திருப்பூர் சாயஆலை உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கிராமமாக இருந்த திருப்பூர் இன்று மாவட்ட தலைநகரமாக மாறுவதற்கு, பின்னலாடை துறையின் அபரிமிதமான வளர்ச்சியே கார ணம். வளர்ச்சியின் பின்னணியில் சாய ஆலை களின் பங்கு மிகவும் முக்கியம். சாய ஆலை கள் பின்னலாடை ஏற்றுமதிக்கு முதுகெலும் பாய் விளங்கி வருகின்றன. 1980 ஆம் ஆண்டு இருந்த சாய ஆலைகளின் எண்ணிக்கை 5 ஆகும். பின்னர் பின்னலாடை ஏற்றுமதியின் வளர்ச்சிக்கு ஏற்ப சாய ஆலைகளின் எண் ணிக்கையும் அதிகரித்தன. 2010ஆம் ஆண்டு இருந்த சாய, சலவை ஆலைகளின் மொத்த எண்ணிக்கை 752 ஆகும். அவை அனைத்தும் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஒரே நாளில் மூடப்பட்டன. பின்னர் 2012ஆம் ஆண்டு ஒன்றி யத்தில் பூஜ்ய நிலை சுத்திகரிப்பு திட்டம் அமல் படுத்த்த்ப்டுத்தப்பட்டு மீண்டும் செயல்பாட் டிற்கு வந்தன. ஆனால் சுமார் பாதி சாய, சலவை ஆலைகள் மட்டுமே மீண்டும் செயல்படத் தொடங்கின.
தற்பொழுது 18 பொது சுத்திகரிப்பு நிலை யங்களின் கீழ் 300 சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. மற்றும் 60 தனியார் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் 100 சத வீதம் பூஜ்ய நிலை சுத்திகரிப்பு திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வரும் சாய ஆலைகளின் செயல்பாட்டைப் பாதிக்கும் வித மாக, ஈரோடு, மதுரை, தேனி, ராஜபாளையம் போன்ற ஊர்களில் முறையான அனுமதி இல் லாமல் சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. மேலும் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் குறிப்பாக பெங்களூரு, மைசூரு ஆகிய ஊர்களில் காவிரி ஆற்றின் கரையோரங் களில் முறையான அனுமதி இல்லாமல் செயல் படும் சாய ஆலைகள் மூலமாக சாயமிட்ட துணி களும் தினசரி திருப்பூருக்கு வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்தினால்தான் பெரிய முத லீட்டில் பூஜ்ய நிலை சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்தி வரும் சாய ஆலைகளைக் காப் பாற்ற முடியும். 2011 ஆம் ஆண்டு, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று திருப்பூர் சாய ஆலைகளுக்கு புத்துயிர் கொடுப்பதற்காக அன்றைய தமிழக முதல்வர் ரூ.200 கோடி வட்டியில்லா கடனை திருப்பூரி லுள்ள 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொடுக்க ஆணையிட்டார். திருப்பூரிலுள்ள 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களிலும் பூஜ்ய நிலை சுத்திகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த அந்த நிதி மிகவும் உதவியாக இருந்தது. தற்பொழுது அனைத்து தனியார் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையங்களும் பூஜ்ய நிலை சுத்திகரிப்பு திட்டத்தை செவ்வனே செயல் படுத்துவதால் தினசரி சுமார் 12 கோடி லிட்டர் தண்ணீர் மறு சுழற்சி மூலம் பயன்படுத்தப்படு கிறது. இதனால் நொய்யல் ஆறு மற்றும் நீர் நிலைகள் மாசுபடுவது முற்றிலுமாக தவிர்க்கப் பட்டுள்ளதோடு, தினசரி 12 கோடி லிட்டர் தண் ணீர் சேமிக்கப்படுகிறது.
ஆனால், இதற்காக தனியார் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் முதலீடு செய்துள்ள தொகை சுமார் ரூ.2500 கோடி ஆகும். மாதந் தோறும் கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு ஆகும் மொத்த செலவு சுமார் ரூ.60 கோடி ஆகும். இதில் சுமார் 40 சதவீதம் மின்சாரத்திற்கு மட்டும் செலவாகிறது. பூஜ்ய நிலை சுத்திகரிப்பு திட் டத்தை அமல்படுத்தியதால் சாய தொழிற் சாலைகள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்சனைகள் பின்வருமாறு:
1. சாய கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீது 12 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது.
2. அதிகப்படியான மின்சார கட்டணம்.
3. அதிநவீன இயந்திரங்களுக்கான முதலீட்டு மானியத்தை 2022 மார்ச் 31 முதல் ரத்து செய்தது.
4. சாய கழிவு நீர் சுத்திகரிப்பின் பொழுது உருவாகும்
திடக்கழிவுகளை வெளியேற்
றுவதற்கு சரியான தொழில் நுட்பம் கண்டறியப்படாமை.
5. வாஷிங், பட்டன் மற்றும்
ஜிப் டையிங் செய்யும் குடி
சைத் தொழில் முனை
வோரை முறைப்படுத்தாமை.
தீர்வுகள்:
1. சாய கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீது விதிக்கப்படும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
2. 50 சதவீத மானிய விலையில் தனியார் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்சாரம் வழங்குதல்.
3. அதிநவீன இயந்திரங்களுக்கான முதலீட்டு மானியத்தை 2022 மார்ச் 31 முதல் பின் தேதியிட்டு ஏற்கெனவே வழங்கப்பட்டது போல மானியம் வழங்குதல்.
4. ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு சாய கழிவுநீர் சுத்திகரிப்பின்பொழுது உருவாகும் திடக்கழிவுகளை வெளியேற்றுவதற்கு சரியான தொழில் நுட்பங்களை உடனே கண்டறிய வேண்டும்.
5. பட்டன் மற்றும் ஜிப் டையிங் செய்யும் குடிசைத் தொழில் முனைவோர்கள் ஒரு குறிப்பிட்டுள்ள வளாகத்திற்குள் மட்டும் இயங்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.
1. சாய கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீது 12 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது.
2. அதிகப்படியான மின்சார கட்டணம்.
3. அதிநவீன இயந்திரங்களுக்கான முதலீட்டு மானியத்தை 2022 மார்ச் 31 முதல் ரத்து செய்தது.
4. சாய கழிவு நீர் சுத்திகரிப்பின் பொழுது உருவாகும்
திடக்கழிவுகளை வெளியேற்
றுவதற்கு சரியான தொழில் நுட்பம் கண்டறியப்படாமை.
5. வாஷிங், பட்டன் மற்றும்
ஜிப் டையிங் செய்யும் குடி
சைத் தொழில் முனை
வோரை முறைப்படுத்தாமை.
தீர்வுகள்:
1. சாய கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீது விதிக்கப்படும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
2. 50 சதவீத மானிய விலையில் தனியார் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்சாரம் வழங்குதல்.
3. அதிநவீன இயந்திரங்களுக்கான முதலீட்டு மானியத்தை 2022 மார்ச் 31 முதல் பின் தேதியிட்டு ஏற்கெனவே வழங்கப்பட்டது போல மானியம் வழங்குதல்.
4. ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு சாய கழிவுநீர் சுத்திகரிப்பின்பொழுது உருவாகும் திடக்கழிவுகளை வெளியேற்றுவதற்கு சரியான தொழில் நுட்பங்களை உடனே கண்டறிய வேண்டும்.
5. பட்டன் மற்றும் ஜிப் டையிங் செய்யும் குடிசைத் தொழில் முனைவோர்கள் ஒரு குறிப்பிட்டுள்ள வளாகத்திற்குள் மட்டும் இயங்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.
வேண்டுகோள்
திருப்பூரிலுள்ள சாய ஆலைகளில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். பின்னலாடை உற்பத்தி துறை யில் பணியாற்றி வரும் சுமார் 3 லட்சம் தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், திருப்பூர் சாய ஆலைகளை பாதுக்காகவும் இந் தியா முழுவதும் திருப்பூரைப் போன்று பூஜ்ய நிலை சுத்திகரிப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் முன் வைக்க வேண்டும் என்று சாயஆலை உரிமை யாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.காந்தி ராஜன் வலியுறுத்தினார்.