இரண்டாம் உலகப்போரின் முடிவில் 78 ஆண்டு களுக்கு முன்பு 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா மீதும் 9அன்று நாகசாகி மீதும் அமெரிக்கா அணு குண்டுகளை வீசியது. இதன் விளைவுகள் உலகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுவரை மனிதன் கண்டுபிடித்த ஆயுதங்களிலேயே மிக மிக நாசகர மான ஆயுதம் அணுகுண்டுதான் என்பதை மனிதகுலம் உணர வேறு நிரூபணம் தேவையாக இருக்கவில்லை. கட்டிடங்களும் புல் பூண்டு உட்பட தாவரங்களும் எல்லா வற்றிற்கும் மேலாக லட்சக்கணக்கான மனிதர்களும் நொடிப்பொழுதில் வெந்து மடிந்தனர். சரணடைய தயாராக இருந்த ஜப்பான் மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியது ஏன் என்பது முக்கியமான கேள்வி.
அணுகுண்டு உருவாக்கிய நாசகர விளைவுகள்
ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6 அன்று எனோலா-கே எனப் பெயரிடப்பட்ட விமானத்திலிருந்து போடப்பட்ட அணுகுண்டு 13 சதுர கி.மீ. அளவுக்கு அனைத்து பொ ருட்களையும் நாசமாக்கியது. குண்டு வெடித்தவுடன் உருவான வெப்பத்தின் அளவு பல மில்லியன் டிகிரியை தாண்டியது. ஒரு குறிப்பிட்ட சுற்றளவு வரை இருந்த மனிதர்களின் சதைகள் நொடியில் ஆவியாகி காற்றில் கரைந்தன. அன்றைய ஹிரோஷிமாவின் மக்கள் தொகை 3,50,000. இதில் 1,80,000 பேர் உயிரிழந்தனர். மூன்று நாட்கள் கழித்து நாகசாகியில் வீசப்பட்ட அணு குண்டு சுமார் 50,000 முதல் 1,00,000 பேரை கொன்ற தாக கருதப்படுகிறது. இந்த உயிரிழப்புகள் குண்டு வீசப்பட்ட சில நொடிகளில் நிகழ்ந்தது எனில் அமெ ரிக்காவின் அணுகுண்டு எந்த அளவுக்கு நாசகர மாக இருந்தது என்பதை அறியலாம். பாதிக்கப் பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தர இயல வில்லை. ஏனெனில் மருத்துவ ஊழியர்கள் 90% பேர் கொல்லப்பட்டனர்.
ஹிரோஷிமாவின் 92% கட்டிடங்களும் நாகசகியின் 62% கட்டிடங்களும் எரிந்து சாம்பலாயின. வேலைக்கு சென்ற தனது கணவரை தேடிச்சென்ற ஒரு பெண் மணி அவர் நாற்காலியில் உட்கார்ந்தவண்ணம் உயிரி ழந்ததை கண்டார். ஆனால் ஒரு சிறு சதை கூட இல்லை. வெறும் புகை வந்து கொண்டிருந்த எலும்பு கூடாக அவர் இருந்தார். அவரது கைக்கடிகாரத்தை வைத்து தனது கணவர் என கண்டுபிடித்தார் அந்த பெண்மணி. அந்த கடிகாரம் இன்றுவரை ஹிரோஷிமா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த இரு நகரங்களிலுமே பல ஆண்டுகளுக்கு பின்ன ரும் தாவரங்கள் பழையபடி வளரவில்லை. பிறக்கும் குழந்தைகளுக்கு மூளையின் எடை சிறியதாக இருந்தது. பல்வேறு உடல்ரீதியான பிரச்சனைகள் உரு வாகின. வளர்ச்சி குறைவு/ கண்பார்வை மங்குதல்/லுகேமியா/புற்று நோய் உட்பட பல வகைகளில் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இத்தகைய நாசகர விளைவுகளை உருவாக்கிய காரணத்தால்தான் இன்னொரு அணு ஆயுதம் பயன் படுத்தப்படக்கூடாது என உலக நாடுகள் நினைத்தன. அதற்கான சில திட்டங்களும் உருவாக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக தான் முதலில் அணுகுண்டு பயன்படுத்த மாட்டோம் என அன்றைய சோவியத் யூனியன் அறிவித்து அமெரிக்காவையும் அவ்வாறு அறிவிக்க கோரியது. இன்றுவரை அமெரிக்கா அத்தகைய அறிவிப்புக்கு தயாராக இல்லை. அதுதான் சோசலி சத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் உள்ள வேறுபாடு.
அணுகுண்டு தேவையாக இருந்ததா?
இரண்டாம் உலகப்போர் ஒருபுறம் சோவியத் யூனி யன்/ அமெரிக்கா/ பிரிட்டன்/ பிரான்ஸ் ஆகிய நேச நாடுகளுக்கும் மறுபுறம் பாசிச ஆட்சியாளர்களின் கீழ் இருந்த நாடுகளான ஜெர்மனி/ இத்தாலி/ ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் இடையே நடந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஜனநாயகத்தை விரும்பிய தேசங்கள் நேச நாடுகள் பக்கம் அணி வகுத்தன. 1945 மே மாதத்தில் போர் கிட்டத்தட்ட முடி வுக்கு வந்துவிட்டது. ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ள, முசோலினியை மக்களே தூக்கில் தொங்க விட, ஜப்பான் சர்வாதிகாரி மட்டுமே எஞ்சியிருந்தார். ஜப்பான் சரணடைய தயாராக இருந்தது. அவ்வாறு சரணடையாவிட்டால் ஜப்பானில் நுழைய சோவியத் செஞ்சேனை எல்லையில் நின்றது. அந்த சமயத்தில் தான் எவரும் எதிர்பாராதவண்ணம் அமெரிக்கா அணு குண்டுகளை வீசியது. சரணடைய தயாராக இருந்த ஜப்பான் மீது அணு குண்டு வீசுவது தேவையாக இருந்ததா? முதலா ளித்துவ தேசங்களின் தலைவர்களே என்ன கூறினர் என்பதை கேளுங்கள்:
ஐசன்ஹோவர் (இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க படைகளின் தளபதி/ பின்னர் அமெரிக்க ஜனாதிபதி): “ஜப்பான் தான் சரணடைய வழிகளை தேடிக் கொண்டிருந்தது. இந்த கொடிய ஆயுதம் கொண்டு ஜப்பானை தாக்கியிருக்க வேண்டியது இல்லை” வில்லியம் டேனியல் லீயீ(அமெரிக்க கப்பற் படை தளபதி): “என்னுடைய கருத்தில் இந்த காட்டுமிராண்டி ஆயுதத்தை ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் பயன் படுத்தியிருக்க வேண்டியது இல்லை. ஏற்கெனவே ஜப்பானியர்கள் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் சரணடைய தயாராக இருந்தனர்.”
பேராசிரியர் கல்பிரைத் ( 1945ல் ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க புலனாய்வாளர்): “ஜப்பானிய அரசாங்கம் சரணடைய முடிவெடுத்த பின்னர் குண்டுகள் போடப்பட்டன” வின்ஸ்டன் சர்ச்சில் (இங்கிலாந்து பிரதமர்): “குண்டுகள் போட்டதால்தான் ஜப்பானின் தலை விதி நிர்ணயிக்கப்பட்டது என நினைப்பது தவறு. முதல் குண்டு விழுவதற்கு முன்பே ஜப்பானின் தோல்வி உறுதியாகிவிட்டது” ஜப்பான் தோல்வி அடைந்து சரணடைய தயாராக இருந்தும் ஏன் அணுகுண்டுகள் போடப்பட்டன? அமெரிக்க போர் அமைச்சர் ஹென்றி ஸ்டிம்சன் கூறுவதை கேளுங்கள்: “அணுகுண்டுதான் சோவியத் யூனியனுக்கு எதிராக நம்மிடம் உள்ள மிக முக்கிய துருப்புச் சீட்டு”.
போரில் தனது நேச சக்தியான சோவியத் யூனிய னின் முக்கியத்துவமும் செல்வாக்கும் அதிகரிப்பதை தடுக்கவும் தன்னிடம் உள்ள ஆயுதங்கள் குறித்து உலகத்துக்கு எச்சரிக்கை தரவும்தான் அமெரிக்கா வால் அணு ஆயுதங்கள் வீசப்பட்டன. அதில் அப்பாவி ஜப்பானிய மக்கள் லட்சக்கணக்கில் உயிரிழந்தனர். ஏகாதிபத்தியத்தின் சுயநலத்தையும் மனிதத்தன்மை யற்ற செயல்களையும் நாம் இதிலிருந்து அறியலாம்.
நிறைவேறாத அமெரிக்க கனவு
எனினும் அணுகுண்டு தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் எனும் அமெரிக்காவின் கனவு நிறைவேற வில்லை. பல நாடுகள் தமது சொந்த வழிகளில் அணு குண்டு தொழில்நுட்பத்தை உருவாக்கிக்கொண்டனர். இன்று தேசங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள்: அமெரிக்கா: 5428; ரஷ்யா: 5977; சீனா: 350; இங்கிலாந்து: 225; பிரான்சு: 290; இந்தியா: 160; பாகிஸ்தான்: 165; வடகொரியா: 20; இஸ்ரேல்: 90. இன்று உள்ள அணுஆயுதங்கள் உலகை ஒரு முறை அல்ல; பல நூறுமுறை அழிக்கவல்லவை. இன்றைக்கும் ரஷ்யாவும் சீனாவும் முதலில் தாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என அறி வித்துள்ளன. ஆனால் அமெரிக்காவும் ஏனைய முதலா ளித்துவ நாடுகளும் அதற்கு தயாராக இல்லை.
உக்ரைன் போரும் அணு ஆயுத அச்சுறுத்தலும்
இன்று ரஷ்யா - உக்ரைன் போர் 500 நாட்களை யும் கடந்து தொடர்கிறது. முதலாளித்துவ நாடுகள் எதிர்பார்த்தது போல உக்ரைன் வெல்ல முடியவில்லை. சுமார் 150 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதிநவீன ஆயு தங்கள் கொடுத்தும் உக்ரைன் மூலம் ரஷ்யாவை தோற்கடிக்க முடியவில்லை. இந்த சூழலில் சில அமெ ரிக்க அரசியல்வாதிகளும் முன்னாள் ராணுவ தளபதி களும் உக்ரைனுக்கு அணுஆயுதங்கள் தரப்பட வேண்டும் என கூக்குரல் எழுப்பி வருகின்றனர். போலந்து/ லிதுவேனியா போன்ற தேசங்களும் அவ்வாறு கூறத் தொடங்கியுள்ளன. இன்று அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவுடன் நேரடி மோதலில் இறங்க தயங்குவதற்கு ரஷ்யாவிடம் உள்ள அணுஆயுதங்கள்தான் மிக முக்கிய காரணம். அதே சமயத்தில் உக்ரைன்-ரஷ்யா இடையே அணு ஆயுதப்போர் உருவானால் ஐரோப்பாதான் பாதிக்கப்படும்; ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள தமக்கு எதுவும் நேராது என அமெரிக்க தலை வர்கள் எண்ணுகின்றனர். மறுபுறத்தில் நேட்டோவுடன் நேரடி மோதல் உருவானால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கக்கூடாது என ரஷ்யாவின் வலதுசாரி தலைவர்கள் புடினை வற்புறுத்துகின்றனர். இதனை பகிரங்கமாக முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி யும் இன்னாள் தேசபாதுகாப்பு சபையின் உதவி தலைவருமான மெத்வதேவ் பிரதிபலிக்கிறார். புடின் மறுத்து வருகிறார். உக்ரைன் போரில் நிகழும் எந்த ஒரு சிறு தவறும் மூன்றாம் உலகப்போரையும் அதன் விளைவாக அணு ஆயுத பயன்பாடும் விளைவிக்கும் ஆபத்தை உருவாக்கிவிடும் என்பது வெறும் அச்சுறுத்தல் அல்ல. இன்று உலகம் முன் உள்ள மிகப் பெரிய, உண்மையான ஆபத்து.
உக்ரைன் போர் மீண்டும் ஒரு முறை அணு ஆயுத அச்சுறுத்தலை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. ஹிரோஷிமா-நாகசாகி அழிவு மனிதகுலத்துக்கு படிப்பினைகளை உருவாக்கத் தவறினால் அதனை விட பேரழிவு வேறு எதுவும் இருக்காது. ஹிரோஷிமா- நாகசாகி தினத்தில் மனிதகுலம் எடுக்க வேண்டிய முக்கிய உறுதி, அணுஆயுதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதுதான்!