articles

புதிய போராட்டங்களுக்கு தயாராகும் விவசாயிகள்! - அரவிந்த் சாப்ரா

“அச்சம், கோபம், நிச்சயமற்ற எதிர்காலம்” இந்தியாவின் வட மாநிலமான பஞ்சாபில் உள்ள தமது சொந்த கிராமத்தில் பச்சித்தர் கவுரும் மற்ற பெண்களும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதன் முதலில் எதிர்ப்பைத் தொடங்கியபோது  இப்படித்தான் உணர்ந்ததாகக் கூறினார்கள். இந்தப் போராட்டத்தின்போது நான் இறந்து விடலாம். ஆனால் இந்த வேளாண் சட்டங்களைச் செயல்படுத்த விடமாட்டேன் என “எனது நண்பர்களிட மும் உறவினர்களிடமும் கூறினேன்,” என்கிறார் பச்சித்தர் கவுர். இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. “வசதியான வீட்டை விட்டு வெளியேறி டிராக்டர் தள்ளுவண்டியில் வீதிகளில் சுமார் ஓராண்டு காலம் வாழ்ந்தது எளிதான விஷயமல்ல. ஆனால் எங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. அந்த வேளாண் சட்டங்கள் எங்களுடைய மரண அழைப்பாணை போல இருந்தன,” என்கிறார் அவர். பச்சித்தர் கவுர், போராட்டம் நிறைவுற்ற நாளை தமது வாழ்வின் “மிகவும் சிறப்பான” தருணமாக நினைவு கூர்ந்தார்.இப்போது விவசாயிகள் வீடு திரும்பி ஏழு மாதங்கள் ஆகி விட்டன. ஆனால், அவர்களின் கோரிக்கைகளை மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்காக ஜூலை 3ஆம் தேதி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டத்துக்கு விவசாய தலை வர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தில்லிக்கு அருகே காஸியாபாத் நகரில் நடை பெறும் இந்த கூட்டத்தில் முந்தைய போராட்டங்களை முன்னின்று நடத்திய ராகேஷ் திகாயத் உள்ளிட்ட முக்கிய விவசாயத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த வேளையில், மற்றொரு போராட்டத்திற்கான வாய்ப்பை விவசாயிகள் நிராகரிக்கவில்லை.

“தலைவர்கள் நேரத்தையும் இடத்தையும் தீர்மானிப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று பச்சித்தர் கவுர் கூறுகிறார். “அடுத்து தில்லி வருவ தற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்கிறார். ​​வேளாண் பொருட்கள் விற்பனை, விலை நிர்ணயம், பண்ணை பொருட் களை சேமிப்புக்கிடங்கில் பராமரித்தல் போன்றவற்றில் தங்களின் உரிமையைப் பாதுகாக்க உதவிய விதிகளில் தளர்வு ஏற்படுத்தி புதிய வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்தபோது, அதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்த னர். அதைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு நவம்பரில் விவசாயிகள் போராட்டத்தில் முதல் முறையாக ஈடுபட்டனர். போராடிய விவசாயிகளின் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று, தங்கள் பொருட்களை நேரடியாக சந்தை விலையில் தனியார் நிறுவனங்களுக்கு விற்க புதிய சட்டங்களை அனுமதித்தது தான். அந்த தனியார் தொழில் முதலாளிகள் வேளாண் தொழில் நிறுவனங்களாகவும் பெரு வணிக தொடர் நிறுவனங்களாக வும் ஆன்லைன் காய்கறி விற்பனை நிறுவனங்களாகவும் இருக்க அனு மதிக்கப்பட்டது. அதுநாள் வரை தங்களுடைய விளை பொருட்களை குறைந்தபட்ச ஆதார விலை எனப்படும் எம்எஸ்பி விலையில் அரசு கட்டுப்படுத்திய மொத்த விலை சந்தைகள் அல்லது மண்டிகளிலேயே விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் என்று அரசாங் கம் வாதிட்டது. ஆனால் அதை விவசாயிகள் ஏற்கவில்லை. அரசின் சட்டங்கள் விலையை நிர்ணயிக்கும் பெரிய நிறுவனங்களின் தயவில் இருக்க தங்களைக் கட்டாயப்படுத்தும் என்று அவர்கள் முறையிட்டனர். அரசாங்கம் இறுதியாக மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தபோது, ​ஒன்றிய, மாநில அரசாங்கங்களின் பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் குழுக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைப்பதாக உறுதியளித்தது.

இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இரண்டு மாதங்க ளுக்கு முன்பு மக்களவையில் பேசும்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை ஆராய உத்தேசிக்கப்பட்ட குழுவை அமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது என்று கூறினார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன. உத்தேசிக்கப்பட்ட குழுவில் தங்களுடைய பிரதிநிதிகளாக யார் இருக்க வேண்டும் என்பதை விவசாயிகள் தெரிவிக்க வேண்டும் என்று விவசாயத் தலைவர்களை அரசாங்கம் கேட்டுக் கொண்டது. ஆனால், இந்த விஷயத்தில் அரசின் நோக்கம் தெளிவாக இல்லை என்று கூறி பிரதிநிதி களின் பெயரை வழங்க விவசாயிகள் மறுத்து விட்டனர். “அரசு சில பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்துள்ளது, ஆனால் அது அனைத்து மாநிலங்களிலும் கிடைக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். முதலில் ஆய்வுக் குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலையும் எம்எஸ்பி தொடர் பான கொள்கையை எவ்வாறு வகுக்க அரசு திட்டமிட்டுள்ளது என்பதையும் அர சாங்கம்தான் எங்களிடம் கூற வேண்டும்,” என்கிறார் பஞ்சாபின் மிகப்பெரிய விவசாய சங்கங்களில் ஒன்றான பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹான். எம்எஸ்பி மட்டுமின்றி மேலும் சில கோரிக்கைகளையும் விவசாய தலைவர் கள் அரசிடம் முன்வைத்துள்ளனர். போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல், நெல் வைக்கோலை எரித்ததற்காக சம்பந்தப்பட்ட விவசாயிகள் மீது எடுக்கப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகளைக் கை விடுதல், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து குற்ற வழக்குகளையும் திரும்பப் பெறுதல் போன்றவை அதில் அடங்கும். 2021ஆம் ஆண்டு நவம்பரில், வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகு,  விவசாய சங்கங்களின் போராட்டங்களை ஒரே குடையின் கீழ் வழிநடத்திய அமைப்பான பாரதிய கிசான் மோர்ச்சாவுக்கு இந்திய விவசாயத்துறை செயலர் சம்யுக்த கிசான் மோர்ச்சாவுக்கு (SKM) கடிதம் எழுதினார். அதில், உங்களுடைய கோரிக்கைகளுக்கு இணங்குவதாக செயலர் உறுதியளித்தார் என்கிறார் ஜோகிந்தர் சிங் உக்ரஹான்.

இது குறித்து விவரித்த அவர், “சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பல மாநிலங்கள் விவசாயிகளுக்கு பண இழப்பீடு வழங்கியுள்ளன. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான கிரிமினல் வழக்குகள் சர்ச்சைக்குரிய பிரச்சனையாகத் தொடர்கின்றன,” என்கிறார். போராட்டம் நடந்த தளங்களில் பல ஹரியானா மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வருவதால், பெரும்பாலான வழக்குகள் அந்த மாநிலத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ்ஜிடம் பிபிசி கேட்ட போது, “விவசாயிகளுக்கு எதிரான பெரும்பாலான வழக்குகளை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. போராட்டத்தின் போது மொத்தம் 272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 82 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன,” என்று பதில ளித்தார்.ஆனாலும் விவசாயிகள் சமாதானம் ஆகவில்லை.

“இது ஒரு மாநிலம் மட்டுமே. பல்வேறு மாநிலங்களில் இதுபோல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, அவற்றில் எத்தனை திரும்பப் பெறப்பட்டன போன்ற விவரங்களுக்காக [ஒன்றிய அரசாங்கத்திடமிருந்து] நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்,” என்று உக்ரஹான் கூறுகிறார். இன்னும் தான் நம்பிக்கையை இழக்கவில்லை என்று கூறும் அவர், “ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தால் போதும், நாங்கள் அனைவரும் ஒன்றாகக் கூடுவோம் என்று நான் நம்புகிறேன்,” என்கிறார். “இது பாதி அளவு மட்டுமே வெற்றியடைந்துள்ள போர். இந்த சண்டை முடிய நெடுநாள் ஆகும்,” என்கிறார் அவர்.

கட்டுரையாளர் : பிபிசி, பஞ்சாபி

;