பிப்ரவரி 13ஆம் தேதி தில்லியை நோக்கி புறப்படுவோம் என விவசாயிகள் போ ராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட் டத்திற்கு ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது)’ என்ற விவசாயிகள் அமைப்பு அறை கூவல் விடுத்தது. ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக இயங்கி வரும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு, நாடு முழுவதும் பிப்ரவரி 16ஆம் தேதி தொழிற்சங்கங்க ளுடன் இணைந்து தொழிலாளர்கள் அவரவர் தொழிற் சாலைகளில் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அறைகூவல் விடுத்திருந்தது. தற்போதைய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது வேறு அமைப்பாக இருந்தாலும் ஏற்கனவே 2020 போராட்டத்தில் ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டு நிறை வேற்றாத கோரிக்கைகளை வலியுறுத்தித் தான் என்ப தும் குறிப்பிடத்தக்கது. எனவே அலுவல் ரீதியாக இயங்கி வரும் சம்யுக்த கிசான் மோர்ச்சா இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளது. இந்த மூர்க்கத்தனமான தாக்குதலை கண்டித்து, தொடர் போராட்டங்களை நடத்துவது என சம்யுக்த கிசான் மோர்ச்சா பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.
போராட்டம் நீடிப்பது ஏன்?
2020 நவம்பர் 16ஆம் தேதி தில்லி சலோ என்ற முழக்கத்தை முன்வைத்து அந்தப் போராட்டம் துவங்கி யது தில்லியின் ஆறு எல்லைகளில் நடைபெற்ற அந்த போராட்டம் நீடித்த போராட்டமாக உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் நடந்தது. 22 மாநிலத்தைச் சேர்ந்த இந்திய விவசாயிகள் பங்கேற்கும் மிக பிரம்மாண் டமான போராட்டமாக மாறியது. இந்தப் போராட்டம் கிட்டத்தட்ட தில்லியின் நான்கு எல்லைகளையும் முற்று கையிடும் வகையில் நீடித்த நிலையான போராட்டமாக 13 மாத காலம் நடைபெற்றது. போராட்டத்தை அடக்குவ தற்கு சிதைப்பதற்கு பல வழிகளை ஒன்றிய அரசாங் கம் கையாண்டது. அதில் தோல்வி அடைந்த பிறகு தான் பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் எவ்வாறு கொண்டு வந்தாரோ அதேபோல் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். ஒன்றிய அரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்களை யும் திரும்பப்பெற்றாலும் போராட்டம் உடனடியாக முடி வுக்கு வரவில்லை. அதற்குப் பிறகும் இந்த போராட் டம் இரண்டு மாத காலம், இதர கோரிக்கைகள் சம்பந்தமாக ஒன்றிய அரசு எந்த உத்தரவாதத்தையும் அளிக்காததால் போராட்டத்தை தலைவர்கள் கைவிட வில்லை. இந்நிலையில் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் வேளாண்மை துறை செயலாளர் உள்ளிட்ட அதி காரிகள் பங்கேற்றனர். எழுத்துப்பூர்வமாக பல்வேறு உத்தரவாதங்களை ஒன்றிய அரசு அளித்தது. குறைந்த பட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வருவதற்காக நாடாளுமன்றத்தில் விவாதிப்போம்; இது சம்பந்த மாக சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள் 5 பேர் கொண்ட குழு, மற்றும் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, அதை இறுதி செய்யலாம் என்பது முதல் வாக்குறுதி.
நாடு முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை நிபந்தனை இல்லா மல் திரும்பப் பெறுவது என்பது இரண்டாவது வாக்கு றுதி. போராட்டக் களத்தில் இறந்து போன 729 விவ சாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம், இழப்பீடு வழங்கப்படும் என்பது மூன்றாவது வாக்கு றுதி என அரசு அளித்தது. மின்சார திருத்த மசோதாவை சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்களோடு விவா தித்து பிறகு தான் நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்வோம் என்பது நான்காவது வாக்குறுதி. ஆனால் வாக்குறுதிக்கு மாறாக, மின்சாரத் திருத்த சட்டத்தை விவசாயிகள் சங்க தலைவர்களோடு விவாதிக்காமல் நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்றார்கள். எதிர்க் கட்சிகள் கடுமையான எதிர்ப்பின் காரணமாக தற் போது நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனை யில் உள்ளது. மேலும் விவசாயிகளின் கடனை தள்ளு படி செய்வது தொடர்பாக பரிசீலனை செய்வோம் என் றார்கள். இவைதான் 2021 கடைசியில் விவசாயிக ளோடு செய்து கொண்ட ஒப்பந்தம். ஆனால் இவை எவற்றையும் ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை.
மாபெரும் டிராக்டர் பேரணி
இதனைக் கண்டித்துத் தான் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை முன்னெ டுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் விவசாயி களுக்கு அரசு அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்றக் கோரி இந்த ஆண்டு ஜனவரி 26 குடியரசு தினத் தன்று நாடு முழுவதும் ஒன்றிய அரசை கண்டித்து 500 இடங்களில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அதேபோல் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியின் மகன் நான்கு விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரி கையாளர் மீது காரை ஏற்றி படுகொலை செய்த விவகா ரத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்; ஒன்றிய அமைச்சரை பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறோம். இதிலும் ஒன்றிய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது; இதை வலியுறுத்தி தான் இந்த இரண்டாம் கட்ட விவசாயிகள் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கொடிய அடக்குமுறை
தற்போதைய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசா யிகள் மீது துணை ராணுவப் படையும் காவல் படை யும் கடும் அடக்குமுறைகளை ஏவி விட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 24 வயதான இளம் விவசாயி சுப்கரன்சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதை கண்டித்து பிப்ரவரி 23ஆம் தேதி நாடு முழுவதும் ஏற்கனவே இயங்கி வரும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு, கருப்பு தினமாக அனுசரித்து இந்தியா முழுவதும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பதற்காக பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கம் நாட்டி லுள்ள அரசியல் கட்சிகளை எப்படி தங்களுக்கு ஆதர வாக உடைக்கிறார்களோ, சட்டமன்ற- நாடாளு மன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குகி றார்களோ, அதுபோல போராடக்கூடிய அமைப்புகளை யும் சிதைப்பதற்கு - அதை உடைப்பதற்கு ஒன்றிய அரசாங்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. சம்யுக்த கிசான் மோர்ச்சா அதை முறியடிக்கும்.
மார்ச் 14 மகா பஞ்சாயத்து
அடுத்த கட்டமாக மார்ச் 14 ஆம் தேதி இந்திய நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் - தொழிலா ளர்களை அணி திரட்டி தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் மகா பஞ்சாயத்து நடத்துவது என தீர்மானித்துள்ளது. மோடி அரசாங்கத்தின் அடக்கு முறையைக் கண்டித்தும் ஏற்கனவே விவசாயிகளிடம் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண் டும் என வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் தில்லி ராம் லீலா மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக இதுபோல் நடைபெறக்கூடிய போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த, சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது தற்போது ஹரியானா, தில்லி யில் நடக்கக்கூடிய போராட்டம், அடுத்து நடக்க உள்ள போராட்டங்கள் அனைத்தையும் தனித்தனியாக இல் லாமல் ஒன்றாக ஒருங்கிணைத்து ஒரு வலுவான போ ராட்டமாக நடத்துவதற்காக ஹன்னன் முல்லா, யுக்பீர் சிங், தர்ஷன் பால், யோகீந்தர்சிங் உக்ராகாந், பல்பீர் ஜிங் ராஜேவால், அரவிந்த பாட்டியாலா ஆகிய ஆறு பேர் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே உள்ள சம்யுக்த கிஷான் மோர்ச்சா, தற்போது போராடிக் கொண்டிருக்கின்ற அரசியல் சார்பற்ற சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு வலுவான போராட்டத்தை ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் முன்னெ டுத்துச் செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
6 லட்சம் பேர் தற்கொலை
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயி கள் பிரச்சனை தீர்க்கப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது மோடி அரசாங்கம். விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப் படும், எம். எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறை வேற்றுவோம் என்று சொன்னார்கள். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்து பத்தாண்டுகள் முடிவுறும் நிலையில் இதுவரை அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறை வேற்றவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்பு ரையில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு விவசாயி கள் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று கூறி வருகிறார். நீங்கள் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை தான் கேட்கிறீர்கள்; ஆனால் நாங்கள் விவசாயி களுக்கு லாபகரமான விலை தருவோம், லாபகரமான விலை கிடைத்தால் விவசாயி ஏன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார் என்றெல்லாம் சொன்னார். ஆனால் கடந்த ஒன்பதே முக்கால் ஆண்டுகளில் விவசாயிகள் இந்திய நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை 1 லட்சத்து 40000 என்பது குறிப்பிடத் தக்கது. மோடி அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்பது மட்டுமல்ல, பாஜக ஆட்சியிலும் விவ சாயிகள் தற்கொலையை தடுக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இதேபோல் அன்றாட கூலித் தொழிலாளர்கள் கிட் டத்தட்ட 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் மோடி ஆட்சிக் காலத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மோடி ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் இந்தியா முழு வதும் விவசாயி - விவசாயக் கூலித் தொழிலாளி - அன்றாடம் காய்ச்சி என கிட்டத்தட்ட ஆறு லட்சம் பேர், வேளாண் நெருக்கடி விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் தற்கொலை செய்து கொண்டுள்ள னர். எனவே கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகளை யும் விவசாயத் தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து நகர்ப்புறங்களில் உள்ள தொழிலாளர் வர்க்கத்தோடு ஒருங்கிணைந்து இந்த அரசாங்கத்தை ஆட்சி அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்துவதன் மூலமாகத் தான் விவசாயிகளின்- தொழிலாளர்களின் உரிமை களை மீட்டெடுக்க முடியும்.
கட்டுரையாளர் : தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்