சமூகத்தில் பல நேரங்களில் பெண் ணுக்கு எதிரி ஆண் அல்லது பெண் ணுக்கு எதிரி பெண் போன்ற வாதங்கள் உண்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்த இரண்டையும் நிராகரித்து சமூக அமைப்பு தான் பெண்ணுக்கு எதிரி என்ற தத்துவத்தை முன்வைக்கிறது. சமூ கத்தில் பெண்களின் பிரச்சனைகளுக்கு ஒரு வரோ இருவரோ அல் லது பெண்கள் மட்டுமே போராட்டம் நடத்துகிற விஷயம் இல்லை. பல தலங்களில், பல துறை களில் பெண்களுக்கு சமத்துவம் வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து போராட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஒரு பெண் என்ற முறையில் பாலியல் ரீதி யான தொந்தரவுகள், வரதட்சணை, பெண் கருக்கொலை, பலதரப்பட்ட பெண்ணுரிமை பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதேபோல ஒரு பெண் விவசாயி, விவசாயத் தொழிலாளி, ஊழியர்கள் என்ற முறையில் வேலைத்தளங் களில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரி டுகின்றது. ஒரு குடிமகள் என்ற நிலையில் நாட்டில் இருக்கின்ற வேலை, விலைவாசி உயர்வு, வேலையின்மை - இதையும் பெண் கள் சந்திக்கின்றனர். இந்த நாட்டின் எல்லா முக்கியமான பிரச்சனையும் குடிமகள் என்ற அடிப்படையில் பெண்களும் பாதிக்கப்படு கின்ற பிரச்சனைகளாகத் தான் மார்க்சிஸ்ட் கட்சி பார்க்கிறது.
பாஜக அரசாங்கத்தின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அதிகமான தாக்குதல் நடக்கிறது. கிறிஸ்தவ, இஸ்லாமிய பெண் கள் கூடுதலாக இந்த ஆட்சியின் கீழ் பிரச்ச னைகளை சந்திக்கிறார்கள். சாதியம் என்பது எல்லா மட்டங்களிலும் வலுவாக நிற்கிறது. தலித் பெண்கள், பழங்குடி பெண்கள் கூடுத லாக பிரச்சனைகளை, ஒடுக்கு முறைகளை சந்திக்கிறார்கள். தற்போது போராட்டம் என்பது இரண்டு தளங்களில் நடத்த வேண்டும். ஒன்று பிரச்சனை நடந்த உடனேயே களத்தில் இறங்கி போராட்டம் நடத்துவது; இன்னொன்று பெண்ணை அடிமையாக சித்தரிக்கின்ற கருத்துக்களை எதிர்த்து போராட வேண்டிய அவசியமாக இருக்கிறது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா கட்சி ஆளுகின்ற இந்த நேரத்தில் பெண்ணுரிமையை பாதுகாக்க நாம் நடத்துகின்ற போராட்டங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆர்எஸ்எஸ் - பாஜகவினர் எதை வேண்டு மானாலும் பேசுவார்கள். அம்பேத்கர் எங்க ஆளு என்பார்கள்; குமரி மாவட்டத்தில் நடந்த தோள்சீலை போராட்டம் மோடி தலைமை யில் நடந்தது என்று கூட சொல்ல அஞ்ச மாட்டார்கள். வரலாறுகளைத் திரித்து பாடத்திட்டங்களில் புகுத்துகிறார்கள். ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் ஸ்டே ஷன் மாஸ்டர் ஒரு முஸ்லிம், விசாரணைக்கு வராமல் தலைமறை வாகிவிட்டார் என்றும் அதனால் இஸ்லாமியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் என்றும் பொய் பிரச்சா ரத்தை நடத்துகின்றனர். இந்த ஆட்சியைப் பொறுத்தவரை பொய்களை உற்பத்தி செய் கின்ற தொழிற்சாலையாக தான் இருந்து வருகிறது. இந்த ஆட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு விதத்தில் பார்க்கிறது. ஒன்று கார்ப்பரேட் ஆதரவாகவும், இன்னொன்று மத வெறியை திணிக்கிற ஆட்சியாகவும் பார்க் கின்றது. இந்த இரண்டுமே பெண்களை மிக அதிகமாக பாதிக்கின்ற அம்சங்கள் ஆகும். ஆட்சியாளர்கள் தாராளமய கொள்கையை கடைப்பிடிக்கிறார்கள். இதனால் பெண்கள் உயர்கல்விக்கு போவதற்கு சிரமப்படுகி றார்கள். தேசிய கல்விக் கொள்கை என்ற பெய ரில் பெண்ணுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளது.
சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதிலிருந்து...