கண்ணூரில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாட்டில், வரவேற்புக்குழுவின் தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன் ஆற்றிய உரை:
கண்ணூர் வீரத்தின் விளைநிலம் என்று உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். சென்ற நூற்றாண்டில் ஏகாதிபத்திய ஆட்சி யாளர்களின் சுரண்டும் வர்க்கத்தாருக்கு எதிராக விவ சாயிகளும், தொழிலாளர் வர்க்கமும் வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணற்ற போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். கண்ணூர் இப்போதுதான் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை முதன் முறையாக நடத்துகிறது. இதற்கு முன்பு கேரளாவில் நான்குமுறை கட்சியின் அகில இந்திய மாநாடுகள் நடந்துள்ளன. பாலக்காடு, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடில் அகில இந்திய மாநாடுகள் நடந்துள்ளன. கண்ணூர், தோழர் ஏ.கே.கோபாலன் பிறந்த இடமாகும். இடது ஜனநாயக முன்னணியின் அமைப்பா ளராக இருந்த தியாகி அழிக்கோடன் ராகவனும் கண்ணூரைச் சேர்ந்தவர்தான். கட்சியின் முன்னாள் மாநில செயலாளர்கள் சி.எச்.கணாரன் மற்றும் சடயன் கோவிந்தன் ஆகியோரும் கண்ணூரைச் சேர்ந்த வர்களே. கண்ணூர் மாவட்டத்தில் பரபுரம் என்னு மிடத்தில் 1939 டிசம்பரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தான் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப் பட்டது.
அந்த மாநாட்டில் கலந்துகொண்ட தோழர்கள், காங்கிரஸ் கட்சிக்குள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சித்தலைவர்களாக இருந்து விடுதலை இயக்கத் தின் முன்னணித் தலைவர்களாகச் செயல்பட்டவர்கள். அந்த மாநாட்டில் தோழர் பி.கிருஷ்ணப்பிள்ளை கேரள மாநிலக்குழுவின் முதல் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். தோழர் கிருஷ்ணப்பிள்ளை மாபெரும் பிதாமகனாவார். அவருடைய பெயருடன் சகாவு (தோழர்) என்பது ஒட்டிக்கொண்டுவிட்டது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், 1937இல் எஸ்.வி.காட்டே பங்கேற்புடன் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை (cell) அமைக்கப்பட்டது. அப்போதிருந்தே கம்யூனிஸ்ட்டுகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களின் முன்னணியில் நின்றார்கள். ஒரு நாகரிகமான வாழ்க்கை, குடிமை உரிமைகள் ஆகியவற்றுக்கான தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களுக்கு ஒளி விளக்குகளாகத் திகழ்ந்தார்கள். 1940களில் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் நிலப் பிரபுத்துவத்திற்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டங் கள் பலவற்றை நடத்தி இருக்கிறார்கள்.
விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாக...
கண்ணூரில் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியச் சுதந்தி ரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு விவசாயி கள் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களை நடத்தி இருக்கிறது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற யுத்த எதிர்ப்புப் போராட்டத்திலும், வறட்சி ஏற்பட்ட சமயத்திலும், விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் கட்சி விவசாயிகளையும், தொழிலாளர்களையும், பொது மக்களையும் திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறது. இப்போராட்டங்கள் மொராழா, மட்டனூர், தலச்சேரி, கூத்துப்பரம்பு ஆகிய நான்கு மையங்களிலும் நடந்துள்ளன. தலச்சேரியில் நடை பெற்ற போராட்டத்தின்போது போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் நம் தோழர்கள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப் பட்டு தியாகிகளானார்கள். 1940 செப்டம்பர் 15 அன்று, பள்ளிக்கூட ஆசிரியராக இருந்த அபு என்பவரும், பீடித் தொழிலாளியான சாத்துக் குட்டி என்பவரும் தியாகிகளானார்கள். கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட் தியாகிகள் இவர்கள் தான். கையூரில் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடூர ஒடுக்கு முறைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இளம் தோழர்கள் மாடத்தில் அப்பு, குஞ்ஞம்பு நாயர், சிரு கண்டன் மற்றும் அபுபக்கர் என்னும் நான்கு தோழர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். இவர்களின் நினைவு இப்போ தும் நம் தோழர்களுக்கு உத்வேகத்தை அளித்துக் கொண்டிருக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் விளைவுகள் மக்கள் மத்தியில் பட்டினிக் கொடுமையைக் கொண்டுவந்த தன் காரணமாக, மக்கள் உண்ண உணவை உத்தர வாதப்படுத்துவதற்காக எண்ணற்ற போராட்டங்களை கட்சி நடத்தியது. நிலச்சுவான்தார்கள் பதுக்கி வைத்தி ருந்த உணவு தானியங்களை வெளிக்கொண்டுவந்து மக்களுக்கு விநியோகிக்கவும் போராட்டங்களை நடத்தி யது. இப்போராட்டத்தின்போது கரிவெள்ளூரில் நிலப் பிரபுக்களின் குண்டர்களும், போலீசாரும் இணைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி, நம் தோழர்கள் இருவரின் உயிரைப் பறித்தனர். கவும்பாயியில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நம் தோழர்கள் ஐந்து பேர் கொல்லப் பட்டனர். இந்தக் காலத்தில் முனயன்குண்ணு, தில்லங் கேரி, கோரோம், படிக்குண்ணு முதலான இடங்களி லும் எண்ணற்றப் போராட்டங்கள் நடந்தன.
சுதந்திர இந்தியாவில்...
சுதந்திர இந்தியாவிலும், உழைக்கும் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தருவதற்காக கட்சி எண்ணற்ற போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. கட்சி யின் தலைமையின்கீழ் 1948இல் ஓஞ்சியத்தில் நடை பெற்ற போராட்டத்தின்போதும், 1949இல் சூரநாட்டில் நடைபெற்ற போராட்டத்தின்போதும் கட்சி பல தோழர்களை இழந்தது. தோழர்கள் பி.கிருஷ்ணபிள்ளை, ஏ.கே. கோபாலன் மற்றும் இஎம்எஸ் முதலானவர்கள் இயக்கத்தை நிறுவிய தலைவர்கள் என்பதோடு, மக்களை சாதி அடிப்படையிலும் இனத்தின் அடிப்படையிலும் பிரித்து வைத்திருந்த பாகுபாடுகளுக்கு எதிராக நடை பெற்ற போராட்டங்களின்போது வழிகாட்டும் ஒளி விளக்குகளாகத் திகழ்ந்தார்கள். கோவில் நுழைவுப் போராட்டத்தின்போது நம் தலைவர்கள் கடும் தாக்குதலுக்கு ஆளானார்கள். குரு வாயூர் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு பி.கிருஷ்ண பிள்ளையும், ஏ.கே. கோபாலனும் தலைமை தாங்கி னார்கள். சாதி அமைப்புமுறைக்கு எதிரான போராட்டங்களுக்கு இஎம்எஸ் தலைமை தாங்கினார். இவைதான் கேரளம் முற்போக்குப் பாதையில் வேகமாக முன்னேறுவதற்கு வழி அமைத்துக் கொடுத்தன. சுதந்திரம் பெற்ற சமயத்தில் ஆட்சிக்கு வந்த காங்கி ரஸ் கட்சி நாட்டை மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்பதை சௌகரியமாக ஓரங்கட்டி வைத்தது. கேரளாவிலும், நாட்டின் இதர பகுதிகளிலும் இப்பிரச்சனையை கம்யூனிஸ்ட்டுகள்தான் முன்னெடு த்துச் சென்றனர்.
எத்தனை எத்தனை அடக்குமுறைகள்
திருவாங்கூர் சமஸ்தானத்தில் திவான் சி.பி.ராம சாமி ஐயரின் அமெரிக்க மாடல் ஆட்சிக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் இயக்கம் மேற்கொள் ளப்பட்டது. ஆலப்புழாவில் கயிறு தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட புன்னப்புரா - வயலார் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கி யது. 1948-1952 காலத்தில் நம் தோழர்கள் கடும் அடக்கு முறைக்கு ஆளாயினர். இதனால் பலர் தலைமறை வாகச் சென்று கட்சியைக் கட்டி எழுப்பினார்கள். நம் இயக்கத்தின்மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மீறி மக்கள் நமக்கு ஆதரவு அளிப்பது அதிகரித்துக் கொண்டேயிருந்தது. விவசாயத் தொழிலாளர்கள் மத்தியிலும் மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியிலும் நம் தோழர்கள் உயி ரோட்டமுள்ள உறவினைப் பேணிப்பாதுகாத்து வந்த தன் காரணமாகவே இது சாத்தியமானது.
முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம்
இவற்றின் காரணமாக 1957இல் கேரளாவில் நம் அரசாங்கம் அமைந்தது. ஜனநாயகப்பூர்வமாக மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஏப்ரல் 5 அன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்று, 28 மாதங்கள் நீடித்தது. பின்னர் அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவின்கீழ் நம் அரசாங்கம் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுதும் எதிர்ப்புக் கிளர்ச்சிகள் நடந்தன. கம்யூனிஸ்ட் அரசாங்கம் மேற்கொண்ட நிலச் சீர்திருத்தங்களாலும், கல்வித்துறையில் ஏற் படுத்திய புரட்சிகரமான மாற்றங்களாலும் நிலை குலைந்து போயிருந்த பிற்போக்கு சக்திகள் ஒன்றிய அரசின் இந்நடவடிக்கைக்கு ஆதரவாக சென்றனர். எனினும் 1960 மத்தியில் நடைபெற்ற தேர்தலின் போது கட்சி மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க முடியவில்லை. பின்னர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அமைந்த ஏழு கட்சி ஐக்கிய முன்னணி 1967ல் மகத்தான வெற்றி பெற்றது. இது 32 மாதங்களே ஆட்சியிலிருந்த போதிலும் 1969இல் நாட்டில் மிகவும் முற்போக்கான நிலச் சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. இதன்மூலம் நிலப்பிரபுத்துவத்திற்கு மரண அடி கொடுக்கப்பட்டது. கட்சி இந்தச் சட்டத்தை அனைத்துமட்டங்களிலும் நடை முறைப்படுத்துவதற்காக வெகுஜனப் போராட்டங்க ளுக்குத் தலைமை வகித்தது. இவற்றுக்கு தோழர் ஏ.கே. கோபாலன் தலைமை வகித்தார். 1968இல் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டபோது அதனை உடைக்க ஒன்றிய அரசு விடுத்த கட்டளைகளை கேரள அரசு நிராகரித்தது.
நவீன கேரளத்தின் அடித்தளம்
1956இல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வருவ தற்கு முன்பே, திருச்சூரில் நடைபெற்ற கட்சி மாநாட்டின் போது, விவசாய உறவுகள் தொடர்பாக ஒரு தீர்மா னத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தின் அடிப்ப டையிலேயே 1957இல் அமைந்த நம் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்தது. அதன் அடிச்சுவட்டைப் பின்பற்றியே இப்போது நாம் சென்ற மாதம் நடைபெற்ற கட்சியின் கேரள மாநில மாநாட்டில் ஒரு பக்கத்தில் நவீன கேரளத்தை உரு வாக்கவும், மறுபக்கத்தில் அடித்தட்டு மக்களின் துன்ப துயரங்களைக் களைந்திடவும் வழிவகை காணும் விதத்தில் ஒரு நவீன வளர்ந்த மாநிலமாக கேரளத்தைக் கட்டி எழுப்பிட ஓர் ஆவணத்தை நிறைவேற்றி இருக்கி றோம். இந்த ஆவணம் காட்டியுள்ள திசைவழியில் இப்போ தைய இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் செயல்படும் என்கிற உத்தரவாதத்தை கட்சியின் அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். 1975-77களில் அவசரநிலைக் காலத்தின்போது நம் கட்சி மீது ஏவப்பட்ட தாக்குதல்களை கட்சி துணிவுடன் எதிர்த்து நின்றது. ஆளும் வர்க்கங்கள் நம்மீது ஏவிய அனைத்துவிதமான சூழ்ச்சித்திட்டங்களையும் முறி யடித்து மாநிலத்தில் நாம் வளர்ந்திருக்கிறோம்.
கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி 1980, 1987, 1996, 2006, 2016, 2021களில் அரசாங்கங்களை அமைத்தது. இந்த அரசாங்கங்களின் பணிகள் வர லாற்றின் ஒரு பகுதியாகும். மனிதவள வளர்ச்சியில் உலகம் பாராட்டக்கூடிய அளவிற்கு கேரளாவை மாற்றி யமைத்திருப்பதில் நம் அரசாங்கங்கள் நன்கு உதவி இருக்கின்றன.
ஒன்றிய ஆட்சியாளர்களின் பாதை
ஒன்றிய ஆட்சியாளர்கள் நவீன தாராளமயப் பொரு ளாதாரக் கொள்கைகளையும், உலகமயக் கொள்கை களையும் பின்பற்றத்தொடங்கியபின், நம் நாட்டில் ஆளும் வர்க்கங்கள் உழைக்கும் வர்க்கங்களுக்கு, குறிப்பாக முறைசாராத் தொழிலாளர்களுக்கு, சொல் லொண்ணா துன்ப துயரங்களை ஏற்படுத்திக் கொண்டி ருக்கின்றன. வேலைப் பாதுகாப்பு ஒழித்துக்கட்டப் பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியின் கனிகள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலருக்கே சென் றுள்ளது. பொதுத்துறைகளைத் தனியாருக்குத் தாரை வார்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள் வாரி வழங்கப் பட்டு வருகின்றன. இவை மக்கள் மத்தியில் பொருளா தார சமத்துவமின்மையை மேலும் விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. ஏழை மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டி ருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக அரசாங்கங்கள் ஒரேவிதமான கொள்கைகளையே பின்பற்றிக் கொண்டி ருக்கின்றன. நம் கட்சி இதர இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து இவர்களின் மக்கள் விரோத நடவடிக்கை களுக்கு எதிராக வெகுஜனப் போராட்டங்களை உறுதி யுடன் நடத்திக் கொண்டிருக்கிறது. கேரளாவிலும் இந்தப் பிரச்சாரத்தை மிகச்சரியான முறையில் செய்து கொண்டிருக்கிறோம்.
வெற்றிகரமான மாற்றுக் கொள்கைகள்
போராட்டங்களை எப்படி மேற்கொள்வது என்பதில் மட்டுமல்ல, மாநில அரசாங்கங்களிடம் இருக்கின்ற குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்டு மாற்றுக் கொள்கைகளை வெற்றிகரமாக அமல்படுத்துவது எப்படி என்பதுகுறித்தும் நாங்கள் மற்றவர்களுக்கு வழி காட்டியிருக்கிறோம். சமூகப் பாதுகாப்பை உத்தரவா தப்படுத்திட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறோம். அதீத வறுமையை ஒழித்துக்கட்ட, உணவுப் பாது காப்பை அளித்திட, வீடற்ற குடும்பத்தினர் அனைவ ருக்கும் வீடு வழங்கிட, ஒரு தூய்மையான சுற்றுச் சூழலை ஏற்படுத்திட, ஒவ்வொரு பிரஜைக்கும் இணைய தள வசதியை ஏற்படுத்திட, ஒவ்வொரு நப ருக்கும் பொதுப் பணிகளை இலவசமாக அளித்திட, விவசாயத்துறையை புதுப்பித்து அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளித்திட, சிறிய மற்றும் நடுத்த ரத் தொழில்களை எளிய நடைமுறை விதிகளுடன் ஊக்குவித்திட - இவ்வாறாக அனைத்துத்தரப்பின ருக்கும் ஒரு சுமுகமான சூழலை ஏற்படுத்திட நட வடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
கேரளாவின் தென்முனையிலிருந்து வடமுனைக்கு நான்கு மணி நேரத்தில் செல்லக்கூடிய விதத்தில் அரை உயர்வேக ரயில் திட்டத்தை (semi high speed rail system) அமல்படுத்திட முயற்சிகளை மேற் கொண்டிருக்கிறோம். ஒன்றிய அரசின் ஒப்புத லுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என அனைத்துக்கும் முக்கி யத்துவம் கொடுத்து திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருக்கிறோம். கேரளாவில் மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி 2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்த லின்போது மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கிறோம். பாஜக-வினால் ஓரிடத்தைக்கூட கைப்பற்ற முடிய வில்லை. இருந்த ஓரிடத்தையும் பறிகொடுத்துவிட்டது. பாஜக-வின் வாக்கு சதவீதம் 2016இல் 15.01ஆக இருந்தது, 2021இல் 12.47ஆகக் குறைந்துவிட்டது.
மக்கள் மத்தியில் நம் செல்வாக்கு அதிகரித்தி ருப்பதன் காரணமாக சங் பரிவாரக் கூட்டமும், காங்கிரஸ் கட்சியும் நமக்கு எதிராக வன்முறை வெறி யாட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதில் நாம் பல தோழர் களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கி றது. நாம் மிகவும் பொறுமை காத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மக்கள் இதனை நன்கறி வார்கள். புரட்சிகரப் போராட்டங்களின் தளமான கண்ணூ ருக்கு, மத நல்லிணக்கத்தின் தளமான கண்ணூருக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நம் நாடு மிக முக்கியமான கட்டத்தில் இப்போது இருக்கிறது. நம் கட்சியின் அகில இந்திய மாநாட்டை அரசியல் நோக்கர்கள் மிகவும் உன்னிப்பாகக் கவ னித்துக்கொண்டிருக்கிறார்கள். வரவிருக்கும் காலங்க ளில் நாம் எந்தத் திசைவழியில் செல்ல வேண்டும் என்று மாநாடு நமக்கு அளித்திடும் கட்டளையின்படி செயல் படுவோம். அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் தோழர்களே!
தமிழில்: ச.வீரமணி