பள்ளிக் கல்வி துறை கேரள சமூகம் எப்போதும் தீவிரமாக கண்காணிக்கும் ஒரு துறையாகும். கேரள அரசு உருவாவதற்கு முன்னதாக கேரளாவின் வரலாற்றில் இருந்து இதைப் பார்க்க முடியும். மாநிலம் உருவாவதற்கு முன் தொடங்கப்பட்ட பள்ளியின் ஆரம்பம் பற்றி விசாரித்தால் தெரியும். அது பாகுபாடுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக நடந்த கூட்டு நடவடிக்கையாக இருக்கும். நாட்டில் நடந்த விடுதலைப் போராட்ட ங்களின் வடிவத்திலும் உணர் விலும் அதன் காரணங்களிலும் பன்முகத்தன்மையைக் காணலாம். இதுபோன்ற இயக்கங்களில் அரசுப் பள்ளிகள் முக்கியமானவையாகும். சீர்திருத்த இயக்கங்கள், பல்வேறு சமயக் குழுக்களின் செயல் பாடுகள், மிஷனரிகளின் செயல்பாடுகள் ஆகியவை கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளன. சீர்திருத்த இயக்கத்தின் தொடர்ச்சியாக இடதுசாரி இயக்கங்களின் சமூகத் தலையீடு கல்வியின் வளர்ச்சியை வேகப்படுத்தியது.
இ எம் எஸ், பினராயி அரசுகளின் சாதனை
தோழர் இ.எம்.எஸ் தலைமையிலான முதல் கேரள அமைச்சரவை நிலச் சீர்திருத்தத்தமும் கல்வியும் மிக முக்கியமாக கையில் எடுத்துக் கொண்ட துறைகளாகும். அதை தொடர்ந்து கேரளா கல்வித்துறையின் வளர்ச்சி வரலாறாக மாறியது. முதல் பினராயி அரசு அறிமுகப்படுத்திய பொதுக் கல்விப் பாதுகாப்புப் பிரச்சாரமும், இரண்டாவது பினராயி அரசு அறிமுகப்படுத்திய வித்யாகிரணம் திட்டமும் நமது அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்தன. ஏழு ஆண்டுகளில் அரசு பொதுக் கல்வித்துறையில் ரூ.3,000 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் செய்துள்ளது. கல்வித் துறையில் கேரளாவு க்கென்று ஒரு தனித்துவமான கலாச்சாரம் உள்ளது. அந்த பாரம்பரியமான கேரள மக்களின் அரசியல் மனதோடு நெருங்கிய தொடர்புடையதாகும். நாம் எதிர்பார்க்காத வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போதும், கோவிட் பெருந்தொற்று மனிதகு லத்தை தாக்கியபோதும், துன்பப்படுபவர்களுக்கு உதவும் மனப்பான்மையையும் கேரள சமூகம் அனுபவித்து அறிந்தது. அதனால்தான் பேரிடர் காலத்தில் கேரளா காட்டிய அனுபவத்தின் உதாரணங்களை உலகமே கவனித்திருக்கிறது. இத்தகைய சமூக மனப்பான் மையை வளர்ப்பதில் பொதுக் கல்விக்கு முக்கிய பங்கு உள்ளது.
பொது சமூகத்தின் மாற்றம்
இடதுசாரி அரசாங்கங்கள் எப்போதுமே மக்களின் கல்வி ஆர்வத்திற்கு சாதகமாக பதிலளிக்க முயன்று வருகின்றன. இதற்கு மிகச் சமீபத்திய உதாரணம் பொதுக் கல்விப் பாதுகாப்புப் பிரச்சாரத் திட்டம். பொதுப் பள்ளியை மேம்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகளுடன், கேரள மக்கள் கட்சி அரசியல்களுக்கு அப்பாற்பட்டு நின்றார்கள். இதற்கிடையில் பல்வேறு காரணங்களால் அரசுப் பள்ளிகள் மீதான பொதுச் சமூகத்தின் அணுகுமுறை திடீரென மாறுவதைக் காண்கிறோம். புள்ளிவிவரங்கள் அதைத்தான் தெரிவிக்கின்றன 2017-2018 முதல் 10.5 லட்சம் குழந்தைகள் கூடுதலாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். தனியார் பள்ளிகளை நம்பியிருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு மாற்றியது கவனிக்கத்தக்கது. இன்னொரு கல்வியாண்டும் நிறைவுற்றது. கோவிட் பெரும் தொற்றுக்கு பிறகு நிலையாக நடந்த கல்வியாண்டாகும் இது. அதன் தொடர்ச்சியாக நாம் செய்யும் முன்ஏற்பாடுகள் ஈடு இணையற்றவையாகும். ஜூன் 1-ஆம் தேதி பள்ளி திறக்கும் முன் அனைத்து குழந்தைகளுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படும். கல்வி ஆண்டு கல்வி நாட்காட்டியின் படியே நடக்கும். நம் குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக செய்யும் செயல்பாடுகள் கல்வியைப் போலவே முக்கியம் வாய்ந்தது. கல்வி நிலையங்களில் கல்வி மற்றும் உடல் ரீதியாக மேம்படுத்துதல் பணி வெகுவாக முன்னேறியுள்ளது.
மாணவர்களை குறிவைக்கும் போதை
கேரளாவின் கல்வி மாதிரி உலகம் முழுவதும் பாராட்டப்பட்டதாகும். ஆனால் இப்போது வளர்ந்து வரும் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது போதை பொருட்களின் பயன்பாடு. இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து தான் போதைப்பொருள் வியாபாரிகள் அணுகுகின்றனர். புதிய தலைமுறையை தவறாக வழிநடத்த போதை மருந்து கும்பல்களும் காத்திருக்கின்றனர். குழந்தைகள் குடும்பத்தை விட்டு வெளியே வரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். இந்த குழந்தைகளை போதைப்பொருள் வியாபாரிகள் அதிகம் குறிவைத்து தாக்குகின்றனர். வேண்டாம் என்று சொல்ல குழந்தைகளுக்கு தைரியம் கொடுப்பது முதன்மையான கல்வி. குழந்தைகள் என்ன செய்கிறார்கள், அவர்கள் என்ன மாதிரியான மாற்றங்களுக்கு உள்ளாகிறார்கள்,
அவர்களுக்குள் ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்கள் குறித்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாநில அரசு முன்னெடுத்து வருகிறது. மாநில அரசின் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளில் சுமார் ஒன்றரை கோடி பேர் பங்கேற்றனர். அதில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தனர். பள்ளிகள் திறக்கும்போது, போதைப்பொருள் கும்பல்களின் அச்சுறுத்தலை பார்க்கிறோம். போதைக்கு எதிரான விழிப்புணர்வை குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். பள்ளிக் கூடத்தில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க வேண்டும். போதைப்பொருள் இல்லாத பள்ளியையும் அதன் சுற்றுப்புறத்தையும் உருவாக்க தேவையான தலையீடு செய்ய வேண்டும். பள்ளி நிர்வாகம் உள்ளூர் காவல்துறையினருடன் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். நிலையான ஒரு கல்வியாண்டை நாம் எதிர்நோக்குகிறோம். வரும் கல்வியாண்டில் கல்வி மற்றும் கல்வி சாரா அனைத்து நடவடிக்கைகளும் செயல்படுத்தப்படும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன் கூடிய உயர் தொழில்நுட்ப கற்றல் முறையின் திறன் அதிகபட்சமாக பயன்படுத்தப்படும். பொதுமக்களும் குழந்தைகளுக்கு அனைத்து விதமான ஆதரவையும் வழங்கு மாறு கேட்டுக் கொள்ள ப்படுகிறார்கள். நல்ல நாளைக்காக அனைவரும் கை கோர்ப்போம்.