articles

img

கசக்கிப் பிழியும் விலை உயர்வு மோடி அரசு என்ன செய்தது?

விலை உயர்வு, வேலையின்மைக்கு காரணமான மோடி அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்தி செப்டம்பர் 1 - 7 சிபிஐ(எம்) பிரச்சார இயக்கம்

செப்டம்பர் 7 மறியல் போர்

நாடு முழுவதும் காய்கறிகளின் விலைகள் இதுவரை கண்டிராத வகையில் உயர்ந் துள்ளன. தக்காளியின் விலையைக் கொண்டே, காய்கறிகளின் விலைகள் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். கடந்த இரண்டு மாதங்களில் நாடு முழுவதிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.200-க்கும் மேலான விலையில் விற்ப னை ஆனது. (உத்தர்கண்ட் மாநிலத்தில் அது ஒரு கிலோ விற்கு ரூ.250 என்ற அளவில் விற்பனை ஆனது)  இஞ்சியின் விலையும் கடுமையாக உயர்ந்தது.கிலோ ரூ.250 முதல் 350 வரை விற்றது.கத்தரிக்கா யின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.40-லிருந்து ரூ.100 வரையில் அதிகரித்தது. அதே நேரத்தில் பச்சை மிளகா யின் விலை தில்லியில் கிலோ ரூ.170 என்ற அளவினை எட்டியது. அசாம் போன்ற மாநிலங்களில் அதன் விலை இன்னும் அதிகமாகவே இருந்தது. 

தாறுமாறாக அதிகரித்த விலைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில பொருட்களின் சராசரி சில்லறை விலை 2023 ஜூன் 27 அன்று இருந்த நிலவரப்படி பார்க்கும்போது அன்றைய தினத்திற்கு ஒரு மாதம், ஓர் ஆண்டு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலையின்படி ஏற்பட்டுள்ள மாற்றம் கீழே தரப்படுகிறது. அனைத்துப் புள்ளிவிவரங்களும் சதவீத அடிப்படையில்: முக்கியமான உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, துவரம்பருப்பு, சர்க்கரை, பால், தேயிலை (சில்லறையாக), உப்பு (அயோடின் கலந்த, பொட்ட லமாக) உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி ஆகிய பத்து பொருட்களில் ஒன்பது பொருட்களின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே உயர்ந்து கொண்டு வந்துள்ளன என்பதை நுகர் வோர் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் கீழுள்ள உணவு மற்றும் பொதுவிநியோக விலை கண்கா ணிப்புப் பிரிவிலிருந்து பெறப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  பதுக்கலை தடுப்பது, சந்தையில் தலையீடு செய்து, ஊக வணிக நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது, அத்தியாவசியப் பொருட்களின் சப்ளை தொடர்வதை உறுதிப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளை மேற் கொள்ள அரசு தவறியதன் விளைவாகவே அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. 

எரிபொருள் விலைகள் 

நாட்டின் பல பகுதிகளிலும் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 100க்கு மேலாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது.  உலகளாவிய அளவில் எண்ணெய் விலைகள் இன்று அதிகரிப்பதில்லை என்பது உண்மை; எனினும் பெட்ரோல், டீசலின் விலைகளைக் குறைக்க அரசு  தவறுகிறது. இவற்றின்மீது அரசு விதிக்கும் கூடுதல் கலால் வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட கூடுதல் வரிகள் ஆகியவற்றின் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.90-உம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.80-உம் கூடுத லாக வசூலிக்கின்றது. இவற்றின் மூலம் மக்களை தொடர்ந்து கொள்ளையடிப்பதன் விளைவாக பெட்ரோ லுக்கும் டீசலுக்கும் அவர்கள் அதிக விலை செலுத்தும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது.  பணக்காரர்கள் மீதான வரிகளை அதிகரிப்பது, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கும் சலுகைக ளை நிறுத்துவது என்பதற்குப் பதிலாக, அரசின் வருவாய்ப் பற்றாக்குறையை சமாளிக்கவே இந்த வரிவசூல் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.  2023-ஆம் ஆண்டில் மட்டும் ரூ.2.14 லட்சம் கோடி அளவிலான வங்கிக்கடன்களை, வராக்கடன் என்ற பெயரில் ரத்து செய்வதாக மோடி அரசு அறிவித்துள் ளது. இருந்தாலும், பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் கலால் வரியையோ தீர்வையையோ அல்லது கூடுதல் வரிகளையோ குறைப்பதற்கு அது தயாராக இல்லை.  இது ஏழைகளின் மீது சுமைகளை சுமத்தி பணக்கா ரர்களுக்கு மேலும் சலுகைகளை வழங்கும் மோசடிக் கொள்கை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. 

சமையல் எரிவாயு 

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போவதன் மூலம் மோடி அரசு சாதாரண மக்களின்மீது மிக மோச மான தாக்குதலைத் தொடுத்து வருகிறது. மோடி அரசு 2014-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபோது, ரூ.450ஆக இருந்த 14.2 கிலோ எடைகொண்ட ஒரு சிலிண்டரின் விலை இப்போது ரூ.1100-க்கும் மேலாக உள்ளது. தற்சமயம் ரூ.200 குறைப்பதாக அறிவித்தி ருப்பது, 5 மாநிலத் தேர்தல் வருவதால் மேற்கொள் ளப்பட்டுள்ள போலி நாடகமே ஆகும்.

பணவீக்கம் '

புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி நுகர்வோர் விலை குறியீட்டெண் கொண்டு அளவி டப்பட்ட இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 2023 ஜூலையில் கடந்த 15 மாதங்களிலேயே மிக உயர்வாக 7.44 சதவீதமாக அதிகரித்தது. இந்த ஆண்டு ஜூனில் அது 4.81 சதவீதமாக இருந்தது என்பதும் கவனிக்கத் தக்கது. 

சிபிஐ (எம்) மத்தியக்குழு வெளியிட்டுள்ள  பிரச்சார அறிக்கையில் இருந்து