குவாண்டம் டாட்ஸ் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு
2023ஆம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு மூகி ஜி.பவெண்டி, லூயிஸ் இ.பிரஸ், அலெக்சி ஐ.எகிமவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. குவாண்டம் டாட்ஸ் என்பதைக் கண்டுபிடித்த தற்காக கொடுக்கப்பட்டது. குவாண்டம் டாட்ஸ் என்றால் என்ன? வழமையாக, தூய மூலப்பொருட் களின் எல்லா துண்டுகளும் அவற்றின் அளவைப் பொறுத்ததில்லாமல் ஒரே விதமான குணங்க ளையே கொண்டிருக்கும் என்று கருதப்பட்டது. ஏனெனில் அவற்றில் எலெக்ட்ரான்கள் சீரான வித மாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நாற்பதாண்டுகளுக்கு முன்னால், ஒரே மூலகத்தின் நானோ துகள்கள்(1/100 பில்லி யன் மீட்டர்) வேறுவிதமான குணங்களை வெளிப் படுத்துவதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்த னர். 1980இல் அலெக்சி ஐ.எகிமவ் இந்த வேறுபட்ட நிகழ்வை முதன்முதலாக காப்பர் குளோரைடின் நானோதுகள்களில் கண்டார். அவற்றை வெற்றி கரமாக தயாரிக்கவும் செய்தார். லூயி பிரஸ் இதைப் போன்ற கண்டுபிடிப்பை காட்மியம் சல்பைடில் செய்தார். தொடக்கத்தில் இவருடன் இணைந்து பணி செய்த மூகி ஜி.பவெண்டி நானோதுகள்கள் தயாரிப்பை எளிமைப்படுத்தி னார். அவருடய ஆய்வு, நானோதுகள்களை திறன் மிகுந்த மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வழியில் தயாரிக்க வழி வகுத்தது.
ஒரு அணுவில் அதன் உட்கருவை - நியூக்கிளி யஸைச் சுற்றி ஒப்பீட்டளவில் சற்றுப் பெரிய பகு தியில் எலெக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன. ஆனால் துகள்களின் அளவு மிக மிகக் குறைவாகும்போது எலெக்ட்ரான்கள் நெருக்கடிக்கு உள்ளாகின்றன. அப்போது இந்த மாறுபட்ட குவாண்டம் விளைவு களை அவை உண்டாக்குகின்றன. இப்படிப்பட்ட நானோதுகள்களையே குவாண்டம் டாட்ஸ் என்கிறார்கள். குவாண்டம் டாட்ஸ்களின் அளவு 1இலிருந்து 100 நானோ மீட்டர்கள் வரை இருக்கும். அவற்றின் அளவு களைப் பொறுத்து அவை வெளிவிடும் ஒளிக்க திர்களின் நிறம் இருக்கும். சிறியவை நீலக்கதிர் களையும் பெரியவை மஞ்சள்மற்றும் சிவப்புக் கதிர்களை வெளிவிடுகின்றன. இந்த அளவுகளில் செவ்வியல் இயற்பியல் (classical physics) கோட்பாடுகள் பொருந்துவ தில்லை. அவற்றை குவாண்டம் இயந்திரவியல் என்று தனிப்பிரிவில் ஆய்வு செய்கின்றனர். இவை குவாண்டம் கணக்கீடு, குவாண்டம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் குவாண்டம் உணர்வியல் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் 1. எல்ஈடி, டிவி திரை போன்றவற்றில் காட்சி களின் இயல்பு மேம்படும். 2. மருத்துவத்தில் கட்டிகள் அறுவையின் போது குவாண்டம் டாட்ஸ், கட்டிகளை ஒளிரச் செய்து மருத்துவர்கள் கட்டியை துல்லி யமாக அகற்ற உதவி செய்யலாம். 3. நெகிழ்வு மின்னணுவியலில் புதுமை யான, தேவைக்கேற்றார்போல் மாற்றி பயன்படுத்தக் கூடிய கருவிகள் கண்டு பிடிப்பில் இது பயன்படலாம். 4. திறன்மிகுந்த, மெலிதான சூரிய ஒளி ஆற்றல் கருவிகளை கண்டுபிடிக்க இது உதவும். இதன் மூலம் புதிப்பிக்கத்தக்க ஆற்றல் துறை சிக்கல்களை தீர்க்கலாம். 5. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தக வல்களை பாதுகாப்பாக அனுப்பும் குவாண் டம் தகவல் தொழில்நுட்பத்தில் இவை பங்கு வகிக்கலாம்.
இனி மூன்று எஃப்கள் (flora, fauna & fungi)
நமது விரலிடுக்குகளில், ரொட்டியின் மேல், மரத்துண்டுகள் என எல்லா இடங்களிலும் வளரும் உயிரினம் காளான் வகைகள். இவை தாவர மற்றும் விலங்கு பிரிவுகளிலிருந்து பிரிக்கப்பட்டு தனி உயிர் மண்டலமாக கருதப்படுகிறது. ஏனெனில் இவை தாவரங்களைப் போல் பச்சை யத்தின் உதவியினால் உணவு தயாரிக்க இயலாது. அவை கரிமப் பொருட்களை சிதைத்தோ அல்லது ஒட்டுண்ணி, சாறுண்ணிகள் முறையிலோ உண வைப் பெறுகின்றன. புளிக்க வைக்கும் யீஸ்ட் போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவையே. ஆகவே உணவு, மருந்து போன்ற துறைகளிலும் இறந்தவற்றை சிதைத்து சுற்றுச் சூழலை நிலைநிறுத்துவதிலும் உதவுகின்றன. இவற்றைப் பாதுகாப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் பூஞ்சையியலாளர் கியுலியானா ஃபர்சி. இதுவரை ஃப்ளோரா(தாவரங்கள்), ஃபானா (விலங்குகள்) என இரண்டு எஃப்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இனி பூஞ்சைக்காளான் களைக் குறிக்கும் ஃபங்கஸ் என்பதையும் சேர்த்து மூன்று எஃப்கள் என்கிறது ஐ.நா.வின் பல்லுயிர் பாது காப்பு மாநாடு. இந்த சொற்றொடர் இதுவரை ஆஸ்தி ரேலியா, ஐஸ்லாந்து, பிரேஸில் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மற்ற எல்லா உயிரினங்கள் போல காளான்க ளும் இருப்பிட இழப்பு மற்றும் காலநிலை மாற்றங்க ளால் அபாயத்துக்குள்ளாகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட காளான் வகைகள் அபாயத்துக்குள்ளா னவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. காளான் கள் நமது குடலிலுள்ள பேக்டீரியாக்கள், தாவ ரங்கள் உட்பட பல்வேறு உயிரினங்களுடன் அத்தி யாவசியமான தொடர்பு உள்ளவை. எனவே அவை யும் பாதுகாப்பு கொள்கைகளில் இடம் பெற வேண்டும் என்கிறார் ஃபர்சி.