மனிதனை பிறப்பால் மேல் சாதி, கீழ் சாதி என்று பாகுபடுத்தி, பிறப்பாலே ஒருவனை அடித்தட்டு மனிதனாக மாற்றி நாளுக்கு நாள் அடக்கிக் கொண்டிருக்கிற இந்த வர்ணாசிரம தர்மம், மநு தர்மம் என்கிற கோட்பாட்டை முற்றாக அப்புறப்படுத்த வேண்டும். மநு தர்மத்தை தான் ஒன்றியத்தில் ஆட்சி செய்து வரும் பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நாடு முழுக்க திணிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறது. மனு அநீதிக்கு தமிழ்நாட்டில் நாங்கள் இடம் அளிக்க மாட்டோம் என்று சொல்லுகிற மாநாடாகத் தான் இந்த மாநாடு அமைந்திருக்கிறது. சாதியற்ற சமத்துவ சமுதாயத்தை உரு வாக்குவோம் என்ற உன்னத கோரிக்கை யோடு, இந்த மாநாடு நடைபெறுகிறது. அப்படிப்பட்ட மகத்தான மண்ணாக தமிழ்நாடு இன்றைக்கு மாறியிருக்கிறது என்று சொன்னால், அது நீண்ட நெடுங்காலமாக வள்ளலார் காலத்தில் துவங்கி தந்தை பெரியார், சிங்காரவேலர், இடதுசாரி, கம்யூனிஸ்டுகள், திராவிட இயக்கம் என்று எல்லோரும் சேர்ந்து போராடியதன் விளைவாகத்தான் மாறுபட்ட மண்ணாக தமிழ்நாடு காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
பட்டியலின பழங்குடி மக்களுக்கு திமுக ஆட்சியில்தான் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இப்போது கூட, தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிப்பு கண்காணிப்புக் குழு என்று ஒன்று இருக்கிறது. அந்தக் குழு தான் தமிழ்நாட்டில் எவ்வளவு வழக்குகள் போடப்பட்டிருக் கிறது? தீண்டாமைக் கொடுமைகள் எங்கெல்லாம் நிலவுகிறது? அரசு என்ன செய்ய வேண்டும்? என்பதை கவனிக்கிறது. இந்தக் குழு மாநில அளவில் முதலமைச்ச ரின் தலைமையில் அமைக்கப்பட்டிருக் கிறது. கடந்த பத்து ஆண்டுகள் அதிமுக ஆட்சி யில், ஒருமுறை கூட அந்த குழு கூட வில்லை. அந்தக் குழுவின் தலைவராக இருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, பன்னீர்செல்வம் யாருமே அந்தக் குழுவை செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் இன்றைய நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொறுப்பேற்ற பிறகு மூன்று முறை கூட்டம் நடைபெற்றது மட்டுமல்ல. அந்த மூன்று முறையும் முதலமைச்சரே தலைமை தாங்கி நடத்தியதும் அந்த கண்காணிப்பு குழு வை வழி நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே, தலித் மக்களுக்கு பழங்குடி மக்களுக்கு நிச்சயமாக திமுக அரசும் முதலமைச்சர் ஸ்டாலினும் பல்வேறு சலுகைகளை செய்து இருக்கிறார்கள் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால்? தந்தை பெரியார், சிங்காரவேலர், ஜீவா, அண்ணா, கலைஞர் போன்ற தலை வர்கள் பணியாற்றிய பிறகும் கூட, இன்றைக்கும் தீண்டாமைக் கொடுமை ஏதோ ஒரு வகையில் நிலவிக் கொண்டு தான் இருக்கிறது. இதற்கு ஆட்சியில் இருப்பவர்கள் மட்டுமே பொறுப்பாகும் என்று சொல்ல முடியாது. என்னதான் ஆட்சியில் இருப்பவர்கள் சில நடவடிக்கை களை மேற்கொண்டாலும், காலம் காலமாக உருவாக்கியிருக்கிற இந்த மனித சிந்தனை, மனித மரபிலேயே சாதிய வெறி ஊட்டப்பட்டிருக்கிறது.
கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந் தார் என்பதற்காக மூன்று தலித்துகளை படுகொலை செய்தார்களே, இது என்ன நியாயம்? பல கோவில்களில் தலித் மக்கள் நுழைய முடியவில்லை. தூரத்தில் இருந்தே வழிபட வேண்டும் என்று சொல்கிறார்கள். அனைவரும் சட்டத்திற்கு முன் சமம் என்று சொல்கிற இந்த நாட்டில் கிராமங்களில் தலித் தெருக்கள் தனியாகத்தான் இருக்கிறது. இதற்காக தான் மறைந்த முதலமைச்சர் கலைஞர் ஒரு உன்னதமான திட்டமான சமத்துவபுரம் திட்டத்தை கொண்டு வந்தார். அது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய முன்னெடுக்க வேண்டிய ஒன்று தான். ஆனால் கிராமங்கள் அப்படி மாறி விட்டதா என்று சொன்னால் இன்னும் மாற வில்லை. எத்தனை தாக்குதல்கள், எத்தனை கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. இதற்கு முடிவு கட்டி சமத்துவபுரமாக தமிழ்நாட்டை மாற்றுவோம் என்று அவர் குறிப்பிட்டார்.