பத்தாண்டு காலம் குஜராத் முதலமைச்ச ராக இருந்த நரேந்திர மோடி 2014 பொதுத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாள ராக சங் பரிவாரத்தால் முன் நிறுத்தப்பட்டார். அவரது ஒரே தகுதி, சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ விபத்தைக் காரணம் காட்டி 2000 க்கு மேற்பட்ட முஸ்லிம்களைச் சங் பரிவாரக் கும்பல்கள் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கவும், பெண்கள், குழந்தைகள் வேட்டை யாடப்படவும் களம் அமைத்துக் கொடுத்து, அதற்குப் பாதுகாவலராக நின்றதுவே ஆகும். அப்போதைய பரப்புரைகளில் அக்கொடுஞ்செயலை மறைத்து, கார்ப்பரேட் ஊடகங்களின் பெருந்துணையோடு குஜராத் மாடல் என்ற கற்பனைக் காட்சியைக் கட்டமைத்தனர்.
வெறுப்பரசியல் மட்டுமே பாஜகவின் ஆயுதம்
அப்போது முதல், கடந்த 10 ஆண்டு காலமாக, அனைத்துத் துறைகளிலும் தோல்வி, மக்களின் வாழ்க்கையில் கடும் நெருக்கடி, பொருளாதார தேக்கம், அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் கொள்ளை லாபம் அடிக்கவே நடக்கும் ஆட்சி எனும் குற்றச்சாட்டுகள், வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற எதிர்மறைச் சூழலை எதிர் கொள்ள பாஜக கையில் எடுக்கும் ஒரே ஆயுதம் வெறுப்பரசியல் மட்டுமே. ஆர்.எஸ்.எஸ். எனும் வகுப்புவாத பாசிச அமைப்பின் வழிகாட்டுதலில் இயங்கும் பாஜக வுக்கும், அதன் செயற்பாட்டாளரான பிரதமர் மோடிக்கும் வெறுப்பரசியல் என்பது ரத்தத்தில் ஊறியது. பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டுவது என்ற அவர்களது செயல்திட்டம் நீதிமன்றத்தின் உதவியுடன் நடந்தேறியது. தற்போது ராமர் கோயில் கட்டியதைச் சாதனையாக்க மோடியே தலைமை பூசாரியாக மாறி அதில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார். அது குறித்து நாடு முழுக்க பிரச்சாரத்திலும் ஈடுபடுகிறார். மக்களின் ராம பக்தியைத் தங்களது அரசியல் சுயலாபத்திற்குப் பயன்படுத்துகிறார்.
தற்போது அந்த உத்தியை முஸ்லிம்களின் பிற வழிபாட்டுத் தலங்களிலும் நீட்டிக்க முயற்சிகள் நடக்கிறது. வழிபாட்டுத் தலங்கள் குறித்த 1991 சட்டத்திற்கு மாறாக நீதிமன்றங்கள் மூலம் வாரணாசி யில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள சாகி இட்கா மசூதி, பதுவாவில் உள்ள சம்சி ஜூமா மசூதி, டீலிவாலி மசூதி, லக்னோவில் உள்ள கமால் மவுலா மசூதி, அஜ்மீரில் உள்ள ஜூமா மசூதி, ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள குவாஉல்இஸ்லாம் மசூதி, தில்லி குதுப் மினாரில் உள்ள மசூதி ஆகிய வற்றைக் குறி வைத்து சங் பரிவாரத்தினர் நீதிமன்றங் களை அணுகி வருகின்றனர். நீதிமன்றங்களின் மூலம் தொல்லியல் துறையின் கீழுள்ள புராதனமான மசூதி களுக்குள் சங் பரிவாரத்தினர் நுழைந்து பூஜைகள் செய்யவும் அனுமதி பெற்று வருவதை அறிவோம்.
சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்
மோடி ஆட்சிக்கு வந்தவுடனேயே சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான சங் பரிவாரத்தினரின் திட்டமிட்ட தாக்குதல்கள் துவங்கின. ஜெய் ஸ்ரீராம் கூறச் சொல்லித் தாக்குதலுக்குள்ளானவர்கள் ஏராளம். பசு மாமிசம் வைத்திருந்ததாகக் கூறி முஸ்லிம்கள், தலித்துக்கள் தாக்குதலுக்குள்ளாகி கொல்லப்பட்டனர். முகம்மது அக்லக் துவங்கி இப்படி கொல்லப்பட்டவர்கள் ஏராளம். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மீதே அரசும், காவல் துறையும் வழக்குகளைத் தொடர்ந்து சிறையில் அடைத்தது. தற்போது கூட 24 வயது நசீர் குறைசியும், 32 வயது அபான் அன்சாரியும் பசு குண்டர்களால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக முஸ்லிம்கள் தெருவில் இறங்கிப் போராடினால் அவர் களின் வசிப்பிடங்கள் அரசு அதிகாரிகளால் புல்டோசர் மூலம் நிர்மூலமாக்கப்படுகின்றன. புல்டோசர் சிறுபான்மை முஸ்லிம்களின் வாழ்விடத்தையும், வாழ்வாதாரத்தையும் அழித்தொழிக்க அரசு இயந்தி ரம் மூலம் பயன்படுத்தப்படுகிறது. உத்தரகண்டில் சுரங்கத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிருடன் புதை யுண்ட 41 தொழிலாளர்களை தன்னுடைய உயிரை பணயம் வைத்து மீட்ட வகில் ஹுசைன் வீடும் புல்டோச ருக்குப் பலியானது அதிர்ச்சியைத் தருகிறது.
மணிப்பூர் பயங்கரம்
இவர்களது ஆட்சியைப் பயன்படுத்தி ஏற்படுத்திய மதவெறியின் உச்சம் தான் மணிப்பூரில் தற்போதும் தொடரும் கலவரம். நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கிறிஸ்தவ குக்கி இனப் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடுமை அனைவரின் மனசாட்சியையும் உலுக்கியது. ஆனால் பிரதமர் மோடியோ மவுனமாகக் கடந்து செல்கிறார். அங்கு நூற்றுக் கணக்கான தேவாலயங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. மதமாற்றத் தடைச்சட்டம் சிறுபான்மை யினரின் மதவழிபாட்டு உரிமையைப் பறிப்பதோடு சட்டத்தின் மூலம் நசுக்கும் நிலை ஏற்படுத்துகிறது.
சிஏஏவும், பொது சிவில் சட்டமும்
சிஏஏ சட்டம் கொண்டு வந்தனர். பாஜகவின் சொந்த பலத்தால் நாடாளுமன்றத்தில் அதை நிறைவேற்ற இயலாத நிலையில் அதிமுக எம்பிக்களும், பாமக அன்புமணியும் ஆதரவளித்து அதை நிறைவேற்ற உதவினர். இச்சட்டத்தின் மூலம் முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்பட்டு, குடியுரிமையைப் பறிக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். கேரள இடது ஜன நாயக முன்னணி அரசும், தமிழக திமுக அரசும் அச்சட்டத்தை நிறைவேற்றமாட்டோம் என அறிவித்துள்ளது இம்மாநில மக்களுக்கு ஓரளவு நிம்மதியைத் தருகிறது. சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சிக்காக நீதிபதி சச்சார் குழு பரிந்துரைப்படி அமலான பிரி மெட்ரிக் கல்வி உதவித் தொகை மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட கல்வி உதவித் தொகைகள் ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்டு விட்டன. அடுத்து பொது சிவில் சட்டம் போன்ற சட்டங்கள் பேராபத்தாக முன் நிற்கின்றன. மதச்சார்பற்ற அரசியல் சட்டமே மாற்றப்பட்டு இந்துத்துவ அரசு அமைக்கப் படும் என்ற அச்சுறுத்தல் ஆளும் கட்சி பிரமுகர்கள் மூலமே வெளிப்படுகிறது. தங்களது வழிபாட்டு உரிமை யும், வாழ்வுரிமையும் பறி போய் கொண்டிருக்கும் நிலையில் சிறுபான்மை மக்கள் அச்சத்துடனும், பதற்றத்துடனுமே வாழும் நிலையில் உள்ளனர்.
2024 தேர்தலில் நமது கடமை
மோடி தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மை மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் துரோகம் இழைத்து அம்பானி, அதானி உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை மட்டுமே காக்கும் அரசாகவே உள்ளது என்பதை நாம் அனுபவம் ரீதியாக உணர்கிறோம். இதை உணர்ந்தும் பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உறவு வைத்துக் கொண்டு மீண்டும் பேராபத்தை ஏற்படுத்தும் பாசிச ஆட்சியை கொண்டு வர முயற்சி நடக்கிறது. பசப்பு வார்த்தைகள் கூறி, பாதிக்கப்பட்ட மக்களை வைத்து அவர்களுக்கே குழி பறித்து அதில் எளிய மக்களை, உழைப்பாளிகளை, சிறுபான்மை மக்களை தள்ளி விடவே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வேண்டுமென்ற உணர்வுடன் செயல்படுகின்றனர். மக்கள் விழிப்புடன் செயல்பட்டால் மட்டுமே இப்பேராபத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்க இயலும்.
நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா கூட்டணி
தற்போது நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா வில் உள்ள பெரும்பான்மையான மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உரு வாக்கியுள்ளன. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, மதிமுக, கொங்கு தேசிய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியாக களம் காண்கின்றன. இக்கூட்டணிக்கு மதச்சார்பற்ற அரசை ஏற்படுத்தும் நோக்கோடு மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் ஆதர வளிக்கின்றன. இப்போர் நாட்டைக் காக்கும் போர். மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக நாடு எனும் அரசியல் சட்டத்தைக் காக்கும் போர். நமது வாழ்வையும், வாழ்வுரிமைகளையும் பாதுகாக்கும் போர். அதில் நாம் அனைவரும் பங்கேற்று மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்! மத்தியில் மதச்சார்பற்ற அரசை அமைப்போம்!