உரிமையை எவராலும் அன்பளிப்பாக பெற முடியாது; போராடித்தான் பெற வேண்டும் என்று கூறியவர் அண்ணல் அம்பேத்கர். இந்தியாவில் தோன்றிய இரண்டு அறிவாளிகளில் புத்தர் ஒருவர் என்றால், அம்பேத்கர் மற்றொருவர் என்று பெரியாரால் புகழப்பட்டவர். இந்து ராஜ்ஜியம் என்பது உண்மையில் நடைமுறைக்கு வருமேயானால் சந்தேகமின்றி இது நாட்டுக்கு ஏற்படப் போகும் மிகப்பெரிய ஆபத்து ஆகும்; சுதந்திரம் சமத்து வம் சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானது இந் துத்துவம் என்றும், தீண்டாமை, அடிமைத்தனத்தை விட ஆபத்தானது; அது மதத்தை மட்டும் அல்ல பொரு ளாதாரத்தையும் அடிமை கொண்டுள்ளது என்று கண்ட றிந்து சமூக மாற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் டாக்டர் அம்பேத்கர்.
பட்டங்கள், பத்திரிகைகள்
பரோடா மன்னர் ஷாயாஜி ராவ் உதவியுடன் உயர் கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். கொலம்பியா பல் கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். 1915இல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்” என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார். 1916ஆம் ஆண்டு மே மாதத்தில் டாக்டர் கோல்டன் வைய்சர் நடத்திய மனித இனவரலாறு பற்றிய கருத்த ரங்கில் ‘இந்தியாவில் சாதிகள் அவற்றின் இயக்கம் தோற்றம் வளர்ச்சி, என்ற ஆய்வுக் கட்டுரையைப் படித்தார். அக்கட்டுரையில் கொடுஞ்செயலுடன் மனு, சாதி பாகுபாடு களைத்தொகுத்து விதிகளாக எழுதியி ருந்ததை வெளிப்படுத்தினார். சாதி விதிகள் மனு தொகுத்து வைப்பதற்கு முன்பே இருந்தது. அதில் மனி தாபிமானமற்ற முரட்டுக் கருத்துக்களை இடைச் செருகல் செய்துள்ளார் இந்த மனு’ என்று அம்பேத்கர் எடுத்துக் கூறினார். பின்னர் “இந்திய லாபப்பங்கு - ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு” என்ற ஆய்வுக்கு, கொலம்பியா பல் கலைக்கழகம் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி யது. 1920 செப்டம்பரில் இலண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானக் கல்லூரியில் பொருளி யல் கல்வியை அம்பேத்கர் தொடர்ந்தார்.
1921 ஆம் ஆண்டு “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்” என்ற ஆய்வுக்கு முது அறிவியல் பட்டமும், 1923 ஆம் ஆண்டு ‘ரூபாயின் பிரச்சனை’ என்ற ஆய்வுக்கு ‘டி.எஸ்.சி பட்டமும்’ பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் ‘பாரிஸ்டர் பட்ட மும்’ பெற்றார். அம்பேத்கர் தொடங்கிய முதல் பத்திரிகை மூக் நாயக் (ஊமைகளின் தலைவன்). இரண்டாவது பத்தி ரிகை பகிஷ்கிரித்பாரத் (புறக்கணிக்கப்பட்ட இந்தியா). மூன்றாவது பத்திரிகை சமத்துவம், நான்காவது ஜனதா. 1923 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவிற்கு திரும்பிய அம்பேத்கர் 1924இல் “பகிஷ்கிருதஹித காரணிசபா” என்ற அமைப்பை நிறுவினார். சௌதார் குளம் போராட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்ட மாகும். பம்பாய் மாகாண சட்டசபைக்கு தீண்டாதவர் கள் சார்பில் முதலாவதாக நியமிக்கப்பட்ட எஸ். கே.போலே அவர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மகத்சௌதார் குளத்தில் நீர் அருந்தும் போராட்ட மாகும். 1923 இல் நிறைவேற்றப்பட்ட போலே தீர்மானம் 1926இல் சிறு மாறுதல்களுடன் உறுதி செய்யப்பட்டது. 1927 மார்ச் 19, 20 கொலாபா மாவட்ட தீண்டப்படாத மக்கள் மாநாட்டை மகத்தில் நடத்தி ஊர்வலமாகச் சென்று சௌதார் குளத்தில் தண்ணீர் பருகி மகிழ்ந்தனர். வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதி அமைப்பையும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து தீவிரமாகப் போராடிய அம்பேத்கர், 1927இல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக் கொடுமை களை எதிர்த்து போராட்டத்தை தொடங்கினார். 1930 ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தி வெற்றிகண்டார். ஒரு சமூகப் பிரச்சனை மட்டுமல்லாமல் அது ஒரு அரசியல் பிரச்சனை என கருதி அவர் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தை கொண்டு வந்தார்.
வட்டமேசை மாநாடு
பிரிட்டிஷ் அரசு லண்டனில் 1930 நவம்பரில் நடத்திய முதலாவது வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற 89 பிரதி நிதிகளில் தீண்டத்தகாதவர்களின் பிரதிநிதியாக ரால் பகதூர் இரட்டைமலை சீனிவாசனும் அம்பேத்கரும் சென்றனர். இம் மாநாட்டில், இந்தியாவில் இப்பொழு துள்ள அரசை மாற்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்படுகின்ற மக்களால் ஆளப்படு கின்ற ஓர் அரசு அமைய வேண்டும் என அம்பேத்கர் அறிவித்தார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் பிரதிநிதித் துவம் குறித்த பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப் பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கு தனிவாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதன் விளை வாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெ டுக்க ஒரு வாக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதி நிதியை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் இரட்டை வாக்குரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப் பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த காந்திஜி உண்ணா விரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக செப்டம் பர் 24, 1931 ஆம் ஆண்டு காந்திக்கும் அம்பேத்க ருக்கும் இடையே பூனா ஒப்பந்தம் ஏற்பட்டு தாழ்த்தப் பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி என முடிவு செய்யப்பட்டது.
சுதந்திர தொழிலாளர் கட்சி
1936 இல் சுதந்திர தொழிலாளர் கட்சியை துவங்கி னார். 1937 பிப்ரவரி 17 இல் நடந்த தேர்தலில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் .17 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களை சுதந்திர தொழி லாளர் கட்சி கைப்பற்றியது. 1938 இல் நவம்பர் 7 வர லாற்றுச் சிறப்புமிக்க கண்டன வேலை நிறுத்தத்தை உருவாக்குவதில் அம்பேத்கர் கம்யூனிஸ்ட்டுகளுடன் சேர்ந்து செயல்பட்டார். 1942 இல் தொழிலாளர் அமைச்சராக பதவி யேற்றார். கூட்டத்தில் பேசும்போது தொழிலாளர்கள் இந்தியாவில் தொழிலாளர்களுக்கான அரசை ஏற் படுத்துவதற்காக பாடுபட வேண்டும். இதுதான் என் நோக்கமாகும். இந்தியா சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதாது. அது யாருடைய கையில் இருக்க வேண்டும் என்பதே முக்கியம் ஆகும் என குறிப்பிட்டார். 1947 ஆகஸ்ட் 15 இந்தியா சுதந்திரம் பெற்றது. பாகிஸ்தான் நம்மை விட்டுப் பிரிந்தது. 1947 ஆகஸ்ட் 29இல் அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு ஒன்று அமைந்தது. அதில் என். மாதவராவ், சையத் முகமது முகமது, சாதுல்லா, சர் அல்லாடிகிருஷ்ணசாமி, டி.டி. கிருஷ்ணமாச்சாரி மற்றும் இருவர் அடங்கிய சட்ட வரைவு குழுவுக்கு அம்பேத்கர் தலைவராக நியமிக்கப் பட்டார். 1948 பிப்ரவரி மாத கடைசியில் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை எழுதி முடித்தார். அம்பேத்கர் வாழ்வில் இது ஒரு பெரிய சாதனையா கும். பின்னர் ஐந்து காரணங்களை சுட்டிக்காட்டி 1951 செப்டம்பர் 9 ஆம் தேதி நேரு அமைச்சரவையில் ராஜினாமா செய்தார்.
பெண் கல்வி
1927 ஆம் ஆண்டு மகத் மாநாடு முடிந்ததும் அங்குள்ள பெண்களின் கூட்டத்தில் பேசிய அம்பேத் கர், “ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி தேவை என்பதை உணருங்கள். எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டால் பெரிய அளவில் முன்னேற முடியும். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படித் தான் உங்கள் பிள்ளைகளும் இருப்பார்கள். உங்கள் பிள்ளைகளுடைய வாழ்க்கை நல்லொழுக்க நெறியில் இயங்குமாறு செய்யுங்கள். உங்கள் மகன்கள் இவ்வுல கில் தங்கள் தனி முத்திரையைப் பதிக்கும் வகையில் அவர்களை உருவாக்குங்கள்” என்று அறிவுறுத்தினார். பெண்களும் கல்விக் கற்க வேண்டும். அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதி யான நிலைப்பாடு கொண்டிருந்தார்.
ஒரு தேசத்தை ஏற்றாரா அம்பேத்கர் ?
ஒரே தேசம் ஒரே மொழி என மத்தியில் ஆளும் பாஜக அரசின் பாசிசக் குரல் ஓங்கி ஒலிக்கிறது. இந்தியாவை ஒரே தேசமாக மாற்ற அம்பேத்கர் ஒரு வழியை சொல்கி றார். 1949 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையின் இறுதிக் கூட்டத்தில் இந்திய தேசம் என்று அழைக்கப் படுவதையே நீங்கள் விரும்புகி றீர்கள். இந்தியர்கள் ஒரே தேசம் என நம்புவதன் மூலம் மிக தவறான கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கி றீர்கள். இந்தியாவில் ஆயிரம் சாதிகளாக பிளவுபட்ட மக்கள் உள்ள நிலையில் எவ்வாறு ஒரே தேசமாக மாற முடியும்? இந்தியாவில் சாதிகள் இருக்கின்றன. சாதிகள் அனைத்துமே தேச விரோத சக்திகள் தான். இந்தியா ஒரு தேசமாக மாற வேண்டுமானால் சாதி களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பேசினார் அம்பேத்கர். “ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகி றார்களேயொழிய சிங்கங்களை அல்ல. ஆடுகளாக இருக்க வேண்டாம். சிங்கங்களைப் போன்று வீறு கொண்டெழுங்கள்” என்ற தன் கூற்றுக்கு ஏற்றபடி வாழ்ந்து காட்டிய அம்பேத்கரை இந்நாளில் நினைவு கூர்வோம்!
கட்டுரையாளர் : வாலிபர் சங்க
பி.என்.பாளையம் ஒன்றியச் செயலாளர், கோவை