நாட்டின் சமூக வரலாற்றில் முக்கிய மான திருப்புமுனைகளில் ஒன் றான கேரளனத்தின் குடும்பஸ்ரீ, உலக கவனத்தை ஈர்த்த மகளிர் கூட்டமைப் பாகும். வெகுமக்கள் பங்கேற்புடன்கூடிய இயக்கத்தை (ஜனகிய சூத்திரம்) தொடர்ந்து பொது திட்டமிடலின் பகுதியாக குடும்பஸ்ரீ என்ற அமைப்பு உருவானது. வறுமை ஒழிப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கத்துடன், இடதுசாரிகள் தலைமை யிலான அரசு 1998 மே 17 அன்று மாநில வறுமை ஒழிப்பு இயக்கத்தின் பகுதியாக குடும்பஸ்ரீயை உருவாக்குவதாக அறிவித்தது. பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நலிவடைந்த பெண்கள் பொருளாதார சுயசார்பு டன் சமூகத்தில் அவர்களை வலுப்படுத்தும் முயற்சியில் குடும்பஸ்ரீ பெருமைக்குரிய சாதனையை படைத்துள்ளது. 25 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் குடும்பஸ்ரீ அமைப்பு தற்போது 45 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மூன்று லட்சம் சுற்று வட்டாரக் குழுக்கள் (அயல் கூட்டம்), 19,470 ஏடிகூட்டாண்மைகள் (வட்டார வளர்ச்சி கூட்டுறவு) மற்றும் 1070 சிடிஎஸ் (சமூக வளர்ச்சி கூட்டாண்மைகள்) செயல்படுகின்றன. இது தவிர, 19,000 துணைக் குழுக்களும் செயல்படுகின்றன. பொருளாதாரத்தை மேம் படுத்துவதன் மூலம் வறுமையை ஒழிப்பதை குடும்பஸ்ரீ நோக்கமாகக் கொண்டுள்ளது. குடும்பஸ்ரீயின் சுற்று வட்டாரக் குழுக்கள் இன்று ரூ.8029 கோடி சேமிப்பைக் கொண்டுள்ளன.
ஒரு லட்சம் குறுந்தொழில்கள்
குடும்பஸ்ரீ அமைப்பு ஒவ்வொரு உறுப்பி னரும் நம்பிக்கையுடன் அணுகக் கூடிய இடமாக மாறியுள்ளது. சமையலறையின் நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்களை வருவாய் ஈட்டவும், தன்னம்பிக்கை அடையவும் அதிகாரம் அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது குடும்பஸ்ரீ. பல்வேறு திட்டங்களின் பகுதியாக மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறு வனங்கள் செயல்பட்டு வருகின்றன. தாழ்த்தப் பட்டோர், நலிவடைந்தோர், வேலையில்லா தோர் மற்றும் மனநலம் மற்றும் அறிவுத்திறன் குறைபாடு உள்ளவர்களை சமூகத்தின் முக்கிய செயல்பாடுகளில் கொண்டு வர பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குடும்பஸ்ரீ செயல்பாடுகள் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மூலம் ஒருங்கிணைத்து ஒழுங்கமைக்கப்படுகின்றன.
1998 இல் குடும்பஸ்ரீ தொடங்கப்பட்டபோது, அதுவரை இருந்த குடும்பஸ்ரீ வறுமை ஒழிப்பு முறைகளில் இருந்து மாறுபட்டு, சமூக அமைப் பின் கீழ் ஏழைகளை அணிதிரட்டி வறுமை ஒழிப்பை சாத்தியமாக்கும் கொள்கையை குடும்பஸ்ரீ ஏற்றுக்கொண்டது. 2011 ஆம் ஆண் டில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் குடும்ப ஸ்ரீயை தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநில ஊரக வாழ்வாதார இயக்கமாக அங்கீகரித்தது. அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு நிறுவனம், உள்ளூர் அரசாங்கத்துடன் (உள்ளாட்சி) இணைந்து செயல்படும் அமைப்பு, சுதந்திர மான மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப் பட்ட மூன்று அடுக்கு அமைப்பு, பெண்கள் அதிகா ரமளிப்பதில் கவனம் செலுத்தும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள், அரசு அங்கீகரிக்கப்பட்ட நடத்தை நெறிமுறைகளின் அடிப்படையில் செயல்படுவது ஆகியவற்றின் மூலம் குடும்பஸ்ரீ யின் சமூக நோக்குடைய நிறுவன அமைப்பாக தனித்துவம் பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 3.09 லட்சம் சுற்றுவட்டார குழுக்களில் 46.16 லட்சம் குடும் பங்கள் உறுப்பினர்களாக பணியாற்றி வரு கின்றனர். மாநில அரசின் தலைமையின் கீழ், குடும்பஸ்ரீ பொருளாதார மேம்பாட்டிற்காகவும், சமூக வலுவூட்டலுக்காகவும் பல நடவடிக்கைக ளை அடிமட்ட அளவில் மேற்கொண்டு வரு கிறது. குடும்பஸ்ரீயின் தலையீடு பெண்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும், சமூகப் பங்கேற்பை அதிகரிப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. குடும்பஸ்ரீ பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது.
நலிவுற்றோருக்கு உதவி
கடந்த 25 ஆண்டுகளில், குடும்பஸ்ரீயின் பணி வலுப்பெற்றுள்ளது. விரிவுபடுத்தப்பட்டு, பிரபலம் அடைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட பழங் குடியினர், கடலோரப் பகுதி மக்கள், சமூக நீதி மற்றும் பொருளாதார சிறப்புக் கவனிப்புக்குத் தகுதியான உடல் மற்றும் மனரீதியான சவால் களை எதிர்கொள்பவர்கள், நோயாளிகள், திருநங்கைகள் மற்றும் முதியோர்கள் என சிறப்பு கவனம் தேவைப்படும் அனைவருக்கும் உதவிகரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றுநோய், பெரு வெள்ளம் போன்ற பல்வேறு பேரிடர்களை எதிர்கொள்ளும் குடும்பஸ்ரீயின் தலையீடு பாராட்டுக்குரியது. வார்டு அளவில் உருவாக்கப் பட்ட ஆர்ஆர்பிகளில் பெரும்பாலானவர்கள் குடும்பஸ்ரீ பணியாளர்கள். கொரோனா மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் சமூக சமைய லறைகள் மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகளில் குடும்பஸ்ரீ உறுப்பினர்கள் தீவிரமாக ஈடுபட்ட னர். ஹரிதகர்மசேனா (பசுமை இராணுவம்) என்பது குடும்பஸ்ரீ பெண்களைப் பயன் படுத்திய ஒரு மகத்தான முயற்சியாகும்.
வெள்ளி விழா காணும் குடும்பஸ்ரீ
வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை போன்ற சமூகத் தீமைகளுக்கு எதிராக ஸ்திரீபக்ஷா (பெண்ணியவாதி) கேரளா என்ற பெயரில் விரிவான பிரச்சாரங்களுக்கு தலைமை வகித்தனர். பாலின வள மையங்க ளும் நிறுவப்பட்டன. குடும்பஸ்ரீ அதன் சொந்த செயல்பாடுகளைத் தவிர, ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கான நோடல் ஏஜென்சியாகவும் உள்ளது. இந்தச் செயல்பாடுகளை மற்ற மாநிலங்களுக்கும் செயல் படுத்தும் வாய்ப்பை நிறைவேற்றும் வகையில் குடும்பஸ்ரீக்கு தேசிய வள அமைப்பின் தகு தியை ஒன்றிய அரசு வழங்கியது. கால் நூற்றாண்டு வளர்ச்சியைத் தொடர வும், புதிய பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் குடும்பஸ்ரீ இயக்கம் முயற்சிக்கிறது. வறுமை ஒழிப்புடன் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையிலான நவீன முயற்சி இந்த வெள்ளி விழா காலத்தில் நடைபெறுகிறது. சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கக் கூடிய மிக முக்கியமான அமைப்பு களில் ஒன்று குடும்பஸ்ரீ. வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக குடும்பஸ்ரீ க்கு ஒரு புதிய முகமும், கேரளாவில் பெண் தொழில்முனைவோர் ஒரு புதிய நிலையை எட்டுவதுமே லட்சியம்.
தேசாபிமானியில் இருந்து தமிழில் ஜெ.ஜெசின்