articles

img

சங்கரய்யா பாதையில் புரட்சிப் பயணம் தொடர்வோம்!

சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர்  ஏ.கே.பத்மநாபன்

இந்திய உழைப்பாளி மக்களின், விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர போராடிய, விவசாயிகள் சங்கத்தை உருவாக்க அயராது பாடுபட்ட மாபெரும் தலைவர் தோழர் சங்கரய்யா. அவர் உயர்த்திப் பிடித்த பாதையில் இந்தியப் புரட்சிக்கான பயணத்தை உறுதியோடு தொடர்வோம்.

திராவிடர் கழக தலைவர்  கி.வீரமணி 

அனைவரது ரத்தத்திலும் சங்கரய்யா உறைந்திருக் கிறார். தனது இறுதிமூச்சு வரை போராளியாக களமாடினார். திறந்த புத்தகம், இனிமை, எளிமை, கொள்கை, உறுதி, சமரசமற்ற பொதுவாழ்க்கை என்பதன் அடையாளமாக அவர் திகழ்ந்தார். ஆட்சியில் யார் இருந்தாலும் அந்த அரசுக்கு எதிராக போராடியவர். ஆனாலும் திமுக ஆட்சி பொறுப் பேற்றவுடன் அவரது தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி கவு ரவித்தது. உழைப்போர்களுக்கான சங்கரய்யாவின் கரம் யார் கையால் டாக்டர் பட்டம் பெறக்கூடாதோ அது நடந்தேறி யுள்ளது என்று பெருமைப்பட வேண்டும். சங்கரய்யா மறையவில்லை, அவரின் கொள்கைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நாம் அவரது கொள்கைகளை பின்பற்றுவோம். அவர் காண விரும்பிய சாதியற்ற, வர்க்கமற்ற ஒரு புரட்சிகரமான புதிய சமூகம் அமைப்போம். 

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

சங்கரய்யா சுதந்திரப் போராட்ட வீரர் மட்டுமல்ல, தமிழ் மண்ணோடு கலந்த இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராகவும் திகழ்ந்தார். அவர் வாழ்ந்த வாழ்க்கையை ஒவ்வொரு அரசியல்வாதியும் படித்து தெரிந்து புரிந்து பின்பற்ற வேண்டும். சங்கரய்யா சட்ட மன்றத்தில் பேசுகிறார் என்றால், கலைஞர் தவறாது அவைக்கு வந்து அதை கேட்டு செயல்படுத்தியவர். 1986ஆம் ஆண்டு ஆலந்தூர் நகராட்சியின் தலைவராக நான் இருந்தபோது, நகரசுத்தி தொழிலாளர்கள் (தூய்மை பணியாளர்கள்) ஊதிய உயர்வு கேட்டு போராடினார்கள். உடனே நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுத்தேன். அப்போது சங்கரய்யா தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.  அப்படி உயர்ந்த  பண்பாளராக திகழ்ந்தார். தகைசால் தமிழர் விருது முதன் முதலில் வழங்கப்பட்ட சங்கரய்யாவுக்கு சிலரால் டாக்டர் பட்டம் மறுக்கப்படுவது வெட்கக் கேடானது. திமுக  ஆட்சிக் காலத்திலேயே அவருக்கு டாக்டர் பட்டத்தை பெற்றுத் தருவோம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

 சங்கரய்யா மறைவு இந்திய அரசியலுக்கு இழப்பு.  அவ ருக்கு டாக்டர் பட்டம் வழங்கு வதன் மூலம் அந்த பல்கலைக் கழகத்திற்குத் தான் பெரு மையே தவிர சங்கரய்யாவுக்கு இல்லை. 3 முறை சட்டமன்ற  உறுப்பினராக இருந்து மக்க ளுக்காக சண்டமாருதம் ஆடியவர். அவர் எந்த லட்சி யத்திற்காக, கொள்கைக்காக களம் கண்டாரோ அதை முன்னெடுப்போம்.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் 

கம்யூனிஸ்ட் கட்சியின் வயதும், தோழர் சங்கரய்யாவின் வயதும் சமம் என்றால் அது மிகையல்ல. இடதுசாரி இயக்கம் தோன்றிய காலத்தில் தன்னை இடதுசாரி இயக்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற புரிதல் அவரிடத்தில் இருந்திருப்பதே வியப்பாக இருக்கிறது. ஏனென் றால் இந்த சமூக கட்டமைப்பில் பிறக்கும் ஒவ்வொரு வரும் சாதி, மத கலாச்சார தாக்கத்திற்கு ஆளாக்கப்பட்ட வர்களாகத்தான் இருக்கிறோம். அந்த நிலையில் இருந்து முற்போக்காக புரட்சிகரமாக இயங்க வேண்டும் என்ற புரிதல், இடதுசாரி இயக்கத்தில் இணைந்து போராட வேண்டும் என்ற புரிதல், கல்விப் பருவத்திலேயே நாட்டின் விடுதலைக்காக போராட வேண்டும் என்ற புரிதல் ஏற்பட்டிருக்கிறது என்பதே வியப்புக்குரியதுதான். அந்த நாளில் இருந்து தான் ஏற்றுக் கொண்ட கொள்கையில் உறுதியுடன் வாழ்ந்திருக்கிறார்.

எளிமையான, தூய்மையான வாழ்க்கைதான் தோழர் சங்கரய்யாவின் அடையாளம். பொது வாழ்வில் ஈடுபட விரும்பும் ஒவ்வொருவரும் ஒரு முன் மாதிரியான தலைமை, ஆளுமை என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைவராக  வாழ்ந்திருக்கிறார். அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தலைவராக உயர்ந்து நிற்கிறார். அதனால்தான் அவருக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி  அரசு சிறப்பித்திருக்கிறது. அதனால்தான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம்  வழங்க முன்வந்தது. வலதுசாரிகளால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது அறிந்த ஒன்றுதான். அதனால்தான் இடதுசாரிகள் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை, கவலைப்படவில்லை. தோழர் சங்கரய்யா போன்றவர்கள் அடை மொழிகளுக்கும், விருதுகளுக்கும் இணங்கக் கூடியவர்கள் அல்ல. சிறப்பு  பட்டங்களில், அந்த மாயைகளில் மயங்கக் கூடியவர்கள் அல்ல. சங்கரய்யாவுக்கு பட்டம் வழங்கினால் பல்கலைக் கழகத்திற்குத்தான் பெருமை என்பதை அறியாதவர்கள் வலதுசாரிகள். தகைசால் விருது வழங்கும் போது அவருக்கு வழங்கப்பட்ட பொற்கிழியைக் கூட அவர் ஏற்கவில்லை என்பதை புரிந்து கொள்ளாதவர்கள்தான் சங்கிகள். சங்கரய்யா உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்த  அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரம் சங்கரய்யாவின் தியாகத்தை, பொது வாழ்க்கையை இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நினைவு மணி மண்டபம், நினைவு நூலகத்தை அமைக்க முன்வர வேண்டும். 

சிபிஐ மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி

தோழர் சங்கரய்யா, நாடு முழுவதும் உள்ள உழைப்பாளி மக்களுக்காக - விவசாயிகளுக்காக குரல் கொடுத்தவர். அவர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவர் எழுதியதை படிப்போம்,  சமூக மாற்றத்திற்காக அவர் ஆற்றிய பணிகளை செய்து முடிக்க  முன்னேறுவோம். தோழர்  என்ற வார்த்தைக்கு சாதி மதம் இல்லை என்றவர் சங்கரய்யா. அதை உள்வாங்கி மதவாத சக்திகளை வீழ்த்த சபதமேற்போம்.

சிபிஐ(எம்எல்) கட்சியின் தலைவர் ஆசைத்தம்பி 

உலகில் மிகப்பெரிய அதி சயங்களை நிகழ்த்திக் காட்டியவர்கள் கம்யூனிஸ்டு கள். 102 வயது வரை இந்த சமூகத்தில் ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியுடன் நின்று இந்த மக்களுக்காகவும், நாட்டிற்காகவும் போராடினார். கல்லூரி படிப்பின் போது நாட்டின் விடுதலைக்காக போராடினார். அதன் பின் மாணவர் சங்க தலைவர், கட்சியின் மாநிலச் செயலாளர், கட்டுப்பாட்டுக் குழு தலைவர், சட்டமன்ற உறுப்பினர் என தான் ஏற்றுக் கொண்ட அனைத்து பொறுப்புகளிலும் திறம்பட செயல்பட்டார். அவரின் புரட்சிகர உணர்வை நெஞ்சில் ஏந்தி அவர் காட்டிய வழியில் இந்தியாவில் புரட்சியை முன்னெடுப்போம்.

ஆதித்தமிழர் கட்சித் தலைவர் கு. ஜக்கையன்

நாட்டின் விடுதலைக்காக போராடி சிறை சென்றார். விடுதலை பெற்ற பிறகு உழைப்பாளி மக்களுக்காக, விவசாயிகளுக்காக போராடி சிறை சென்றார். போராட்டத்தின் குறியீடு சங்கரய்யா. திறமை யானவர், வலிமையானவர், ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியுடன் நின்று போராடியவர். அவர் வழியில் பயணிப்போம். சமூக மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

இந்த மண் அடிமைப்பட்டு கிடக்கும் போது தனது மாணவர் பருவத்திலேயே விடுதலைக்காக போராடினார். அரசியலில் நேர்மை, தூய்மை யை கடைப்பிடித்தவர் சங்க ரய்யா. வருங்கால தலை முறைக்கு சங்கரய்யாவின் வாழ்க்கை ஒரு முன்னு தாரணம். அவருடைய இலக்கும், முழக்கமும் நம்மைவிட்டு அகலாது.

சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதி 

லாற்றை நமக்கு வழங்கி விட்டு, தமிழகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டின் அன்பை பெற்ற தோழர் சங்கரய்யா நம்மை விட்டு பிரிந்துள்ளார்.  ஒரு உண்மையான கம்யூ னிஸ்டாகவும், புரட்சியாளராக வும் பல்வேறு தியாகங்களை செய்து இந்திய தொழி லாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காக போராடிய மிக மூத்த தோழர். 1964ஆம் ஆண்டு சி.பி.ஐ.(எம்) உருவாக காரண மாக இருந்த தோழர் சங்கரய்யாவும், வி.எஸ்.அச்சு தானந்தனும் மட்டுமே நம்மிடையே வாழ்ந்து வந்தனர். இருவரும் தினசரி அரசியல் செயல்பாடுகளை கவனித்து வந்தனர். கட்சியின் வலிமையை தமிழ்நாட்டில் அதிகரிக்க தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்கான பல்வேறு போராட்டங் களை வழி நடத்தியவர். 1998ஆம் ஆண்டு மத்தியக் குழு வுக்கு நான் தேர்வு செய்யப்பட்ட பின் தோழர் சங்கரய்யா  உடன் அதிகம் பழக வாய்ப்பு கிடைத்தது. விவாதங்களில் அவர் கலந்து கொள்ளும் போது, மிகவும் அழுத்தமாக தனது கருத்துக்களை எடுத்து வைப்பதை மத்தியக் குழு உறுப்பினர்கள் கவனமாக கேட்பது வழக்கம். நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக, வழிகாட்டியாக வாழ்ந்த அவரது மறைவு இந்திய கம்யூனிச இயக்கத்திற்கு ஒரு பேரிழப்பு.

செய்தி, படங்கள் : அ.விஜயகுமார், சி.ஸ்ரீராமுலு, 
செ.கவாஸ்கர், எஸ்.ராமு, ம.மீ.ஜாபர்.