மத்தியப்பிரதேசம், குஜராத்திற்கு அடுத்ததாக நீண்ட காலம் பாஜக-வினால் ஆட்சி செய்து வரும் மற்றொரு மாநிலமாகும். பாஜக, இந்த மாநி லத்தை 2002இலிருந்து (இடையில் காங்கிரசிடம் சுமார் ஒன்றரை ஆண்டு காலமிருந்தபோது, கட்சித் தாவல் மூலம் கைப்பற்றி) இதுவரையிலும் ஆட்சி புரிந்து வரு கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒன்றிய உள்துறை அமைச்சரான அமித் ஷா, கடந்த 18 ஆண்டுகளில், சீக்குப் பிடித்திருந்த மத்தியப்பிரதேசத்தை, ஒப்பிட முடியாத அளவிற்கு மாற்றி இருப்பதாகத் தம்பட்டம் அடித்திருக்கிறார்.
அமித்ஷாவின் தம்பட்டம்
நீண்ட காலமாக ஆட்சி செய்த காரணத்தால் பாஜக இவ்வாறு கூறி தன்னைத்தானே பீற்றிக்கொண்டிருக் கிறது. அதனால்தான், அமித் ஷா மட்டுமல்லாமல் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் போன்றவர் களும்கூட சீக்குப் பிடித்த மாநிலமாக இருந்த மத்தியப் பிரதேசம், ‘ஒப்பிடமுடியாத ஒன்றாக’ மாறி யிருக்கிறது என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தி பேசும் மாநிலங்களான பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியவை பொருளாதார பின்தங்கிய நிலை கார ணமாகவும், சமூக நிலையில் மிகவும் கீழ்த்தட்டில் இருந்துவரும் காரணமாகவும் சீக்குப் பிடித்த மாநி லங்கள் என்று கூறப்பட்டு வந்தன. எனினும் பாஜக, மத்தியப் பிரதேசத்தை நீண்ட காலமாக ஆட்சி புரிந்து வந்ததால், அவர்களின் ஆட்சி காரணமாக அளப்பரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக இப்போது தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது.
வளர்ச்சி வரிசையில் கீழ்நிலையே...
ஆனால் எதார்த்த நிலை என்ன? மத்தியப் பிரதேசத்தின் பொருளாதாரச் செயல்பாடு, நாட்டில் மிகவும் மட்டமான மாநிலங்களின் மத்தியில்தான் இருந்து வருகிறது. 1993-94இல் மாநில உள்நாட்டு உற்பத்தி தனிநபர் வருமானத்தில் மொத்தம் உள்ள 27 மாநிலங்களில் 19 ஆவது மாநிலமாக வரிசைப்படுத்தப் பட்டிருந்தது. எனினும் 2021-22இல் இது இரண்டு மாநிலங்களைத் தாண்டி 17ஆவதாக வரிசைப் படுத்தப்பட்டிருக்கிறது. நிட்டி ஆயோக்கின் அறிக்கை யின்படி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மிகவும் அடித்தட்டில் உள்ளவர்கள். கல்வியைப் பொறுத்த வரையிலும், 2020இல் மத்தியப் பிரதேசம் ஆரம்பக் கல்வி, உயர் நிலைக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி ஆகிய அனைத்து நிலையிலும் மாணவர்களின் பதி வைப் பொறுத்தவரை மொத்தம் உள்ள 30 மாநிலங் களில் 20 ஆவது இடத்தையே பிடித்திருக்கிறது. சமூக நிலையிலும் மத்தியப் பிரதேசம் மிகவும் கீழ்நிலையிலேயே இருக்கிறது. எடுத்துக்காட்டாக, 2019-21இல், மத்தியப் பிரதேசத்தில் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் எண்ணிக்கையில் 35.7 விழுக்காடு அளவிற்கு இருந்தது, இது மொத்தம் உள்ள 30 மாநி லங்களில், தர வரிசை எண் 25ஆவது ஆகும். 2015-16 மற்றும் 2019-21 ஆகிய ஆண்டுகளுக்கிடையே எடை குறைவான குழந்தைகளின் தரவரிசையில் (28 புள்ளி யிலிருந்து 26 புள்ளிக்கு, அதாவது) 2 புள்ளிகள் மட்டும் முன்னேற்றம் காணப்பட்டது. மனிதவள வளர்ச்சிக் குறியீட்டில் மத்தியப் பிரதேசம் 2021ஆம் ஆண்டில் மொத்தம் உள்ள 30 மாநிலங்களில் தர வரிசையில் 27ஆவது இடத்தில் இருக்கிறது.
நிலக்கரிச் சுரங்கம் அதானிக்கு தாரை வார்ப்பு
மத்தியப் பிரதேசம் சமூக-பொருளாதாரக் குறியீடு களில் மாநிலங்களின் பட்டியலில் மிகவும் கீழ்நிலை யில் இருந்துவரும் அதே சமயத்தில், சிவராஜ் சிங் சௌகான் அரசாங்கத்தின் மதவெறி-கார்ப்பரேட்டு களின் ஆட்சி ஒட்டுமொத்தத்தில் மோசமான விளைவு களை ஏற்படுத்தி இருக்கிறது. மாநிலத்தில் உள்ள சுரங்கங்கள் ஆட்சியாளர்களின் அனுமதியுடன் கார்ப்ப ரேட்டுகளால் கண்மூடித்தனமாக சூறையாடப்படு வதைப் பார்க்க முடிகிறது. இதற்கு சமீபத்திய எடுத்து க்காட்டு, மாநிலத்தில் சுமார் 2,672 ஹெக்டேர் அள வுள்ள வனங்கள், வயல்வெளிகள் மற்றும் கிராமங்கள் அடங்கிய திரௌலி நிலக்கரிச் சுரங்கக் குத்தகை அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகும்.
குற்றவழக்குகள், வன்முறைகளில் மூன்றாமிடத்தில்...
தேசியக் குற்றப் பதிவேடுகள் நிலையம் வெளி யிட்டுள்ள அறிக்கையின்படி, மத்தியப் பிரதேசத்தில் 2021இல் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங் கள் மிகவும் உச்சத்தில் இருக்கிறது. நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்தம் உள்ள வழக்குகளில் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 29.8 விழுக்காடு அளவிற்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பட்டியலின சாதியினருக்கு எதிரான அட்டூழி யங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு களில் மூன்றாவது உச்சபட்ச எண்ணிக்கையில், 14.1 விழுக்காடு அளவில், இருக்கிறது. 2019க்குப் பின் பாஜக ஆட்சியானது மிகவும் மூர்க்கத்தனமான முறையில் தன்னுடைய இந்துத்துவா மதவெறி நிகழ்ச்சிநிரலை ஏவியிருப்பதன் மூலம் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக நச்சுத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து வருகிறோம். இந்தூரில் தள்ளுவண்டியில் வியா பாரம் செய்திடும் முஸ்லீம் வியாபாரிகள் மீது தாக்கு தல்கள், கார்கோனில் முஸ்லீம் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டிருத்தல், சிறுபான்மையின ருக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவங்களில் சில எடுத்து க்காட்டுகளாகும். கிறித்தவத் தேவாலயங்களும்கூட தாக்குதல்களிலிருந்து தப்பிவிடவில்லை.
மதவெறிநோய்க் கிருமிகளின் பாதிப்பு
மத்தியப்பிரதேசத்தில் உள்ள மதவெறி-கார்ப்ப ரேட் ஆட்சியின் தன்மையானது, அம்மாநிலத்தில் உள்ள சீக்கு நிலைமை (sickness) அங்கே நிலைத் திருக்கவே வழிவகுத்திருக்கிறது. இந்துத்துவா வெறி யர்களின் ஆட்சியில் மத்தியப்பிரதேசம் மதவெறி நோய்க்கிருமிகளால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மதச் சிறுபான்மை யினர் மீதான அப்பட்டமான ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டுள்ள சமூகமாக மாறி இருக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை மத்தியப் பிரதேச மாநிலம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அதிருப்தியானது, தேர்தலில் மக்கள் அளித்திடும் தீர்ப்பில் எதிரொலித்திடும்.
(நவம்பர் 15, 2023)
- தமிழில்: ச.வீரமணி