அண்மையில் இந்திய பொருளா தார கண்காணிப்பு மையம் - (சிஎம்ஐஇ) வெளியிட்டுள்ள வேலையின்மை பற்றிய தரவுகள் நமது நாட்டில் நிலவும் கடுமையான வேலையின் மைச் சூழலை வெளிக்காட்டுவதாக உள்ளது. வேலையின்மை விகிதம் என்பது 2017-18 காலகட்டங்களில் 4.7 சதவீதம் என்ற அளவிலி ருந்து உயர்ந்து 2018-19 காலகட்டத்தில் 6.3 சத விகிதத்தை அடைந்தது. இது கோவிட் பொது முடக்கத்தின் போது மேலும் பெருகி டிசம்பர் 2020ல் 9.1 சதவீதம் என்ற அளவில் அதிகரித் தது. அதன் பின்பு சற்று குறைந்தாலும் தற்போ தைய சூழலில் வேலையின்மையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. டிசம்பர் 2022ல் 8.3 என்று இருந்த வேலையின்மை விகிதம் ஜனவரி 2023ல் 7.14 சதவீதத்திற்கு குறைந்தது; எனினும் மார்ச் 2023ல் 7.8 சதவீதமாக அதி கரித்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மீட்சி பெற்றுவிட்டதாக தோற்றம் காட்டப் படும் சூழலில் தற்போதைய உள்நாட்டு மொத்த உற்பத்தி 2022-2023ல் 8.4 சதவீதம் அளவிற்கு பதிவாகும் எனக் கருதப்படுகி றது. எனினும் வேலையின்மை விகிதம் எதிர் மறையாகவே உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் அளவு 12.95 சதவீதத்தைத் தாண்டவில்லை. இதுவும் அதிகப்படியான வேலையின்மை என்பதையே காட்டுகிறது. தற்போது உள்ள அதிகப்படியான வேலை யின்மை என்பதை நாம் பெருந்தொற்று காலத்திற்கு முந்தைய நிலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இரண்டு முக்கிய காரணி களை காண முடியும். முதலாவதாக, தற்போ தைய மீட்பு என்பது அதிகளவு வேலை வாய்ப்புகளை வழங்கும் துறைகளில் இல்லை. அதிகளவு வேலை வாய்ப்புகளைக் கொண்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள், மீட்பு நடவடிக்கைகளுக்கு வெளியே வைக் கப்பட்டுள்ளன. இரண்டாவதாக, சிக்கன நட வடிக்கைகளின்படி குறைந்தளவு கிராக்கி யின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஆட் குறைப்புகளும் முக்கிய காரணம்.
பொருளாதார கண்காணிப்பு நிறுவன கணக்கீடுகளின்படி, தொழிலாளர்கள் எண்ணிக்கை 409.9 மில்லியன் என்ற அள வில் 2023 பிப்ரவரி மாதத்தில் இருந்தது. இது, மார்ச் மாதத்தில் 407.6 மில்லியன் என்ற அளவிற்கு வெகுவாக குறைந்து விட்டது. கடந்த 2019-20 காலகட்டத்தில் இந்தியா வில் மொத்தம் வேலை செய்யும் தொழிலா ளர்களின் எண்ணிக்கை என்பது 408.9 மில்லியன் என்ற முந்தைய 2019-20 கால கட்டத்தை விட 2023 மார்ச்சில் கடுமையாக வீழ்ந்துள்ளது.இத்தகைய கொடூரமான வேலையின்மைச் சூழலில் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் மட்டுமே அதிகரிக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும். ஆனால் தற் போது உள்ள வேலை வாய்ப்புகளே எண்ணிக்கை அடிப்படையில் குறைந்து வருகிறது என்பதே இன்றைய நடைமுறை சூழல்.
ஆனால் ஆட்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர்கள் நமது நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருகி வருவதாக தெரிவிக்கின் றனர். அவர்கள் இரண்டு வாதங்களை முன் வைக்கின்றனர். முதலாவதாக பொருளா தார கண்காணிப்பு மையத்தின் தரவுகள் நம்பிக் கைக்கு உரியது கிடையாது என்றும்; இது அதி காரப்பூர்வமான கணக்கெடுப்புகளை காட்டி லும் வேறுபாடு கொண்டுள்ளது என்றும் தெரி விக்கிறது. மேலும் தற்போதைய நூறு நாள் வேலை வாய்ப்புகளின் தேவை குறைவும் சந்தையில் வேலைவாய்ப்புகள் உயர்ந்து விட்டதை காட்டுவதாக தெரிவிக்கிறது. இத்த கைய இரண்டு வாதங்களுக்கும் போதிய அடிப்படைகள் இல்லை. ஆனால் உண்மை யில், அரசின் அதிகாரப்பூர்வமான கணக் கெடுப்புகளில், சம்பளம் இல்லாத வீட்டு வேலைவாய்ப்புகளை கூட வேலைவாய்ப்பு களாக கருதி கணக்கீடுகள் செய்யப்படுகி றது. ஆனால், பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவுகளில் அத்தகைய குறைபா டுகள் இல்லை. தற்போதைய வேலை வாய்ப்புச் சந்தையில் உள்ள சம்பளமில் லாத வேலைக்கு அது விலக்கு அளித்தாலும் உண்மையில் நமது உள்நாட்டில் நிலவும் கூலி அடிப்படையிலான வேலை வாய்ப்பு களை பற்றி குறிப்பிட்ட காலகட்டத்தில் அறிந்து கொள்ள பெரிய அளவிற்கு துணை புரிகிறது. தற்போது வேலையின்மை பெருகி வரும் நடைமுறை சூழலில் பொருளாதார கண்காணிப்பு மைய தரவுகள் உண்மையான நிலவரத்தை வெளிக் காட்டுவதாக உள்ளன.
மேலும் தற்போது பல நகரங்களுக்கு தொழிலாளர்கள் மீணடும் வேலைக்கு கிராமங்களில் இருந்து சென்று இருப்பது அவர்கள் குறைந்த வருமானத்தில் வேறு வழியில்லாத நிலையில்தான் சென்றுள் ளனர் என்பதையும் காண முடிகிறது. இத்த கைய சூழல் காரணமாக நூறு நாட்கள் வேலை வாய்ப்பின் தேவைகள் குறைந்து இருப்பதாக கணக்கு காட்டப்படுவதில் ஆச்சரியம் இல்லை. உண்மையில் பொது முடங்கலுக்கு முந்தைய வேலையின்மை விகித அடிப்படையில் பார்க்கும் போது தற் போது வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை பெருகவில்லை. மேலும் நூறு நாள் வேலை திட்டத்தில் வழங்கப்படாத சம்பள நிலு வைத் தொகையை ஒன்றிய அரசு வழங்காத சூழலில், தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் வேலை செய்வதைவிட, சம்பளம் கிடைக்கும் வேலைகளை நாடுவது அதிகரித் துள்ளது. இதுதான் உண்மை. ஆனால் இதையே ஒரு அடிப்படை காரணியாக கொண்டு வேலையின்மை பிரச்சனையின் தாக்கத்தை அரசு குறைத்துக் காட்டுகிறது. குறிப்பாக ஒன்றிய அரசு நூறு நாள் வேலை வாய்ப்பில் சம்பள நிலுவைத் தொகையை காலம் தாழ்த்தி வழங்குவதே பல தொழிலா ளர்கள் இத்திட்டத்தில் சேர விருப்பம் இல்லா மல் உள்ளனர். இதனை அடிப்படையாக கொண்டு நமது நாட்டின் வேலையின்மை சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதே அரசு உரிமை கோரி வருகிறது.
இந்தியாவின் வேலையின்மை புள்ளி விபரங்கள் நமக்கு அடிப்படையில் தெரி விப்பது தற்போதைய நவீன தாராளமய முத லாளித்துவம் என்பது நாட்டின் வேலை யின்மைப் பிரச்சனையைத் தீர்க்க உதவும் சமூக முறையாக இல்லை. அரசு தனது தலையீடுகளை தவிர்த்து பெரிய அளவிலான முதலாளித்துவத்திற்கு ஆதரவாக இருக்கும் போது அதிகப்படியான வேலை வாய்ப்புகள் மற்றும் செல்வம் பெரு கும் என்று தெரிவித்தனர். ஆனால் உண்மை யில் முதலாளித்துவ பொருளாதாரத்தால் நம்மால் முழுமையான வேலைவாய்ப்பு களை பெறச் செய்ய முடியாது. இது உபரி தொழிலாளர்கள் இல்லாமல் இயங்க முடி யாது. நவீன தாராளமயமாக்குதலில் அதிகப் படியான உபரி தொழிலாளர்கள் பயன்படுத் தப்படுவர் என்ற வாக்குறுதியும் ஏமாற்றி விட்டது. இந்தியா போன்ற அதிக உழைக்கும் மக்களைக் கொண்ட நாடுகள் நவீன தாராளமயமாக்குதலை பின்பற்றும் போது முடிவில்லாத வேதனைகளை சந்திக்க வேண்டியுள்ளது என்பதற்கான எண்ணற்ற உதாரணங்களில் இதுவும் ஒன்று.
(பீப்பிள்ஸ் டெமாக்ரசி (மே 7),
தமிழில் : பேரா. தி.ராஜ் பிரவின்