“வாக்னர்” எனப்படும் ரஷ்யாவில் செயல் படும் தனியார் துணை ராணுவப் படையினர் திடீரென “நீதிக்கான பயணம்”என அறிவித்து ஜூன் 24 அன்று, மாஸ்கோ வைக் கைப்பற்றப் போவதாக கிளம்பினர். இதில் சுமார் 8000 முதல் 10,000 ராணுவ வீரர்கள் பங்கேற்ற தாக செய்திகள் கூறுகின்றன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை அகற்றும் காலம் நெருங்கிவிட்டது என அமெரிக்காவும் மேற் கத்திய நாடுகளும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர். வாக்னர் குழுவின் நடவடிக்கைகளை கண்காணிக்க வும் அவர்களது கலகத்தை ஊக்குவிக்கவும் செயலில் இறங்கினர். தொடர் தோல்வியை சந்தித்து வரும் உக்ரைன் தனக்கு இது வரப்பிரசாதமான ஒரு வாய்ப்பு என புளகாங்கிதம் அடைந்தது. ஆனால் அவர்க ளின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. சில மணி நேரங்களி லேயே தமது கலக முயற்சியைக் கைவிடுவதாக வாக்னர் குழுவின் தலைவர் எவ்கனி பிரிகோசின் அறிவித்தார். ஆனால், ரஷ்யாவில் பெரும் உள்நாட்டு கிளர்ச்சி எழுந்துவிட்டதாகவும், புடின் ஆட்சி வீழ்கிறது எனவும் ஏகாதிபத்திய ஆதரவு ஊடகங்கள் ஊதித் தள்ளின.
உண்மையில் நடந்தது என்ன?
ராணுவத்தில் தனியார்மயம்
இந்தியா உட்பட உலகெங்கும் உள்ள பெரும் பான்மையான தேசங்களில் ராணுவமும் ஆயுதங்கள் உட்பட ராணுவத் தளவாடங்களின் உற்பத்தியும் அரசின் கீழ்தான் இருந்தன. எதிலும் தனியார்மயம் எனும் அமெரிக்காவின் கொள்கையின் கீழ் ராணுவ உற்பத்தி மட்டுமல்ல; ராணுவத்தையே தனியார்மய மாக்கினர். ராணுவ ஆயுத உற்பத்தியை செய்யும் தனியார் “ராணுவ உற்பத்தி வளாகம்” (Military Industrial Complex) உருவாகியுள்ளது எனவும் இதனை கட்டுப்படுத்தாவிட்டால் அமெரிக்க ஜனநாய கத்துக்கு ஆபத்து எனவும் ஜனாதிபதி ஐசனோவர் 1961ஆம் ஆண்டு தனது பிரிவு உபசார உரையில் குறிப் பிட்டார். இவர் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க படையின் முக்கிய தளபதி. சோவியத் செஞ்சேனை யுடன் இணைந்து போரிட்டவர். இவரின் எச்சரிக்கை இன்று உண்மையாகியுள்ளது. அமெரிக்காவின் வெளி யுறவுக் கொள்கைகளை தீர்மானிக்கும் அளவுக்கு “ராணுவ உற்பத்தி வளாகம்” பரிணமித்துள்ளது. தனது ஆயுத உற்பத்தியில் லாபம் ஈட்ட உலகில் பல போர் களை இந்த அமைப்பின் முதலாளிகள் உருவாக்கு கின்றனர். தனியார் ராணுவ உற்பத்தியைத் தொடர்ந்து தனி யார் ராணுவத்தையும் அமெரிக்கா உருவாக்கியது. லிபியா/இராக்/ஆப்கானிஸ்தான் போர்களில் தனியார் ராணுவப் படைகள் பெரிய அளவில் ஈடுபடுத்தப் பட்டனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான் போரில் அமெ ரிக்காவின் தனியார் ராணுவத்தின் எண்ணிக்கை 69 சதவீதம் என மதிப்பிடப்பட்டது. இவர்கள் போரில் ஈடுபடும் பொழுதே ஆயுத விற்பனை/ ஊழல்/போதைப் பொருள் விற்பனை என பல முறைகேடுகளில் ஈடுபட்ட னர். ஐ.நா.சபை தனியார் ராணுவத்தை அங்கீகரிக்க வில்லை. எனினும் அமெரிக்காவை பின்பற்றி சுமார் 50 நாடுகள் தனியார் ராணுவத்தை பயன்படுத்துகின்ற னர். அவற்றில் முதலாளித்துவ ரஷ்யாவும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
“வாக்னர்”தனியார் படை: வரமா? சாபமா?
ரஷ்யா உருவாக்கிய தனியார் ராணுவத்தில் மிகப் பெரியதும் முக்கியமானதும் “வாக்னர்” துணை ராணு வப்பிரிவு ஆகும். இதில் சுமார் 50,000 முதல் 60,000 வீரர்கள் உள்ளனர். இந்த வீரர்கள் கீழ்கண்ட 3 வகையினர் ஆவர்: 1. ஏற்கெனவே ராணுவத்தில் பணி புரிந்தவர்கள். 2. புதிதாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்றவர் கள். 3. சிறைக்கைதிகள். இவர்கள் குறிப்பிட்ட காலம் போரில் ஈடுபட்ட பின்னர் உயிரோடு இருந்தால் தண்டனை ரத்து செய்யப்பட்டு வீடு திரும்பலாம். இறந்தால் குடும்பத்துக்கு இழப்பீடு தரப்படும். வாக்னர் ராணுவக் குழுவின் தலைவர் அல்லது முதலாளி எவ்கனி பிரிகோசின் என்பவர். இவர் புடினுக்கு மிகவும் நெருங்கியவர் எனக் கூறப்படு கிறது. இந்த குழு சிரியா/ லிபியா போன்ற தேசங்களில் ரஷ்யா சார்பாக போரிட்டது. பல ஆப்பிரிக்க நாடுகளில் தங்க/வைர சுரங்கங்களுக்கு பாதுகாப்பு பணியையும் செய்தது.
உக்ரைனில் 2014ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தி யத்தால் தூண்டி விடப்பட்ட உள்நாட்டுக் கலவரத்தி ற்குப் பின்னர், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி விக்டர் யானுகோவிச், கலகக் கும்பலால் துரத்தியடிக்கப்பட்டு, அமெரிக்க கைக்கூலியான ஜெலன்ஸ்கி பதவியேற்றார். இதன் பிறகு, ஜெலன்ஸ்கி உத்தரவுடன் உக்ரைன் ராணுவத்தினர் டோன்பாஸ் பகுதியில் உள்ள ரஷ்ய இன மக்களை கொன்று குவித்தனர். இந்த மக்கள் தம்மை தற்காத்துக் கொள்ள தமக்கென ராணுவப்பிரிவை உரு வாக்கினர். அவர்களுக்கு உதவிட ரஷ்ய அரசாங்கம் வாக்னர் ராணுவத்தை டோன்பாஸ் பகுதிக்கு அனுப்பி வைத்தது. உக்ரைன் ராணுவம் சுமார் 8 ஆண்டுகள் போரிட்டும் டோன்பாஸ் பகுதி முழுவதையும் தம் ஆளுகையின் கீழ் கொண்டு வர முடியாமைக்கு முக்கிய காரணம் வாக்னர் ராணுவம்தான்! எனவே வாக்னர் ராணுவத்துக்கும் அதன் தலைவர் பிரிகோசி னுக்கும் ரஷ்ய மக்களிடையே செல்வாக்கு ஏற்பட்டது. 2022 பிப்ரவரியில் உக்ரைன் போர் துவங்கிய சூழலில், வாக்னர் ராணுவக் குழுவின் முக்கியத்துவம் அதிகரித்தது. குறிப்பாக பகுமத் எனும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரத்தை பிடிக்க வாக்னர் ராணுவம் உக்கிரத்துடன் போரிட்டது. சுமார் 8 மாதங் கள் நடந்த போரில் உக்ரைன் வீரர்கள் 30,000 முதல் 50,000 வரை உயிரிழந்தனர் என ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். தன்தரப்பிலும் கணிசமான அளவுக்கு வீரர்களை இழந்த வாக்னர் குழு இறுதி யில் பகுமத் நகரை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு பின்னர் வாக்னர் குழுவுக்கும் பிரிகோசினுக்கும் ரஷ்ய மக்களிடையே மிகப்பெரிய செல்வாக்கு உருவானது. சமீபத்தில் நடந்த கருத்து கணிப்பில் பிரிகோசினின் செல்வாக்கு புடினுக்கு இணையாக இருந்தது என்று கூட செய்திகள் வெளியிடப்பட்டன.
பிரிகோசினின் முரண்பாடுகள்
பகுமத் போரின் பொழுதே தனது குழுவுக்கு போது மான ஆயுதங்களை தரவில்லை எனவும் அதனால் தான் உயிரிழப்புகள் அதிகம் எனவும் பிரிகோசின், ரஷ்ய ராணுவத்தை குற்றம்சாட்டினார். இதனை ரஷ்ய ராணுவம் மறுத்தது. கூடுதலான ஆயுதங்கள் வாக்னர் குழுவுக்கு தரப்பட்டன; எனினும் போர் முக்கிய கட்டத்தில் இருக்கும் பொழுது ஏன் பிரிகோசின் ரஷ்ய ராணுவத்தை விமர்சிப்பது அனுமதிக்கப்பட்டது? ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஷொய்குவும் முதன்மைத் தளபதி கெரிசமோவும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என பிரிகோசின் கோருவது ஏன் தடுக்கப்படவில்லை? - என்ற கேள்விகள் எழுந்தன. புடினின் கருத்தைதான் பிரிகோசின் முன்வைக்கிறார் எனும் ஐயப்பாடை இது எழுப்பியது. நவீன ஆயுதங்களையும் வான் உளவு தகவல்களை யும் மேற்கத்திய நாடுகளிடமிருந்து பெற்ற பின்னர் உக்ரைன் சில சமயங்களில் ரஷ்ய எல்லைகளை தாண்டி பொல்கிரோட் பகுதியில் தாக்குதலை நடத்தி யது. ரஷ்ய ராணுவம் இதனை முறியடித்தது. எனினும் ரஷ்ய மக்களின் மனதில் தமது எல்லைகளை உக்ரைன் ராணுவம் எப்படி மீறுகிறது எனும் கேள்வி இயல்பாகவே எழுந்தது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட பிரிகோசின், அமைச்சர் ஷொய்குவும் தளபதி கெரிசமோவும் கோழைகள் எனவும்; தாம் அவர்கள் இடத்தில் இருந்தால் பொல்கிரோட் தாக்கு தலை அனுமதிக்க மாட்டேன் எனவும் காட்டமாக கூறினார். இதற்குப் பின்னரும் அவர் தடுக்கப் படவில்லை.
பகுமத் வெற்றிக்குப் பின்னர் வாக்னர் ராணுவம் சில வாரங்கள் ஓய்வு மற்றும் மறு பயிற்சிக்காக சென்றது. பகுமத் நகரை பாதுகாக்கும் பொறுப்பை ரஷ்ய ராணுவம் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், பிரிகோசினின் முரண்பாடான பேச்சுக்களின் பின்னணியில், வாக்னர் குழுவை ரஷ்ய ராணுவத்துடன் இணைப்பது என ரஷ்ய அரசாங்கம் முடிவு எடுத்தது. இதற்கு பின்னர்தான் பிரிகோசின் மிகவும் மூர்க்கத்தனமாக செயல்பட தொடங்கினார். ரஷ்ய ராணுவத்துடன் இணைப்பது என்பது வாக்னர் குழுவை தேசியமயமாக்குவது எனவும் தன்னிடமி ருந்து அதிகாரம் பறிப்பது எனவும் அவர் எண்ணினார். மிக முக்கியமாக வாக்னர் மூலம் தனது அபரிமித பண வருவாயின் பாதை அடைக்கப்படுகிறது என்பது தான் பிரிகோசினுக்கு பெரும் ஆத்திரத்தை உருவாக்கி யது. குறிப்பாக ஆப்பிரிக்க சுரங்க பாதுகாப்பு பணியில் வாக்னர் குழு மிகப்பெரிய வருமானத்தை ஈட்டியது. இந்த வருமான இழப்பை பிரிகோசினால் ஏற்க முடிய வில்லை. தமது குழுவை மீண்டும் ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்புமாறு பிரிகோசின் வற்புறுத்தினார். ஆனால் ரஷ்ய அரசாங்கம் இதனை ஏற்கவில்லை. எனவே கலகம் செய்வதற்கு பிரிகோசின் தயாரானார்.
பிரிகோசினின் தவறான கணக்கு
எந்த அடிப்படையில் ராணுவக் கலகத்துக்கு பிரிகோசின் தயாரானார் என்பது புரியாத புதிர். வாக்னர் ராணுவத்தையும் ரஷ்ய ராணுவத்தையும் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. குறைந்தபட்ச பொது புத்தி உள்ளவர்கள் கூட இந்த முட்டாள்தனமான முடிவை எடுக்கமாட்டார்கள். “புடின் தன்னை ஆதரிப்பார்; ரஷ்ய ராணுவத்தின் சில பிரிவுகள் தமது பக்கம் வருவர்; ரஷ்ய மக்கள் தம்மை வலுவாக ஆதரிப்பார்கள்; மேற்கத்திய நாடுகள் தமக்கு வலிமை சேர்ப்பர்” - என பிரிகோசின் எண்ணி யிருக்கக்கூடும் என்று உலக அரசியல் ஆய்வாளர் கள் கூறுகின்றனர். ஆனால் இவற்றில் எதுவும் நடக்கவில்லை. இவர்களை முறியடித்த பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புடின், பிரிகோசினின் செயல் “தேசத் துரோகம்”எனவும் “புறமுதுகில் குத்திய கத்தி” எனவும் கடுமையாக விமர்சித்தார். ரஷ்ய ராணுவத்தின் எந்த பிரிவும் பிரிகோசினை ஆதரிக்கவில்லை. வாக்னர் குழுவின் ஒரு பகுதியினரே கூட கலகத்தில் பங்கேற்க மறுத்துவிட்டனர். ரஷ்ய மக்கள் பிரிகோசின் மீது நல்ல எண்ணம் வைத்திருந்தாலும் இந்த கலகம் துரோ கச்செயல் என்றே எண்ணினர். ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி உட்பட அனைத்து அரசியல் இயக்கங்களும் இந்த கலகத்தை கண்டித்தனர்.
மறுபுறத்தில் நேற்றுவரை வாக்னர் குழுவை “அடியாட்கள்” எனவும் “கொலைகார கும்பல்” எனவும் பழித்த மேற்கத்திய நாடுகள் பிரிகோசினை ஜனநாயக வாதி எனப் புகழ்ந்தனர். ஆனால் பிரிகோசினுக்கு வலு சேர்க்கும் சூழல் அவர்களுக்கு உருவாகவில்லை. பிரிகோசினின் கலகத்தை எதிர்கொள்ள ரஷ்ய ராணுவம் தயாரானது. அதே சமயத்தில் ரஷ்ய மக்கள் பிரிகோசினின் கடந்த கால சேவையை மதிப்ப தால் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகென் ஷோவை சமரச முயற்சியில் ஈடுபடுத்த ரஷ்ய அரசாங்கம் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் கீழ்கண்ட செய்திகளை பிரிகோசினுக்கு லுகென் ஷோ தெரிவித்தார்: G கலகத்தில் ஈடுபட்ட அனைத்து வாக்னர் வீரர்க ளும் ரஷ்ய ராணுவத்தால் கொல்லப்படுவர் அல்லது சிறைபிடிக்கப்படுவர்.
G சிறைபிடிக்கப்படுபவர்கள் விசாரணைக்கு பின்னர் மரண தண்டனை விதிக்கப்படுவர். G கலகம் நிறுத்தப்பட்டால் உயிரிழப்பு தடுக்கப் படும். இந்தச் சூழ்நிலையை புரிந்து கொண்ட பிரிகோசின் தனது ராணுவத்தை முகாமுக்கு திரும்புமாறு பணித்தார். இதையொட்டி, கீழ்க்கண்ட சமரசங்கள் உருவாகின: - பிரிகோசின் ரஷ்யாவில் இருக்க இயலாது. பெலாரஸ் அவருக்கு அடைக்கலம் தரும். - கலகத்தில் ஈடுபடாத வாக்னர் வீரர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணையலாம். - கலகத்தில் ஈடுபட்டவர்கள் ராணுவப் பணியை கைவிட்டு குடும்பத்துடன் இணையலாம்; அல்லது பிரிகோசினுடன் பெலாரஸ் செல்லலாம். பிரிகோசினின் வேறு எந்த கோரிக்கையும் ஏற்கப் படவில்லை.
ரஷ்யாவின் சிக்கல்
இந்த சம்பவத்தால், புடின் பலவீனப்பட்டுவிட்டார் என மேற்கத்திய நாடுகள் பிரச்சாரம் செய்கின்றன; எனினும் ரஷ்ய மக்கள் மேலும் மேலும் புடின் பக்கம் வலுவாக அணி திரண்டனர் என்பதே உண்மை. ஒரு ரத்தக்களரியை புடின் தவிர்த்தார் என்பதையும் ரஷ்ய மக்களில் பெரும்பாலானவர்கள் கருதுகின்ற னர். ஏனெனில் கலகம் செய்த வாக்னர் வீரர்களும் ரஷ்ய குடிமக்கள்தான்! எனினும் இந்த கலகம் ஏற்பட்டதே வல்லமைமிக்க ரஷ்ய ராணுவத்திற்கு விடப்பட்ட சவால்தான். புடின் அரசாங்கம் இதன் பின் விளைவுகளை எப்படி கையாளப்போகிறது என்பது மிக முக்கியமானது. உக்ரைன் போரில் இதுவரை ரஷ்யா வெற்றி பெற்று வருகிறது. எனினும் உள்நாட்டில் உருவாகும் எந்த பலவீனமும் ரஷ்யாவின் வெற்றியை சிதைக்க மேற் கத்திய நாடுகளுக்கு பெரும் வாய்ப்பை உரு வாக்கும்.
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாக்கியவெல்லி எனும் இத்தாலிய வரலாற்றாசிரியர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்: “தனியார் ராணுவமும் அரசின் கீழ் இல்லாத படை களும் பயனற்றவர்கள் மட்டுமல்ல; ஆபத்தானவர்க ளும் கூட! இதனை நம்பும் அரசன் உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்க இயலாது.” ராணுவத்தின் ஒரு பகுதியை தனியார்மய மாக்கியதன் விலையை ரஷ்யா தந்துள்ளது. மாக்கிய வெல்லியின் அறிவுரை ரஷ்யாவுக்கு மட்டுமல்ல; ஆயுத உற்பத்தியில் தனியாரையும் ராணுவத்தில் அக்னிபாத் முறையையும் புகுத்தும் இந்திய அரசுக்கும் பொருந்தும்.