articles

img

பதுக்கும் கார்ப்பரேட்டுகளும் பாயும் விலைவாசியும் - டாக்டர் அசோக் தாவ்லே, டாக்டர் விஜூ கிருஷ்ணன்

விலைவாசி உயர்வு - வேலையின்மை

மோடி அரசின் நாசகர கொள்கைகளை 
அம்பலப்படுத்தி செப்டம்பர் 1 - 7
சிபிஐ(எம்) பிரச்சார இயக்கம், மறியல்
- சிறப்புப் பதிவு -

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக அதிகரித்துள்ளன. தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் துவங்கி, அரிசி, பருப்பு மற்றும் உப்பு வரை அனைத்து அன்றாட மளிகைப் பொருட்களின் விலைகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இதற்கு மோடி அரசின் ஆதரவு பொருளாதார ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களை அடுக்கினாலும், இத்தகைய உற்பத்தி பொருட்கள் அனைத்தையும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கபளீகரம் செய்து, பதுக்கி வைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, கொள்ளை லாபம் அடிப்பதற்காக விலையை உயர்த்தி விற்பனை செய்வதுதான் பிரதான காரணமாகும். இந்தக் கொள்ளையை சட்டப்பூர்வமாகவே நடத்துவதற்கு புதிய சட்டங்களை உருவாக்குமாறு மோடி அரசுக்கு அவரது கூட்டுக்களவாணியான அதானி உத்தரவு போட்டார் என்பது இதுவரை வெளிவராத தகவல். அந்த தகவலை வெளிக் கொண்டு வந்துள்ளது ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் அமைப்பு. அந்த அறிக்கையை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் டாக்டர் விஜூ கிருஷ்ணன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

‘ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ (Reporters’ Collecti ve) என்னும் அமைப்பு மேற்கொண்ட சமீபத்திய புலனாய்வு ஒன்று, இந்திய விவசாயத்தைக் கார்ப் பரேட்மயமாக்குவதன் மூலம் இந்திய விவசாயிகளை யும், நுகர்வோர்களையும் சூறையாடும் விதத்தில், மோடி அரசாங்கத்தின்கீழ் ‘நிதி’ ஆயோக்கிற்கும், அதானி தலைமையிலுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கள்ளப்பிணைப் பையும், அவர்களின் விரிவான நிகழ்ச்சிநிரலையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.  ‘ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ (Reporters’ Collecti ve) என்னும் அமைப்பு மேற்கொண்ட சமீபத்திய புலனாய்வு ஒன்று, இந்திய விவசாயத்தைக் கார்ப் பரேட்மயமாக்குவதன் மூலம் இந்திய விவசாயிகளை யும், நுகர்வோர்களையும் சூறையாடும் விதத்தில், மோடி அரசாங்கத்தின்கீழ் ‘நிதி’ ஆயோக்கிற்கும், அதானி தலைமையிலுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கள்ளப்பிணைப் பையும், அவர்களின் விரிவான நிகழ்ச்சிநிரலையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.  

விவசாய வர்த்தகத்தில் அதானி

‘ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ வெளியிட்டுள்ள புல னாய்வுகள் இரு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ஒன்றின் தலைப்பு, “விவசாய சட்டங்கள் கொண்டு வந்ததன் பின்னணியில், ஒரு வெளிநாடுவாழ் இந்தியரின் விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்கு வதற்கான சிந்தனை விதைக்கப்பட்டது” (“Ahead of Farm Laws, an NRI Seeded Idea to Corporatise Agriculture”) என்பது; மற்றொன்றின் தலைப்பு, “அதானி குழுமம் விவசாய சட்டங்களைக் குறை கூறி யது, கார்ப்பரேட்டுகள் பதுக்கல் செய்வதற்கு அனுமதிக் கப்பட்டு அரசாங்கம் அதனை நீர்த்துப்போகச் செய் தது,” (“Adani Group Complained against Farm Law. Govt Diluted it to Allow Hoarding by Corpo rates,”) என்பதாகும். இவற்றில் மோடி அரசாங்கத்திற் கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையே இந்திய விவசா யத்தைக் கார்ப்பரேட்மயமாக்குவதற்கு மேற்கொள் ளப்பட்ட நடவடிக்கைகள் துல்லியமாக அளிக்கப்பட்டி ருக்கின்றன. மேலும் இவற்றில், சம்யுக்த கிசான் மோர்ச் சாவினால் நடத்தப்பட்ட வரலாறு படைத்திட்ட ஒன்று பட்ட விவசாயிகள் இயக்கத்தின் போராட்டம், பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையின்கீழ் பாஜக அரசாங் கத்துடன் கூட்டு வைத்துள்ள சர்வதேச மூலதனம் மற்றும் ஏகபோக மூலதனம் ஆகியவற்றுக்கு எதிரான,  தேசப்பற்று மிக்க போராட்டம் என்ற மறுக்க முடியாத உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

இவர்கள் விவசாய வல்லுநர்களாம்!

இந்திய விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்கும் சிந்தனையை விதைத்த நபர் வெளிநாடுவாழ் இந்தி யரான சரத் மராத்தே என்பவர். இவர் பாஜக-விற்கு மிகவும் நெருக்கமானவர். இவர் மென்பொருள் வணி கத்தில் ஈடுபட்டிருந்தவர். இவருக்கு விவசாயம் சம்பந் தப்பட்ட எந்தத்துறையிலும் ஞானம் கிடையாது. இருப்பி னும் இந்த நபர்தான் இந்திய விவசாயத்தைக் கார்ப்ப ரேட்மயமாக்குவதற்கான சிந்தனையை முன்னெடுத் துச் செல்வதில் முக்கியமான நபராகச் செயல்பட்டி ருக்கிறார் என்று மேற்படி புலனாய்வு அறிக்கைகளின் முதல் பகுதியில் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டம் என்னவெ னில், விவசாயிகள் தங்கள் நிலங்களை கார்ப்பரேட்டுக ளிடம் வேளாண் வணிகத்திற்காக அவர்களின் கம்பெ னிகளிடம் ஒத்திக்குக் கொடுத்துவிட வேண்டும் என்ப தாகும். மராத்தே முன்வைத்த கருத்தாக்க குறிப்பு (concept note)க்கு “இந்தியாவில் விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்கி, சந்தைப்படுத்தலின் மூலமாக விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்,” என்று தலைப்பிட்டிருந்தது. இது அப்போதைய நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமாரிடமும் பிரதமர் அலுவலகத்திடமும் 2017 அக்டோபரில் அளிக்கப் பட்டது.

இந்த கருத்தாக்கக் குறிப்பின் அடிப்படையில், நிதி ஆயோக் ‘சிறப்பு பணிக் குழு’ (STF-Special Task Force) ஒன்றை அசோக் தல்வாய் என்பவர் தலைமை யில் 2019 ஜனவரியில் அமைத்தது. இந்த நபரால்தான் சரத் மராத்தே என்பவரும் விவசாயத்துடன் சம்பந்தப் படாத பலரும் “விவசாய வல்லுநர்களாக” பொறுக்கி எடுக்கப்பட்டு, சிறப்புப் பணிக் குழுவின் முக்கியமான நபர்களானார்கள். இதே அசோக் தல்வாய் என்பவர் தான் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கு வது தொடர்பாக 2016 ஏப்ரல் 13 அன்று பிரதமரால் நிறு வப்பட்ட அமைச்சகங்களுக்கிடையிலான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் என்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் பேரணி ஒன்று நடைபெற்ற சமயத்தில் 2016 பிப்ரவரி 28 அன்று, இந்திய சுதந்திரப் போராட் டத்தின் 75ஆவது ஆண்டின் குறிக்கோளாக,  2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று நரேந்திர மோடியால் உறுதிமொழி அளிக்கப் பட்டு, அமைச்சகங்களுக்கிடையேயான குழு அமைக் கப்பட்டது என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும்.   விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது குறித்து அமைச்சகங்களுக்கிடையிலான குழுவின் பரிந்துரைகள், இயல்பாகவே பெரும் வர்த்தக நிறுவ னங்களுக்கு ஆதரவானவைகளாக இருந்தபோதிலும்,  அது ‘பல்வேறு ஆர்வலர்கள், பொருளாதார வல்லுநர் கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன்’ ஈடுபடுவ தன் மூலம் தன் முடிவுகளுக்கு ஒரு சட்டப்பூர்வமான அந்தஸ்தை அளிக்க விரும்பியது.

பதுக்கல் கார்ப்பரேட்டுகள்

ஆயினும், அசோக் தல்வாய் தலைமையிலான சிறப்புப் பணிக் குழு தன் நிகழ்ச்சிநிரலில் ஒளிவுமறைவு எதுவுமின்றி நேரடியாகவே அனைத்தையும் கூறி விட்டது. அது, பொறுக்கி எடுத்து கலந்தாலோசித்த மிகப் பெரிய கார்ப்பரேட்டுகள் யார் தெரியுமா? அதானி குழுமம், பதஞ்சலி ஆயுர்வேதம், மகிந்திரா குழுமம் மற்றும் பிக் பேஸ்கட் (Big Basket) என்பவைதான். “விவசாயத்திலிருந்து விவசாய வர்த்தகம் நோக்கிச் செல்வதற்கு இதுவே சரியான தருணம்” என்ற முடிவு டன் சிறப்புப் பணிக் குழு அடிப்படையில் பெரும் வர்த்த கப் பெரும்புள்ளிகளின் செய்தித்தொடர்பாளராக செயல்பட்டது. இன்னமும் வெளி உலகத்திற்கு அறி விக்கப்படாத சிறப்புப் பணிக் குழுவின் கார்ப்பரேட் ஆதரவு பரிந்துரைகள்தான் மோடி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட கொடுங்கோன்மைமிக்க விவசாய சட்டங்களை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்தன என்று ‘ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ வெளி யிட்டுள்ள புலனாய்வுகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றன. விவசாய உற்பத்திப் பொருட்களை பதுக்கிவைப் பது தொடர்பாக இருந்த கட்டுப்பாடுகளை எல்லாம் அகற்றுவதற்காக அரசாங்கத்துடன் ஏகபோக கார்ப்ப ரேட் நிறுவனங்கள், குறிப்பாக அதானி குழுமம், எவ்வா றெல்லாம் தந்திரமாகச் செயல்பட்டன என்பதை ‘ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ வெளியிட்டுள்ள புலனாய் வின் இரண்டாம் பகுதி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.

அதானி சொன்னார், மோடி செய்தார்

‘ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ வெளியிட்டுள்ள புல னாய்வுகளின்படி, வேளாண் அவசரச் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதற்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாகவே, 2022 வாக்கில் விவசாயிகளின் வருமா னத்தை இரட்டிப்பாக்கும் குறிக்கோளை அடைவது என்ற பெயரில் நிதி ஆயோக் கூட்டிய சிறப்புப் பணிக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்ட அதானி குழுமம், “அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், தொழில்முனை வோருக்கும், தொழிற்சாலை முதலாளிகளுக்கும் ஒரு தடையாக இருந்து வருகிறது,” என்று கூறியிருந் தது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை ஒழித்துக் கட்டுவதற்காக அதானி குழுமம் அதிகாரப்பூர்வமாக மேற்கொண்ட முதல் நடவடிக்கை இதுவாகும். அதானி குழுமத்தின் இந்தப் பரிந்துரையை மோடி அரசாங் கம், கொடுங்கோன்மைமிக்க விவசாய சட்டங்களை உருவாக்கும் சமயத்தில் சிரமேற்கொண்டு செயல் படுத்தியது. அரசின் அனைத்து நடைமுறை விதிகளையும் புறக்கணித்துவிட்டு, தங்களின் விசுவாசமான கார்ப்ப ரேட்டுகள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் கள்ளப் பிணைப்பினை ஏற்படுத்திக்கொண்டு, விவ சாயிகள் விரோத சட்டங்களைக் கொண்டுவந்தது தொ டர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழுவின் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கொடுங்கோன்மைமிக்க வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரலாறு படைத்தது 380 நாட்கள் நீண்ட நெடிய  போராட்டம். 735 விவசாயிகள் களத்தில் உயிர்த்தியா கம் செய்தார்கள். வீரத்துடன் போராடிய இந்திய விவசா யிகளைக் கொலை செய்த குற்றத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடியும் அவருடைய கூட்டுக்களவாணி முத லாளிகளும் தங்கள் கைகளை கழுவிக்கொள்ளமுடியாது. இந்திய விவசாயத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கார்ப்பரேட்மயமாக்கும் முயற்சிக ளை  மோடி அரசாங்கம் கைவிட வேண்டும். இல்லை யேல் அது விவசாயிகளின் ஒன்றுபட்ட எதிர்ப்பினை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 21.8.23, 
தமிழில்: ச.வீரமணி