கோவையில் நடந்த கடன் வழங் கும் விழாவில் ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீதாரா மன் அவர்கள் கலந்து கொண்டு, வங்கிக் கடன்கள் வழங்கி உரையாற்றினார். நிர்மலா சீதாராமன் வருகையை யொட்டி அவர் மிகப் பெரிய கடன் தொகையை வழங்குவது போல் நகரம் முழுவதும் சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. ஆனால் அந்த நிகழ்ச்சியின் உண்மை முகத்தையும் ஒன்றிய அரசின் உண்மை முகத்தையும் அங்கு நடந்த நிக ழ்வு ஒன்று வெளிக் கொண்டு வந்துள்ளது. சிறு தொழில் முனைவோரில் ஒருவரான சதீஷ் என்பவர் தனக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை என்று மேடையேறி அனைவரின் முன்பும் புலம்பியுள்ளார். இது தான் கோவையின் பெரும்பான்மையான தொழில் முனைவோரின் நிலையாகும். ஏன், நாடு முழுவதும் உள்ள சிறு குறு தொழில் முனைவோர் அனைவரின் நிலை யும் இதுவாகவே உள்ளது. பகட்டான விளம்பரங்கள் மூலம் இந்த உண்மையை மறைக்க முயன்ற பாஜக அரசு இப்போது அம்பலப்பட்டு நிற்கின்றது. அதுவும் தொழில் முனைவோர் சதீஷ் அவர்களை மேடைக்கு அழைக்கும் போது ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அதட்டல் பேச்சில் நிறைந்திருந்த ஆணவமும் அகங் காரமும் அவர் மேடை ஏறி அம்பலப்படுத்தி யவுடன் காணாமல் போய், செய்வதறியாது திகைத்து நின்றதை நாடே பார்த்தது.
வாழ்வா, சாவா போராட்டம்
நிதி அமைச்சர் கோவைக்கு வருவதற்கு முதல் நாள் இந்திய ஏற்றுமதியாளர் அமைப்புகளின் கூட்டமைப்பு (FIEO) அவருக்கு கடிதம் எழுதி இருந்தது. சிறு, குறு தொழிலுக்கு வழங்கப்பட்டு வரும் அவசர காலக் கடன் உறுதித்திட்டத்தை வரும் 2024 மார்ச் 30 வரை நீடிக்க வேண்டும் என அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந் தது. மேலும் சிறு தொழில் முனைவோர் களுக்கான 5 சதவீதம் வட்டி தள்ளு படி சலுகையை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தி இருந் தது. ஏற்றுமதியாளர்கள் கூட்ட மைப்பு இப்படி வலியுறுத்து வதற்கு காரணம் இருக்கிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதி யில் சிறு குறுந்தொழில்களின் பங்கு 40 சதவீதம் ஆகும். மோடி அரசு தொடர்ச்சியாக கடைப்பிடித்து வரும் பொருளாதாரக் கொள்கைகளின் கார ணமாக சிறு குறுந்தொழில்கள் நாடு முழு வதும் கடும் நெருக்கடியில் உள்ளன. நிலை யில்லாத மூலப்பொருள் விலை, ஜி.எஸ்.டி வரித் திணிப்பு, உற்பத்தி பணி ஆணை (JOB ORDER) ஜி.எஸ்.டி, மின் கட்டணங்கள் உயர்வு, வங்கிகளின் கெடுபிடி போன்றவை காரணமாக சிறு குறுந்தொழில்கள் வாழ்வ தா, சாவதா என்ற போராட்டத்தில் உள்ளன.
கவனமாக தவிர்த்த அமைச்சர்
அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்தில் இந்திய ஏற்றுமதியும் 6.86 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஏழு மாதங் களில் இல்லாத அளவுக்கு ஏற்றுமதி குறைந்து உள்ளது. ஏற்றுமதி இறக்கு மதிகளுக்கிடையேயான வர்த்தகப் பற்றாக்குறையும் கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. இந்தப் பின்னணியில் தான் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு ஒன்றிய நிதி அமைச்சரிடம் சிறு குறுந் தொழில்களை பாதுகாக்க நட வடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது. ஆனால் அதற்குரிய எந்த அறிவிப்புகளையும் கோவையில் அவர் வெளியிடவில்லை. அது மட்டுமல்ல கோவை உள்ளிட்ட தமிழகத்தின் சிறு குறு தொழில் முனைவோரின் நீண்ட நாள் கோரிக்கைகள் எது குறித்தும் பேசா மல் அவர் கவனமாக தவிர்த்து விட்டார்.
ஜிஎஸ்டி தாக்குதல்
உற்பத்தி பணி ஆணைக்கான (JOB ORDER) ஜி.எஸ்.டி என்பது சிறு, குறுந் தொழில்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். பெரு நிறுவனங்களின் லாப வேட்டை தங்கு தடை இன்றி நடைபெற செய்யப்பட்ட ஏற்பாடு இது. உற்பத்தி முடிவடைந்த பொருள்களின் மீது தான் இதுவரை வரி விதிக்கப்பட்டு வந்தது. மோடி அரசு முதன் முறையாக உற்பத்தி பணி ஆணையின் அடிப்படையில் செய்யப்படும் வேலைகள் மீதும் ஜி.எஸ்.டி வரி விதித்துள் ளது. அதுவும் 18 சதவீதமாக விதிக்கப் பட்டது. சிறு, குறு தொழில் நிறுவனங்களின் தொடர் போராட்டமும் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்களின் வலுவான தலையீட்டின் காரண மாகவும் தற்போது வரி 12சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்பதே தொழில் முனைவோரின் கோரிக்கை யாகும்.
மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே!
பெரிய நிறுவனங்கள் தரும் உற்பத்தி பணி ஆணைக்கான தொகையை அவர்கள் பல நேரங்களில் தாமதமாக தருகிறார்கள். ஆனால் ஜி.எஸ்.டி வரியை குறித்த காலத்தில் கட்ட வேண்டியுள்ளது. இதனால், சிறு, குறு தொழில் முனைவோர் தேவையில்லாமல் கடனாளி ஆகின்றனர். வங்கிகளில் கடன் பெற்றால் 90 நாட்கள் வரை எந்த தவணையும் செலுத்தாமல் இருந்தால் கடன் பெற்றவர்களின் பிணைச் சொத்துக்கள் ‘செயல்பாட்டில் இல்லாத சொத்துக்களாக’ NPA - (non performing ASSET) வங்கிகள் அறிவித்து விடுகின்றன. அந்த காலகட்டத்தை ஆறு மாதங்களாக அதி கரிக்க வேண்டும் என்று சிறு குறு தொழில் முனைவோர் தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றனர். ஆனால் அது குறித்து ஒன்றிய நிதி அமைச்சர் எந்த அறிவிப்பும் செய்ய வில்லை. இது சிறு, குறு தொழில் முனை வோர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்துவதில் சலுகை, ஜி.எஸ்.டி வரி குறைப்பு, மூலப்பொருட்கள் விலை யேற்றத்தை கட்டுப்படுத்துவது போன்ற அடிப்படை விஷயங்களில் எந்த தலையீடும் செய்யாமல் ஒன்றிய நிதியமைச்சர் வந்து சென்றுள்ளார். அவர் வருகை குறித்த விளம்பரங்களும், தொழில் முனை வோரின் ஏமாற்றப் பெருமூச்சுமே இப்போது மிஞ்சியுள்ளன.
தொழில் துறையில் அதிக வேலை வாய்ப்பை தருபவையாக சிறு, குறுந்தொழில் கள் உள்ளன. பெரும் கார்ப்பரேட் நிறு வனங்கள் ரூ. 1 கோடி முதலீடு செய்தால் ஒரு வருக்கு வேலைவாய்ப்பு தருகின்றன. சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் ரூ. 10 லட்சம் முதலீட்டில் ஒருவருக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்றனர். எனவே வேலை வாய்ப்பை அதிகரிக்க நாட்டில் வளர்த் தெடுக்க வேண்டிய துறை இதுவே ஆகும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டைப்பாக்குவோம் எனப் பேசிக் கொண்டே விவசாயிகளுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வருவதைப் போலவே சிறு குறுந்தொழில்களை புகழ்ந்து பேசிவிட்டு அவற்றின் அடிப்படையான பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் சென்றிருக்கிறார் நிர்மலா சீதாராமன். மோடி அரசின் துவக்க நாட்களிலிருந்தே நாங்கள் பெரும் முதலாளிகள் நலன்களை மட்டுமே பாதுகாப்பவர்கள் என்று தங்கள் நடவடிக்கையின் மூலமாக சொல்லி வருகின்றனர். 2024 ல் தகுந்த பாடத்தை புகட்டத் தயாராவோம்.
கட்டுரையாளர் : கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)