பிரதமர் நரேந்திர மோடி, வாயைத் திறந்தாலே கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சிக்கும் ஐமுகூ அரசாங்கங்களுக்கும் எதிராக, பாஜக-விற்கு அடிபணியாது ஆட்சி புரிந்துகொண்டிருக்கும் எதிர்க்கட்சி மாநில அரசாங்கங்களுக்கு எதிராக ஊழல் குற்றச் சாட்டுக்களை அடுக்கிக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே, தானும், தன்னுடைய பாஜக அரசாங்கமும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பது போலவும், தாங்கள் ஊழல் எந்த வடிவத்தில் வந்தா லும் சகித்துக்கொள்ள மாட்டோம் (நா கௌங்கா, கானே துங்கா) என்றும் சித்தரித்திட முயற்சித்துக் கொண்டி ருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் மீது ஏவப்படும் முகமைகள்
ஊழலுக்கு எதிராக இவ்வாறு கதை அளந்த போதி லும், கடந்த ஒன்பது ஆண்டுகளில், அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அரசு முகமையும், அரசின் உயர் மட்ட அள விலான ஊழல்கள் குறித்து எவ்விதமான விசாரணையும் உண்மையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும். அமலாக்கத் துறை, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) போன்ற முகமைகள் எதிர்க் கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களில் உள்ள அமைச்சர்களுக்கு எதி ராகவும்தான் எண்ணற்ற புலனாய்வுகளை ஏவியிருக்கின் றன. குறிப்பாக, சஞ்சய் மிஸ்ரா தலைமையின்கீழ் இயங்கும் அமலாக்கத்துறை, பாஜக அல்லாத அரசியல் எதிர்க்கட்சிகளின் கூடாரங்களில் உள்ள ஊழல்களைத் தான் மோப்பம் பிடித்திட முடியும் போல் தோன்றுகிறது. ஊழலைப் பொறுத்தவரை, மோடி அரசாங்கத்தின் பதிவு என்பது, அரசாங்கத்தில் உள்ள ஊழல்களைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட லோக்பால் அமைப்பி னால் சுத்தமானது என்றும், சுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த லோக்பால் அமைப் பின் பற்கள் பிடுங்கப்பட்டு, அது செயல்படமுடியாத ஒரு நிறுவனமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது அநேக மாக எவருக்கும் தெரியாது.
புரியாத புதிர்...
அன்னா ஹசாரேயால் ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டபின்னர், லோக்பால் மற்றும் லோகா யுக்தா சட்டம் 2013இல் ஐமுகூ அரசாங்கத்தால் நிறைவேற் றப்பட்டது. அதன்பின்னர் லோக்பால் அமைப்பிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு மோடி அரசாங்கத்திற்கு ஐந்தாண்டு காலங்கள் தேவைப்பட்டிருக்கிறது. அதாவது 2019இல் தான் அது நீதித்துறையைச் சேர்ந்த நான்கு பேர்களையும், நீதித்துறை அல்லாதவர்கள் நான்கு பேர் களையும் நியமித்தது. அதன்பின்னர் மூன்றாண்டுகள் வரை லோக்பாலால் விசாரிக்கக்கூடிய அளவிற்கு உருப்படி யாக எவ்விதமான வழக்கோ, முறையீடோ கொண்டு வரப்படவில்லை. உண்மையில், லோக்பால் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. அரசாங்கத்தின் செலவினங்களை நுண்ணாய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட அரசமைப்புச்சட்ட அமைப்பான மத்தியத் தணிக்கைத் துறைத் தலைவர் (CAG-Gomptroller and Auditor General of India) அலுவலகத்தைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் நிதி பெருமளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தாலும் அதனை வெளிக்கொணராமல் மறைப்பதில் ஒன்றிய அரசாங்கத்துடன் மிகவும் ஒத்துழைத்து வந்திருக்கிறது. ரஃபேல் பேரத்தில், சிஏஜி அலுவலகம் பிரெஞ்சு நிறுவனத் திடமிருந்து போர் விமானங்களை வாங்கியதில் நிதி எவ்விதத்திலும் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்று சுண்ணாம்பால் பூசி மெழுகப்பட்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தது.
14 மடங்கு அதிகம்
எனினும், சிஏஜி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை ஒன்று, துவாரகா எக்ஸ்பிரஸ்வே திட்டத்தில் அரசின் செலவினத்தில் மிக மோசமாக நடைபெற்றுள்ள மோசடி களை தோலுரித்துக் காட்டி இருக்கிறது. அதன்படி, இத்திட்டத்திற்கான செலவினம், பொருளாதார விவகாரங் களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்த செல வினத்தைவிட 14 மடங்கு அதிகமாகி இருக்கிறது. ஒரிஜின லாக, ஒப்புதல் அளிக்கப்பட்ட செலவினம் என்பது ஒரு கிலோ மீட்டருக்கு 18.20 கோடி ரூபாயாகும். ஆனால் நடைமுறையில் ஒரு கிலோ மீட்டருக்கு 250.77 கோடி ரூபாய் செலவிடப் பட்டிருக்கிறது. மேலும் அறிக்கையில், விவரமான திட்ட அறிக்கையோ, கேள்விக்கு உட்படுத் தப்பட்ட முடிவுகள் மீதான அறிக்கையோ எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறது. தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் நடைபெற்றுள்ள மதிப்புமிக்க ஒரு திட்டத்திலேயே சிலர் இப்படி அபரிமிதமானவகையில் பயனடைந்திருக்கக்கூடும் என்றால், மற்ற நெடுஞ் சாலைத் திட்டங்களிலும், உள்கட்டமைப்பு சம்பந்தப் பட்ட திட்டங்களிலும் ஊழல் எந்த அளவிற்கு இருந்திருக் கக்கூடும் என்பதைக் கண்டு ஒருவர் ஆச்சரியப்படுகிறார்.
தரவுகள் சரிபார்ப்பில் ஏகப்பட்ட குளறுபடி
மேலும் சிஏஜி, பிரதமர் ஜன ஆரோக்ய யோஜனா போன்ற ஒன்றிய அரசின் நலத் திட்டங்களிலும் எப்படி யெல்லாம் ஊழல்கள் நிரந்தரப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதையும் தோலுரித்துக் காட்டி இருக்கிறார். மருத்துவப் பதிவேடுகளின்படி இறந்தவர்கள் என்று காணப்பட்டுள்ள 3,446 நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக 6.97 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் சிஏஜி தெரிவித்திருக் கிறார். சுமார் 7.5 லட்சம் பயனாளிகள் பிரதமர் ஜன ஆரோக்ய யோஜனா திட்டத்தின்கீழ் ஒரேயொரு மொபைல் போன் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டி ருக்கிறார்கள். மேலும், பிரதமர் ஜன ஆரோக்ய யோஜனா என்பது எவ்விதமான தாள்களுமில்லாத, பணப் பரிவர்த்த னையும் இல்லாத சேவை (paperless and cashless service) என்று சொல்லப்பட்ட போதிலும், பல மாநிலங்க ளில் எண்ணற்ற நோயாளிகள் பலருக்கு, பல்வேறு அளவு களில் பணம் கொடுத்திருக்கிறார்கள். தரவுகள் தயாரிக் கப்பட்டிருப்பதிலும், சரிபார்ப்பிலும்கூட ஏகப்பட்ட குளறு படிகள் நடந்திருப்பதை சிஏஜி வெளிக்கொணர்ந்தி ருக்கிறார். நலத் திட்டங்களுக்காகக் கொடுக்கப்படும் தொகை கள் அனைத்தும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுவிட்டன. இதனால் இடைத்தரகர்களும், ஊழலும் ஒழிக்கப்பட்டு விட்டது என்பது மோடி அரசாங்கம் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும். எனினும், இத்தகைய டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட திட்டங் கள் மோசடி செய்வதற்கு மிகவும் எளிதாக வழிவகுக்கக் கூடியவை என்பதை பிரதமர் ஜன ஆரோக்ய யோஜனாவில் நடைபெற்றுள்ள ஊழல்கள் காட்டுகின்றன.
விசாரிக்க விரும்பாத சிபிஐ
இதேபோன்றே, சிறுபான்மையினருக்காகக் கல்வி உதவித் தொகைகள் (ஸ்காலர்ஷிப்புகள்) வழங்குவதிலும் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்திருப்பதானது இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் 53 விழுக்காடு அள விற்குப் போலியானவை என்றும், கடந்த ஐந்தாண்டுக ளில் 832 நிறுவனங்களில் நடைபெற்றுள்ள ஊழல்களின் மதிப்பு சுமார் 144 கோடி ரூபாய் என்றும் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் கண்டிருக்கிறது. இதுபோன்ற மோசடிகள் மற்றும் நிதி மோசடிகள் மாநிலங்களில் மோசடி செய்பவர்களால் செய்யப்படுவ தாகவும், ஒன்றிய அரசு மட்டத்தில் எந்த ஊழலும் இல்லை என்றும் மோடி அரசாங்கம் கூறலாம். ஆயினும் இதனை மிகவும் ஆழமான முறையில் மத்திய புலனாய்வு முகமை களே விசாரணை செய்திட வேண்டும். ஆனால் இதனை மேற்கொள்வதற்கு ஊழலை ஒழிப்பதற்கான பணிக ளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மத்தியப் புலனாய்வு முகமை கள் இதனை ஏற்க விரும்பவில்லை. எனினும், ஒன்றிய அரசாங்கம் மேற்கொள்ளும் ஊழல் கள் வெளியே தெரியாதவாறு மூடி மறைக்கப்பட்டிருந்த சுவரில் சமீபத்தில் வெளியான சிஏஜி-யின் அறிக்கை சற்றே விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகஸ்ட் 23, 2023,
தமிழில் : ச.வீரமணி