இத்தாலியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்த லில் தீவிர வலதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்றி ருப்பது ஐரோப்பாவின் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்ச்சிப்போக்காகும். ‘இத்தாலிய சகோதரர்கள்’ (Fratelli d’Italia (Brothers Party of Italy) என்னும் தீவிர பாசிஸ்ட் வலதுசாரிக் கட்சியும் ‘தி லீக்’ மற்றும் ‘ஃபோர்சா இத்தாலி’யான (the League and Forza Italia) என்னும் அதன் கூட்டணிக்கட்சிகளும் சேர்ந்து தேர்தலில் 46 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வென்றிருக்கின்றன.
முசோலினியின் ஆதரவாளர்களின் ஆட்சி
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஜெர்மனி மற்றும் பிரான்சுக்கு அடுத்து, இத்தாலி மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைப் பெற்றிருக்கிறது. இத்தாலி, ஜி.7 நாடுகளிலும் ஓர் உறுப்புநாடாகும். இப்போது அது ஜியார்ஜியா மெலோனி (Giorgia Meloni) என்னும் பெண் பிரதமரைப் பெற்றிருக்கிறது. இவருடைய கட்சி நவீன-பாசிஸ்ட் வேர்களைக் கொண்டிருக்கக்கூடிய ஒரு கட்சியாகும். மெலோனி இத்தாலிய சோசியல் இயக்கம் என்கிற இளைஞர் அமைப்பின் தலைவராகத் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இந்தக் கட்சியானது 1946இல் முசோலினியின் ஆதரவாளர்களால் அமைக் கப்பட்ட ஒரு கட்சியாகும். அதன்பின்னர் பல துண்டுக ளாக உடைந்தும் பின்னர் பலவிதமான வலதுசாரிக் குழுக்களுடன் சேர்ந்தும் 2012இல் ‘இத்தாலியன் சகோத ரர்கள்’ கட்சி என்று அமைக்கப்பட்டது. இன்றைக்கும் அதன் சின்னம், பாசிஸ்ட் அடையாளச் சின்னமான சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை வண்ணங்களில் உள்ள தீச்சுடர் ஆகும். 2018 நாடாளுமன்றத் தேர்தலில் ‘இத்தாலிய சகோத ரர்கள் கட்சி’ 4 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்றது. இப்போது அது, இதர கட்சிகளைக் காட்டிலும் மிக அதிகமாக, 26 விழுக்காடு அளவு வாக்குகளைப் பெற்று உயர்ந்திருக்கிறது. புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு, தேசிய இன வெறி, ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான சொல்லாடல்கள் ஆகிய கலவையின் மூலம் பொருளாதாரச் சிக்கல்க ளில் சிக்கி விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டி ருக்கும் மக்களை எளிதாகக் கவர்ந்துவிட்டது. இதற்குத் தொழிலாளர் வர்க்கத்தின் சில பிரிவினரும் தப்பவில்லை.
தாராளமயத்துடன் சமரசமாகி சரணடைந்ததால்...
இத்தாலியில் தங்களை இடதுசாரிகள் என்று கூறிவந்த மத்திய இடதுசாரிக் கட்சிகள், குறிப்பாக டெமாக்ரடிக் கட்சி நவீன தாராளமயக் கொள்கைகளு டன் சமரசம் செய்து கொண்டதாலும், அக்கொள்கைக ளிடம் முற்றிலுமாகச் சரணடைந்துவிட்ட பின்னணியி லும்தான் அதி தீவிர வலதுசாரிக் கட்சிகள் தலை தூக்கி யுள்ளன. மிகவும் சீரழிந்துவரும் பொருளாதார நிலை மைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வேலையின்மை முதலானவை வலதுசாரிகள் வளர்வதற்கு வழிவகுத்துத் தந்திருக்கின்றன. மரியோ டிராகியுடைய பல கட்சிக் கூட்டணி அர சாங்கம், ஐரோப்பிய யூனியனால் கட்டளையிடப்படும் நவீன தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தப் படுவதைக் குறியாகக் கொண்டே அமைக்கப்பட்டது. டிராகி ஒரு தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் தலைவர். இரு தீவிர வலது சாரிக் கட்சிகள் (The League and Forza Italia) உட்பட அனைத்துக் கட்சிகளும் டிராகி அரசாங்கத்தில் அங்கம் வகித்தன. ஆனாலும் ‘இத்தாலிய சகோத ரர்கள்’ மட்டும் சேராமல் ஒதுங்கியே இருந்தது.
இனவெறிப் பிரச்சாரம்
ஐரோப்பிய யூனியன் மீதான தொடர் தாக்குதலும், அரசாங்கம் பின்பற்றி வந்த சிக்கன நடவடிக்கைகளும் முதலாளித்துவத்தின் நெருக்கடியாலும், கொரோனா வைரஸ் பெருந்தொற்றாலும் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்த உழைக்கும் மக்கள் மத்தியில் எளிதாக ஊடுருவின. இத்துடன் ஆப்பிரிக்காவிலிருந்து புலம் பெயர்ந்துவருபவர்களால்தான் இத்தாலியர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றும், நாட்டிற்கே இவர்க ளால் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்றும் வலதுசாரிகள் அவிழ்த்துவிடும் பிரச்சாரம் மக்கள் மத்தியில் எளிதாக வெற்றி பெற்றுள்ளன. இத்தாலியில் தேர்தல் நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன் ஸ்வீடனில் நடைபெற்ற தேர்தலில் வலதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்றது. தீவிர வலது சாரிக் கட்சியான ‘ஸ்வீடன் டெமாக்ரடிக்’ கட்சி பெரிய அளவில் ஆதாயங்களைப் பெற்று, வலதுசாரிக் கூட்டணி அரசாங்கத்தில் பிரதான சக்தியாக விளங்கு கிறது. இவர்களும் புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு எதிராக வெறித்தனமாகப் பிரச்சாரத்தை மேற் கொண்டு இனவெறியைக் கிளப்பியதன் மூலமாகவே, வெற்றி பெற்றார்கள்.
இடதுசாரிகளின் நிலை
இத்தாலி மக்களிடம் தேர்தலின்போது செல்வாக்கு செலுத்தும் விதத்தில் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு வரை இடதுசாரிகள் சக்தியாக இருந்தார்கள். 1990களின் நடுவில் ஐரோப்பாவில் மிகப்பெரியதாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி கலைக்கப்பட்டபின்னர், இடதுசாரி சக்திகளை ஒருங்கிணைத்து மீண்டும் கட்டி எழுப்புவ தற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்ட் ரீஃபவுண்டேசன் ஒரு வலுவான அரசியல் சக்தியாகக் காட்சி அளித்தது. எனினும் இந்தக் கட்சி பிளவுபட்டதைத் தொடர்ந்து இதற்கும் கடு மையாகப் பின்னடைவு ஏற்பட்டது. பின்னர் புதிதாக ஓர் இடதுசாரி மேடை அமைக்கப்பட்டது. இந்தத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒருசில மாதங்களுக்கு முன் ‘யூனியன் பாபுலர்’ (‘Unione Popolare’) என்னும் பெயரில் இது அமைக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் ரீஃபவுண்டேசன் உட்பட சில இடதுசாரிக் குழுக்கள் இதில் இடம் பெற்றன. ஆனாலும், தேர்தல் நடை பெற்ற சமயத்தில், இது அமைக்கப்பட்டு குறுகிய கால மேயாகியிருந்ததால், இதனால் மக்கள் மத்தியில் போதுமான செல்வாக்கைப் பெற்று, பிரதிநிதித்துவப் படுத்துவதற்குத் தேவையான 4 விழுக்காடு வாக்குக ளைப் பெற முடியவில்லை. இப்போது அமைந்திருக்கும் தீவிர வலதுசாரி அர சாங்கம், தேர்தலின்போது மக்கள் மத்தியில் வாக்குறு திகளை வாரியிறைத்திருந்தபோதிலும், பெரும் வர்த்தகப்புள்ளிகளின் நலன்களின் ஏஜண்டாகவே செயல்படும் என்பது நிச்சயம். இதனால் இதன் நடவடிக்கைகள், வலுவான அளவில் இடதுசாரிகளின் தலையீட்டிற்கு வழியேற்படுத்திடும்.
அவசரத் தேவை
இத்தாலியின் தேர்தலிலிருந்து இடதுசாரிகள், குறிப்பாக, ஐரோப்பாவில் உள்ள இடதுசாரி சக்திகள், படிப்பினைகள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசிய மாகும். நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின் பற்றும் ஆட்சியுடன் எவ்விதமான சமரசப் போக்கையோ அல்லது உடன்பாட்டையோ கடைப்பிடிக்கக் கூடாது. நவீன தாராளமயக் கொள்கைகளைப் பயன்படுத்தி ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்கள் மீது ஏவிடும் தாக்குதல்களை எதிர்த்து முறியடிப்பதன் மூலம் மட்டுமே வலதுசாரி அச்சுறுத்தலை வீழ்த்திட முடியும். ஏனெனில் நாசகரமான நவீன தாராளமய மூலதனக் கொள்கைதான் வலதுசாரி சிந்தனை வளர்வதற்கு அடிப்படைக் காரணிகளாகும். எனவே, இதற்கு எதிராக ஒரு மாற்று இடதுசாரி மேடையைக் கட்டி எழுப்ப வேண்டியது அவசரத் தேவையாகும். தீவிர வலதுசாரி அரசாங்கத்தின் குணாம்சத்தையும், அது பின்பற்றும் நவீன பாசிசக் கொள்கையின் அச்சுறுத்த லையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, போராடும் மக்களின் ஒற்றுமையை அடித்தளத்திலிருந்து கட்டி எழுப்ப வேண்டும்.
செப்டம்பர் 28, 2022, தமிழில்: ச.வீரமணி