மூளையில் பிட்யூட்டரி சுரப்பிகளில் சுரக்கும் ஆக்சிடோசின், செயற்கையாக வேதி யியல் முறையில் மருந்து நிறுவனங்க ளால் தயாரிக்கப்பட்டு உலகெங்கும் விநியோகிக் கப்படுகிறது. பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் அதிக உதிரக்கசிவு (Postpartum hemorrhage ) உலகள வில் தாய் இறப்புக்கு முக்கிய காரணம் என மருத்துவ அறிவியல் கூறுகிறது. ஆக்சிடோசின் அதிக உதிரக் கசிவை குறைப்பதில் கருப்பை மருந்தாக உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த நிலையில், 20வது உலக சுகாதார அமைப்பின் (WHO) கூட்டம், அத்தியா வசிய மருந்துகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.
மருந்துக்கு தடை விதித்த மோடி அரசு
2018 ஏப்ரலுக்கு முன்பு இந்தியாவில் 112 நிறுவனங்க ளில் ஆக்சிடோசின் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தாயின் மரணத்தை தவிர்க்கும் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்தாக உள்ள ஆக்சி டோசினை 27.4.2018 தேதியிட்ட ஒரு உத்தரவின் மூலம் தடை செய்து பின்னர் அதன் உற்பத்தி மற்றும் விற்பனையை மோடி அரசு கர்நாடகா ஆண்டி பயாடிக் நிறுவனத்திற்கு மட்டுமே வழங்கி சராசரி யாக 2.7 கோடி பிரசவங்களில் பயன்படுத்தப்படும் ஆக்சிடோசின் கிடைப்பதை கேள்விக்குறியாக்கியது. இதனால் ஆக்சிடோசின் தட்டுப்பாடு உருவாகி இளம் தாய்மார்களின் இறப்பு அதிகரிக்கும் சூழ்நிலை உருவானதால் இதை எதிர்த்து தில்லி உயர் நீதி மன்றத்தில் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல வழக்கு கள் தொடரப்பட்டன. இதன் மீது தில்லி உயர் நீதிமன்றம் மோடி அரசின் ஆணையை 14.12.2018 அன்று ரத்து செய்தது.இதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை துவங்கும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் விரிவடைந்த அமர்வுதான் இதை முடிவு செய்ய வேண்டும் என பரிந்துரைத்து தனது பணியை முடித்துக் கொண்டது. ஆக்சிடோசின் ஹார் மோனின் சில்லறை விற்பனை மீதான இந்த தடையின் பின்புலத்தில் காவிகளின் பசுமாட்டு அர சியல் இருந்தது. அதிகப் பால் பெறுவதற்காக கறவை மாடுகளுக்கு ஆக்சிடோசின் செலுத்துவதாகவும் இதனால் பசுக்கள் மலடாகும், ஆயுள் குறையும், பால் விஷமாகும் என்று பாஜகவினர் கூறினார்கள். இந்த காரணங்கள்தான் நாடு முழுவதிலுமுள்ள மகப்பேறு மருத்துவ நிபுணர்களை திகைக்க வைத்தது.
பசுமாட்டு பாலிடிக்ஸ்
மே 2017 இல் பிரதமர் நரேந்திர மோடி இறைச்சிக் காக மாடுகளை விற்க தடை விதித்தார். உச்ச நீதி மன்றத்தால் இந்தத் தடை பிறகு நீக்கப்பட்டாலும் நரேந்திர மோடியின் இந்த ஆதரவு சமிக்ஞை இந்துத் துவா குழுக்களை குஷிப்படுத்தியது. பசு மாடுகளை பாதுகாக்க புறப்பட்ட பசுக் குண்டர்கள், அவிழ்த்து விட்ட மாடுகளைப் போல் நெடுஞ்சாலைகளில், உள் கிராமங்களில் பேனர்கள் கட்டிக்கொண்டு திரிந்தார் கள். வன்முறை ரெய்டுகளை நடத்தினார்கள். எங்கே பசுக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அங்கே வளம் இருக்கிறது; பசுக்கள் துக்கத்தில் இருக்கும் இடத்தில், துன்பம் இருக்கிறது என்று வாழ்க்கை வளத்திற்கும் மக்களின் மகிழ்ச்சிக்கும் மோடியின் பொருளாதார கொள்கைகளுக்கும் சம்பந்தமில்லாதது போலான டயலாக்குகள் இந்த பசு குண்டர்களை கொம்பு சீவி விட்டன. ஊர் விட்டு ஊர் வந்து சந்தைகளில் மாடுகளை வாங்கி ஓட்டிச் சென்ற தலித்துகளையும் முஸ்லீம்களையும் சாலைகளில் இடைமறித்து தாக்கிப் படுகொலைகள் செய்தார்கள். மோடி ஆதர வைப் பெற்றிருந்த இத்தீவிர பசுக் குண்டர் கும்பல்கள் மே 2015 முதல் டிசம்பர் 2018 வரை மூன்று ஆண்டுக ளில் மட்டும் குறைந்தது 44 பேரைக் கொன்றுள்ளதா கவும் ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 28.9.2015 இரவு உத்தரப் பிரதேசம் தாத்ரிக்கு அருகில் 52 வயதான முகமது அக்லாக்கை உயிரோடு அடித்துக் கொன்ற படுபாதகம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதைப் பற்றி எழுதாத உலக பத்திரிகைகளே இல்லை என கூறலாம். பசுகுண்டர்களால் தலித்துக்கள் தாக்கப்படுவதைப் பற்றி மட்டும் மிகத் தாமதமாக கண்டனம் செய்து மோடி முழங்கினார். ஆனால் குஜராத் உனா நகரில் இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக தலித்துக்கள் உயர் சாதி கயவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்ப வத்தையோ; ஜார்க்கண்டில் ஒரு ஆண் மற்றும் சிறுவன் மற்றும் உதம்பூர் அருகே ஒரு காஷ்மீரி டிரக் டிரைவர் உட்பட பல முஸ்லிம்கள் பசுக்குண்டர்களால் கொல்லப்பட்டுள்ள வன்முறைகளைப் பற்றியோ பகிரங்கமாக கண்டிக்காமல் கவனமாக பிரசங்க சர்க்கஸ் செய்தார்.
ஆக்சிடோசின் அரசியல்
2019 பொதுத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தி பேசும் - அதிக மக்கள் தொகையைக் கொண்ட வட இந்திய பெல்ட் முழுவதிலி ருந்தும் இந்து வாக்குகளை கவரும் உத்தியாக மதவெறி பசுபக்தியை மீண்டும் பாஜக உசுப்பி விட முடிவு செய்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தியை பயன்படுத்தி, பெண்கள் குழந்தைகளுக்கு ‘எதிரான’ ஆக்சிடோசின் தடையை மோடி அரசு கொண்டு வந்தது தான் இதில் உள்ள உச்சக்கட்ட பின்னணியாகும். “இந்த மருந்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க போதுமான சட்டங்கள் ஏற்கனவே உள்ளன; தடை தேவை யில்லை” என்று இந்திய மருத்துவ சங்கத்தின் கெளரவ பொதுச் செயலாளர் ஆர்.வி. அசோகன் கூறினார். கேரள மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ கூட்டமைப்பு ஒன்றிய அரசின் இத்தடையை எதிர்ப்பதாக அதன் தலைவரான பிரசன்ன குமாரி கூறினார். இந்திய மருத்துவ சங்கம் (IMA), நீதி மன்றத்தில் சமர்ப்பித்த மனுவில், இந்த தடை பற்றாக்குறையை உருவாக்கும்; இதன் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி இளம் தாய்மார்களின் வாழ்க்கை மோசமாகும், பிரச்சனை ஆக்சிடோ சின் உற்பத்தியில் அல்ல; இறுதிப் பயன்பாட்டின் அமலாக்கத்தில்தான் உள்ளது என கூறப்பட்டிருந்தது.
ஊருக்குத்தான் உபதேசம்
இதில் வேடிக்கை என்னவென்றால் கால்நடைகள் மீது சட்ட விரோத ஆக்சிடோசின் பயன்படுத்தப்படும் புகார்கள் கேரளாவில் இல்லை. தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில மட்டும் இருந்தது. காவிகள் செல்வாக்கு செலுத்தும் ஹரியானா மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தர்கண்ட், தில்லி போன்ற வட மாநிலங்களில் தான் மிக பெரும் அளவில் இருந்தது. அகமதாபாத் மற்றும் சூரத் உள்ளிட்ட குஜராத் நகரங்களில் 2021 ஜூன் மாதத்தில் மட்டும் மூன்று லட்சம் ஆக்சிடோசின் குப்பிகள் உட்பட போதைப்பொருள் கண்டுபிடிக் கப்பட்டன என்று என்டிடிவி தெரிவித்தது. குஜராத் பாலன்பூரில் உள்ள ஐந்து பால் பண்ணை உரிமையா ளர்கள் தங்கள் பால் உற்பத்தி திறனை அதிகரிக்க தடை செய்யப்பட்ட ஆக்சிடோசின் ஊசியைப் பயன் படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். செப்டம்பர் 2022-இல் குஜராத்தின் துவாரகா மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட 17,748 ஆக்சிடோசின் பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஹரியானா காவல்துறை, பரிதாபாத்தில் இரண்டு டிரக்குகளில் ஒன்பது லட்சம் ஆக்சிடோசின் ஊசிகளை கைப்பற்றியதாக செய்திகள் வெளியாயின.
குறிப்பாக வழக்கு உச்ச நீதிமன்ற மேல்முறை யீட்டில் இருக்கும்போதே மகாராஷ்டிரா கல்யாண் பகுதியில் மும்பை மாடுகளுக்காக கொண்டு வரப்பட்ட 600 லிட்டர் ஆக்சிடோசின் கைப்பற்றப் பட்டது. உ.பி. மாநிலத்தின் 18 பிரிவுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,19,300 மதிப்புள்ள ஆக்சிடோ சின் கைப்பற்றப்பட்டது. 2022 ஜனவரி பிப்ரவரி மாதங்க ளில் புதுதில்லி ரயில்வே நிலைய சோதனைகளில் மட்டும் அருகாமை மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் ரூ.65 லட்சம் மதிப்புள்ள சட்டவிரோத ஆக்சிடோசின் ஊசிகள் கைப்பற்றப்பட்டன. உ.பி. ஹாபுரில் 19.1.2023 அன்று 200 பாட்டில்களில் ஆக்சிடோசின் கைப்பற்றப்பட்டது. ஆக்சிடோசின் திருட்டுத்தனப் பட்டியல்கள் ‘கோ’ மைந்தர்களின் மாநிலங்களில்தான் நீளமானவை.
சிறுமிகளுக்கு ஆக்சிடோசின்
இவை ஒருபுறம் இருக்க அப்பாவி ஏழைக் குடும்பங்களின் சிறுமிகளை கடத்திச்சென்று அவர்களுக்கு ஆக்சிடோசின் செலுத்தி திடீரென்று பருவமடைய செய்து பாலியல் தொழிலில் வலுக் கட்டாயமாக ஈடுபடுத்தும் அக்கிரமங்கள் இவர்கள் செல்வாக்கு உள்ள மாநிலங்களில்தான் அதிகம் நடைபெற்று வருகின்றன என செய்திகள் தெரி விக்கின்றன. தி ட்ரிப்யூன் பத்திரிகை நடத்திய விசாரணையில், “சிறுமிகளை கடத்துவது கணிசமாக அதிகரித்துள்ளதும் அவர்களுக்கு ஆக்சிடோசின் ஊசி செலுத்தப்பட்டதும் தெரியவந்தது. நாடு முழு வதிலும் இருந்து நூற்றுக்கணக்கான சிறுமிகள் கடத்தப்பட்டு, ராஜஸ்தான் ஆல்வார் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு அழைத்து வரப்பட்டு, அவர்கள் பருவமடைவதை துரிதப்படுத்த ஆக்சிடோ சின் ஊசி போட்டு கொடிய பாலியல் வணிகத்தில் தள்ளப்படுகிறார்கள். பின்னர் சிறுமிகள் மும்பை மற்றும் வளைகுடாவிற்கு பாலியல் வணிகத்திற்காக அனுப்பப்படுகிறார்கள்,” என்று ஒரு கட்டுரையின் மூலம் இந்தியா டுடே அம்பலப்படுத்தியிருந்தது.
கண்கொத்திப் பாம்பாக இருக்க வேண்டும்!
2012 ஜென்மாஷ்டமி தினத்தன்று நரேந்திர மோடி யின் சொந்த இணைய பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது, “பசுக்களுடன் பகவான் கிருஷ்ணன் நட்பு கொண்டிருந்ததால், பசுக்களை தாயாக வணங்கு கிறோம். குஜராத்தில், ‘கோ மாதா’வைக் காக்க நாங்கள் எதையும் விட்டு விடவில்லை. இந்தியாவி லேயே பசு பாதுகாப்பிற்காக சட்டத்தை இயற்றி பசு வதையைத் தடை செய்த ஒரே மாநிலம் குஜராத் நாம்தான். தாய் பசு கொல்லப்படுவதை தடுப்பதோடு பணி நின்றுவிடாமல், அவைகளின் நலனை உறுதி செய்வதிலும் தொடர்கிறது” என்று மோடி தனது தளத்தில் கூறியிருந்தார். இதன்பின்னர்தான் இந்தியா முழுவதிலும் 5000க்கு மேற்பட்ட பசு பராமரிப்பு கோசாலைகள் உருவாக்கப்பட்டன. இப்படி யாக 2014 தேர்தலை முன்னிட்டு பசுவோடு பாலிடிக்ஸ் மிக்ஸ் செய்யப்பட்டதால் வடக்கே காவி அரசியல் மேலும் பாய்ச்சலெடுத்தது. 2014 தேர்தலில் வெற்றி யடைந்து, நாடாளுமன்றத்தின் படியை பதவிசாக முத்த மிட்டு சக்திமான் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அடி எடுத்து வைத்தார். 2014 -2019 காலத்தில் ஏராளமான சிறுபான்மை தலித் மக்களை பசு மாட்டு பாலிடிக்ஸில் பலி வாங்கி ஆக்சிடோசின் ஊசியிலும் அரசியல் செய்து 2019 தேர்தலில் வெற்றி அடைந்தார்.
2024 தேர்தல் களத்தில் ஏராளமான புதிய பிரச்சனைகள் பாஜகவை வறுத்தொடுக்க காத்திருக்கின்றன. அதே சமயத்தில் மதச்சார்பற்ற அரசியல் சக்திகளும் வரலாறு காணாத அளவில் ஒன்றுபட்டு வருகின்றனர். காவிகளுக்கு இருக்கக் கூடிய, அவர்களுக்குத் தெரிந்த ஒரே வாய்ப்பு மத வெறித்தீயை மூட்டி விடுவதுதான். இப்போது படுத்திருக்கும் பசு மீண்டும் எழுந்து பாய்ந்து வரலாம். பொரும்பான்மை மதவெறியை புனிதப்படுத்த பொது சிவில் சட்டத்தை தூக்கிப்பிடித்து பயாஸ்கோப் காட்டலாம். எதிர்க்கட்சி மாநிலங்களின் அரசியலில் புதிய புதிய குழப்பங்களை உருவாக்கலாம். மிக முக்கியமாக 2024-ல் தனது பெல்ட் மாநிலங்க ளிலேயே ஜெயிக்க முடியாது என்று தெரிந்து விட்டால் மணிப்பூருக்கு அடுத்து ஹரியானா, பின் தில்லியையும் குறி வைக்கலாம். இந்துத்துவா பெருந்தொற்றிலிருந்து மக்களை நாம் பாதுகாக்க வேண்டும். இன்னும் 9 மாத மோடி ஆட்சியில் நாம் கண்கொத்திப் பாம்பாக இருக்க வேண்டும்.
மோடி சௌகிதார்; அப்பாவிகள் நாம் கபர்தார்.