articles

img

சங்கிகளுக்கு கோவில்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டிலும் இடமில்லை! - அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி

‘அறநிலையத்துறை கண்காணிப்பில் உள்ள ஆலயங்களைக் காப்போம்’ என வலியுறுத்தி தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மதுரை மாநகர்-புறநகர் மாவட்டக்குழுக்களின் சார்பில் சிறப்பு மாநாடு என்.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொண்டு  தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர்  பி.கே.சேகர்பாபு ஆற்றிய உரையின் அம்சங்கள்:

வள்ளலாரின் புகழைப் போற்றும் வகையில், “வள்ளலார் சர்வதேச மையம்” வடலூ ரில் 72 ஏக்கரில் அமைக்கப்படும் என்று அறிவித்தோம். அந்த அடிப்படையில் வரைபடம் தயாரிப்பது உள்ளிட்ட ஆரம்பகட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கிவிட்டது. வள்ளலாரின் 200-வது அவதார ஆண்டு விழா நடத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்க ளில் வள்ளலார் முப்பெரும் விழாவை 52 வாரங்களுக்கு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு தொடர் அன்னதானம் உட்பட இந்த விழா வுக்கு ரூ.3.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 15,000 கோவில்களில் நடைமுறையில் உள்ள ஒரு கால பூஜைத் திட்டம் மேலும் 2,000 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு கால பூஜைத் திட்டத் தின் கீழ் உள்ள 12 ஆயிரத்து 959 கோவில்களில் பணி புரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக தலா ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளோம். ஒரு கால பூஜை நடக்கும் கோவில்களுக்கான வைப்பு நிதி ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கால பூஜை நடக்கும் கோவில்களில் வழிபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பணி யாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிக ளின் வாழ்க்கைக்கும் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. கிராமக் கோவில்களில் சமஸ்கிருதத்திற்கு இட மில்லை.

திருப்பணிகள்

418 ஆண்டுகளுக்குப் பிறகு, கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் உள்ள ஆதிகேசவப் பெரு மாள் கோவிலில் 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவடைந்துள்ளன. அக்கோவிலில் 300 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கும்பா பிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை தமிழக முதல்வர் செயல்படுத்தியுள்ளார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் என்ற வரிசை யில் ஐவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.  ஆறு பெண் ஓதுவார்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இதுவரை 788 கோவில் களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.  பழங்குடி யினர், ஆதிதிராவிடர் வசிக்கின்ற இடங்களில் 2,500 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 1,800 கோவில்களில் திருப்பணி நடைபெற்றுள்ளது. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஆலோச னைப் பணிகள் மேற்கொண்டு 80 முதல் 100 கோவில்க ளுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் 2,000 திருக்கோவில்களுக்கு திருப்பணிக ளுக்கு ஒப்புதல் வழங்கியது திமுக ஆட்சி தான்.

தமிழில் குடமுழுக்கு

பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு ஜனவரி மாதம் நடைபெற்றது. குறிப்பாக தமிழில் மந்திரங்கள் முழங்க நடைபெற்ற முதல் கும்பாபிஷேகம் இது தான். பழனியில் கோவில்க ளுக்குச் சொந்தமான சுமார் 50 ஏக்கர் நிலத்திற்கான தொகை ரூ.58 கோடியை அரசே செலுத்தி கையகப் படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கி யுள்ளார். அந்த நிதி மூலம்  120 கோவில்கள் தேர்வு  செய்யப்பட்டு, புனரமைப்பதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள  கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில்களுக்குள் சங்பரிவார் கும்பல்கள் நுழைய முயன்றனர். அது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. சங்பரிவார் இந்த இரண்டு கோவில்களில் கூட்டங்களை நடத்தி, உண்டியல் வசூல், தொழிலாளர்களின் விவரங்கள் மற்றும் கோவில்களின் நிர்வாகம் குறித்து கோவில் செயல் அலுவலர்களிடம் கேள்விகளை எழுப்புமாறு தங்கள் அமைப்பினரைக் கேட்டுக் கொண்டனர்.

இந்த விவ காரம் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் பட்டபோது, கோவில்களில் அரசியல் கூட்டங்களை  நடத்தக்கூடாது என கடுமையாக உத்தரவிட்டார். இது தொடர்பாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டதை யடுத்து, கோவில்களில் இதுபோன்ற கூட்டங்கள் நடை பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆன்மீகத்தை வைத்து அரசியலைப் புரட்டிப் போட நினைக்கின்றனர். பாஜக ஆட்சிக்கு வந்தால்... என்பது அத்தைக்கு மீசை முளைத்த கதைதான். சங்கிகளுக்கு  கோவில்களிலும் இடம் கிடையாது.. அதன் மூலை, முடுக்குகளிலும் இடம் கிடையாது; தமிழ் மண்ணிலும் இடம் கிடையாது. இந்தச் சூழலில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை,  ஆலயங்களைப் காப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடத்தியுள்ளது. இம்மாநாட்டில் நிறைவேற்றப் பட்டுள்ள ஆறு தீர்மானங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. வரும் காலங்களில் மக்கள் ஒற்றுமை மேடை நல்ல ஆலோசனைகளை வழங்க லாம். வாருங்கள் எல்லோரும் சேர்ந்து அற நிலையத் துறையை பாதுகாப்போம். வழிநடத்துவோம்!

 தொகுப்பு: ச.நல்லேந்திரன்