articles

img

தமிழ்நாட்டில் கைவைத்தால் தேன் கூட்டில் கைவைத்த கதையாகும்

கோயம்புத்தூர், ஜூன் 17- அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்டதை கண்டித்தும்,  எதிர்க்கட்சிகளை ஒடுக்க அமலாக் கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்ற சுதந்திரமான அமைப்புகளை பாஜகவின் ஏவல் துறையாக பயன்  படுத்துவதை கண்டித்து, கோவையில்  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில்  மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.  கோவை சிவானந்தா காலனி பகுதியில் இக்கூட்டத்திற்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி., தலைமை தாங்கினார். திமுக கோவை  மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக்,  தொ.அ.ரவி, தளபதி முருகேசன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இதில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்பி., , தமிழ்நாடு காங்கிரஸ் தலை வர் கே. எஸ், அழகிரி, மதிமுக பொது  செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்  திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்  தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்  லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொகி தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  எம்எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ, தமிழக வாழ்வுரிமை கட்சியின்  தலைவர் தி.வேல்முருகன் எம்எல்ஏ, உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

இக்கூட்டத்தில் பங்கேற்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு  மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “மோடி தமிழ்நாட்டில் கை வைத்தால் தேன் கூட்டில் கை வைத்த கதையாகிவிடும். நாங்கள் திருப்பி அடித்தால் தாங்கமாட்டீர்கள் என முதல்வர் சொன்னது போல மட்டு மல்ல. நாங்கள் திமிறி எழுந்து பெரு மூச்சு விட்டாலே, நீங்கள் தாங்க மாட் டீர்கள். அமலாக்கத்துறை மிரட்டலால் உடல் நலம் பாதிக்கப்பட்டு செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்  பட்டுள்ளார். அவர் மீது புகார் இருந்தால்  விசாரிக்கக் கூடாது என்பது அல்ல எங்கள் வாதம். விசாரணைக்கு ஒத்து ழைப்பு தருவதாகவும், வழக்கு வந்தால்  சந்திக்க தயார் எனவும் தைரியமாக தான் தெரிவித்தார். சோதனையின் போது தலைமறைவாக சென்று விட்டாரா? செந்தில் பாலாஜியை அறையில் பூட்டி  வைத்து விசாரணை செய்ய வேண்டிய  அவசியம் என்ன? அதிமுக ஆட்சியில்  கொடுத்த புகாருக்கு, இப்போது எதற்கு  சோதனை நடத்த வேண்டும்? அதற்கு  என்ன நோக்கம்? தலைமைச் செயல கத்தில் எந்த தகவலும் சொல்லாமல் உள்ளே செல்ல அதிகாரம் உள்ளதா?  துணை இராணுவ படை வைத்துக்  கொண்டு தலைமை செயலகத்திற்குள் சோதனை செய்த போது, முதலமைச் சர் காவல் துறையை முடுக்கி விட்டு இருந்தால், உங்கள் நிலை என்ன? அதிமுக பரிதாபத்திற்குரிய கட்சி யாக மாறிவிட்டது. பல முறை ஆட்சி யில் இருந்த உங்களுக்கு ஆளுநரின்  அதிகாரம் என்ன என்று தெரியாதா? செந்தில் பாலாஜியை நீக்க மனு அளிப்பது கேவலமாக இல்லையா? ஆளுநர் நினைத்தால் ஒருவரை அமைச்  சராக நியமித்து விட முடியுமா? அமைச்  சர்களுக்கு பொறுப்புகளை ஒதுக்கு வது முதலமைச்சரின் பொறுப்பு. 

அமலாக்கத்துறை, வருமானவரித் துறை  பாஜகவின் கிளை அமைப்பாக  மாறிவிட்டது. தில்லியை போல தமிழ் நாட்டில் உங்கள் பாச்சா பலிக்காது.  கொத்தடிமைகளை விலை பேசி வாங்கியது போல மிரட்ட நினைத்தால், எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும். சீண்ட நினைத்தால் கோவை குலுங்கி யது போல், தமிழகமே குலுங்கும். இத னைத்தொடர்ந்து இந்தியாவே குலுங் கும்” என்றார்.  இக்கூட்டத்தில், முன்னாள் அமைச் சர்கள் மு.கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், தலைவர்கள் பங்கேற்றனர்.  எவ்வித பேனர், கட்டவுட்டுகள் போன்ற விளம்பரங்கள் இடம்பெறா மல், ஒரே நாளில் அறிவிப்பு வெளி யிட்டு  எளிமையாக நடைபெற்ற இக்கூட் டத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டது, அரசியல் அதிர்வலையை கோவையில் ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்: வைகோ

“பாஜக அமலாக்கத்துறையை தவறாக பயன் படுத்தப்படுகிறது. மராட்டியம், கர்நாடகா, ராஜஸ் தான், மேற்குவங்கத்தில் நடந்தது போல, செந்தில் பாலாஜி விஷயத்திலும் நடந்துள்ளது. முதலமைச்சர் அமைச்ச ரவை பொறுப்புகளை பகிர்ந்து அளித்த கடிதத்தை ஆளுநர் ஏற்க மறுத்தார். ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல்வர். உங்களை யார் தேர்ந்தெடுத்தது?  தமிழை கொச்சைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறீர்கள். முதலமைச்சரை கிள்ளு கீரையாக நினைத்து சவால் விடுகிறீர்கள். மதிமுக இந்த ஆட்சிக்கு காவல் அரணாக இருக்கும். ஆளுநர் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்”.

‘முதல்வரை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது’ - கே.எஸ். அழகிரி

“இன்று மாநில அரசின் உரிமைகள் கேள்வி  கேட்கப்படுகின்றன. முதலமைச்சர் ஸ்டாலின் குறி வைக்கப்படுகிறார்.  பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி என  ஸ்டாலின் சொன்னதால் தான் அவர் மீது கோபம். அவர்  களுக்கு செந்தில் பாலாஜி மீது கோபம் இல்லை. முதல மைச்சரை முடக்க வேண்டுமென இந்த காரியங்களை செய்  கிறார்கள். இது ஒரு கொள்கை போர். இலாக்கா இல்லாத  அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்கக் கூடாது  என ஆளு நர் சொல்லியிருக்கிறார். 33 மத்திய அமைச்சர்கள் மீது வழக்கு கள் உள்ளது. எப்படி அவர்கள் அமைச்சராக இருக்கிறார்கள்?  முதலமைச்சரை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது. ஹிட்லர், முசோலினியை விட மோடி, அமித்ஷா மோசமாக உள்ளார்கள். செந்தில் பாலாஜி நிரபராதி என நாளை நிரூ பிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்? அவர் தொடர்பான சோத னையில் என்ன கிடைத்தது என சொல்லவில்லை. நள்ளிரவில்  கைது செய்ய அவர் என்ன தேச துரோகியா? பாஜக எம்.பி மீது  மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளித்தும், கைது செய்ய வில்லை. அவரிடம் விசாரணையோ, சோதனையோ கூட செய்யவில்லை. பாஜக எம்.பி.க்கு இருக்கும் சட்ட பாதுகாப்பு, ஒரு மாநில அமைச்சருக்கு இல்லை”. 

பாஜகவை விரட்டியடிக்க காலம் கனிந்து வந்து கொண்டிருக்கிறது: தொல்.திருமாவளன் பேச்சு

வருமானவரித்துறை, அமலாக்கத் துறை அமைப்பு களை பயன்படுத்தி எதிர்கட்சிகளை பலவீனப்படுத் தும் முயற்சியை மோடி, அமித்ஷா சங்பரிவார கும்பல் செய்து வருகிறது. தேர்தலில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க முதல் அடியை எடுத்து வைத்தவர் ஸ்டாலின். பாஜகவை அரசியல் ரீதி யாக மட்டுமல்லாமல், கொள்கை ரீதியாகவும் வீழ்த்த முயற் சிக்கிறார். பாஜகவை எதிர்க்கும், விமர்சிக்கும் கட்சிகள் உண்டு.  கொள்கை  அளவில் ஆட்சி பீடத்தில் இருந்து அப்புறப்படுத்தும்  நோக்கில் செயல்படுபவர் ஸ்டாலின். இதை அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை.   பாஜக ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு  வீழ்த்தி காட்டியவர் செந்தில் பாலாஜி. அவரை முடக்குவதன் மூலம் ஸ்டாலினுக்கு நடுக்கம், தடுமாற்றத்தை தந்து விடலாம்  என நினைக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி முதலமைச்சர் வழி நடத்தி வருகிறார். அகில இந்திய அளவில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சித்து வருகிறார். இது அவர்கள் அடி வயிற்றில் புளியை கரைக்கிறது. சங்கிகளை விரட்டியடிக்க காலம் கனிந்து வந்து கொண்டிருக்கிறது.

சங்பரிவார்களுக்கு சமாதி கட்டும் வரையில் கூட்டணி தொடரும்: இரா.முத்தரசன்

“அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளில் 0.05 சதவீத வழக்குகளில் தான் தீர்ப்பு வழங்கப்  பட்டுள்ளது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற  அமைப்புகள் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட அமைப்பு கள். மோடி உருவாக்கிய அமைப்புகள் அல்ல. அவை சுதந்தி ரமாக செயல்பட கூடிய அமைப்புகள்.  அவற்றை அடிமை அமைப்புகளாக மாற்றி விட்டனர். மோடி, அமித்ஷா ஏவு கிறார்கள். அமலாக்கத்துறை, வருமானவரித்துறையினர் அம்புகளாக பாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.  பாஜகவிற்கு பாடம் புகட்ட வேண்டும். சங்பரிவார்களுக்கு சமாதி கட்டும் வரை  இந்த கூட்டணி தொடரும்”. 

அதிகாரத்தை கொண்டு அநீதி இழைத்தால் நாடு ஸ்தம்பிக்கும்: ஆ.ராசா

“தனிமனிதரால் அநீதி இழைக்கப்பட்டால் இன்னொரு  ஆட்சி சரி செய்யலாம். நீதிமன்றம் அல்லது போராட்  டம் மூலம் சரி செய்யலாம். எல்லா அதிகாரத்தையும் கையில்  வைத்திருப்பவர்கள் தவறாக பயன்படுத்தி அநீதி இழைக்கும் போது நாடு ஸ்தம்பிக்கும். அத்தகைய காட்டாட்சியை எதிர்க்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார்.   காட்டாட்சி, ஊழல் ஆட்சி, மதவெறி ஆட்சி நடத்து பவர்கள், கொங்கு மண்டலத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்  டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்கி விட்டால் தாமரை மலரும் என கருதுகிறார்கள். அடுத்த ஆண்டு கருணா நிதி நூற்றாண்டு நிறைவு விழா கோவையில் நடைபெறும். அப்போது இந்திய பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் இங்கு இருப்பார்கள். அவர்கள் கலைஞர் வாழ்க என முழங்கு வார்கள். அப்போது மோடி, அமித்ஷா இருக்க மாட்டார்கள்”. 

ம.பி., உபி அல்ல இது தமிழ்நாடு: தி.வேல்முருகன்

“சர்வாதிகார போக்குடன் ஒன்றிய பாஜக அரசு நடந்து  கொள்கிறது. ஒன்றிய அரசின் கைக்கூலியாக அம லாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ செயல்படுகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட வழக்கு விசார ணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறிய பிறகும், 18 மணி நேரம் விசாரணை என்ற பெயரில் அடக்குமுறையை ஏவி  விட்டார்கள். ஒன்றிய அரசு அடக்குமுறையை அவிழ்த்து விட்ட  போது, அதற்கு எதிராக களம் கண்டு திமிறி எழுந்த மண் தமிழ்  மண். தமிழ்நாடு மத்தியப் பிரதேசமோ, உத்தரப் பிரதேசமோ, மேற்கு வங்கமோ அல்ல. குனிந்து கும்பிட போட. தமிழ் நாட்டிற்கு என மிகப்பெரிய பாரம்பரியம், போர்க்குணம் உண்டு. அதிகார திமிருடன் நடந்து கொண்டால் வாலை ஒட்ட நறுக்குவோம்”.