உலகத்தின் ஏதாவது ஒரு மூலையிலாவது இப்படி ஒரு நிகழ்வு நடந்தேறி இருக்குமா..? என்ற கேள்வி திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கிறது. உயிருடன் இருக்கும் போதே, தங்களின் மரணத்திற்கு பின் எங்களின் நால்வரின் உடலை ஒரே குழியில் புதையுங்கள் என்று யாரேனும் சொல்லியது உண்டா? 1948 பிப்ரவரி மாதம் காரல் மார்க்சும், ஏங்கல்சும் வெளியிட்ட கம்யூ னிஸ்ட் அறிக்கையின் இறுதி வரிகள் இப்படித்தான் முடிகிறது. உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள். இந்த அறிக்கை ஏற்படுத்திய அதிர்வலைகள் ஏராளம். இந்த வார்த்தை கள் உலக முதலாளித்துவத்தை அதிரச்செய்தது. பின்னர் நடைபெற்ற புரட்சியும், எழுச்சியும் உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கத்தை விழிப் படையச்செய்தது என்றால் அது மிகையல்ல.
கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 100 ஆண்டுகளை நெருங்குகிற நேரத்தில் தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை வலி யுறுத்தி கோவையில் இருந்து தூக்கு மேடை ஏறும் நிகழ்வில் சின்னியம் பாளையம் தியாகிகள் வெங்கடாசலம், ரங்கண்ணன், ராமையன், சின்னை யன் ஆகிய நால்வரும் ஒருசேர நமது தலைவர்களிடம் முன்வைத்த வீர முழக்கம் தான் எங்கள் நால்வரையும் ஒரே குழியில் புதையுங்கள். நாங்கள் போராடுகிற மக்களுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும். வர்க்க ஒற்று மையின் அடையாளமாக எங்கள் புதைகுழி இருக்கட்டும் என்பதே. இளம் வயது தோழர்களால் எப்படி இப்படி சிந்திக்க முடிந்தது? பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றோரின் வீர மரணமும் அதன் பிந்தைய நிகழ்வுகளும் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கேரளாவில் கையூர் தியாகிகள் நான்கு பேரும் இளம் தோழர்களே. 1943 மார்ச் மாதம் இவர்கள் தூக்கு மேடை ஏறும் போது வர்க்க ஒற்றுமையை வலி யுறுத்தினார்கள். இதேபோன்றே, சின்னியம்பாளையம் தியாகிகளும், ஒரு படி மேலே போய் வர்க்க ஒற்றுமையின் அடையாளமாய் எங்கள் நால்வரின் உடலை ஒரே குழியில் புதையுங்கள் என்றனர். உலகில் எங்கிலும் நடந்திராத ஒரு நிகழ்வு.
கோவையின் தேசிய நெடுஞ்சாலையில் சின்னியம்பாளையம் கிரா மத்தை கடக்கும்போதெல்லாம் இவர்களின் நினைவுகள் நம்மை உரசிச் செல்லும். தூக்கு மேடை ஏறி 76 ஆண்டுகள் கடந்த பின்னும் அவர்களின் கடைசி வரிகள் நம்மை நோக்கி கேள்விகளாக எழுகின்றன. இவர்கள் நால்வரும் பணியாற்றிய ரங்கவிலாஸ் மில் 1970களில் ஒன்றிய அரசு கையகப்படுத்தி தேசிய பஞ்சாலை கார்ப்பரேஷன் ஆக மாற்றப் பட்டு இயங்கி வந்தது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் மூடப்பட்டு 33 மாதங்கள் ஓடிவிட்டன. நாடு முழுவதும் உள்ள ஆலைகள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்களை உள்ளடக்கியவை. கோவையில் 5 மில்களிலும் நாடு முழுவதும் 23 ஆலைகளிலும் பல்லாயிரம் தொழிலாளிகள் வேலை இழந்து வருமானம் இழந்து வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். ஒன்றிய அரசின் மிக மோசமான பொரு ளாதாரக் கொள்கைகளே இதன் பின்னணியில் உள்ளது. லாபம் ஈட்டும் நிறுவனங்களையே விற்பனை செய்யும் போது, நஷ்டம் அடைந்த ஆலை களை எப்படி இவர்கள் பார்ப்பார்கள் என்று நமக்கு புரிகிறது.
மோடி தலைமையிலான ஒரு மதவெறி அரசு, தொழிலாளர் விரோத அரசாக செயல்படுவதால், நூறு ஆண்டுகள் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற, எண்ணற்ற தியாகங்களை செய்து பெற்ற 44 தொழி லாளர் நலச் சட்டங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தம் செய்துள்ளது. கடந்த காலங்களில் சட்டங்கள் இருக்கும்போதே இந்திய பெரு முதலாளிகளும் இவர்களை ஆதரித்த அரசும் அவற்றை அமலாகாமல் பார்த்துக் கொண்டனர். தொழிற்சங்க இயக்கங்களின் பெரும் போராட்டங்களின் மூலமாக ஒவ்வொன்றையும் பெற போரா டித்தான் பெற்றோம். தற்போதைய நிலைமையில் வேலை வாய்ப்புகள் அனைத்தும் தினக் கூலி, காண்ட்ராக்ட், ஒப்பந்த முறை, அவுட்சோர்சிங் என மாற்றப்பட்டு பணி நிரந்தரம் என்பதையே இல்லாமல் செய்துள்ளனர் ஆட்சியாளர் கள். 1990 இல் உலகமயம் வரும் வரை நாம் யாரிடம் பணியாற்றுகிறோம், நமது முதலாளி யார் என்று ஒவ்வொருவருக்கும் தெரியும். தற்போது தனது முதலாளி யார் என்று தெரியாமல் யாரை எதிர்த்து எப்படிப் போராடுவது என்று தெரியாத நிலை பல இடங்களில் உருவாகியுள்ளது. அரசுத்துறை சார்ந்த பணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. புதியபுதிய அரசாணைகள் போடப்பட்டு தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவ மனைகளில் ஈஎஸ்ஐ மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்கள் அவுட்சோர்சிங் மூலம் வேலைக்கு எடுக்கப்பட்டு குறைந்தபட்ச கூலியில் சரி பகுதி கூலியை கொடுத்து பணியமர்த்தினார்கள். இவர்கள் அனைவ ரும் ஒன்றிய மோடி அமைச்சரவையில் முதன்மை இடத்தில் இருப்பவர்க ளின் பினாமிகள். இதன் தொடர்ச்சியாக தான் அரசாணை 152 வெளி யிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பில் தூய்மைப் பணியாளர் துவங்கி அனைத்துப் பணியிடங்களும் அவுட்சோர்சிங் விடப்பட்டுள்ளது. இதன் விளைவு அடித்தட்டு உழைப்பாளி மக்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு உள்ளிட்ட அனைத்து சட்ட சமூக பாதுகாப்புகளும் பறிக்கப்பட்டுள்ளன. திறமை இருந்தால் வேலை செய்து பிழைத்துக்கொள், இல்லையெனில் கையேந்தி பிழைத்துக் கொள் என்று தொழிலாளர் வாழ்நிலை மாற்றப்பட்டு வருகிறது. கல்வி, மருத்துவம், உறைவிடம், வேலைவாய்ப்பு முழுவதும் வணிக மயமாக மாறிப் போய் உள்ளது. இவைகளை எதிர்த்துப் போராட வேண்டிய உழைக்கும் வர்க்கம் ஜாதி, மத, மொழி, இனம், கலாச்சாரம் என பிரிந்து சிதைந்து கிடைக்கிறது. புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களைக் கூட கட்டி அணைத்து காப்பாற்றுவதற்கு பதிலாக விரோதியாக பார்க்கப் படுகிறது.
மிக மோசமான சமூகச் சூழல் நிலவுகின்ற நேரத்தில் தான் சின்னியம் பாளையம் தியாகிகள் 77 ஆண்டுகளுக்கு முன்னதாகச் சொன்னதும், 175 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த கம்யூனிஸ்ட் அறிக்கையும் உழைக்கும் வர்க்கமே ஒன்றுபடு என்கிற முழக்கம். உலகத் தொழி லாளர்களே ஒன்று சேருங்கள் என்ற முழக்கம் நம்மை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஜனவரி 8ஆம் தேதி சின்னியம்பாளையம் தியாகிகளின் மேடையின் முன் நாம் நிற்கும் போது, வீரவணக்கம் செலுத்தும் போது, சிறப்பான அஞ்சலி எதுவாக இருக்க முடியும்? அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஆலைகளில் அடியாட்களையும் ரவுடிகளையும் வைத்து தொழிலாளி களை மிரட்டிப் பணிய வைத்து வேலை வாங்கினார்கள். ஆண், பெண் என்று பாராமல் உழைக்கும் வர்க்கத்தை சுரண்டி கொழுத்தது முதலாளி வர்க்கம், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறின. இதனை செய்த பொன்னான் என்ற ரவுடியை எதிர்த்து தியாகிகள் நால்வ ரும் சண்டையிட்டார்கள்.
போராட்டத்தின் பின் நடந்த பொன்னான் என்ற ரவுடியின் மரணம் கொலை வழக்காக மாற முதலாளிகள் இதை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி வெங்கடாசலம், ரங்கண்ணன், சின்னையன், ராமையன் ஆகியோர் தூக்கு மேடைக்கு செல்ல நேரிட்டது. நான்கு பேரும் செங்கொடியின் புதல்வர்கள், இவர்களை அழித்து விட்டால் செங்கொடியை அழித்து விடலாம் என நினைத்தார்கள். தூக்கு மேடை ஏறுவதற்கு முந்தைய நாள் இவர்களை நமது தலை வர்கள், பி.ராமமூர்த்தி, கே.ரமணி, ஆர்.பூபதி ஆகியோர் கண்கலங்கிய வாறு சந்தித்தனர். ஆறுதலாக நாலு வார்த்தை பேசச் சென்ற தலை வர்களிடம், இவர்கள் ஒரு கோரிக்கையை முன்வைத்தனர். முதலாளித்துவத்தை வீழ்த்துவது, வர்க்க ஒற்றுமையை உயர்த்திப் பிடிப்பது, ஊழியர்களை உருவாக்குவது, பயிற்சி அளித்து வளர்ப்பது, வலு வான கட்சியை கட்டுவது என்று தியாகிகள் முன்வைத்த முழக்கங்கள் இன்றும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே உள்ளது. தியாகிகள் மேடையில் நாம் முழங்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் அளிப்போம். செயல் எதுவோ அதுவே சிறந்த சொல்லாக மாற்று வோம். முதலாளித்துவ கார்ப்பரேட் மதவெறி அரசியலுக்கு முடிவு கட்டுவோம். அதுவே தியாகிகளுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.