articles

img

பாலஸ்தீனம்: நீண்டகால நிலைப்பாட்டிலிருந்து ஒதுங்கிக் கொண்ட இந்தியா... -

2022 டிசம்பர் 31 அன்று நடைபெற்ற ஐ.நா. பொது மன்றத்தில், பாலஸ் தீனப் பகுதிகளை நீண்ட காலமாக இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்திருப்பதால் ஏற்பட்டுள்ள சட்ட ரீதியான விளைவுகள் குறித்து, சர்வ தேச நீதிமன்றம் தன் கருத்தைக் கூற வேண்டும் என்று, கொண்டுவந்த தீர்மானத்தின் மீது, இந்தியா வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டது. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 87 நாடுகளும், எதிராக 26 நாடுகளும் வாக்களித் தன. இந்தியா உட்பட 52 நாடுகள் வாக்களிக்காமல் ஒதுங்கிக்கொண்டன. ஐ.நா. பொது மன்றம் கொண்டு வந்த தீர்மானத்தில் பாலஸ்தீனப் பகு தியை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதால் ஏற்பட்டுள்ள சட்டரீதியான விளைவுகள் குறித்தும், அதன் மக்கள்தொகை எண்ணிக்கையை மாற்றுவ தைக் குறிக்கோளாகக் கொண்டு, அங்கே நடைபெற்றுவரும்  குடியேற்றங் கள்  குறித்தும், புனித நகரமான ஜெருசலத்தின் தன்மை மற்றும் அந்தஸ்து  குறித்தும் மற்றும் இஸ்ரேல் நிறைவேற்றியுள்ள பாகுபாடுடனான சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியா, இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காததன் மூலம், பாலஸ்தீனப் பிரச்சனையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, நீண்டகால மாக உறுதியுடன் இருந்துவந்த நிலைப்பாட்டிலிருந்து ஒதுங்கிச் சென்று கொண்டிருப்பதை அடையாளப்படுத்தி இருக்கிறது.  

இடித்துத் தரைமட்டமாக்கும் வேலை...

1967இல் யுத்தம் நடைபெற்றதிலிருந்தே, இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலம் மற்றும் காசா பகுதிகளின் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்புகளைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அதன்பின்னர் ஐ.நா. மன்றம், இந்த ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திட வேண்டும் என்று கோரி, பல தீர்மானங்களை நிறைவேற்றி யுள்ளபோதிலும் இஸ்ரேல் தொடர்ந்து மேற்குக் கரைப் பகுதிகளில் யூதர்கள் குடியேற்றப்படுவதை அனுமதித்துக் கொண்டிருக்கிறது. கிழக்கு ஜெரு சலத்தில் அதன் மக்கள் தொகை எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற் படுத்தும் விதத்தில் பாலஸ்தீனர்கள் வசித்த பகுதிகளை இடித்துத் தரைமட்ட மாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலின் திட்டம் என்பது ஒட்டுமொத்த ஜெருசலம் பகுதியிலி ருந்தும் மற்றும் மேற்குக் கரைப் பகுதியிலிருந்தும் அங்கே வாழும் பாலஸ்தீ னர்களை முற்றிலுமாக விரட்டியடிப்பதாகும், அல்லது அவர்களை இஸ்ரேல் நாட்டின் பிரஜைகள் அல்லாதவர்கள் என்று முத்திரைகுத்தி, மிகவும் மோசமான நிலைமைகளுக்குத் தள்ளுவதாகும். கிழக்கு ஜெரு சலத்தை அத்துமீறி ஆக்கிரமித்திருப்பதன் மூலம் அதன் புவிசார் நிலை மையே முற்றிலுமாக மாறியிருக்கிறது. ஜெருசலம், இஸ்ரேலின் “என்றென் றும் தலைநகராக” (“eternal capital”) இருந்திடும் என்று பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. இஸ்ரேலில் தொடர்ந்து ஆட்சி செய்துவரும் அர சாங்கங்கள் அனைத்துமே மேற்குக் கரைப் பாலஸ்தீனப் பகுதிகளில் சுமார் ஐந்து லட்சம் யூதர்கள் குடியேறுவதற்கு வசதி செய்து தந்துள்ளன.  

முற்றுகைக்குள்ளான காசா பகுதி

காசா பகுதியில் சுமார் இருபது லட்சம் பாலஸ்தீனர்கள் சிறைவாசிகள் போன்ற நிலைமைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் மீது வான்  வழியே தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வரு கின்றன, அவர்கள் மற்றவர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளமுடி யாத விதத்தில் முற்றுகைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள். மேற்குக் கரையில் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளில் சுவர் எழுப்பப் பட்டிருப்பதன் மூலம் அவர்கள் மீது நிறவெறி அடிப்படையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில், இஸ்ரேலிய அரசு, மேற்குக் கரைப் பகுதிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிர மித்திடும் வேலைகளில் நகர்ந்து கொண்டிருக்கிறது. பெஞ்சமின் நெதன்யாஹூவைப் பிரதமராகக் கொண்டு, புதிதாக  அமைக்கப்பட்டுள்ள அதி தீவிர வலதுசாரி அரசாங்கத்தில் நிறவெறிக் கட்சி களான யூத தேசியவாதக் கட்சிகளும், சடங்கு சம்பிரதாயங்களில் ஊறிப்போ யுள்ள  அதிதீவிர மதக் குழுக்களும் இணைந்திருக்கின்றன. இக்கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், “ஜூதேயா மற்றும் சமாரியா உட்பட (இந்த இரண்டு பெயர்களும் மேற்குக் கரைக்கு  பைபிளில் கூறப்படும் பெயர்களாகும்) இஸ்ரேலின் அனைத்துப் பாகங்களி லும் குடியமர்த்தி, அவற்றை வளர்த்தெடுத்திட வேண்டும்” என்று கூறப் பட்டிருக்கிறது. மேலும் அந்த ஒப்பந்தத்தில், “இஸ்ரேல் அரசின் தேசிய மற்றும் சர்வதேசிய நலன்களைக் கருத்தில் கொண்டு, இதற்கான நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேற்குக் கரை இணைக்கப்படும்,” என்றும் உறுதி யளிக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா.அறிக்கையில்...

இக்கொடூரமான காலனித்துவ ஆட்சி, யூதர்களைக் குடியமர்த்துவ தற்காக  பாலஸ்தீனத்தின் நிலங்களைப் பறிப்பதிலும், ஆலிவ் தோப்புகளை  அபகரிப்பதிலும், புல்டோசர்களைக் கொண்டு பாலஸ்தீனர்களின் வீடு களை இடித்துத் தரைமட்டமாக்குவதிலும், இவற்றை எவரேனும் எதிர்த்தால் அவர்களைக் கைது செய்வதிலும் ஈடுபட்டிருக்கிறது. எதிர்ப்புகள் அதிகமா கும்போது, எதிர்ப்பாளர்களை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக் கொல்கிறது. ஐ.நா.மன்றத்தின் அறிக்கையில், இஸ்ரேலிய ராணுவம் 2022இல் மேற்குக் கரையிலும் கிழக்கு ஜெருசலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக ளிலும் குறைந்தபட்சம் 171 பேரைச் சுட்டுக்கொன்றுள்ளனர் என்றும், இவர்க ளில் 30 குழந்தைகளும் அடங்கும் என்றும், இது தொடர்பாக 2022ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகும் என்றும் குறிப்பிடப்பட்டி ருக்கிறது.  குறைந்தபட்சம் 9 ஆயிரம் பேர் காயம் அடைந்திருக்கிறார்கள் என்றும் அது குறிப்பிட்டிருக்கிறது. அரசாங்கத்தில் அங்கம் வகித்திடும் கட்சிகளில் மதவாத சியோ னிஸ்ட் கட்சியில் உள்ளவர்களில் பிரதானமானவர்கள் மேற்குக் கரையில் குடியமர்த்தப்பட்டவர்களாதலால், இந்தப் புதிய அதி-தீவிர வலதுசாரி அரசாங்கம் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனர்களை முற்றிலுமாக நசுக்கிட நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. தேசியப் பாது காப்பு அமைச்சராக இருந்திடும், இட்டமர் பென்-கிவிர் என்பவர், தீவிரவாத யூத பவர் கட்சியைச் சேர்ந்தவர். இந்த நபர் பாலஸ்தீனர்கள் மற்றும் அராபி யர்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கிப் பேசுவதில் பேர்போனவர். இவரு டைய அமைச்சகம், மேற்குக் கரையில் இஸ்ரேல் எல்லை போலீசாகவும் செயல்பட்டுக்கொண்டு, அங்கே வாழும் பாலஸ்தீனர்களைக் கண்கா ணித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இஸ்ரேல் தீவிரவாத அர சாங்கம் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கும் இந்த சம யத்தில்தான், ஐ.நா. பொது மன்றம், இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியிருக் கிறது. இது மிகவும் பொருத்தமான தருணமாகும்.

நியாயப்படுத்த முடியாது

இந்தியா, கடந்த காலங்களில், எந்த நாட்டின் உள்நாட்டு மனித உரிமைப் பிரச்சனைகளிலும் வெளியார் விசாரணை செய்ய வேண்டும் என்றோ, அல்லது அது சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் சம்பந்தப்பட்டதாக இருந்தா லோ, அவை தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலிலோ, ஐ.நா. பொது மன்றத்திலோ தீர்மானங்கள் வரும்போது அவற்றை ஆதரித்த தில்லை. ஆனால், இவ்வாறு அது இருந்ததால் அதைப்போன்றே இப்போது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டது என்று கூறுவதை நியாயப்படுத்த முடியாது.  முதலாவதாக, இந்தியா அங்கீகரித்துள்ள சர்வதேச கிரிமினல் நீதி மன்றம், இந்த விஷயத்தைக் கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டி ருந்தது. ஏனெனில் இது ஓர் இறையாண்மை   நாட்டின் உள் விவகாரம் குறித்த தல்ல. மாறாக, இந்த விவகாரம், ஒரு நாட்டில் இன்னொரு நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் சம்பந்தப்பட்டதாகும். இப்போதும் இந்தியா, மேற்குக் கரையும் கிழக்கு ஜெருசலமும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் என்ற நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றது. மேலும், சர்வதேச கிரிமினல் நீதி மன்றமானது, பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சுவர் எழுப்பு வதால் ஏற்படக்கூடிய சட்டப் பிரச்சனைகள் குறித்து 2004இல் ஐ.நா.பொது மன்றம் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஓர் அறிவுரை அளித்திருந்தது.

இஸ்ரேலுடன் நெருக்கமாவது...

இந்தப்பிரச்சனையில் இப்போது இந்தியா பின்வாங்கியிருப்பதற்கான காரணம், அது இப்போது இஸ்ரேலுடன் போர்த்தந்திர உறவுகளைக் கொண்டிருப்பதேயாகும். அதனால்தான் அது இந்தப் பிரச்சனையில் ஒரு மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறது. மோடி அரசாங்கம், இஸ்ரே லுடனான நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். நெதன்யாஹூ முன்பு பிரதமராக இருந்தபோது, மோடியுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். ஏனெனில் இருவருமே சித்தாந்தரீதியாக முஸ்லீம்களுக்கு எதிரான மதவெறி சிந்தனையைக் கொண்டிருப்பவர்கள். ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் பாலஸ்தீனர்களுடனும், அராபியர்க ளுடனும் விரோத மனப்பான்மை கொண்டிருக்கும் சியோனிஸ்ட்டுகளின் அபிமானிகளாவார்கள். அமெரிக்காவின் திட்டத்தின்படி, இந்தியா, மேற்கு ஆசியாவில் ‘ஐ2யு2’ என்னும் இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அமீரகம், அமெ ரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் அமைப்பில் இணைந்திருக்கிறது.   ஐ.நா. பொது மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன் நெதன் யாஹூ அரசாங்கம் பதவி ஏற்றுக்கொண்டது. இத்தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டதன்மூலம் இந்தியா, நெதன்யாஹூ அரசாங்கத்திற்கு தன் நல்லெண்ண சைகையைக் காட்டியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே...

பாலஸ்தீன மக்கள் கடந்த எழுபதாண்டுகளாக தங்கள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதன் காரணமாக கடும் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இஸ்ரேல் பல லட்சம் பாலஸ்தீன மக்களை அவர்களின் தாய்நாட்டிலிருந்து 1948இல் விரட்டியடித்திருப்பதிலிருந்தே அவர்கள் பாலஸ் தீனத்திற்கு வெளியே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் அவர்க ளை ராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் அடிமைப்படுத்தியும் வைத்திருக்கின்றனர். இந்தியா, சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே, பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து அவர்களுக்கு முழு அனுதாபம் தெரிவித்து வந்தது. ஆனால், இப்போது, பாஜக ஆட்சியாளர்களின் இந்துத்துவா மதவெறிக் கண்ணோட்டத்தின் காரணமாக இந்தியாவை பாலஸ்தீன வீரஞ்செறிந்த மக்களை ஒடுக்குபவர்களின் பக்கம் சாய்வதற்கு இட்டுச்சென்றிருக்கிறது.

ஜனவரி 4, 2023, தமிழில்: ச.வீரமணி