ஆங்கியேலயர்களுக்கு கோயம் புத்துர் ஒரு முக்கிய நகரமாக திகழ்ந்தது. கேரளாவின் நுழைவு வாயிலாக கோவை இருந்த காரணத்தினாலும், இயற்கை எழில் வளங்களும், ஐரோப்பிய சூழலையொட்டிய மிதமான தட்பவெட்ப நிலைமையும் ஆங்கிலேயர்கள் கோவை யின் மீது தனிக் கவனத்தை செலுத்தினர். ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம் பெனி 1765 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் கால் பதித்தது. 1768ல் கோவையை தன் வசப்படுத்து வதற்கான முயற்சியில் இறங்கியது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெற முடிய வில்லை. இரண்டாவது 1783 ஆம் ஆண்டு தளபதி புலார்டன் தலைமையில் கோவை முற்றுமையிட்டு கைப்பற்றிக் கொண்டாலும், திப்பு சுல்தானுடன் ஏற்படுத்திக் கொண்ட மங்களுர் உடன்பாட்டின்படி கோவையை திப்புவிற்கு திருப்பிக் கொடுத்து விட நேர்ந் தது. ஆங்கிலேயரிடமிருந்து கோவையை மீட்பதற்காக இரு முறை ஆங்கிலேயப் படைகள் மிது திப்பு போர் தொடுத்தார். முதல் முறை படைத்தளபதி காரிசன் தலைமையி லான ஆங்கிலேய படையை தோற்கடித்து தளபதி காரிசனை சிறைக்கைதியாக மைசூ ருக்கு அழைத்துச் சென்றனர். அந்தப் போரில் 100க்கும் மேலான ஆங்கிலப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். 1799 ஆம் ஆண்டு மைசூர் போரில் திப்பு ஆங்கிலேயப் படைகளால் கொல்லப்பட்டதற்கு பிறகே கோவையை ஆங்கிலேயர்கள் மீட்டனர். திப்புவின் கோவை கோட்டையை தகர்த்தெரிந்தனர். திப்புசுல்தான் ஆட்சியில் கோயம்புத் தூர் தனக்கு விருப்பமான இடமாக தேர்வு செய்திருந்தார். திப்புவின் படைகள் நிரந்தர மாக இருக்கும் வகையில் கோவையில் படைக்களமும் கோட்டையும் கட்டப்பட்டி ருந்தது.
1789ல் திருவாங்கூரை கைப்பற்றுவதற் கான முடிவினை எடுத்தார். இதற்காக கோவையிலிருந்து 30 ஆயிரம் காலாட் படை, 5 ஆயிரம் குதிரைப்படை வீரர்கள் மற் றும் 20 பீரங்கி படைகளுடன் திப்புவின் படை கொச்சியில் அணிவகுத்தது. தற்போது அந்த இடம் படை முகாம் என்று அழைக்கப் படுகிறது. திருவாங்கூரை நோக்கி தாக் குதலை தொடங்கினார் அது தான் புகழ் பெற்ற நெடுங்கொட்டா போர் என அழைக் கப்பட்டதாக கேரள வரலாற்றுப் பதிவிலி ருந்து அறிய முடிகிறது. இப்போதும் கோவை உக்கடம் பகுதியினை கோட்டை மேடு என்று அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது பாளையக்காரர்கள் போர்
மன்னர்களைக் காட்டிலும் கிராமப்புறங் களில் நேரடியான ஆட்சி அதிகாரத்தில் பாளையக்காரர்களே இருந்தனர். இந்திய மன்னர்களிடையே இருந்த பகைமை உணர்வுகளையும் பிரிந்து காணப்பட்ட சமூகங்களையும் கண்ட ஆங்கிலேயர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவும் முனைந்தனர். வியாரபாரத்தை விரிவு படுத்த பரந்த நிலப்பரப்பின் தேவையை யொட்டி மன்னர்களுடன் இனக்கமாக பேசி நிலங்களை கைப்பற்றினர். இதற்கு பதி லாக மன்னர்களுக்கு அவர்கள் ஏற்கனவே இருந்த வந்த அதிகாரங்களையும், சுக போக வசதிகளையும் தொடரச் செய்தனர். தங்களுக்கு அடங்க மறுத்தவர்களை படை பலத்துடன் எதிர்கொண்டனர். 1763 ல் தஞ்சாவூர் ஒப்பந்த மூலமும், 1787 ஆம் ஆண்டு கர்நாடக நவாப் முக மது அலி உடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப் பந்தங்கள் மூலமாகவும் தமிழகம் முழுமை யும் ஆட்சி அதிகாரத்தையும் வியாபா ரத்தை ஆங்கிலேயே கிழக்கு இந்திய கம் பெனி விரிவுப்படுத்திக் கொண்டது. இதன் விளைவாகவே பாளையக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையேயான இரண்டு பாழையக்காரர்கள் போர்கள் வர லாற்றில் நிகழ்ந்தன. தங்களுக்கு கீழ்படிந்து வரி செலுத்த மறுப்பதை எதிர்த்து கட்டபொம்மன் மீது ஆங்கில படைகள் போர் தொடுத்தது. போரின் இறுதியில் எட்டப்பனின் துரோ கத்தனத்தால் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். தங்களின் ஆக்கிரமிப்பு கொள்கைக்கு சிம்ம சொப்பனமாக இருந்த திப்புவையும் மூன்றாவது மைசூர் போர் களத்தில் கொன்று மைசூரை கைப்பற்றிய ஆங்கிலேயர்களுக்கு இப்போது தென்னிந் திய நிலப்பரப்பை முற்றுகையிடுவதற்கு எதிராக இருந்த. ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளின் மீது மிகக் கடுமையான அடக்குமுறைகளை ஏவினர்.
இதன் தொடர்ச்சியாகவே ஆங்கிலேயர் களை பழிவாங்கவும் மீண்டும் பாஞ்சலங் குறிச்சி கோட்டையை கைப்பற்றவும் கட்ட பொம்மனின் சகோதரர் ஊமைத்துரை மற் றும் மருதுசகோதரர்கள் ஆங்கில ஏகாதி பத்தியத்திற்கு எதிராக அணி திரட்டினர். இவர்களுடன் திண்டுக்கல் பாளையக்காரர் கோபால நாயக்கர், மனப்பாறை பாளையக் காரர், மைசூர் சிமோகாவின் தூண்டாஜி, மலபார் அரசர் பாளசி ராஜா, தீரன் சின்ன மலை, கோவையின் கான் இ ஜகான் ஆகி யோர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக முன் னணியினை அமைத்தனர். போராளிகளின் தலைவர்கள் 1800 ஏப்ரல் 29 ஆம் தேதி பழனியை அடுத்துள்ள விருப்பாச்சியில் சந்தித்து ஆங்கிலேயர் களை கூட்டாக படை பலத்துடன் ஆங்கி லேய துருப்புக்களின் மீது தாக்குதல் தொடுப் பது என முடிவெடுத்து முதலில் கோயம்புத் தூரில் ஆங்கிலப் படைகள் மீது தாக்குதல் நடத்த தேர்வு செய்து தாக்குதலை தொடுத் தனர். எதிர்பாராத தாக்குதலில் ஆங்கிலே யப் படைகள் நிலைகுலைந்தன. அதனை யொட்டியே கோவை, சத்தியமங்கலம். தாராபுரம் போன்ற இடங்களில் முகாமிட்டி ருந்த ஆங்கிலப் படைகளை பாளையக்கா ரர்களும் மற்றும் ஆதரவுப்படைகளும் தாக்குதல்களை தொடுத்தன. இத்தகைய போர்கள் வரலாற்றில் புகழ்பெற்றவை களாகும்.
திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர் ராம நாதபுரம் உட்பட பிற இடங்களிலும் ஆங்கி லப் படைகளை தாக்கி தோற்கடித்தனர். இந்த படைகளுடன் உள்ளுர் படைகளும் சேர்ந்து கொண்டன. ஓராண்டு காலத்திற் கும் மேலாக நீடித்திருந்த போர் இறுதியில் மருதுபாண்டியரும் ஆதரவாளர்களும் பாளையக்காரர்களோடு துணை நின்ற தீரன் சின்னமலை உள்ளிட்ட போராளிகள் தூக்கிலிடப்பட்டு சுதந்திர போராட்டம் நசுக் கப்பட்டது. இதற்கு பின்னரே தமிழகத்தை ஆங்கிலேயர்கள் தங்களுடைய கட்டுப்பாட் டிற்கு கொண்டு வந்தனர். ஆங்கில ஏகா திபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் கோவை வரலாற்றில் தடம் பதித்துள்ளது.
-எஸ்.ஏ.மாணிக்கம்