மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்பு களை நிறைவேற்றியது. நான்கு ஆண்டுக்கு மேலாகி யும் அரசினால் அமலாக்கம் குறித்து அறிவிக்கை வெளியிட முடியவில்லை. ஒன்றுபட்ட தொழிலாளி வர்க்கத்தின் வலுவான எதிர்ப்பினால், பொது வேலை நிறுத்தம் உட்பட நாடு தழுவிய போராட்டங்களால் சட்டத் தொகுப்புகள் அமலாக்கத்தை தடுத்து நிறுத்த முடிந்துள்ளது. மூன்றாவது முறை - முன்பை விட குறைவான எண்ணிக்கையில் நாடாளுமன்ற இடங்களை கைப்பற்றிய போதும், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கூட்டணி கட்சிகள் முட்டுக்கொடுத்து ஆட்சியில் அமர்ந்த போதும், மோடி தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தனது கார்ப்ப ரேட் ஆதரவு நவீன தாராளமய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற துணிச்சலாக முயன்று வருகிறது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரலாறு படைத்த விவசாயிகள் போராட்டம்- வேளாண் சட்டங்களையே வாபஸ் பெற வைத்த போராட்டத்தை முனைப்பாக நடத்திய சம்யுக்த கிசான் மோர்ச்சாவும் தொழிலாளர் சட்ட தொகுப்புகளுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு தாராளமான ஆதரவை தெரிவித்துள்ளது.
நான்கு சட்டத் தொகுப்புகளின் உள்ளடக்கம்
சட்டத் தொகுப்புகளின் குறிப்பிடத்தகுந்த பாதக மான அம்சங்களை தீவிரமாக பிரச்சாரம் செய்து, அவற்றிற்கு எதிரான வலுவான போராட்டங்களில் இறங்க தயாராவோம். தற்போதைய சட்டங்களில் தொழிலாளருக்கு சில பாதுகாப்புகளை வழங்கிய ஷரத்துகளை “தொழிலாளர் சட்ட சீர்திருத்தம்” என்ப தன் பெயரால் நீக்கி, சட்டங்களை “எளிமைப்படுத்து வது” என தற்போதைய 29 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்புகளாக அரசு சுருக்கியுள்ளது.
சட்டத் தொகுப்புகளின் பாதகமான அம்சங்கள்
தொழிலாளர் எண்ணிக்கை வரம்புகள்:
l 500-க்கும் கீழ் தொழிலாளர் பணிபுரியும் பேக்டரி அல்லது கட்டுமான பணிகளில் பாதுகாப்பு அதிகாரி
தேவையில்லை.
l 250-க்கும் கீழ் தொழிலாளர் இருந்தால் சேமநல அதிகாரி தேவையில்லை.
l 100-க்கும் கீழ் தொழிலாளர் இருந்தால் கேண்டீன் தேவையில்லை.
l 50-க்கும் கீழ் பெண் தொழிலாளர் இருந்தால் குழந்தைகள் காப்பகம் தேவையில்லை.
l 50-க்கும் கீழ் தொழிலாளர் இருந்தால் ஓய்வறை அல்லது மதிய உணவு அறை தேவையில்லை.
l 500-க்கும் கீழ் தொழிலாளர் இருந்தால் பணியி
டத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்த வேண்டிய தேவை
யில்லை.
ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு பாதிப்புகள்:
எளிமைப்படுத்துவது, சீர்படுத்துவது என்பதன் பெயரால், ஊதியம், போனஸ் குறித்த சட்டங்கள் ஊதிய சட்ட தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால் வேலை அளிப்பவர்க்கு சாதகமாக பல ஷரத்துக்கள் நீக்கப்பட்டு, சில புதியவை சேர்க்கப் பட்டுள்ளன. 1957 முக்கூட்டு மாநாடு பரிந்துரைத்து, 1992 ரேப்டகாஸ் அண்ட் பிரட் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் செழுமைப்படுத்தப்பட்டு, 44, 45, 46-வது இந்திய தொழிலாளர் மாநாடுகளில் வலி யுறுத்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிப்ப தற்கான அடிப்படைகள் சட்டத் தொகுப்பில் குறிப்பி டப்படவில்லை. தொழிற்சங்க உரிமைகள் பாதிப்பு: தொழிற்சங்க இயக்கத்தின் ஏகமனதான கோரிக் கைகளான கிராஜுட்டி, கருணை கொடைக்கு எவ்வித தடையோ, பெறுவதற்கு வரம்போ கூடாது என்பதை அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. சமூகப் பாதுகாப்பு சட்டத் தொகுப்பிலும் இது பிரதி பலிக்கிறது. கண்காணிப்பு மற்றும் அமலாக்க பிரச்சனைகள் பணி நேர மாற்றங்கள்: தொழில் நிமித்தம் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பில் பணி நிலைமைகள் குறித்த 13 சட்டங்களை உள்ளடக்கி யுள்ளது. தினசரி வேலை நேரம், வாராந்திர வேலை நேரம், பணி நேரம், ஓய்வு இடைவேளைகள், மிகை நேர வேலை, மொத்தம் ஆலை வளாகத்தில் உள்ள நேரம் போன்றவை அனைத்து சம்பந்தப்பட்ட சட்டங்க ளிலும், குறிப்பாக ஃபேக்டரி சட்டத்திலும் குறிப்பிடப் பட்டிருந்தன. இவை அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற அதிகார மாற்றங்கள்
சட்டத் தொகுப்புகளில் ஏராளமான இடங்களில் “குறிப்பிட்டவாறு”, “நிர்ணயிக்கப்பட்டவாறு”, “உரு வாக்க முடிந்தவாறு” என்றெல்லாம் உள்ளது. எதிர் காலத்தில் பணி நேரம், பாதுகாப்பு, உடல்நலம், குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிப்பதற்கான அளவு கோல்கள், தகுதி, பங்களிப்புத் தொகைகள், பணப் பயன்கள் மற்றும் சட்டத் தொகுப்புகளில் வரை யறை செய்யப்படாத பல அம்சங்களில் எந்த ஒரு மாற்றமும் நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாம லேயே நிர்வாக உத்தரவுகள் மூலம் செய்ய முடியும். அரங்க வாரியான சட்டங்கள் ரத்து: கட்டுமானம், பீடி மற்றும் சுருட்டு, சுரங்கங்கள், துறைமுகத் தொழிலாளர், பத்திரிகையாளர், விற்பனை ஊக்குவிப்பு ஊழியர், மோட்டார் போக்கு வரத்து தொழிலாளர் போன்ற அரங்க வாரியான சட்டங்கள் ரத்தாகியுள்ளன. இவைகளில் அரங்கவாரி தொழிலாளர்களின் பணி நிலைமைகள், தொழில் உறவுகள், பாதுகாப்பு மற்றும் இதர சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தன.
போராட்ட அழைப்பு
பாசிச ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில், பாஜக தலை மையிலான அரசு, தொழிலாளர் மீது யுத்தம் நடத்துவதில் முக்கியமான பகுதி தான் இந்த நான்கு சட்டத் தொகுப்புகள். பணி நிலைமைகளை மோசமாக்கியும், அடிப்படை பணியிட மற்றும் தொழிற்சங்க உரிமைகளை ஒழித்தும், தொழி லாளர்கள் சுரண்டப்படுவதை தீவிரப்படுத்த ஆளும் வர்க்கங்கள் உறுதியாக உள்ளன. ஆட்சியிலே உள்ள கார்ப்பரேட்- மதவாத கள்ளக் கூட்டணி தயவில், கார்ப்பரேட் வர்க்கம் தொழிலாளி வர்க்கம் மீது தொடுக்கும் தாக்குதல்களை தடுக்க வேண்டும், முறியடிக்க வேண்டும். தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்கு சேவகம் செய்ய தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறித்திட மோடி அரசு எத்தனித்தால், நாட்டின் செல்வாதாரங்களைப் படைக்கும் உழைக்கும் வர்க்கத்தின் முழுமையான கோபத்தை அரசு சந்தித்தாக வேண்டும். இந்த உறுதிப்பாட்டுடன் தொழிலாளி வர்க்க ஒற்று மையை பலப்படுத்தவும், ஒன்றுபட்ட போராட்டங் களை உயர் வடிவங்களில் “அடங்க மறு, எதிர்த்து நில்” என்ற மட்டங்களுக்கு உயர்த்தவும் தீவிரமாக தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நமது எச்சரிக்கை
வெறும் காகிதத்தில் உரிமைகள் இருந்தால் போதாது. வேலை அளிப்பவர்கள் தங்கு தடையின்றி தொழிலாளரை சுரண்டுவதற்கு அனுமதித்து விட்டால் இந்த உரிமைகளுக்கு பாதுகாப்பு இல்லை. தற்போ தைய வடிவில் சட்டத் தொகுப்புகள் அமலாக்கத்தை இந்திய தொழிலாளி வர்க்கம் அனுமதிக்காது என்பதே மோடி அரசுக்கும், கார்ப்பரேட் வர்க்கத்திற்கும் நமது எச்சரிக்கை. சட்டத் தொகுப்புகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டால், அத்தருணமே தொழிலாளி வர்க்கம் நாடு முழுவதும் அனைத்து பணியிடங்களி லும், அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டான அறை கூவலுக்கு இணங்க பெருந்திரளாக கண்டன ஆர்ப்பாட் டங்களில் இறங்கும். இதைத் தொடர்ந்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தமும் நடைபெறும். தமிழில் : ஆர்.சிங்காரவேலு