தமிழகத்தில் இடஒதுக்கீட்டுக்கு நூற்றாண்டு வரலாறு உள்ளது. சமூக நீதியை நிலைநாட்டியதில் இடஒதுக்கீட்டின் பங்கு பற்றி தலைவர்கள் பல விளக்கங்களை கூறியுள்ளனர். இடஒதுக்கீடு மூலம் பின்தங்கிய வகுப்பினரின் பொருளாதாரத்தை உயர்த்தினாலும், இடஒதுக்கீட்டின் நோக்கம் வறுமை ஒழிப்பு அல்ல. அது சமூகத்தில் பிரதிநிதித்துவம் அளிப்பது ஒருவகையான அதிகாரப்பகிர்வு என ‘மண்டல் கமிஷன்’ கூறியுள்ளது. இது உண்மைதான்.
கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதி தமிழக அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அரசாணை 115ஐ வெளியிட்டுள்ளது. 20ஆம் தேதி நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை 152ஐ வெளியிட்டுள்ளது. மனிதவளத்துறை வெளியிட்ட அரசாணையில் தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவுகளில் ஊழியர் களை இனி நியமனம் செய்ய வேண்டாம். சி மற்றும் டி பிரிவு வேலைகளை அவுட்சோர்சிங் (வெளிமுகமை) மூலம் செய்வதைப்பற்றி ஆய்வுசெய்ய குழு நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களில் 80 சதம் பேர் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களே. 2 நாட்கள் கழித்து நகராட்சி நிர்வாகத்துறை வெளி யிட்டுள்ள அரசாணையில் நகராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்களை இனி நியமனம் செய்யக் கூடாது. அந்த பணிகளை அவுட்சோர்சிங் மூலம் (வெளிமுகமை) செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாகவே 3.10.2022ஆம் தேதி பேரூராட்சிகளில் தூய்மை பணி குடிநீர் வழங்கல் போன்ற பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க வேண்டு மென அரசாணை 139 வெளியிடப்பட்டது. தொடர்ச்சி யாக வெளியிடப்பட்டுள்ள இந்த மூன்று அரசா ணைகளும் இனி அரசுத்துறையில் நேரடி நியமனங்கள் செய்யக் கூடாது என்ற அடிப்படையி லேயே வெளியிடப்பட்டுள்ளது.
நிரந்தர பணியாளர் முறை எப்படி வந்தது?
அரசுத்துறையாக இருந்தாலும், தனியார் துறையாக இருந்தாலும் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். எவ்வித காரணம் இன்றி யாரையும் பணிநீக்கம் செய்யக்கூடாது. பணியாளர்களின் ஊதியம், பணி ஓய்வு பலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்கான போராட்டம் 200 ஆண்டுகளாக நடைபெற்றது. நீண்ட போராட்டங்களுக்கு பிறகு 19, 20ஆம் நூற்றாண்டுகளில் பல நாடுகளில் ஊழியர்க ளுக்கு பணிப்பாதுகாப்பு, பணிநிலை மேம் பாட்டுக்கான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தியாவில் வெள்ளையர்கள் ஆட்சியின்போது போராட்டங்கள் மூலம் பெறப்பட்ட இந்த உரிமை கள் சுதந்திர இந்தியாவில் சட்டங்கள் மூலம் உறு திப்படுத்தப்பட்டது.
காண்ட்ராக்ட் எனும் கொத்தடிமை முறை
தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பு தங்களது சுரண்டலுக்கு இடையூறாக இருக்கும் என பெரும் முதலாளிகள் கருதினர். எனவே இனி தொழிலாளர்க ளை நேரடியாக நியமனம் செய்யக் கூடாது. தங்களது வேலைக்கு தேவைப்படும் ஆட்களை காண்ட்ராக் டர் மூலம் நியமனம் செய்யலாம். இனி நிரந்தர தொழிலாளி இல்லை. காண்ட்ராக்ட் தொழிலாளி தான் என முடிவு செய்தனர். காண்ட்ராக்ட் முறை நடைமுறைக்கு வந்தது. இதை தடுத்துநிறுத்த வேண்டிய அரசாங்கமும் காண்ட்ராக்ட் தொழிலா ளர்களை நியமித்தது. இந்தியாவில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சொந்தமான பொதுத்துறைகளில் இன்று 80 சதத்திற்கும்மேல் காண்ட்ராக்ட் தொழி லாளர்கள்தான் பணிபுரிகின்றனர். காண்ட்ராக்ட் கொடுமைக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் சிறிய வெளிச்சத்தை தந்தன. காண்ட்ராக்ட் தொழிலா ளர் சட்டம் மூலம் குறைந்தபட்ச பணிப்பாதுகாப்பு, ஊதிய உத்தரவாதம் பெற முடியும் என்ற சூழ்நிலை உருவானது. விழிப்புடன் போராடிய இடங்களில் காண்ட்ராக்ட் தொழிலாளர் நிரந்தரமும்கூட சாத்தியமானது.
கார்ப்பரேட்டுகளின் கண்டுபிடிப்பு
‘‘நிரந்தர ஆட்களும் தேவையில்லை. காண்ட்ராக் டர் மூலம் வேலை செய்ய ஆட்களும் தேவை யில்லை. தங்களது வேலையை யாரிடமாவது ஒப்ப டைத்துவிடலாம். அதன் மூலம் நமது பணியை முடித்துக் கொள்ளலாம்’’ என முடிவுசெய்து கார்ப்ப ரேட் நிறுவனங்கள் கண்டுபிடித்ததுதான் அவுட் சோர்சிங். பெரும் முதலாளிகளைக் காப்பியடித்து காண்ட்ராக்ட் தொழிலாளர்களை நியமனம் செய்த அரசு, கார்ப்பரேட்டுகளைக் காப்பியடித்து அவுட்சோர்சிங் நோக்கி செல்கிறது.
இடஒதுக்கீட்டின் பின்னணி
தமிழகத்தில் இடஒதுக்கீட்டுக்கு நூற்றாண்டு வரலாறு உள்ளது. சமூக நீதியை நிலைநாட்டியதில் இடஒதுக்கீட்டின் பங்கு பற்றி தலைவர்கள் பல விளக்கங்களை கூறியுள்ளனர். இடஒதுக்கீடு மூலம் பின்தங்கிய வகுப்பினரின் பொருளாதாரத்தை உயர்த்தினாலும், இடஒதுக்கீட்டின் நோக்கம் வறுமை ஒழிப்பு அல்ல. அது சமூகத்தில் பிரதிநிதித்துவம் அளிப்பது ஒருவகையான அதிகாரப்பகிர்வு என ‘மண்டல் கமிஷன்’ கூறியுள்ளது. இது உண்மைதான். நிர்வாக அலுவலர்/கிராம ஊழியர் ஆகியோர் அரசின் கணக்கில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள். ஒரு காலத்தில் ஆதிக்க சமூகத்தின் கையிலிருந்த இந்த பதவிகள், இடஒதுக்கீடு மூலம் இப்பதவிக்கு வரும் ஒடுக்கப்பட்ட மனிதர் அரசின் பிரதிநிதியாக மாற்றப்படுகிறார். கிராமப்புறத்தில் அரசின் உடனடி பிரதிநிதி கிராம ஊழியரே. மாநகராட்சி, நகராட்சியில் தெருவில் தவறான இடத்தில் குப்பையைக் கொட்டும் ஆதிக்க சமூக நபரை பார்த்து, ‘இங்கு ஏன் குப்பையை போட்டீர்கள், இனி இங்கு போடக்கூடாது’ என கூறும் அதிகாரம் அந்த பகுதியின் தூய்மைப் பணியாளருக்கு உண்டு. தூய்மைப் பணியாளராக இருந்தாலும்/ அவர் அரசின் அங்கம். ‘பப்ளிக் சர்வண்ட்’ என சட்டம் சொல்கிறது.
அவுட்சோர்சிங் வந்தால் என்னவாகும்?
ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளி அந்நிறுவனத்தின் முதலாளி இல்லை. இருந்தாலும், ‘இது எனது நிறுவனம்’ என உரிமையுடன் கூறுவார். பணிநிரந்தரம் அந்த உரிமையைப் பெற்றுத் தருகிறது. அதே தொழிலாளி காண்ட்ராக்ட் தொழிலாளியாக மாறும்போது. ‘நான் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரி யும் நிறுவனம் இது’ எனக் கூறமுடியுமா? ‘அதிகாரம், பிணைப்பு, உரிமை என இருக்கும் ஊழியரை இணைப்பில் இருந்து அந்நியப்படுத்தும் கார்ப்பரேட் முறைதான் அவுட்சோர்சிங்.’ கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வந்ததன் விளைவுதான் குலத்தொழில் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கல்வி, வேலைவாய்ப்பில், இடஒதுக்கீடு வந்து இவ்வளவு ஆண்டுகள் ஆன பின்பு நகராட்சி, மாநகராட்சி, உள்ளாட்சிகளில் தூய்மை பணியை செய்வது குறிப்பிட்ட சமூக மக்கள்தான்.
மாநகராட்சி, நகராட்சிகளில் இடஒதுக்கீடு மூலம் தூய்மைப் பணிக்கு அனைத்து சமூக மக்களும் பணிநியமனம் செய்யப்பட்டனர். ஆனால், நடந்தது என்ன? இடஒதுக்கீடு மூலம் தூய்மைப் பணிக்கு வந்த பிற சமூக மக்கள் அப்பணியை செய்யாமல் இதர பணிகளை செய்கின்றனர். சில இடங்களில் இவர்களே சம்பளம் கொடுத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களை தங்களுக்கு பதில் வேலைக்கு வைக்கின்றனர். இது யெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தே நடை பெறுகிறது. சட்டரீதியான பாதுகாப்பு இருந்தும், ‘அடுக்கப் பட்ட மூட்டையில் அடிமூட்டையாக உள்ள பெருமளவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இன்றும் முழு சமூக நீதி கிடைக்கவில்லை’. சமூக அந்தஸ்தும் மாற வில்லை. தூய்மைப்பணி முழுவதும் அவுட்சோர்சிங் என அரசு உத்தரவு போட்ட பின்பு இனி தூய்மைப் பணி குறிப்பிட்ட சமூக மக்களின் பணியாகவே பார்க்கப் படும். குலத்தொழில் முறை புதுப்பிக்கப்படும்.
சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் 90 சதவீதம் பிற்படுத் தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களே. இவர்கள் இடஒதுக்கீடு மூலம் பெற்ற சமூக நீதியை அதிகாரப்பகிர்வை அவுட்சோர்சிங் மூலம் அந்நியப்படுத்தப்போகிறது தமிழக அரசின் அரசாணைகள். நம் நாட்டின் உச்சநீதிமன்றம் அரசு மாடல் எம்ப்ளா யராக (முன் மாதிரி முதலாளியாக) செயல்பட வேண்டும் என கூறியுள்ளது. மாடல் எம்ப்ளாயராக செயல்பட வேண்டிய அரசு கார்ப்பரேட் மாடலை பின்பற்றலா மா? இவ்வரசாணைகள் ரத்து செய்யப்பட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
கட்டுரையாளர்: துணைப் பொதுச்செயலாளர், சிஐடியு