articles

img

மனுவை மறுத்து பெண்ணுரிமை காத்திடுவோம்! - பி.சுகந்தி

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஜனநாயகம்,பாலின சமத்துவம், மதச் சார்பின்மை ஆகியவற்றை எல்லாம் உயர்த்திப் பிடிக்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் நமது அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக நிராகரிக்கிறது.எனவே தான் அதன் ஞானதந்தை கோல் வால்கர் “மனு தர்மத்தின் நிழல்கூட படாத இந்த அரசியல் அமைப்புச் சட்டம் இந்தியாவிற்கு பொறுத்தமற்றது” என விமர்சித்தார். தற்போ துள்ள நிலையிலேயே அரசியல் அமைப்பு சட்டம் தொடர்ந்தால் இந்துத்துவ வாதிகள் தங்கள் மனுதர்ம கருத்தியலை முழுமையாக நிறைவேற்ற முடியாது. மனுதர்மமே இந்திய அரசியல் அமைப்பு சட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிற மத அடிப்படைவாதிகள் கைகளில் இன்றைய ஆட்சி அதிகாரம் உள்ளது.

மனு அதர்மமே அரசியல் சட்டமாய்

பெண் பிறக்கும் போது தந்தைக்கும், திருமணத்திற்கு பின் கணவ னுக்கும், முதுமையில் மகனுக்கும் அடிமை என்கிறது மனுஅதர்மம்.பெண்ணுக்கு கல்வி கூடாது. அனைத்து சாதியிலும் உள்ள பெண்கள் சூத்திரர்களே. சூத்திரர்களுக்கு கல்வி, ஆயுதம், சொத்து இருக்கக் கூடாது என மனுதர்மம் கூறுகிறது. பெண்கள் வீட்டில் உழைக்க வேண்டும். சொத்து வைத்துக் கொள்ளக்கூடாது. சாதியில் உயர்வு ,தாழ்வு இருக்கலாம்.ஆனால் அனைத்து சாதியிலும் உள்ள பெண் தாழ்ந்தவள்,அடிமை என்கிறது மனுதர்மம்.கணவன் நற்பண்புகள் அற்றவனாக இருந்தாலும்,மனைவி அவனையே தெய்வ மாக தொழ வேண்டும் என்பதே மனுவின் கோட்பாடு.எனவே மனு அதர்மத்தை ஏற்கிற இந்துத்துவ சக்திகளால் பெண்ணடிமைக்கோட் பாடுகள் வெவ்வேறு வடிவங்களில் இந்தியாவில் முன்வைக்கப்படு கின்றன. இந்திய ஒன்றியத்திலும்,பல மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருக் கிறது.அங்கெல்லாம் மனுவாத நிகழ்ச்சி நிரலை அமலாக்கிட அரசு எந்திரங்களைப் பயன்படுத்தும் நேரடி வாய்ப்பை அது பெற்றுள்ளது. இது  பாலின சமத்துவம் மற்றும் பெண்ணுரிமைக்கு பெரும் சவாலாக உள்ளது. மேலும் தலித் மக்கள், ஆதிவாசி மக்கள், சிறுபான்மை மக்கள் உழைப்பா ளர்களின் உரிமைகளுக்கும் பெரும் சவாலாகவே உள்ளது. திருமண உறவில் பெண்களுக்கு ஏற்படுகின்ற கொடுமைகளை எதிர் கொள்வதற்கு கிரிமினல் சட்டம் 498 ( a ) இருந்தது. ஆனால் பாஜக அரசு இந்த சட்டத்தின் மீது இப்போது தாக்குதலை தொடுத்துள்ளது.இச்சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் நடவடிக்கையில் பாஜக அரசு இறங்கியுள்ளது.

பாஜகவின் மனுவாத கொள்கைக்கு ஹாத்ரஸ் கொடுமை ஒரு உதாரணம். தலித் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த உயர் சாதி யினர் பக்கமே யோகி அரசாங்கம் வாதிட்டது. அந்தப் பெண் உயிரிழந்த போதுகூட பெற்றோருக்கு கூட தெரியாமல் காவல்துறையினர் அவரது உடலை எரித்தனர். வழக்கின் தீர்ப்பும் அதிர்ச்சியூட்டும் விதமாகவே இருந்தது. ஹரியானா மாநிலத்தில் 70 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து  படுகொலை செய்த குற்றவாளி ராம் ரஹீமுக்கு அம்மாநிலத்தில் எப்போ தெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அப்போதெல்லாம் பிணை கிடைக்கி றது. ஏனெனில் அந்த நபர் மூலம் சில ஆயிரம் வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கின்றன. அதேபோல் குஜராத் அரசாங்கம் பில்கிஸ் பானுவை கும்பல் பலாத்காரம் செய்தவர்களை பொது மன்னிப்பு மூலம் விடுதலை செய்திருக்கிறது. அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்த போது விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்பளித்தது. இவர்களின் விடுதலைக்கு பரிந்துரைத்த சட்டமன்ற உறுப்பினர் மேற் கண்ட குற்றவாளிகளை பண்பட்ட பிராமணர்கள் என்றார்.மனுஸ்மிருதி ஒரே குற்றத்திற்கு சாதி அல்லது வர்ண அடிப்படையில் யார் குற்றம் செய்த வர்? யார் பாதிக்கப்பட்டவர் என்பதை பொறுத்து வெவ்வேறு தண்டனை களை பரிந்துரைக்கிறது.

பெண் ஆணின் உடமை என்ற கண்ணோட்டமும், குலப் பெருமை யின் பாதுகாவலர் பெண்கள் என்ற கோட்பாடும் சாதி ஆணவப் படு கொலைகளில் பிரதிபலிக்கிறது .பெண்ணின் பாலின சுதந்திரம், வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் உரிமை மறுக்கப்படுகிறது . அகமண முறை சாதிய கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது. தலித் இளைஞர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண்களை காதல் செய்வது போல் நாடகம் நடத்தி கர்ப்பம் ஆக்கி ஏமாற்றி விடுகிறார் கள் என தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் பாமக போன்ற கட்சிகளும், இஸ்லாமிய இளைஞர்கள் இந்து பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார் கள் என வடமாநிலங்களில் இந்துத்துவா சக்திகளால் பிரச்சாரம் செய்யப் படுவதும் சாதிய வகுப்புவாத, ஆணாதிக்கத்தின் குரல்களே. உத்தரப்பிரதேசத்தில் அரசால் கொண்டுவரப்பட்ட லவ் ஜிகாத் தடுப்பு சட்டம் அரசியல் சாசனத்திற்கும் ,உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புக ளுக்கும் எதிரானது.

பாஜக ஆட்சி நடத்தும் மாநிலங்களின் பாடப் புத்தகங்கள் பல தவ றான பெண்ணடிமைத்தன கருத்துக்களை வலுவாக முன்னிறுத்துகிறது. உதாரணமாக பெண்கள் உரிமை கோருவது தான் குடும்பங்களில் பிளவு ஏற்பட காரணமாக இருக்கிறது என்று உத்தரப்பிரதேச பாடப்புத்தகம் கூறுகிறது. குடும்பங்கள் ஆணாதிக்க கட்டமைப்பாக இருப்பதும், ஜனநாயகமே உட்புகாத இருட்டறையாக இருப்பதுமே பிரச்சனைக்கு காரணம் என்பது வசதியாக மறைக்கப்படுகிறது. சாக்க்ஷி மகராஜ் என்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் இந்து பெண்கள் நான்கு குழந்தைகள் பெற்று இந்துகள் எண்ணிக்கையை பெருக்க வேண்டும் என்றார் .சங்கராச்சாரியார் ஒவ்வொரு இந்து பெண்ணும் 10 குழந்தைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பேசியி ருக்கிறார். மதத்தை வளர்க்க பெண்களை பிள்ளை பெறும் எந்திரம் ஆக்கிடதுடிக்கிறார்கள்.

மனுவாதிகளாக நீதிபதிகள்

திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஒரு பெண்ணு டன் பாலியல் உறவு கொண்ட ஒருவன் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்த வழக்கு ஒன்று அலகாபாத் நீதிமன்றத்திற்கு வந்தது. அவ்வழக்கில் குற்றவாளி வாக்குறுதி கொடுத்ததை மறுக்கவில்லை.பாலியல் உறவு கொண்டதையும் மறுக்கவில்லை.மாறாக அப்பெண் ணிற்கு செவ்வாய் தோஷம்,திருமணம் செய்தால் வாழ்க்கை நாசமாகி விடும் என வாதாடினான். அப்பெண்ணும் அப்பாவி தனமாக தனக்கு  செவ்வாய் தோஷம் இல்லை என மறுக்கிறார்.பெண்ணின் வழக்கறிஞரும்  அதே வாதத்தை பதிவு செய்தார்.ஆனால் நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஆச்சரியத்தின் உச்சப் பட்சம். பத்து நாட்களில் அந்த பெண் தனது ஜாதகத்தை லக்னோ காவல்துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.  அவர் மூன்று வாரத்திற்குள் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கி றதா என்கிற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதேபோன்று பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஏழு மாத கர்ப்பமாக உள்ள நிலையில் கரு கலைப்பு அனுமதி கோரி சிறுமியின் தந்தை குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தி ருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு காலத்தில் திருமணம் செய்ய அதிகபட்சம் 14 முதல் 15 வயது தான் .17 வயதில் குழந்தை பிறந்துவிடும் .பெண்கள் ஆண்களுக்கு முன்பே முதிர்ச்சி அடை கிறார்கள்.

இதனைத் தெரிந்துகொள்ள மனு ஸ்மிருதியை ஒருமுறை படி யுங்கள். நமது சமூகத்தில் 17 வயதிற்குள் பிள்ளை பெற்றுக் கொள்வது தான் வழக்கம் என நீதிபதி திருவாய் மலர்ந்தார். 18 வயதிற்குள்ளான ஒரு பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நீதி வழங்க வேண்டியவர்கள் மனுதர்மத்தின் கீழ் அநீதியை நிலை நாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு திருமணம் குழந்தை திருமணமாகவே நடக்கின்றது. அதிர்ச்சி யூட்டும் வகையில் 2020 விட சுமார் 50% குழந்தை திருமணங்கள் அதி கரித்துள்ளன என்று தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. 2006 குழந்தை திருமணத் தடைச் சட்டம் குழந்தை திருமணத்திற்கு கடும் தண்டனைக்கு வழிவகை செய்கிறது. ஆனாலும் குழந்தை திரு மணங்கள் தங்குதடை இன்றி தொடர்கிறது. குழந்தை திருமணம் என்பது சட்டத்தை மீறுவதாக இருப்பது மட்டுமல்லாமல் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையின் வடிவமாகவும் இருக்கின்றது. இதனால் பெண் குழந்தைகள் தங்களுடைய கல்வியை தொடர முடிவதில்லை. அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.பெண் குழந்தைகளின் சிறார் கால குழந்தைப்பேறு அவர்களுடைய ஆயுட்காலத்தை குறைப்பதுடன் அவர்களின் உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளையும் மிக மோசமாக பாதிக்கிறது. அதே நேரத்தில் பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 வயதாக உயர்த்தும் ஒன்றிய அமைச்சரவையின் சமீபத்திய முடிவை அனைத்திந்திய ஜனநாயக மாதர் ஏற்றுக்கொள்ளவில்லை.

பெண்களின் திருமண வயதை அதிகரிப்பது,அவர்களின் சுய தேர்வைத் கட்டுப்படுத்துகிறது. உலகில் நடக்கும் ஒவ்வொரு மூன்று குழந்தை திருமணங்களில் ஒன்று இந்தியாவில் நடப்பதாக யூனிசெப் அறிக்கை கூறுகிறது. இந்தியாவின் இந்து அடிப்படை வாதம் ,பாரம்பரியம், புனிதம் என்ற பெயரால் குழந்தை திருமணம் பெண்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது.குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம் என தெரிந்திருந்தும் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி தான் குழந்தை திருமணம் செய்து கொண்டதாக பகிரங்க மாக அறிவிக்கிறார். கலாச்சார காவலர்கள் என்று கூறிக்கொண்டு பல்வேறு சாதி அமைப்பு களும்,மதவாத அமைப்புகளும், இந்தியா முழுவதிலும் தீவிரமாக பெண்க ளின் அடிப்படை உரிமைகளை தகர்க்கும் வண்ணம் செயல்பட்டு வரு கின்றன. பெண்கள் எப்படி உடை உடுத்த வேண்டும், யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். எத்தனை குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பெண்களின் அன்றாட வாழ்வு தொடர்பான விஷயங்களில் தலையீடு செய்கிறது.

மதத்தின் பார்வையில் பெண் என்பவள் ஆணை சுற்றி வரும் ஒரு துணைக்கோள் மட்டுமே. அவளுக்கென்று சுய மரியாதை எதுவும் தனியாக இல்லை. எதனையும் தீர்மானிக்கும் உரிமை கூடாது. கல்வி வேலை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். குடும்பத்தை தாங்குவது,ஆண் குழந்தைகளை பெற்றுக் கொடுப்பது முதல் கடமை.அரசியலில் மதம் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும். இந்தியா மதச்சார்பற்ற நாடாக நீடிப்பது பெண்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதோடு தொடர்புடையது.எனவே பெண்ணுரி மைக்காக குரல் கொடுப்பவர்கள், மதச்சார்பின்மைக்காகவும் உரத்துக்  குரல் கொடுத்திட வேண்டும். அத்தகைய போராட்டத்தை தொடர்ந்து முன் னெடுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி ஜூன் 25ம் தேதி குமரியில் பெண் ணுரிமை பாதுகாப்பு மாநாட்டை நடத்துகிறது.

கரம் கோர்ப்போம்.பெண்ணுரிமை பாதுகாப்போம்.