articles

img

நல்லெண்ண நடவடிக்கைகளே சார்க் அமைப்பை உயிர்த்தெழச் செய்யும் - பேரா.பார்த்தா எஸ்.கோஷ்

நேற்றைய தொடர்ச்சி...

சீன துருப்புச் சீட்டு

சீனாவின் அருகாமையும், அதன் வளர்ந்து வரும் பொருளாதார வலிமையும் இந்தியாவின் அண்டை நாடுகள் பலவற்றிற்கும் சீனாவை கவர்ச்சிகரமான  கூட்டாளி ஆக்கியுள்ளன. வங்கதேசம், நேபாளம், இலங்கை, பூட்டான், மாலத்தீவுகள் ஆகிய நாடுகள் இந்தியாவின் மேலாதிக்கத்தை எதிர்கொள்ள  சீனத்தை‌ துருப்புச் சீட்டாக பயன்படுத்துகின்றன. நேபாளத்தில்  மாவோயிஸ்டு தலைவர் பிரச்சந்தா, கே.பி. சர்மா ஒலியின் அரசுக்கு அளித்து வந்த ஆதர வை திரும்பப் பெறுவதாக அறிவித்தபோது,  சீனா தலை யிட்டு தீர்வு கண்டது. சீனாவின் நிதி உதவி மறுக்க முடி யாத அளவுக்கு தெற்காசிய நாடுகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது. 

தெற்காசிய மண்டலத்தை நிறுவனமயமாக்குதல்

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் 1985 இல் உருவாக்கப்பட்டது. மண்டல அமைப்பு என்ற வரை யறை மட்டுமே தெற்காசியாவை மண்டலமாக நிறுவன மயமாக்க போதுமானதா? ஒரு புவியியல் மண்டலம் உறுதியான நிறுவனமாக ஐந்து முக்கிய அம்சங்கள் தேவையாகும். அவை:

1. நாடுகளுக்கு இடையேயான நீண்டகால வர லாற்று - பண்பாட்டுத் தொடர்புகள்.

2. அரசியல் ஒற்றுமை

3. பொருளாதார ஒத்துழைப்பு

4. பரஸ்பர பொருளாதாரம் மற்றும் பல்வேறு தொடர்புகள் 5. அதிகார சமநிலை. இவற்றில் தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள நிலைமை:

1. நாடுகளுக்கு இடையேயான வரலாறு -பண் பாட்டுத் தொடர்புகள்: எடுத்துக்காட்டாக இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளிலும்  இரு வேறு விதமான வர லாறுகள் கற்பிக்கப்படுகிறது. இந்தியாவில் வரலாற்றை திருத்தியும்,முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியை மறைத்தும் “இந்து இந்தியாவின்” புகழ்பாடும் வரலாறு போதிக்கப்படுகிறது.

2. அரசியல் ஒற்றுமை;  தெற்காசிய நாடுகளில் உள்ள ஒவ்வொரு நாட்டின் அரசியலும் பெரும்பான்மை மக்களின் மதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது. சிறுபான்மை மதத்தினரை எதிரியாக முன்னிறுத்தி மக்களை ஒருவருக்கொருவர் எதிரியாக மோதவிடுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இந்து யிசம் எதிர் இஸ்லாமிய அரசியலாக உள்ளது. வங்க தேசத்திலும் குறிப்பிடத்தக்க அளவில் இதுபோன்ற நிலைமையே உள்ளது. இலங்கையில் மத ரீதியாக மட்டுமின்றி இன ரீதியாகவும் மக்கள் மோதவிடப்படு கின்றனர் .பெரும்பான்மை சிங்களர்கள் ( புத்த மதத்தி னர்) எதிர் சிறுபான்மைத் தமிழர்கள் ( பெரும்பகுதி இந்துக்கள்) அரசியலாக உள்ளது.

3&4. பரஸ்பர பொருளாதார ஒத்துழைப்பு  மண்டல அளவிலான பொருளாதார ஒத்துழைப்பு

தெற்காசிய நாடுகளிடையே அர்த்தப்பூர்வமான பரஸ்பர பொருளாதார ஒருங்கிணைப்பு, மண்டல அள விலான வணிகம் மிகச்சிறிய அளவிலேயே எஞ்சியுள்ளது.

5. அதிகாரச் சமநிலை தெற்காசிய மண்டலத்தில் உள்ள நாடுகளுக்கு இடையிலான அதிகார சமநிலை பொருத்தமின்மை பெரிய அளவில் வெளிப்படையாகவே தெரிகிறது. H இந்தியா -பாக் இடையிலான தீர்க்கப்படாத பதற்றநிலை தான் மிகப்பெரிய தடையாக நீடிக்கிறது. இந்த பதற்றமானது தெற்காசிய மண்டலத்தில்  சீனா வின் இருப்பை மேலும் அதிகரிக்கிறது. இது நிலைமை யை மேலும் சிக்கலாக்கிவிடும்.

உருவாக்கியபோதே அழிவை நோக்கிச் சென்ற அமைப்பு

சார்க் அமைப்பை  உறுதியாக கட்டமைப்பதில் இந்தி யாவிற்கோ, பாகிஸ்தானுக்கோ ஆர்வம் இல்லாத தால் சார்க் ஆரம்பிக்கப்பட்டபோதே அது தோல்வியை நோக்கியே செல்லும் என்று  தெரிந்துவிட்டது. வேண்டா வெறுப்பாக இணைந்த நாடுகளோ தங்களுக்கிடையில் அரசியல்ரீதியான சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் எதை யும் பேச்சுவார்த்தையில்  எடுத்துக்கொள்ள விடாமல் பார்த்துக் கொண்டன. இத்தனை இடர்பாடுகளுடன் கூடிய சார்க் அமைப்பின் கூட்டங்கள் அனைத்தும் ஏதோ அரசு செலவில் மேற்கொள்ளப்படும் இன்பச்சுற்றுலா போல ஆகி விட்டன. தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக சந்திப்பது ஒன்றுதான் ஆறுதலான விசயமாக இருந்தது. ஆனால் அதுவும் கூட இந்தியா, பாகிஸ்தான்  நாடுகளின் இருதரப்பு உறவுகளின் அன்றைய நிலவரத்தை பொறுத்து தான் என்று மாறிவிட்டது. இதன் விளைவாக சார்க் அமைப்பு முக்கியத்துவமற்ற விச யங்களை பேசி நேரத்தை வீணாக்கியது. முக்கியத்துவ மிக்க பிரச்சனைகளை பேசி தீர்வு காணாமல் தவிர்த்தது. சார்க் அமைப்பின் சாதனைகளை ஐரோப்பிய ஒன்றிய அமைப்பின் சாதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.

அரைமனதாக மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கைகள்

போதை மருந்து மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள், தொலைதூரக் கல்வி, விவசாய விபரங்களை பகிர்ந்து கொள்ளுதல் (டாக்கா) ,காச நோய் தடுப்பு மையம் (காத்மாண்டு), ஆவணப் பதிவு மையம் (தில்லி), சேம்பர் ஆப் காமர்ஸ் , பெண்கள் பல்கலைக் கழகம், நகர்ப்புற வளர்ச்சி திட்டமிடுதல்,  மனித வள ஆதார மையம் (இஸ்லாமாபாத்), சார்க் கலாச்சார மையம் (கண்டி)  இதுபோன்று துவங்கப்பட்ட அனைத்து சார்க் கூட்டமைப்பு திட்டங்களும் அரைகுறை மனதுடனே செயல் பட்டன. அவற்றின் நோக்கங்கள் நிறைவேறவே இல்லை.

தெற்காசிய நாடுகளின்  உள்நாட்டு அரசியல்

தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்பு பயணத்தில் உள்நாட்டு அரசியல் பெரிய நோயாக மாறியுள்ளது. நீண்ட காலமாக இந்தியா மட்டும் இதில் விதிவிலக்காக இருந்தது. சமீபகாலமாக இந்தியாவின் நிலைமையும் மோசமாகிவிட்டது. 2014 இல் மோடியின் பாஜக ஆட்சி யில் அமர்ந்ததில் இருந்து நாட்டின் 100 கோடி பலமிக்க இந்து சமுதாயத்திற்கு (80.5%), வறுமை நிலையில் இருக்கும், அரசியல் ரீதியாக முடக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமுதாயம் (14.5%)  அச்சுறுத்தலாக உள்ளதாக உள்நாட்டு அரசியல் மாற்றப்பட்டுவிட்டது. ஆண்டு முழுவதும் நடக்கும் தேர்தல்களில்” இந்துக்களுக்கு ஆபத்து”,” முஸ்லிம்கள்  அழித்தொழிக்கப்பட வேண்டும்” என்ற வெறி கூச்சல்கள் எழுப்பப்படுகின்றன. மதவெறி வன்செயல்கள் அதிகரித்து வருகின்றன. சார்க் அமைப்பில் உள்ள எட்டு நாடுகளில், ஆப்கா னிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய  நாடுகள் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகள். இந்த நாடுகளில் உள்நாட்டு அரசியல் இந்தி யாவின் மதவெறி வன்செயல்களுக்கு பதிலடி கொடுப் பதாக அமைந்து விட்டது.இது போன்ற விரும்பத்தகாத வளர்ச்சிப் போக்குகள் இந்த மண்டலத்தின் பொதுவான பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துவதை சாத்திய மற்றதாக ஆக்கிவிட்டது.

இன்றுள்ள நிலைமையை  எவ்வாறு சீர்படுத்தலாம்?

சார்க் அமைப்பு அவமானகரமாக அழிவதிலி ருந்து காப்பாற்றப்பட வேண்டுமெனில், இந்திய தலை வர்கள் தங்களின் ராஜதந்திர நடவடிக்கைகளை வெளிப் படுத்த வேண்டும். அதன் துவக்கமாக, இந்தியா-பாக். இருதரப்பு உறவுகளை மேம்படுத்த “அந்நாடு தீவிரவா தத்தை கைவிட வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதை நிறுத்த வேண்டும்” என்ற நிபந்தனை விதிப்பதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்.2016 இல் பாகிஸ்தான் நடத்தமுடியாமல் நிறுத்தப்பட்ட சார்க் கூட்டமைப்பு கூட்டம் மீண்டும் பாகிஸ்தானில் துவங்க ஏதுவாக இருக் கும். தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை கை யாள்வது இந்தியாவிற்கு சாத்தியமான ஒன்றுதான். இதுபோன்று இந்தியா கடந்த காலங்களில் செயல் பட்டுள்ளது. ஷாங்காய் போன்ற சர்வதேச அமைப்புக ளில் பாகிஸ்தானை கையாள முடிகிறது அல்லவா? கல்வி, கலாச்சார, பண்பாட்டு ரீதியான தொடர்புகள் தெற்காசிய நாடுகள் என்ற உணர்வை வளர்க்கும். இந்தியா தன்னிச்சையாக, ஒரு தலைப் பட்சமாகவே இதுபோன்ற நல்லெண்ண  நடவடிக்கைகளை மேற்கொண்டால் சார்க் அமைப்பு உயிர்த்தெழும்.

இந்தியாவின் சாதகமான அம்சங்கள்

அண்டை  நாடுகளிடம் இல்லாத சாதகமான அம் சங்களாக இந்தியாவின் மதச்சார்பின்மை, கூட்டாட்சி, பன்மைத்துவம் ஆகிய விழுமியங்கள் உள்ளன. இந்த  பலங்களைக் கொண்டு சார்க் அமைப்பை கட்டமைப்ப தற்கு பதிலாக  இந்தியா இந்துத்துவாவின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது குறித்து இந்தியர்கள் வெட்கப்பட வேண்டும். ரவீந்திரநாத் தாகூர் இந்தியாவின் தேசிய கீதத்தை மட்டும் எழுதவில்லை.  வங்கதேசத்தின் தேசிய கீதத்தை யும் அவர்தான் எழுதினார். இலங்கையின்  தேசிய கீதத் திற்கு இசையமைத்ததும் அவரே.

முகமது இக்பால் பாகிஸ்தானின்தேசியக்கவி ஆவார். ஆனால் அவரது உருதுப் பாடலான “சாரே ஜஹான் சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா “(எல்லா நாடு களிலும் இந்தியாவே சிறந்த நாடு) என்ற பாடலை இன்றும் இந்தியா முழுவதும் இந்தியர்கள் பாடி வருகின்றனர். பாகிஸ்தானுடன் மூன்று பெரும் போர்கள் நடந்து விட்ட பின்னரும் கூட “சாரே ஜஹான் சே அச்சா ....”பாடலை இன்றும் பாடுகிறோம். தேசப் பிரி வினையின் போது ஏற்பட்ட கலவரத்தின் போது, முற் போக்கு உருதுக் கவிஞன்  ஷகிர் லு தியான்வி பாகிஸ்தா னுக்கு தப்பி ஓடினார். ஆனால் பாகிஸ்தானின் இஸ்லா மியத்தை மையப்படுத்திய  அரசியல் தட்பவெப்ப நிலை அவருக்கு ஒத்துப்போகாததால்  மீண்டும் இந்தியா வுக்கே திரும்பினார். கடந்த 75 ஆண்டுகளாக தோல்வி அடைந்துள்ள ராஜ தந்திர நடவடிக்கைகளில் தீவிர மாற்றம் வேண்டும். இப்போதாவது தெற்காசிய நாடுகளில் உள்ள அனை த்து மக்களின் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும். இதற்கு இந்திய அரசியல் தலைவர்கள் சாதுரியமான ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர் : ஜவஹர்லால் நேரு பல்கலை. பேராசிரியர், 
“தெற்கு ஆசிய உறவுகள்” துறை, ஃப்ரண்ட்லைன்,மே,6,2022, 
தமிழில் ம.கதிரேசன்