articles

img

நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடப்பது என்ன? - கே.கந்தசாமி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற பயி லரங்கம் திருநெல்வேலியில் கடந்த 11,12 தேதி களில் நடைபெற்றது. இந்த பயிலரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காந்திகிராம பல்கலைக்கழக முன்னாள் அரசியல் பொருளாதாரத் துறையின் தலைவர் முனைவர் க.பழனிதுரை, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குண சேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிலரங்கில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பிரதிநிதிகள், துணை மேயர், நகராட்சி துணைத் தலைவர்கள், பேரூ ராட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். இந்த பகிர்வு களில் வெளிப்பட்ட கருத்துக்கள், அரசு கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சங்கள் ஆகும்.

மன்ற கூட்ட தகவல்

மன்ற கூட்டங்கள் என்றாலே சாதாரண, அவசர,  சிறப்பு - என மூன்று வகையான கூட்டங்கள் நடை பெறும். ஆனால் பொதுவாக மன்ற பொருள் குறித்த  அஜண்டா, கூட்டம் நடைபெறுவதற்கு முதல் நாள் அல்லது காலையில் தான் வழங்கப்படுகிறது. சாதாரண கூட்டத்திற்கும் முதல்நாள் தான் வழங்கப்படுகிறது. இதிலும் பெரும் பகுதி தலைவர் முன் அனுமதி யுடன் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டது என்ற வகையில் பொருள் வருகிறது. மன்ற உறுப்பினர்களு டைய அனுமதி இல்லாமலே தலைவரே அனுமதி கொடுக்கக்கூடிய நிலை உள்ளது. அஜண்டாக்களை சாதாரண கூட்டத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கொடுத்தால் தான் உறுப்பினர்கள் படித்துப் பார்க்க ஏதுவாக இருக்கும். சட்டப்படி  மன்ற அலுவல கத்திற்கு சென்று பொருளுடைய ஆவணங்களை பார்ப்பதற்கும் வசதியாக இருக்கும். ஆனால் நடை முறையில் அப்படி இல்லை. மன்ற உறுப்பினர்கள் அந்த பொருள் குறித்த எந்தவித பார்வையும் இல்லா மல் மன்றத்திற்கு செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது. மேலும் மன்றங்களிலும் அந்த பொருள் குறித்த ஆவ ணங்களை பார்ப்பதற்கு முதல் மூன்று நாட்களுக்கு முன்னால் பணியாளரை வைத்து அலுவலகத்தில் அமர வைக்கக்கூடிய நிலை என்பது இல்லை.

பேச வாய்ப்பு மறுப்பு 

மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்வதற்கு பெரும் பகுதி மன்றங்க ளில் அனுமதி மறுக்கப்படுகிறது. தலைவருக்கு யாரை  பிடிக்கிறதோ அவர் மட்டுமே பேச வாய்ப்பளிப்பதும் மாற்றுக் கருத்து உடையவர்களை பேச வாய்ப்பு அளிக்காமல் மறுப்பதும் தொடர்கிறது. இதனால் தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு தங்கள் மன்ற உறுப்பினர் பேசுகிறாரா என்பதே தெரியாத நிலை ஏற்படுகிறது. மேலும் அலுவலர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே மன்ற பிரதிநிதிகளுக்கு தெரியக்கூடாது என்று நினைக்கக்கூடிய நிலைமை யும் உள்ளது.

கூட்டப் பொருள் தீர்மானங்கள் நகல்

மன்ற கூட்டங்கள் துவங்கும்பொழுது கூட்டத்தில் அரசே 7 பொருட்களை முதலில் இருக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது. ஆனால் அந்த வகையில் வருவது இல்லை. குறிப்பாக பொது நிதி எவ்வளவு  இருக்கிறது என்று கேட்டால் அந்த விபரம் மறுக்கப்படுகிறது. மேலும் மாதாந்திர வரவு செலவு கள் வைக்கப்படுவதில்லை. இதன் காரணமாக தங்கள் இருக்கக்கூடிய மன்றங்களில் எவ்வளவு நிதி இருக்கி றது. தங்கள் வார்டுக்கு தேவையான நிதி கிடைக்குமா கிடைக்காதா என்று ஏங்கக் கூடிய நிலையில் தான் மன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மேலும் தங்களுடைய கருத்துக்களை மினிட்ஸ் புக்கில்  (அவைக்குறிப்பு) ஏற்றுவது கிடையாது. ஆட்சேபனை யும் பதிவு செய்கின்ற நடைமுறை இல்லாத நிலை  ஏற்படுகிறது. சட்டப்படி மன்ற கூட்டம் முடிந்தவுடன் மன்ற உறுப்பினர்களுக்கு தீர்மான நகல் கொடுக் கப்பட வேண்டும். ஆனால் தீர்மான நகலில் என்ன உள்ளது என்பதே தெரியாத நிலை. அரசு கூறியுள்ள விதிமுறைகள் படி கூட்டங்கள் நடைபெறுவது இல்லை. தலைவர்கள் விருப்பப்படி தான் கூட்டம் என்பது நடைபெறுகிறது. சமீபத்தில் திரு நெல்வேலி மாநகராட்சி கூட்டம் ஐந்தே நிமிடத்தில் நடந்து முடிந்தது. இத்தகைய ஜனநாயக விரோதம் அநேகமாக தமிழகம் முழுவதும் நிலவுகிறது.

தலித் உறுப்பினர்கள்'

சில குறிப்பிட்ட பேரூராட்சிகளில் தலித் உறுப்பி னர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்காத நிலைமை என்பதும் உள்ளது. இது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நிகழ்வாகும். 

பார்வையாளர் அனுமதி

நடைபெற்ற மன்றக் கூட்டங்களில் பெரும்பாலான வர்களில் பட்ஜெட் விவாதம் நடைபெறாமல் நிறை வேற்றப்பட்டுள்ளது. பல மன்றங்களில் பட்ஜெட்  நகல் கொடுக்கப்படவில்லை. பட்ஜெட் இரண்டு வரி யில் சில பேரூராட்சிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சிகளில் ஆங்கிலத்தில் கொடுக் கப்பட்டு விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்படுகிறது. தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கை என்பது சட்ட மன்றத்தில் தமிழில் கொடுக்கின்ற பொழுது உள்ளாட்சி மன்றங்களில் ஆங்கிலத்தில் கொடுப்பது என்பது அதிகாரிகளின் அலட்சியப்போக்கே. மேலும் பேரூராட்சி கூட்டங்கள் நடக்கின்ற பொழுது பார்வையா ளர்களை அலுவலர்கள் அனுமதி மறுக்கிறார்கள். இது நடைமுறைக்கு பொருத்தமற்ற அணுகுமுறையாகும். நாடாளுமன்ற, சட்டமன்றத்திலேயே பார்வையாளர்க ளை அனுமதிக்கும் பொழுது நகர்ப்புற உள்ளாட்சி களில் பார்வையாளர்கள் அனுமதி மறுப்பது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமான நிகழ்வாகும். 

கணவர்கள் தலையீடு

சில பேரூராட்சிகளில் பெண் தலைவர்களுடைய கணவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் நிர்வாகத்தில் தலையிடக்கூடிய நிலை இருக்கிறது. அலுவலர்களே தலைவருடைய கணவரிடம் பேசுங்கள் என்று சொல்கிறார்கள். ஈரோடு மாவட்டத்தி லுள்ள ஒரு பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கொடுத்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன.  சில பேரூராட்சிகளில் நிதி பற்றாக்குறை என்று சொல்லி வார்டுகளை புறக்கணிக்கக் கூடிய நிலை என்பது உள்ளது. விருப்பப்பட்ட வார்டு, விருப்பம் இல்லாத வார்டு என்று அலுவலர்களும் தலைவரும் முடிவெடுத்து செயல்படுவதும் நடக்கிறது. 

காலிப்பணியிடங்களை நிரப்புக!

நகர்ப்புற உள்ளாட்சிகளில் முக்கிய அலுவலர் பணியிடங்கள் காலியிடமாக இருக்கின்றன. கூடுதல் பணியிடமாக வந்து செல்லக்கூடிய நிலைமை இருப்ப தால் மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய குறைகளை அவர்களிடம் சொல்லி நிறைவேற்ற முடியவில்லை. பொதுமக்களும் பல்வேறு சான்றிதழ்கள், குறிப்பாக - பிறப்பு இறப்பு சான்றிதழ், பெயர் மாற்றப் பதிவு  பணிகளுக்கு உடனடியாக சான்று பெற முடியாத நிலை என்பது ஏற்பட்டுள்ளது. எனவே குறிப்பாக, ஆணை யர், பொறியாளர், செயல் அலுவலர், பிறப்பு- இறப்பு பதிவாளர் போன்ற பணியிடங்களை உடனடியாக நிரப்பிட தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.

வார்டு சபாவிற்கு நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் முதல்முறையாக நகர்ப்புறங்களில் ‘வார்டு சபா’ அமைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தினத்தன்று வார்டுசபா கூட்டங்கள் எல்லாம் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. மாநகராட்சிக்கு ஐந்து லட்சம் ரூபாய் வார்டு குழுவுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது போல் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு குறைந்தது 2 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் வார்டு சபா கூட்டங்கள் நடக்கின்ற பொழுது கூட்டத்திற்குரிய செலவை அரசு ஏற்க வேண்டும்.  துணை மேயர், துணைத்தலைவர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு உரிய அங்கீகாரம் சம்பந்தப்பட்ட மன்ற கூட்டங்களில் கிடைப்பதில்லை. அரசு விழாக்களில் அழைப்பிதழில் பெயர் போடுவது, கல்வெட்டுகள் மற்றும் நாளிதழ் விளம்பரங்களில் பெயர் போடுவது, விழாக்களுக்கு முறையாக தகவல் சொல்வது நடைமுறையில் பலகீனமாக இருக்கிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் மன்றங்களில் தலைவ ருக்கு அருகில் தான் துணைத் தலைவருக்கு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் துணை தலைவர்கள் மன்ற  உறுப்பினர்களுடன் தான் அமர வைக்கப்பட்டுள்ள னர். தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடை முறையை வகுக்க வேண்டும். பல நகராட்சிகளில் துணைத் தலைவர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டுள் ளது. எனவே இதிலும் தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறையை உருவாக்கிட நகர்ப்புறத் துறை அமைச்சர் கவனம் செலுத்திட வேண்டும்.

பயிற்சி அளித்தல்

ஒரு வருடம் கடந்தும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதி களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கவில்லை. இத னால் மன்றக் கூட்டங்களில் அரசு விதிகள் தெரியாத நிலையில் தவறுகள் நடைபெற வாய்ப்பு ஏற்படுகிறது.எனவே உடனடியாக பயிற்சி வழங்க வேண்டும்.

வறுமைக் கோடு  பட்டியல் கணக்கு எடுப்பு

2007 ஆம் ஆண்டு வறுமைக் கோடு பட்டியல் கணக்கு எடுக்கப்பட்டது. அதன் பின்பு அதிமுக காலத்தில் வறுமைக்கோடு பட்டியல் கணக்கு எடுப்பு நடைபெறவில்லை. இதனால் முதியோர், விதவை, உதவித்தொகை பெறுவதற்கு வறுமைக்கோடு பட்டியல் எண் கேட்கின்ற பொழுது, அந்த பட்டியலில் இல்லாமல் உதவித்தொகை பெற முடியாமல் ஏழை எளிய மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே, உடனடி யாக வறுமைக்கோடு பட்டியல் கணக்கெடுக்கப்பட வேண்டும்.

மாவட்ட திட்டக்குழு 

மாவட்ட திட்டக்குழு 1996இல் இருந்து அரசியல் சட்டம் 74ஆவது பிரிவின் படி செயல்படுகிறது. கிராம, நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலம் திட்டக்குழு செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளில், தேவையான நிதியை அரசு மூலம் பெற திட்டக்குழு மூலம் தீர்மானம் நிறைவேற்றி  பெறப்படும். ஆனால் இன்றைய நாள் வரை திட்டக்குழு அமைக்கப்பட வில்லை. எனவே உடனடியாக திட்டக்குழு அமைக்க வேண்டும்.

நகர்ப்புற பிரதிநிதிகள் சம்பளம்

நகர்ப்புற பிரதிநிதிகள் மக்கள் பணி செய்திட தங்கள் சொந்த நிதியை செலவு செய்யும் நிலை உள்ளது. இதனால் முறைகேடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கேரளா உள்ளிட்ட பல மாநிலங்க ளில் மாதச் சம்பளம் வழங்கப்படுவதைப் போல் தமிழ்நாட்டிலும் வழங்கப்பட வேண்டும்.

அரசு ஆணைகள்

மன்ற உறுப்பினர்களுக்கு அரசு ஆணைகள் வழங்கப்பட வேண்டும்.அலுவலர்கள் தரமறுக்கும் நிலை உள்ளது.  இத்தகைய கருத்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பயிலரங்கில் மக்கள் பிரதிநிதிகள் வெளிப்படுத்தினார்கள். நகர்ப்புற உள்ளாட்சிகளில் நிலவும் இத்தகைய நிலைமையை உடனடியாக சரி செய்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர் : பழனி நகர் மன்ற துணைத் தலைவர்; பழனி நகர செயலாளர், சிபிஐ(எம்)