articles

img

ஒன்றாதல் வேண்டும்; வென்றாதல் வேண்டும்! - எஸ்.கண்ணன்

நாடு முழுவதும் வெறுப்பு அரசியல், பிரி வினை முழக்கம், தீவிர அணி திரட்டல், தொடர்ந்து கலவரம், அந்த வெப்பத்தில் உருவாகும் வாக்குவங்கி என்ற கோணத்தில் பா.ஜ.க மற்றும் சங்பரிவார் அமைப்புகள் இயங்கி வரு கின்றன. மறுபுறம் இந்தியாவின் பெரும் கோடீஸ்வ ரர்களின் எண்ணிக்கையும், அவர்களின் சொத்து மதிப்பும் மிகப்பெரும் அளவில் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் 142 பில்லியனர்கள் உள்ளனர்.142 நபர்கள், கொண்டிருக்கும் சொத்து மதிப்பு 66.36 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையதாகும். இந்திய மக்கள் தொகை படி 142 நபர்கள் 0.00001 சதம் மட்டுமே ஆவர். இந்தியாவில் உள்ள வெறும் ஒரு சதம் பேரிடம், நாட்டின் சொத்து மதிப்பில் 40.6 சதம் சொத்துக்கள் உள்ளன. இது 2020 ஆம் ஆண்டு, 33.2 சதமாக இருந்தது. மக்கள் தொகையில் செல்வந்தர்களாக உள்ள 10 சதம் பேரின் சொத்து மதிப்பு, நாட்டின் சொத்து மதிப்பில் 72.5 சதம் ஆகும். மக்கள் இடையே மதம், சாதி, மொழி மற்றும் இன அடிப்ப டையிலான வேற்றுமைகளும், வெறுப்பும் வளர வளர, பெரும் செல்வந்தர்களின் செல்வ மதிப்பும், செல்வந்தர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வரு கிறது. உலகமயமாக்கல் காலத்தில், வெறுப்பு அரசி யல் பெரும் செல்வந்தர்களின் வளர்ச்சிக்கு பயன் பட்டுள்ளது, என ஆய்வாளர்கள் கூறுவது இந்தியப் பின்னணியில் கவனிக்கத்தக்கது. 

வெறுப்பு அரசியலும்  ஜெர்மனி, இந்திய அனுபவமும்

இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை; இதர மதத்தவர் சிறுபான்மை என்ற பிரச்சாரத்தை, பாஜக மேற்கொண்டு வருகிறது. கடந்த காலத்தில், ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராக வெறுப்பு அரசி யலை, பிரச்சாரத்தின் மூலமும் அரசு நடவடிக்கைகள் மூலமும் ஹிட்லர் கையாண்டது போலவே, தற்போது இந்தியாவில், மோடி தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வருகிறது. 1933ல் ஜெர்மனியின் மக்கள் தொகை 6.7 கோடி யாகும். அதில் யூதர்களின் எண்ணிக்கை வெறும் 5 லட்சத்து 5 ஆயிரம்தான். 1933ல் ஹிட்லரின் கொள்கை  மற்றும் தாக்குதல் காரணமாக, ஜெர்மனியில் இருந்து சுமார் 37 ஆயிரம் யூதர்கள் வெளியேறியதாக வரலாறு கூறுகிறது. அன்றைய ஜெர்மனியில் நூறுகோடி டால ருக்கு மேல் சொத்து உடையோரின் எண்ணிக்கை 20 ஆக இருந்துள்ளது. அவர்களின் பங்கு ஒட்டு மொத்த தேசத்தின் சொத்தில் 20 சதமாக இருந்துள் ளது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த நிலை யில், ஜெர்மனியில் பெரும் செல்வந்தர்களின் சொத்து  மதிப்பு, பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக ஜெர்மனியில் இருந்த பெரும் செல்வந்தர்கள் ஹிட்ல ரின் வெறுப்பு அரசியலையும், நாஜிக்கட்சியையும் ஆதரித்ததுடன், அதன் அரசியல் செல்வாக்கு உயர நிதி வழங்கியதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.  இரண்டாம் உலகப் போர் முடிவடையும் போது, ஜெர்மனியின் பி.எம்.டபுள்யூ, டைம்லர் (பென்ஸ்), சீமென்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களின் உரிமை யாளர்கள், தங்களின் செல்வ மதிப்பை உயர்த்திக் கொண்டனர். தொழிலாளர்களின் திறனுக்கு ஏற்ற ஊதியம் வழங்காதது உள்ளிட்ட சுரண்டல் நடவடிக்கை களால் பெரும் துயரத்தை சந்தித்தாலும், அது விவாத மாகவில்லை. அத்தகைய விவாதத்திற்கு அன்றைய ஜெர்மனியின் ஊடகங்களும் இடம் தரவில்லை (ஆதாரம்: ஆண்ட்ரூ வோரக் எழுதிய The Dark History of Germany’s Wealthiest Dynasties)

இத்தாலியில்...

இத்தாலி அனுபவமும் இது போன்ற விவரங்க ளை வெளிப்படுத்துகிறது. 1933-39 காலத்தில், 22 பெரும் கார்ப்பரேட் தொகுப்புகளில் இருந்து,  ஒவ்வொரு தொழிற்சாலையில் இருந்தும் பிரதிநிதி கள், முசோலினி அரசால் நாடாளுமன்றத்தின் உறுப்பி னர்களாக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவும்,  வேலைநிறுத்தம் செய்தால் கிரிமினல் குற்றத்திற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படத் தக்க வகையிலும், முசோலினி அரசு தனது ஆதரவை வெளிப்படுத்தியது.  மொத்தத்தில் ஒருபுறம் வெறுப்பு அரசியலை வளர்ப்பதையும், மறுபுறம் தொழிலாளர் உரிமை களைப் பறிப்பதையும், பெரும் முதலாளிகளின் செல்வ வளத்தை பெருக்குவதையும் நோக்கமாகக் கொண்டதே வகுப்புவாத அரசியல். அந்தவகையில், இந்தியாவின் மோடி தலைமையிலான பாஜக அரசு, ஜெர்மனியின் ஹிட்லரையும், இத்தாலியின் முசோலினியையும் பின்  தொடர்கிறது என்ற ஆபத்தை, இந்தியத் தொழிலா ளர் வர்க்கம் உணர வேண்டும்.

தொழிற்சங்கங்களை  குறி வைக்கும் பாஜக

“தொழிற்சங்கம் என்பது வர்க்கப் போராட்டத் திற்கான கருவியாக இருக்கக் கூடாது. மார்க்ஸ் கட்சியின ரும், யூதர்களும் தொழிலாளர் சங்கத்தை ஒரு கருவி யாக பயன்படுத்துவதையும், வேலை நிறுத்தம் போன்ற ஆயுதத்தையும் அறவே ஒழிப்பதில், நமது நாஜிக் கட்சியின் தொழிற்சங்கம் செயலாற்ற வேண்டும்” என்று ஹிட்லர் தான் எழுதிய மெயின் காம்ப் நூலில் குறிப்பிட்டுள்ளார். அது இன்றைய இந்திய சூழலில் ஒத்துப் போவதாக இருப்பதைக் காண முடியும். 1955ல் உருவான பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) தொழிற்சங்கங்களைப் பலவீனப்படுத்தும் நோக்கத் தைக் கொண்டு இருந்தது. அதன் முதல் தலைவர் தெங்கடி, முதலாளிகளுடன் இணைந்து தான் கூலிப் போராட்டத்தை நடத்த முடியும் என்றார். அதுமட்டு மல்ல, கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான தொழிற் சங்கம் மற்றும், சிவப்பு கொடி கொண்ட தொழிற் சங்கங்களின் வர்க்க போராட்டம் முறியடிக்கப்பட வேண்டும் எனக் கூறியவர்.  மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 2014ல் அமைந்த பின், தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை ஒடுக்கி வருகிறது. இந்தியத் தொழிலாளர் மாநாட்டினை கடந்த 2015க்கு பின்  இவர்களது அரசு நடத்திடவில்லை. 2020 கொரோனா பொது முடக்க காலத்தில், தொழிலாளர் சட்டங்களை திருத்தி அவசர உத்தரவுகளை பிறப்பித்து, விதிகளை யும் உருவாக்கி உள்ளது. 

பாஜக அரசின் இத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துப் போகும் வகையில், இந்தியாவில் உள்ள இதர முத லாளித்துவக் கட்சிகளும் தொழிலாளர் கொள்கைக ளில் ஒன்றாக செயல்படுகின்றன. தொழிற்சங்கங்க ளை கட்டுப்படுத்துவதன் மூலம், முதலாளிகளுக்கான தாராளமய ஆதரவு கூடுதலாக வெளிப்படுகிறது. குறிப்பாக வேலைவாய்ப்பை நிரந்தரம், தற்காலிகம், காண்ட்ராக்ட், பயிற்சி, நீம், குறிப்பிட்ட காலத்திற் கான வேலை என்ற பல பெயர்களில், தொழிலாளர்க ளின் சமூகப் பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும் நிரந்தரமற்றதாக மாற்றி வருகிறது. முதலாளிகளின் லாபம் நிரந்தரமாகவும், உழைப்பு சக்தியை விற்கும் தொழிலாளர்கள் நிரந்தரமற்றவர்களாகவும் புதிய சமூக அடுக்கு கட்டமைக்கப்படுகிறது. எனவே இடது சாரி தொழிற்சங்கங்கள் வலுப்பெறுவதும், கூட்டான கிளர்ச்சிகளை, எழுச்சிகளை மேற்கொள்வதும் மிக அவசியமாகும். 

சிஐடியு அமைப்பும் –  ஒன்றுபட்ட போராட்டங்களும்

அத்தகைய முயற்சிகளை - போராட்ட இயக்கங்க ளை தமிழகத்தில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) உறுதியுடன் மேற்கொண்டு வருகிறது. சிஐடியுவின் 14வது மாநில மாநாடு, காஞ்சிபுரம் நகரில் 2019, செப் 19,20,21,22 தேதிகளில் முழுவதும் தொழிலாளர்களின் நிதிப் பங்களிப்புடன் நடந்தது. தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் போ ராட்டக் களமாக விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் போராடி வெற்றி பெற்ற தொழிலாளர்கள், தங்களின் அமைப்பு மாநாட்டிற்கு நிதி தருவதை சிரமமாக கருதவில்லை. ஹூண்டாய், பி.எம்.டபுள்யூ ஆகிய கார் தொழிற்சாலைகளில் நடந்த போராட்டங்கள், அப்பல்லோ மற்றும் ஜே. கே. டயர்ஸ், யமஹா, ராயல் என்பீல்டு, எம்.எஸ்.ஐ, அசாஹி, கப்பரோ ஆகிய வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களில் 2017, 2018 மற்றும் 2019ல் நடந்த போராட்டங்களின் கனல் குறையா மல் இருந்தது. டாங்சன், சோவெல் போன்ற கொரிய ஆலைகளின் திடீர் மூடல் ஏற்படுத்திய தாக்கம் அதீதமானது. நள்ளிரவில் தொழிலாளர்களும் தொழி லாளர் குடும்பத்தினரும் கைது; சி.ஐ.டி.யு தலை வர்களும் நள்ளிரவில் தொழிலாளர் உரிமைக்காக குரல் எழுப்பி கைதானதும், கண்டித்த ஆர்ப்பாட்டங்க ளும் முதலாளிகளுக்கு மட்டுமல்ல; அன்றைய அதிமுக ஆட்சியாளர்களுக்கும், காவல் துறைக்கும் தீரா எரிச்சலை அளித்தது என்றால் மிகை அல்ல. அதே போல் ஃபாக்ஸ்கான், நோக்கியா சீமென்ஸ், பர்பட்டி வான்மேலா போன்ற மறைமலை நகர் பகுதியில் உள்ள ஆலைகளில் நடந்த வேலைநிறுத்தங்களும், தொழிலாளர்கள் மத்தியில் சி.ஐ.டி.யு மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. இவை அனைத்தும் சேர்ந்து,  கடந்த மாநில மாநாட்டின் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தை பெரும் வெற்றியாக மாற்றி இருந்தன. 

மேலே கூறியவை தொழிற்சங்கம் அமைத்த பின் நடந்த தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் என்றால், 2021ல் ஃபாக்ஸ்கான் நிர்வாகம் வேறு பெயரில் பல்லா யிரம் பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொடும் உழைப்புச் சுரண்டலை நடத்திய போது, முன்னுக்கு வந்த தன்னெழுச்சிப் போராட்டமும் இன்றைய தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளித்த ஒன்று. டிசம்பர் 17, நள்ளிரவு துவங்கி, மறுநாள் மாலை வரை நீடித்த இந்த போராட்டத்தில், சி.ஐ.டி.யு பங்க ளிப்பே, தொழிலாளர்களை அரணாக காத்து நின்றது.  இத்தகைய வேலைநிறுத்தங்களில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் பங்கேற்பும் சாதாரண நிகழ்வுகள் அல்ல. தொழிற் சங்கங்களின் ஒற்றுமை என்ற முழக்கம் உள்ளார்ந்து உணர்ந்த ஒன்றாக ஒவ்வொரு போராட்டத்திலும் பிரதிபலித்தது. 

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் பல தொழில் நிறுவனங்களில் சி.ஐ.டி.யு செயல்பட்டாலும், வெளிப்படையாக ஒரு அனுபவம் பகிரப்பட வேண்டி யுள்ளது. ஒரு ஆலையில் சிஐடியு சங்கத்தின் தலைவ ராக, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தில் தீவிர செயல்பாடு கொண்டவர்; செயலாளராக புரட்சி பாரதம் என்ற தலித் அமைப்பின் ஒன்றிய செயலா ளர் பொறுப்பு வகிப்பவர்; பொருளாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட மாணவர் அணி செயலா ளர் பொறுப்பில் இருந்தவர்- இவர்கள் சிஐடியு சங்கப் பொறுப்புகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அமெரிக்க நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைத்த காரணத்திற்காக நிரந்தர வேலைநீக்கம் செய்யப்பட்ட னர். ஆனால் அந்த மூன்று தொழிலாளர்களின் மீதான நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி சாதி, மதம், மொழி கடந்து அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தனர். அதில் வெற்றியும் பெற்றனர்.  அண்மையில் யமஹா நிறுவனத் தொழிலாளர்கள் 10 நாள்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்த போது, யமஹா விற்பனை நிறுவனங்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் இருந்த இதர தொழிற்சங்கங்களின் முயற்சி பெரும் பாராட் டுக்குரியது. இத்தகைய செறிவுமிக்க போராட்ட அனு பவங்களில் இருந்துதான் வகுப்புவாத பிளவுகளை யும், கார்ப்பரேட் முதலாளிகளின் பிரித்தாளும் கொள் கைகளையும் எதிர்த்து, சி.ஐ.டி.யு முழங்குகிறது “ஒன்றாதல் வேண்டும். உரிமைகளை வென்றாதல் வேண்டும்” என்று!

நாடு முழுவதும் இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) அமைப்பு மாநாடுகள் நடந்து வருகிறது. நவம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில், தமிழ்நாடு மாநில பிரதிநிதிகள் மாநாடும், நாகர்கோ விலில் பேரணி மற்றும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. ஒன்றாதல் வேண்டும் உரிமைகளை வென்றா தல் வேண்டும், என்ற முழக்கம் தமிழகம் முழுவதும் ஒலித்து வருகிறது. ஒன்றிய பாஜக அரசு, சமூகப் பிரிவினையை உருவாக்கி வரும் அதேவேளையில், ஒன்றுபட்ட போராட்டத்தை வலுப்படுத்துவதில் தொழி லாளி வர்க்கமும், தொழிற்சங்கங்களும் ஒன்றுபட சிஐடியு அறை கூவி அழைக்கிறது. 

கட்டுரையாளர்: சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர்