தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் அமைச்ச கத்தின் கீழ் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் தமிழகம் முழுவதும் 101 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 320 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல் பட்டு வருகின்றன. இதன் மூலமாக ஆண்டுதோறும் சுமார் 20,000 பயிற்சியாளர்கள் தேர்ச்சி பெறுகி றார்கள். தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் நாட்டின் மற்ற மாநி லங்களை விட முன்னேறி இருப்பதற்கும், வெளி நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட ஆர்வம் காட்டுவதும், இம்மாநிலத்தில் நல்ல திறன் மிக்க தொழிலாளர்கள் இருப்பதால்தான் என்பதை தமிழ்நாடு அரசும், தொழிலாளர் நலன் அமைச்சக மும், நாமும் அறிவோம். அதற்கு மிக முக்கிய பங்காற்றி வருவது தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலை யங்கள். அதுமட்டுமின்றி இங்கு பயிற்சி பெறும் பயிற்சியாளர்கள் திறன்மிக்க தொழிலாளர்களாக நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு நிறுவனங் கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில், உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருவதுடன் உள்நாட்டிலேயே சுய தொழில் வல்லுநர்களாக உருவாகி வேலைவாய்ப்புக்களை உருவாக்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறார்கள்.
இதற்கு மிக முக்கியக் காரணம் அரசு இதன் முக்கியத்துவம் அறிந்து பல்வேறு புதிய, புதிய திட்டங்க ளை உருவாக்கி வருவதுடன், இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் கிராமப்புற மற்றும் ஏழை, எளிய பயிற்சியாளர்களுக்கு பல்வேறு உதவிகளை இலவச பாடப்புத்தகம், வரைபட கருவிகள், சைக்கிள், மடிக்கணினி, காலணி, சீருடை அதுமட்டுமின்றி பயிற்சியாளர்கள் அனைவருக்கும் மாத உதவித் தொகை ரூ.750 அனைத்து தரப்பினருக்கும் பாரபட்ச மின்றி வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி பயிற்சி முடித்து செல்லும் பயிற்சியாளர்களுக்கு அவர்கள் உடனடியாக தொழில் செய்திட கருவிகள் அடங்கிய பெட்டகம் வழங்கி யாருடைய உதவியுமின்றி சுயமாக தொழில் செய்திட பயிற்சியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மிகுந்த கட்டமைப்பு வசதிகள், இயந்திரத் தளவாடங்கள் கொண்டு 1965 முதல் இயங்கி வருகின்றன. இந்நிலையில் காலா வதியான இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் கொஞ்சம், கொஞ்சமாக புனரமைக்கப்பட்டு, புதிய இயந்திரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், காலத்திற்கேற்ற வகையில்புதிய தொழில் பிரிவுகளை உருவாக்கி தொழில் துறைகளின் தேவைக்கேற்ற வகையில் திறன்மிகு பயிற்சியா ளர்களை உருவாக்கி வருகிறது. இதுபோன்ற முன் னேற்றமான தொடர் முயற்சியின் காரணமாக ஏழை, எளிய மாணவர்களின் நம்பிக்கையான மற்றும் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதமான படிப்பான ஐடிஐ விளங்கி வருகிறது.
4.0 தரம்
தமிழ்நாட்டில் 71 அரசினர் தொழிற்பயிற்சி நிலை யங்களை 4.0 தரத்திற்கு உயர்த்திட தமிழக அரசு ரூ.2483 கோடி ஒதுக்கீடு செய்து Manufacturing process control&automation, Mechanic Electrical Vehicle, Basics design and Virtual verification, Advanced Manufacturing போன்ற புதிய, புதிய பிரிவுகள் உருவாக்கப்பட உத்தரவிடப்பட்டு அதற்கான பணிகள் கடந்தாண்டு ஆரம்பித்து வருகிற கல்வி ஆண்டு முதல் சேர்க்கை ஆரம்பிக்கப்படவுள்ளன. ஒன்றிய அரசின் Ministry of Skill Development and Entrepreneurship அமைச்சகத்தின் Direct erate General of Training இயக்ககத்தின் கீழ் பாடத் திட்டம், தேர்வு முறை, சான்றிதழ் என மத்திய அரசின் பாடத் தொகுப்பில் செயல்பட்டு வருவதால், சமீப காலமான ஒன்றிய அரசின் புதிய பாடத்திட்ட அமலாக் கத்தினால் இத்துறை ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறுபட்ட பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளது.
பாடத்திட்டங்கள் குறைப்பு
இப்பயிற்சி செய்முறை (Practical) பாடத் திட்டத்திற்கு முழு முக்கியத்துவம் கொடுக்கும் வகை யில் பாடத்திட்டமும் நேரமும் வரையறுக்கப்பட்டுள் ளன. ஆனால் தற்போது செய்முறை பயிற்சிக்கான நேர அளவு குறைக்கப்பட்டுள்ளன. ஐடிஐகளில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்கள் பயிற்சி முடித்தவுடன் எவ்வித தயக்கமுமின்றி சுய தொழில் தொடங்குவதற்கும், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் தொழில் புரிவதற்கும் பிரதா னமான காரணம் இப்பாடத்திட்டத்தில் செய்முறை மற்றும் கணித, அறிவியல் மற்றும் வரைபடம் இணைந்து சொல்லிக் கொடுக்கப்பட்டு வருவதால் அறிவியல் பூர்வமாக சிந்திப்பதும், கணக்கீடு செய்வ தும், அதை செய்முறையில் பயன்படுத்துவதும் அவர்க ளுக்கு இயல்பாக அமைந்துவிடுகிறது. இதுவே இத்துறையில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகும். ஆனால், தற்போது ஒன்றிய அரசு Workshop Calculation and Science மற்றும் Engineering Drawing போன்ற தனித்தனி பாடங்களை குறைத்தும், பயிற்சி நேரம் குறைத்தும் மதிப்பெண்களை குறைத்து (4 Mark வாங்கினால் Pass) அதை கருத்தியல் (Theory) பாடத்தோடு இணைத்தது, கணினி வழி தேர்வு முறையை அமல்படுத்தியது, தேசிய திறன் தகுதி மதிப்பை (NSQF level) குறைத்துள்ளது. மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு திறன்மிகு தொழிலாளர்களுக்கு தேவையான பாடங்களை குறைத்து அதற்கான மதிப்பெண்களையும் குறைத்து தனிப்பாடமாக இருந்து கணிதம் மற்றும் அறிவியல், வரைபடம் போன்ற பாடங்களை கருத்தியல் பாடத்து டன் இணைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 2022 வரை நடைமுறையில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள பாடத்திட்டம்
இருந்த பாடத்திட்டம்
பாடங்கள் அதிகபட்ச தேர்ச்சி பாடங்கள் அதிகபட்ச தேர்ச்சி
மதிப் மதிப் மதிப் மதிப்
பெண்கள் பெண்கள் பெண்கள் பெண்கள்
Trade Trade
Practical 250 150 Practical 250 150
Trade Trade
Theory 100 40 Theory 76 25
Engineering Engineering
Drawing 50 20 Drawing 12 4
Workshop Workshop
Calc& Calc&
Science 50 20 Science 12 4
Employa Employa
bility Skill 50 17 bility Skill 50 17
Total Total
Marks 500 247 Marks 400 200
இதுபோன்ற பாடக்குறைப்புகள் மேற்கண்டபடி ஐடிஐகளில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களின் திறன் களை குறைப்பதற்கு காரணமாக அமைந்துவிடுவ தோடு சுயமாகத் தொழில் துவங்கும் திறனை இழக்கும் நிலையை உருவாக்கிவிடும்.
தமிழ்வழிக் கல்விச் சான்று
இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்கள் கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்கள். அவர்களில் பெரும்பாலானோர்கள் பள்ளி இறுதித் தேர்வு வரை அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள். ஐடிஐ படிப்பின்போ தும் அரசு வழங்கும் இலவச பாடப்புத்தகங்கள் அனைத்தும் தமிழ்வழியிலேயே பெறப்பட்டு தமிழ் வழியிலேயே படித்து வருகிறார்கள். பயிற்சி இறுதியில் தேர்வு எழுதும் போதும் தமிழ் கேள்வித்தாள்களா லேயே வினாத்தாள்கள் வழங்கப்பட்டு தமிழி லேயே தேர்வும் (கணினி முறையில்) எழுதுகிறார்கள். ஆனால் சான்றிதழ் வழங்கும் போது தமிழ்வழிக்கல்வி சான்று வழங்கப்படாததால் ஒன்றிய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்காக செல்லும் போது அதற்கான உரிய இடஒதுக்கீடு பெற இயலாமல் மறுக்கப்படுகிறார்கள்.
காலிப் பணியிடங்கள்
இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியா ளர்களுக்கு ஒட்டு மொத்தமாக பாடம் நடத்தும் நடைமுறைக்கு மாறாக ஒவ்வொரு பயிற்சியாளர்களும் தனித்தனியாக செய்முறை பயிற்சி பெறும் வகையில் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தளவாடங்களில் தினமும் 5 மணிநேரம் செய்முறைப் பயிற்சி வழங்கப் பட்டு வருகிறது. இது போன்ற செய்முறைப் பயிற்சியின் போது பயிற்சியாளர்களின் உடன் இருந்து விபத்து ஏற்படாதவாறு, இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தள வாடங்கள் பழுது ஏற்படாதபடி பயிற்றுனர்கள் உடன் இருந்து செய்முறை பயிற்சி அளிக்க வேண்டியுள் ளது. இதனால் பயிற்சியாளர்கள் திறன் மேம்படு கிறது. தற்போது இத்துறையில் முதல்வர் உட்பட திறன்மிகு உதவியாளர் வரை அதிகப்படியான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில் அதனால் பயிற்சியின் தரம் கேள்விக்குறியாகியுள்ளது.
கணினி முறை தேர்வு
இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்கள் பயிற்சி இறுதியில் தேர்வு எழுதும் நிலையில் கணினி முறையில் தேர்வு எழுதும் நடை முறை கடந்த சில ஆண்டுகளாக அறிமுகப்படுத்தப் பட்டு வருகிறது. செய்முறைப் பயிற்சியில் கருவிகளைக் கொண்டு செய்வதும், இயந்திர மற்றும் மின்னியல் போன்ற வரைபடங்களை வரைந்து தங்கள் திறனை வெளிப்படுத்தப்படவேண்டிய நிலையில், தொழில் திறன் சார்ந்த கணித பாடங்களை கற்று தேர்வு எழுத வேண்டிய நிலையில் இவை அனைத்தையுமே சரியா (அ) தவறா என தேர்வு செய்யும் முறையில் இருப்பது பயிற்சியாளர்களின் திறமையை பரிசோதிக்க ஏற்றதாக இல்லாத நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன் பாக இருந்த என்ஐஎம்ஐ (NIMI) தேர்வு முறையை அமல்படுத்தினால் இப்பயிற்சியின் திறன் அதிகரிக்க முடியும்.
முதல்வர் பதவி உயர்வு
பல்வேறு மாநிலங்களில் இத் தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்து முடித்து பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தோடு பல்வேறு பிரிவுகளில் பயிற்றுனர்களாக பணியாற்றி முதல்வர் பதவி வரை பதவி உயர்வு பெற்று பணி யாற்றி வருகிறார்கள். ஆனால் நாம் உருவாக்கிய திறன்மிகு பயிற்சியாளர்களை நாமே மறுப்பது போல தமிழ்நாட்டில் இப்பயிற்சி நிலையங்களில் பயின்ற, தொழில் அனுபவம் பெற்று பணியில் சேர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் நிலையில் கூட, பாரபட்சத்தோடு முதல்வர் பதவி உயர்வு வழங்கா மல் மறுக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட கருத்துக்களுக்கு தக்க நடவடிக்கை களை நடைபெறுகிற பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழ் நாடு அரசு எடுக்கும் பட்சத்தில் மேலும் மாநிலம் இத்துறையில் முதன்மையாக விளங்கிட வழிவகுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கட்டுரையாளர்கள்: தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர், பொதுச் செயலாளர்