articles

img

லித்தியம், டைட்டானியம் கொள்ளைக்கு வாசல் திறக்கும் மோடி அரசு! - சுதீப் தத்தா

மணிப்பூரில் பற்றி எரியும் போராட்டங்களுக்கு மத்தியில், ஒன்றிய நிலக்கரி மற்றும் கனிம வளத்துறை அமைச்சர்  பிரகலாத் ஜோஷி, சர்ச்சைக்குரிய வகையில் சுரங்கம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2023-ஐ, கடந்த ஜூலை 26 அன்று நாடாளுமன்றத்தில் அறி முகப்படுத்தினார். இது, எந்தவொரு விரிவான விவாத மும் இன்றி அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது. இம் மசோதாவில், அரசால் முன்மொழியப்பட்ட திருத் தங்கள், சட்டமாக இயற்றப்பட்டால், சுற்றுச்சூழல், மக்க ளின் நல்வாழ்வு மற்றும் இந்தியாவின் எதிர்கால எரிசக்தி  பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப் பெரிய அளவில் பேரழிவுத் தாக்கத்தை ஏற்படுத்தும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் வனப்பகுதியின்  மேற்பரப்பில்  குழிகள், அகழிகள், சுரங்கம் மற்றும் நிலத்தை துளையிடுதல் போன்ற செயல்பாடுகளை அனுமதிப்பதை சுரங்கங் கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை)  சட்டம் 1957 தடை செய்துள்ளது.    இயற்கை வளங்களை பாதுகாப்பதை நோக்கமா கக் கொண்ட 1957சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், வன மற்றும் வன விலங்கினங்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட கட்டாய வனப் பாது காப்பு அனுமதி செயல்முறைகளை நீக்குவதற்கு முயல்கிறது. இந்த மாற்றங்களால் பலன்பெறும் கார்ப்ப ரேட் சுரங்க நிறுவனங்கள்  சுற்றுச்சூழலை அழித்து, இயற்கை வளங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்; பழங்குடி சமூகங்களை மோசமாக பாதிக்கும்.

அரிய கனிமங்களுக்கான அதிகாரம்

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை)  சட்டத்தின் கீழ்  குறிப்பிட்ட சில செயல்களைத்  தவிர மற்ற அனைத்தும், குறிப்பாக, ஏலம் விடும் நடைமுறை மாநில அரசுகளால் மட்டுமே நடத்தப்பட்டது. அத்தகைய அதிகாரத்தை மாநிலங்க ளிடமிருந்து ஒன்றிய அரசுக்கு கை மாற்றுவதை இந்த  மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. லித்தியம், கோபால்ட், நிக்கல், பாஸ்பேட், பொட்டாசியம், டின் போன்ற முக்கியமான கனிமங்களுக்கான ஏலங்களை நடத்துவதற்கு ஒன்றிய அரசுக்கு இச்சட்டத் திருத்தங் கள் பிரத்யேக உரிமையை வழங்குகின்றன. தங்கம், வெள்ளி, தாமிரம், கோபால்ட், நிக்கல், ஈயம், பொட்டாஷ் மற்றும் ராக் பாஸ்பேட்  உள்ளிட்ட 29 கனிமங்களுக்கு சிறப்பு ஆய்வு உரிமம் வழங்கும் அதிகாரத்தை  ஒன்றிய அரசுக்கு இந்த சட்டத் திருத்த மசோதா  வழங்குகிறது. மேலும் இது லித்தியம், பெரிலியம், நியோபியம், டைட்டானியம், டான்டாலியம், சிர்கோனியம் ஆகிய ஆறு கனிமங்களையும் தடைசெய்யப்பட்ட அணுக் கனிமங்கள் வகைப் பட்டியலிலிருந்து நீக்கி, இந்தத் தாதுக்களுக்கான சுரங்க மற்றும் ஆய்வு நடவ டிக்கைகளில் தனியார் நிறுவனங்களை பங்கேற்க அனு மதிக்கிறது.  அதாவது, இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம் மின்சார வாகனங்கள், பேட்டரிகள் உள்ளிட்ட ஆற்றல் சேமிப்பு இயந்திரங்களில் தற்போது பரவலாகப் பயன் படுத்தப்படும் தவிர்க்க இயலாத இரும்பு அல்லாத, கார உலோகமான லித்தியத்தை வணிக ரீதியாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சுரங்கம் அமைத்து தோண்டியெடுக்க வாய்ப்புகளை அள்ளித்தருகிறது. மேலும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லாபத்தைக் கொடுக்கவும் இயற்கை வளங்களை சுரண்டுவதை நோக்கமாகக் கொண்டும் ஜிஎஸ்டி, ஏற்றுமதி வரி, உரிமை பங்கு, மாவட்ட கனிம அறக்கட்டளை (DMF)  மற்றும் தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளை (NMET), கனிமங்களின் சராசரி விற்பனை விலை (ASP) கணக் கீடு ஆகிய நடைமுறைகளை எல்லாம் தவிர்த்து விட்டு ஒன்றிய அரசு இந்த மாற்றங்களைச் செய்துள்ளது.

லித்தியத்தின் மீது ஏன் கவனம்?

இந்த ஆண்டு பிப்ரவரியில், ஜம்மு- காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால்-ஹைமானா பகுதி யில் சுமார் 41,000 கோடி டாலர் மதிப்பு கொண்ட 0.59 கோடி  மெட்ரிக் டன் அளவிற்கு லித்தியம் இருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் உறுதி செய்தது. கடந்த ஆண்டு அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு, உலகின்  லித்தியம் இருப்பு மொத்தமே வெறும் 8.7 கோடி டன்கள்  என ஆய்வை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தனது தனியார் கார்ப்பரேட் கூட்டுக்களவாணிகளு க்கு வழி உருவாக்கிக் கொடுத்து, விலை மதிப்புமிக்க  லித்தியத்தைச் சுரண்டிக் கொழுக்கச் செய்வதில் ஒன்றிய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இந்தியா தற்போதைய லித்தியம் மற்றும் லித்தியம்-அயன் இறக்குமதிகளு க்கு ரூ.16,300 கோடி செலவிட்டுள்ளது.2022-23 நிதி யாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை சீனா மற்றும் அமெரிக்காவில் இருந்து இந்தியா அதிக அளவு லித்தி யம் இறக்குமதி செய்துள்ளது.  இந்தியாவில் கண்டறியப்பட்ட லித்தியம் அமெ ரிக்காவின் மொத்த இருப்புக்கு சமம்; அதேபோல, சீனா வை விட அதிகளவில் உள்ளது.

300 ppm க்கும் அதிக மான தரம் கொண்ட  லித்தியம் சிறந்த செறிவூட்டல் மதிப் பைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. காஷ்மீரின் ரியாசியில் கண்டுபிடிக்கப்பட்ட  லித்தியம் 800 ppm அளவு தரம் வாய்ந்தது. எனவே இது உலகளவில் முக்கியத்துவம் பெறுகிறது.  இந்நிலையில் குறிப்பிட்ட தனியார் கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு சுரங்க உரிமைகளை ஏலம் விடுவது,  நாட்டின் எதிர்கால எரிசக்தி வளங்களின் மீது ஏகபோ கக் கட்டுப்பாட்டை அந்தப் பெரும் நிறுவனங்களுக்கு வாரி வழங்குவதைக்  காட்டுகிறது. இதன் விளைவாக, இந்தி யாவின் ஆற்றல் மாற்றத்திற்குத் தேவையான அத்தியா வசிய வள ஆதாரங்கள் மீது தனியார் கார்ப்பரேட் நிறு வனங்களின்  ஆதிக்கத்தை நிலை நாட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 2050 ஆம் ஆண்டுக்குள் லித்தியம் மற்றும் கோபால்ட் போன்ற முக்கிய உலோகங்களுக்கான தேவை 500 சத வீதம் அதிகரிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. மின்சார இரு சக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் பொதுவாக சுமார் 100-200 லித்தி யம் செல்களைக் கொண்டிருக்கும். இந்நிலையில் பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவின் லித்தி யம் உள்ளிட்ட வளங்களை சூறையாட அனைத்து கதவு களையும் இச்சட்டத்திருத்தங்கள் மூலம் திறந்து விடுகிறது ஒன்றிய அரசு.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கைவிட்டது ஏன்?

ஜம்மு - காஷ்மீர் பகுதியில் லித்தியம் பிரித்தெடுக்க முன்மொழியப்பட்டிருப்பது திறந்தவெளி சுரங்க முறையாக உள்ளது. பிரித்தெடுக்கப்படும் தாதுக் களை   பெட்ரோல்- டீசல் உள்ளிட்ட எரிபொருட்க ளைப் பயன்படுத்தி உருக்கி, சுத்திகரிப்பு செய்து கழிவு களை அகற்ற மிக அதிகளவு நீர் தேவைப்படும்; இத னால் நிலத்தடி நீர் குறைவது,நதிகள் மற்றும்  பல்லுயிர் இனங்களின் அழிவு, காற்று மாசுபாடு என சுற்றுச்சூழ லுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த வழிவகுக்கிறது. இந்த  செயல்முறை ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப் படும் சுரங்க செயல்முறைக்கு முற்றிலும் மாறுபட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள  பில்பரா மற்றும் இல் கார்ன் கிராட்டன்கள்  (நிலையான உள்ளடுக்கு பாறை கள்) போன்ற நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலை யாக இருக்கும் பாறைகளில் லித்திய படிமங்கள் காணப் படுகின்றன. ஆனால் இந்தியாவில் லித்தியம் படி மங்கள் காணப்படுகிற இமயமலையானது, ஆஸ்தி ரேலிய பாறை அடுக்குகளுக்கு நேர்மாறாக, உலகளவில் மிகவும் இளமையான மற்றும்  நிலையற்ற மலைத் தொடர்களில் ஒன்றாகும். இங்கு ஒரு டன் லித்தியத்தை பிரித்தெடுக்க தோராயமாக 22 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இந்த செயல்முறையில் 15  டன் கள் கார்பன்டை ஆக்ஸைடு  வெளியேறுகிறது. மேலும் இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் லித்தியம்  கண்டறியப்பட்டுள்ளது மிகவும் முக்கியமானது. அத்தகைய மதிப்புமிக்க வளத்தை பொறுப்புடன் நிர்வகிப்பதற்கு அரசு  நிறுவனங்கள்   சிறந்த முறையில் தயாராக இருந்தும்  இந்த அரிய வளத்தை மோடி அரசுடன்   நெருங்கிய தொடர்பு கொண்ட தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதை விரைவுபடுத்தவே அது ஆர்வமாக இருக்கிறது.  

லத்தீன் அமெரிக்காவின் நடைமுறை
 

பொலிவியா, சிலி மற்றும் அர்ஜெண்டினாவை உள்ளடக்கிய தென் அமெரிக்கா  உலகின்  லித்தியம் இருப்புக்களில் தோராயமாக 50 சதவீதத்தைக் கொண் டுள்ளது. பொலிவியா மற்றும் சிலியில், லித்தியம் பிரித் தெடுக்கும் உரிமைகள் அரசு நிறுவனங்கள்  அல்லது அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டு முயற்சிகள் மூலம் நிர்வகிக்கப் படுகின்றன. ஏப்ரல் 2022 இல் மெக்சிகோ ஒரு முக்கிய நடவடிக்கை எடுத்து, லித்தியம் துறையில் நேரடி தனியார் முதலீடு மற்றும் உற்பத்தியை தடை செய்தது. லித்தியம் உள்ளிட்ட சுரங்கத் துறையில் கடுமை யான சுற்றுச்சூழல் விதிமுறைகளுடன் அரசு நடத்தும் நிறுவனங்களின்  அனுபவங்களே  உலகளாவிய அனுப வமாக உள்ளன. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக் காக  மாவட்ட  கனிம அறக்கட்டளை (DMF)யை செயலி ழக்கச் செய்வது உட்பட பல கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிற, இல்லாமல் செய்கிற மசோதாவை மோடி அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதா நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, சூழலி யல் மற்றும் சுரங்கம் அமைக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களின் நல்வாழ்வைப் பாதிக்கிறது. கூடுத லாக, வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023, மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள், இலாப நோக்கத்தில், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொள்ளாமல் இயற்கை வளங்களைச் சுரண்ட இந்த மசோதா வழி செய்கிறது. இது இயற்கை மற்றும் தேசத்தின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானது. 

தி ஒர்க்கிங் கிளாஸ்’ (செப்டம்பர் 2023) 
இதழில் வெளியான கட்டுரை
தமிழில் : சேது சிவன்