடந்த சில ஆண்டுகளாக தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட இடுபொருட்கள் பல மடங்கு விலை உயர்ந்த சூழலில் பால் உற்பத்தியாளர்கள் பாலுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி கேட்டும், 50 சதவீதம் மானியத்தில் தீவனம், கர்நாடகா, கேரளா போன்று அரசு மூலம் பாலுக்கு மானியம், பால் கொள்முதல் செய்யும் இடங்களிலேயே தரம், அளவை கணக்கிடுவது, ஆரம்ப சொசைட்டிகளுக்கு மார்ஜின் தொகையை உயர்த்திக் கொடுப்பது, கூடு தலான பால் விற்பனைக்கு சத்துணவில் பால் கொடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராடி வரும் சூழலில், தமிழக அரசு கொள்முதல் விலை ரூ.3  மட்டும் உயர்த்தியது. இதர கோரிக்கைகள் ஏற்கப்பட வில்லை. இந்த போக்கின் காரணமாக பால் உற்பத்தி யாளர்களிடம் கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 

சுயபரிசீலனை தேவை

தமிழகத்தில் தினசரி சுமார் 1.90 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகும் சூழலில், ஆவின் மூலம் தற்போது 27 லட்சம் மட்டும் கொள்முதலாகிறது. கடந்த காலத்தில் 40 லட்சம் லிட்டர் வரை கொள்முதல் செய்யப்பட்டது. தனியார் நிறுவனங்களில் பால் கொள்முதல் செய்யும் இடங்களிலேயே அளவு, தரம் கணக்கிடப்பட்டு, போனுக்கு மேசேஜ் அனுப்பப்படுகிறது. வாராவாரம் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.  தனியார் நிறுவனங்களான ஹெரிட்டேஜ், திருமலா, ஹட்சன், ஆரோக்யா, கெவின், எஸ்.என்.பி -சேவா மில்க், ராஜ் மில்க், கே.சி.பால், அமிர்தா பால் போன்றவைகள்  ஆவினைக் காட்டிலும் லிட்டர் 1க்கு ரூ.7 முதல் ரூ.10 வரை கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர். இதன் மூலம் பல லட்சம் லிட்டர் பால் தனியார் நிறுவனங்களுக்கு செல்கிறது. தனியார் நிறுவனங்கள் ரூ.20 வரை ஆவினை விட கூடுதல் விலைக்கு பொதுமக்களுக்கு விற்கின்ற னர். இது குறித்து அரசும், ஆவின் நிறுவனமும் எந்தவித மான கவனமும், அழுத்தமான நடவடிக்கைகளும் இல்லை. 

எனவே, ‘அமுல்’ போன்ற கூட்டுறவு நிறுவன வரு கையால் மட்டுமே ஆவினுக்கு பாதிப்பு என்பது ஏற்பு டையதல்ல. ஆவின் பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலை உள்ளிட்ட இதர கோரிக்கை களை ஏற்று அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து கூடுதல் பால் கொள்முதல் செய்வதும், பொதுமக்க ளுக்கு தரமான பாலைக் கொடுப்பதும் பலன ளிக்கும். எல்லா காலங்களிலும் “ஆவின்” போன்ற  கூட்டுறவு அமைப்புகள் பலமாகச் செயல்படுவதன் மூலமே பால் உற்பத்தியாளர்களின் நலன்கள் பாதுகாக்க முடியும்.  தற்போது பால்வளத்துறை அமைச்சர், ஆவினில் 70 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்வதற்கான கட்ட மைப்பு உருவாக்கப்படும் எனவும், இந்தாண்டு இறு திக்குள் கொள்முதல் விலை உயர்த்தப்படும் எனவும்  இதர கோரிக்கைகள் முதல்வரிடம் கவனப்படுத்தப் படும் என அறிவித்துள்ளார். பால் உற்பத்தியாளர்க ளுக்கு அதிக பட்ச லாபமும், நுகர்வோருக்கு மிகத் தரமான பாலும் கிடைக்கவும் ஆவின் நிறுவனத்தைப் பலப்படுத்தவும் ஒன்றுபடுவோம். 

கட்டுரையாளர் : மாநிலப் பொதுச்செயலாளர்,  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்