தீண்டாமையையும் சாதிக் கொடுமையையும் எதிர்த்து இந்தியாவிலேயே முதன் முதலாக நடைபெற்ற அறப்போராட்டம் என்ற தகுதியினை வரலாற்றில் பெற்றுள்ளது வைக்கம் போராட்டம். கேரளத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமை இந்தியாவில் பிற மாநிலங்களை விடக் கொடூரமா னதாகும். பிராமணர்களுக்குள்ளேயே சிலரை, பலர் தீண்டமாட்டார்கள். பிராமணர்கள் நாயர்களை தீண்ட மாட்டார்கள். நாயர்கள் ஈழவர்களை தீண்டமாட்டார் கள். தீண்டாமை மட்டுமல்ல; ஆய்த்தம் என்று சொல்லப்பட்ட நாயரைப் பார்த்தால் ஈழவர் 4 அடி விலகி நிற்க வேண்டும். ஈழவரை பார்த்தால் புலையர் 4 அடி விலகி நிற்க வேண்டும். நாயாடிகள் போன்ற சில சாதியினரை கண்ணால் பார்ப்பதே தீட்டு என்ற கொடுமை நிலவியது.
1892 இல் சுவாமி விவேகானந்தர், திருவனந்த புரத்தில் மகாராஜாவின் விருந்தினராக தங்கியிருந்த போது கேரளத்தில் இருந்த தீண்டாமைக் கொடு மைகளை கண்ணுற்றார். கேரளம் ஒரு ‘பைத்தியக்கா ரர்களின் விடுதி’ என சாடினார். 1893இல் விவேகா னந்தர் மைசூருக்குச் சென்ற போது அங்கே ஈழவ சமூ கத்தைச் சார்ந்த டாக்டர் பல்பு அவரைச் சந்தித்து கேரளாவில் மாற்றத்தைக் கொண்டு வர ஆலோசனை கேட்டார். விவேகானந்தர் ஸ்ரீநாராயணகுருவை முன்னி றுத்தி இயக்கம் நடத்திட வழிகாட்டினார்.
நாராயண குரு
1855இல் ஈழவர் குடும்பத்தில் பிறந்து துறவறம் பூண்டு தமிழகத்தில் அலைந்து திரிந்த நாராயண குரு 1888இல் அருவிபுரத்திற்கு வந்து அருவியிலிருந்து எடுத்த ஒரு கல்லை சிவலிங்கமாக நிறுவி ஒரு ஆல யத்தை ஏற்படுத்தி அங்கே ஈழவர்களை பூசை செய்ய வைத்தார். சாதி பேதம், மத பேதம் இல்லாமல் அனை வரும் வாழும் இடம் என தனது ஆசிரமத்தை அமைத் தார். நாராயண குருவை முன்னிறுத்தி டாக்டர் பல்பு மாபெரும் சமூக சீர்திருத்த இயக்கத்தை துவக்கினார். அது ஸ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகம் (எஸ் என்டிபி) என 1903இல் பதிவு செய்யப்பட்டது. கேரள சமூக வரலாற்றில் மாபெரும் திருப்பு முனை யாக இந்த இயக்கம் அமைந்தது. முதன்மையாக எஸ்.என்.டி.பி ஒரு கல்வி இயக்கமாக மாறியது. நூற்றுக் கணக்கான கல்லூரிகளும் பள்ளிகளும் நிறுவப் பட்டன. நாராயணகுரு இயக்கத்தின் அலை, நம்பூதிரி களின் முற்போக்கு பகுதியினர் யோக சேம சபா என்ற சீர்திருத்த இயக்கத்தை துவக்கக் காரணமாயிற்று. அதிலிருந்துதான் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் எனும் மகத்தான கம்யூனிஸ்ட் தலைவர் உருவானார். அய்யன் காளியின் புலையர் சபா உருவாகியது. நாயர்களின் நாயர் சர்வீஸ் சொசைட்டி உருவாகியது.
எஸ்.என்.டி.பி லோகத்தின் தலைவராக இருந்த என்.குமரன், செயலாளராக இருந்த டி.கே.மாதவன்- இருவரும் தான் வைக்கம் போராட்டத்தை திட்ட மிட்டார்கள். டி.கே.மாதவன் காங்கிரஸ் இயக்கத்திலும் செயல்பட்டார். வைக்கம் கோயிலைச் சுற்றி உள்ள தெருக்களில் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலின மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை இருந்தது. மாதவன் என்ற வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு செல்லும் போது தடுத்து நிறுத்தப்பட்டார். காரணம் அவர் ஈழவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால். இதுதான் வைக்கம் போராட்டத்தின் துவக்கப் புள்ளியாகும்.
திருநெல்வேலி காங்கிரஸ் மாநாடு
1921 செப்டம்பரில் திருநெல்வேலியில் நடை பெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற டி.கே.மாத வன் காந்தியை சந்தித்து வைக்கம் போராட்டம் குறித்து விவாதித்தார். காந்தியோ, சாதி உரிமைகளுக்கான போராட்டத்தை தனித்தனியே நடத்துவது, தேசியப் போராட்ட ஒற்றுமையை வலுவிழக்கச் செய்யும் என்று எண்ணினார். ஆனால் தொடர்ந்து பேசி காந்தியின் ஆதரவை டி.கே. மாதவன் பெற்றார். 1923இல் காக்கிநாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநா ட்டில் அன்றைய கேரள காங்கிரஸ் தலைவர்களான கே.பி.கேசவமேனன், கே.எம்.பணிக்கர், கேளப்பன் ஆகியோருடன் இணைந்து டி.கே.மாதவன் இப்பிரச்ச னையை எழுப்பினார். இதைத் தொடர்ந்து காந்தி, திருவாங்கூர் காங்கிரஸ் இப்போராட்டத்தில் நேரடியாக ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டார். 1924 ஜனவரி 24இல் எர்ணாகுளத்தில் கூடிய காங்கிரஸ் கமிட்டி தீண்டாமை ஒழிப்பு போராட்ட அமைப்பை உருவாக்கியது. டி.கே. மாதவன் தலைமையில் பிரச்சாரக் குழு அமைக் கப்பட்டது. 1924 பிப்ரவரியில் வைக்கத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொது நடைபாதைகளி லும் கோயில்களிலும் நுழைய பட்டியல் இன மக்கள் உட்பட அனைவருக்கும் உரிமை உண்டு; அதற்கெதிரான எந்த தடையும் மீறப்படும் என அறிவிக்கப்பட்டது.
நூறாண்டுக்கு முன்பு இதே நாளில்...
1924இல் மார்ச் 30இல் முதல் சத்தியாகிரகக் குழு சென்றது. ஒரு புலையர், ஒரு நாயர், ஒரு ஈழவர்- என ஒவ்வொரு குழுவிலும் பங்கேற்றனர். முதல் குழுவில் கொச்சாத்தி (புலையர்), பாகுலேயன் (நாயர்), கோவிந்த பணிக்கர் (ஈழவர்), சென்றனர். போலீசார், நாயரை மட்டும் உள்ளே விட முயற்சித்தனர். அதனை ஏற்காது மூவரும் உள்ளே சென்ற போது கைதானார் கள். கேரள காங்கிரஸ் தலைவர்களான கேசவமே னன், டி.கே.மாதவன் மற்றும் மதுரையைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் ஆகியோர், தினமும் ஒருவர் வீதம் சத்தி யாகிரகம் செய்து கைது ஆனார்கள். தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற நிலையில், போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்த தலைவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.
பெரியார் வருகை
போராட்டக்குழு உறுப்பினரான நீலகண்ட நம்பூதிரி பாடும் இதரர்களும் ஆலோசனை செய்த போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான தந்தை பெரியாரை அழைப்பது என முடிவு செய்து பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பும், கேசவமேனனும் பெரியாருக்கு கடிதம் எழு தினர். அப்போது பெரியார் மதுரை மாவட்டம் (தற்போது தேனி மாவட்டம்) பண்ணைப்புரத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். உடனே ஈரோட்டுக்குச் சென்று கோவை அய்யாமுத்துவையும், மற்றொரு நண்பரையும் அழைத்துக் கொண்டு வைக்கம் பயண மானார். அவரை வரவேற்க திருவாங்கூர் மகாராஜா போலீஸ் அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரிகளை அனுப்பினார். ஏனெனில் திருவாங்கூர் மகாராஜா தில்லி செல்லும் போது வழியில் ஈரோட்டில் பெரியாரின் மாளி கையில் ஓய்வு எடுப்பது வழக்கம். அந்த அடிப்படை யில் வரவேற்பு. ஆனால் பெரியார் வைக்கம் வந்து, பல இடங்களுக்கு சென்று காரசாரமாக பிரச்சாரம் செய்தார். பட்டியலின மக்கள் தெருக்குள் போவதால் தீட்டுப்படும் என சொன்ன வைக்கத்தானை போட்டு வேட்டி துவைக்க வேண்டுமென பேசினார். ஆயிரக் கணக்கில் மக்கள் கூடினர்.
சிறையில் அடைப்பு
மகாராஜா ஒருவார காலம் பொறுத்துப் பார்த்து பின்பு தடை உத்தரவு போட்டார். பெரியாரும் அவரது நண்பர்களும் கைதாகினர். ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பெரியாரின் மனைவி நாகம்மாளும், தங்கை கண்ணம்மாளும் பிரச்சாரத்தை தொடங்கி னர். மக்கள் ஆதரவு பெருகியது. ராஜாஜி பெரியாரை திரும்பி வரக் கோரினார். பெரியார் மறுத்து மீண்டும் பிரச்சாரம் செய்தார். மீண்டும் பெரியாருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஈழவர்களின் தலைவர்களில் ஒருவரான டி.கே.குஞ்ஞிராமன், ஈழவர்கள் உடனடி யாக மதம் மாற வேண்டுமென்று தனது நாளிதழான கௌமுதியில் தலையங்கம் எழுதினார். ஈழவ சமுதா யத்தைச் சேர்ந்த ஒரு சிறிய குழு பஞ்சாப்புக்கு சென்று சீக்கியர்களாக மதம் மாறினர். சீக்கிய, இஸ்லாமிய, கிறிஸ்தவ, அமைப்புகள் வைக்கம் போராட்டத்தில் களம் இறங்கின. காந்தி இது முழுக்க இந்து மதத் திற்கான பிரச்சனை; வேறு மதத்தினர்கள் தலையிட வேண்டாம் எனக் கூறினார்.
களமிறங்கிய நாராயண குரு
இந்நிலையில் நாராயணகுரு நேரடியாக போராட் டக் களத்திற்கு வந்தார். காங்கிரஸ் சார்பில் பெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. காந்தியின் அணுகு முறையால் ஆதிக்க சாதியினரில் ஜனநாயக எண்ணம் கொண்டோர், போராட்டத்திற்கு ஆதரவாக களம் இறங்கினர். நாயர் சர்வீஸ் சொசைட்டியின் தலை வரும் பழமைவாதியுமான மன்னத்து பத்மநாபநாயர் தலைமையிலும் கூட; 1924 நவம்பர் 1இல் 500 பேர் கொண்ட ஊர்வலம் திருவனந்தபுரத்தில் துவங்கி செல்லும் வழியெல்லாம் பெருகி சிவகிரியை அடைந்து நாராயணகுருவிடம் ஆசி பெற்று வைக்கம் சென்ற டைந்தது. அதே போல் சுசீந்தரத்திலிருந்து பெருமாள் நாயுடு தலைமையில் வேளாளர்கள், நாயர்கள் அடங்கிய ஊர்வலம் வைக்கம் அடைந்தது. நவம்பர் 14இல் சங்கனாசேரி பரமேஸ்வரன் பிள்ளை தலைமை யில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த 27 ஆயிரம் வாக்கா ளர்கள் கையெழுத்திட்ட மகஜர் அன்றைய திருவனந்த புரம் மகாராணியிடம் அளிக்கப்பட்டது. இதைப் பரிசீலித்து, வைக்கம் போராட்டத்திற்கு முடிவு காண மகாராணி சட்டசபையைக் கூட்டி, கொண்டு வந்த தீர்மா னத்தை பழமைவாதிகள் தோற்கடித்தனர். சத்தியாகிர கிகள் மீது வன்முறை ஏவப்பட்டது. காந்தி நேரடி யாக களத்திற்கு வந்தார். 1925 மார்ச் 11இல் நாராயண குருவிடம் காந்தி நடத்திய உரையாடல் வர்ணாசிரம அமைப்பு மீது அவருக்கு இருந்த கருத்துகளை மாற்றி அமைத்தது.
காந்தியுடன் பேச்சுவார்த்தை
மறுநாள் பழமைவாதிகளின் தலைவரான நீலகண்ட நம்பூதிரியை காந்தி சென்று பார்த்தார். நம்பூதிரி காந்தியுடன் பேச்சுவார்த்தைக்கு இணங்க வில்லை. அவரை வெளித்திண்ணையில் வைத்துதான் பேசினார். திருவாங்கூர் அரசை நடத்தியது உண்மை யில் திவான்தான். மன்னருடனோ திவானுடனோ பேசிப் பயன் இல்லை எனக் கருதிய காந்தி, போலீஸ் கமிஷனராக இருந்த டபுள்யு.எச்.பிட்-க்கு கடிதம் எழுதி வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரினார். ஆனால் சில நாட்களுக்குள் மகா ராஜா மரணம் அடையவும் மகாராணி போராட்டக்கா ரர்களோடு உடன்பாடு கொள்ள விரும்பினார். எனினும் பெரியாரோடு உடன்பாடு காண விரும்பாத திவான், ராஜாஜி மூலம் காந்தியை வரவழைத்தார். காந்தியிடம் ராணி, வைக்கம் கோயில் சாலையை திறந்து விட தயார் என்றும் ஆனால் அதைச் செய்த உடன் கோயி லுக்குள் அனுமதிக்கக் கோரி பெரியார் போராடினால் என்ன செய்வது என வினவினார்.
காந்தி- பெரியார் சந்திப்பு
காந்தி பெரியாரை உடனே சந்தித்தார். உங்கள் கருத்து என்ன எனக் கேட்டார். “கோயில் நுழைவு காங்கிரஸின் இலட்சியமாக இல்லாவிட்டாலும், எனது இலட்சியம் அதுதான்; அதை விட்டுக் கொடுக்க முடி யாது. எனினும் இப்போதைக்கு அப்படிப்பட்ட கிளர்ச்சி இருக்காது” என பெரியார் கூறினார். காந்தி ராணியிடம் பெரியாரின் பதிலைக் கூறிய போது ராணி அதை ஏற்றுக் கொண்டார். கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் நுழையவும், நடக்கவும் உடன்பாடு ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் வீச்சு கேரளம் முழுவதும் ஆலைய நுழைவு போராட்டத்திற்கு வழி வகுத்தது.1933இல் கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபா லன் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க குரு வாயூர் ஆலய நுழைவுப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் விளைவாக 1936இல் திருவாங்கூர் மன்னர் பாலராமவர்மா கேரளத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அனைத்து சாதியினர்களும் வழி படலாம் என ஆணை பிறப்பித்தார்.
மாமேதை அம்பேத்கர், வைக்கம் போராட்டம் தான் மகாராஷ்டிராவில் எனது தலைமையில் மகர் மக்கள் சௌதாகர் பொதுக்குளத்தில் நீர் எடுக்கும் போராட் டத்திற்கு உந்துதலாக இருந்தது எனக் கூறினார். வைக்கம் போராட்ட வெற்றிக்குப்பின் திரும்பிய பெரியாருக்கு தமிழகத்தில் உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது. தமிழ்த் தென்றல் திருவிக, தந்தை பெரியா ருக்கு ‘வைக்கம் வீரர்’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப் பித்தார்.
நூற்றாண்டு
வைக்கம் போராட்ட வெற்றியின் நூற்றாண்டு விழா மார்ச் 30 (இன்று) வைக்கத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒரு லட்சம் மக்கள் பங்கேற்போடு எழுச்சியோடு துவங்கி கேரளம் முழுவதும் 603 நாட்கள் நடைபெற உள்ளது என்பது முற்போக்கு சக்திகளுக்கு பெரும் உத்வேகம் அளிப்பதாகும்.
கட்டுரையாளர் : மாநில துணைத்தலைவர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி