articles

img

எங்கெங்கு காணினும் பெண்கள்! - ஜி.ராணி

எங்கு பார்த்தாலும் சிவப்பு நிறமாய் காட்சியளித்தது கண்ணூர். முதன்முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கு - அதுவும் கேரள மண் ணிற்கு சென்றவர்களை உணர்ச்சிவசப் படுத்தியது கண்ணூர். குறிப்பாக மாநாட்டுப் பெண் தொண்டர்களின் செயல்பாடுகள், அன்பாக உபசரிக்கும் பாங்கினை சொல்லிமாளாது. 

ஏப்ரல் 6ஆம் தேதி காலை மார்க் சிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டு  கொடி ஏற்றும் நிகழ்வு. அந்த நிகழ்வினை காண பெண்கள் தங்கள் குழந்தைகளுடன்   ஆயிரக்கணக்கில் கூடி இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பிரதிநிதிகளைப் பார்த்த வுடன் ‘லால் சலாம்’ என்றும் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்றும் விண்ணதிர குரல் எழுப்பினார்கள். இளம் பெண்கள் சாரை சாரையாக மாநாட்டின் வாயிலில் - அரங்கத்தில் - வெளியில்-  நின்றதைப் பார்த்த பிரதிநிதிகள் அனைவருக்கும் உற்சாகம் இன்னும் அதிகமானது. மாநாட்டு அரங்கிற்குள் ஏராளமான இளம் பெண் தொண்டர்கள் - பள்ளி படிப்பு, கல்லூரி முதலாமாண்டு, முது நிலை படிப்பு என படித்துக்கொண்டிருக் கும் பெண்கள் , இன்முகத்துடன் செந் தொண்டர்களாக பணியாற்றினார்கள். 

பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத் தில் மட்டும் கட்சி உறுப்பினர்கள் எண் ணிக்கை 61, 668 பேர். கிளைகள் 4245.  இடைக்கமிட்டிகள் 18. லோக்கல் கமிட்டி எனப்படும் உள்ளூர் பகுதிக் குழுக்கள் 243 என, அந்த மாவட்டத்தின் கட்சி உறுப்பினர்களை கேட்கும்போது மனதிற்குள் உற்சாகமும் புரட்சிகரமான உணர்வும் அலைமோதியது. எப்படி இது சாத்தியமானது என தோழர்களிடம் கேட்கும்போது அவர்கள் சொன்ன பதில்கள் ஆச்சரியப்பட வைத்தன. தோ ழர்களின் ஒவ்வொரு குடும்பமும் குடும்ப உறுப்பினர்களும் கிளையில் இருப்ப வர்களுக்கும் லோக்கல் கமிட்டியில் உள்ளவர்கள் அனைவருக்கும் தெரியும் என்றார்கள். மேலும் குடும்பமே கட்சி உறுப்பினர்களாக அனைத்து அமைப்பு களிலும் செயல்படுவோம் என்றார்கள் உற்சாகத்தோடு. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை புரிய 10 குடும்பங்களுக்கு ஒரு கட்சி உறுப்பி னர் என்று பணிகளை மேற்கொண் டோம்; அந்த காலகட்டத்தில் தான் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை மிகக் கணிச மாக உயர்ந்தது என்றார்கள். பெண்களு க்கு அனைத்துக் கிளைகளிலும் மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப் போம்; ஆகவேதான் கிளைச் செயலாளர் கள் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பெண்களே இருக்கிறார்கள் என்று மிகவும் சந்தோசமாகக் கூறினார்கள். 

ஆட்டோ ஓட்டும் ஒரு தோழரிடம், மிகக் குறைந்த அளவில் வாடகை வாங்கு கிறீர்கள்; கட்சிக்கு எப்படி நீங்கள் லெவி கட்டுவீர்கள் என்று கேட்டபோது அவர் சொன்ன பதில்: “எங்கள் வீட்டில் 3 உண்டி யல் வைத்துள்ளோம் 1. கட்சி லெவிக்காக தினந்தோறும் அதில் காசு போடுவோம். 2. வருடந்தோறும் நடைபெறும் உண்டியல் வசூலுக்கு வீட்டிற்கு வரும்போது அந்த உண்டியலில் போட்ட பணத்தை அப்படி யே நாங்கள் நிதியாக கொடுத்து விடு வோம். மூன்றாவது உண்டியல், ஊழி யர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடியாக உதவி செய்வ தற்கு அந்த உண்டியல் பணத்தை கொடுத்து விடுவோம்.ஒவ்வொரு வருட இறுதியிலும் நாங்கள் எங்கள் குடும்பத்தி னரின் கட்சி உறுப்பினருக்கான லெவி பணத்தை கட்டுவோம்”. ஒவ்வொரு வருட மும்  கட்சி உறுப்பினர் எண்ணிக்கை  விடு படாமல் இருக்க கேரளாவின் வழிகாட்டு தல் உத்வேகத்தை ஏற்படுத்தியது.

கட்டுரையாளர் : சிபிஎம் திண்டுக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர்.