தமிழ்நாடு அரசு கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட எல்லைக்குள் 1972 வன விலங்கு சட்டம் 26ஏ (11) (பி)ன் படி காவிரி தெற்கு வன உயிரியல் சரணால யம் அமைப்பதற்கான அறிவிப்பை சட்டமன்றத்தில் 25.04.2022 அன்று வெளியிட்டது. இந்த சரணாலயம் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி தாலுக்கா, தருமபுரி மாவட்டம் பென்னாகரம், பாலக்கோடு தாலுக்காகளில் சுமார் 686.405 சதுர கி.மீ. பரப்பளவில் அமையும். இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள காப்புகாடுகள் சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளன. காவிரி வடக்கு உயிரியல் சரணாலயத்தையொட்டி மாதேஸ்வரா வன விலங்கு சரணாலயம், கர்நாடகா வின் பில்லிகிரி ரங்கசாமி கோவில் புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் தமிழ்நாட்டின் ஈரோடு வனப்பிரிவு ஆகியவற்றின் மூலம் இந்த நிலப் பரப்பு நீலகிரி உயிர்க்கோள காப்பகத்திற்கு மேலும் தொடர்ச்சியாகும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சரணாலய எல்லைக்குள் இரண்டு முக்கிய மான யானை வழித்தடங்கள் உள்ளன. அவை நந்தி மங்கலம் - உலி பண்டா நடைபாதை மற்றும் கோவைப் பள்ளம் - அனேபித்தவரல்லா காரிடார் ஆகியவையாகும்.
இந்த கட்டமைப்பின் மூலம் 35 வகை பாலூட்டி கள், 238 வகை பறவையினங்கள் பாதுகாக்கப்படவும், பல்லுயிர் பெருக்கம் மற்றும் காவிரிக்கரையில் மட்டுமே வாழும் சில வகையான மீன்கள், நீர்நாய்கள், முதலை கள் உள்ளிட்ட அரிய இனங்கள் அழிவிலிருந்து பாது காக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் அமைக்கப்பட்ட வன விலங்கு சர ணாலயத்தில் கடந்த சில பத்தாண்டுகளில் பல மடங்கு புலிகள் உள்ளிட்ட உயிரினங்கள் பெருகியுள்ளதாகவும் இதன் நீட்சியாக இப்பகுதியிலும் பெருகும் எனவும் இது சிறுத்தைகள் உள்ளிட்ட பிற சிவப்பு பட்டியலி டப்பட்ட பெரிய மாமிச உண்ணிகளை பாதுகாத்திடவும், வாழ்விட மேம்பாட்டுடன் இரையின் தளத்தை மீட்டெ டுக்க வழிவகுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மனிதர் - யானை மோதலை தவிர்க்கும் எனவும் அறிவிக் கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டப்பகுதிக்குள் 165 கிராமங்கள் அமைந்துள்ளன. வனத்தையொட்டி இருளர் உள்ளிட்ட பழங்குடி மக்களும் கிராம மக்களும் வசித்து வரு கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலந்தொட்டு காவிரி ஆற்றையொட்டி பட்டிகள் அமைத்து ஆடுகளும், நாட்டு மாடுகளும் மேய்ச்சல் செய்யப்படுகிறது. வனங்களில் சிறு மகசூல் சேகரிப்பில் பெண்களும், மக்களும் பெரு மளவு ஈடுபட்டு வருகின்றனர். வன ஓரங்களில் பாரம்பரி யமாக கிராம மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
அச்சுறுத்தல் - விரட்டியடிப்பு
தற்போது வனத்துறையினர், திட்ட எல்லை முழுவதும் பெரிய அளவு ரோப் அமைத்து வேலி யிட்டு வருகின்றனர். எதிர் காலத்தில் மொத்த மக்களை யும் தாங்கள் காலங்காலமாக குடியிருந்து, விவசாயம் செய்து, மேய்ச்சல் சிறு மகசூல் சேகரிப்பு உள்ளிட்ட வாழ்வாதாரத்தை பறித்து கிராமங்களை விட்டு அகதிகளாக வெளியேற்ற முயற்சிக்கின்றனர். பட்டி அமைத்து முகாமிட்டு ஆடுமாடுகள் மேய்த்ததை தோட்டா வெடித்து விரட்டுகின்றனர். விவ சாயிகளின் குடிசைகளுக்கு தீ வைத்து, விவசாயிகளின் மீது பொய் வழக்கு போடுகின்றனர். தற்போது 1500 வகை யான பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களையும், சிறுத்தை கள் உள்ளிட்ட வன விலங்குகளையும் மக்கள் வசிக்கும் பகுதியையொட்டி விட்டு மக்களை அச்சுறுத்தும் நட வடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெருங்காடுகள் இல்லா பகுதி
தற்போது ஒசூருக்கு தெற்கே வனச்சரணாலயம் அமையும் பகுதியில் சுமார் 40,000 கிராம மக்கள் வசிக்கும் 165 குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகள் முழு வதும் இடைவெளிவிட்டு சின்னஞ்சிறு காடுகள் உள்ள வையாகும். இங்கு பெருங்காடுகள் இல்லை. பெரிய அளவிலான வன விலங்குகள் வாழும் சூழலும் இல்லை. வறட்சிக் காலத்தில் கர்நாடக பகுதிகளிலிருந்து தண்ணீர், உணவு தேவைக்காக யானை உள்ளிட்ட வன விலங்குகள் வந்து போகின்றன. இந்த பகுதியில் மான், காட்டுப்பன்றி போன்ற சில குறிப்பிட்ட விலங்குகளே வசிக்கின்றன. மேலும் வருடம் முழுவதும் காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வரத்து உள்ளதால் ஆற்றைக் கடந்து விலங்குகள் வருவதில்லை.
சுற்றுச்சூழல் அழிப்பு
ஏற்கனவே ஒகேனக்கல் போன்ற சுற்றுலா மையத்திற்கு தினசரி பல்லாயிரம் பேர் வந்து செல்கின்றனர். மேட்டூர் அணையில் மீன்வளத்துறை மூலம் ஆண்டு தோறும் சுமார் 10 கோடி வளர்ப்பு மீன் விடுவதால் பாரம் பரிய மீன் இனம் அழிந்து விட்டது. காவிரிக்கரையில் நீர் நாய், முதலைகள் போன்ற அந்த பகுதியில் வாழும் இனங்களும் அழிந்து போயுள்ளன. வனத்துறையின் கெடுபிடியால் கால்நடைகள் மேய்ச்சல் தடைபட்டு ஒட்டு மொத்த நாட்டு மாட்டு இனமே அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. காலங்காலமாக ஆடுமாடுகள் வனத்தில் மேய்ப்ப தால் புல்வளர்ச்சி குறைந்து, கால்நடை உரத்தால் பெரு மரங்களின் பெருக்கமும், காடுகள் வளர்ச்சியும் ஏற்படு கிறது. கால்நடை மேய்ப்பவர்கள் சிறுமகசூல் சேகரிப்ப வர் மூலமே வனங்களின் உட்பகுதி வன விலங்குகள் நடமாட்டம், அவைகளுக்கான நீர் நிலைகள் உணவு தேவைகள் உள்ளிட்டவை கண்டறிந்து பாதுகாக்க முடியும். வன விரிவாக்கம் என்ற பெயரால் வேலிகள் அமைத்து மக்களை விரட்டி, வெளியேற்றி வாழ்வா தாரம் பறிப்பது ஏற்புடையதல்ல.
அரசு செய்ய வேண்டியது
காடுகளைப் பெருக்குவ தும், வன விலங்குகள் பாது காக்கப்படுவதும்,பல்லுயிர் பெருக்கமும் சமூகத்திற்கு ஏற்புடையதே. ஆனால் காலங் காலமாக வனங்களிலும், அதை யொட்டியும் வாழ்ந்த மக்க ளால்தான் இவை பாதுகாக்கப் பட்டது என்ற வரலாற்று உண் மையை உணர வேண்டும். எனவே,
K அரசு வன விரிவாக்கம் குறித்தும் திட்டம் குறித்தும் இங்கு வசிக்கும் மக்களிடம் விளக்கிடவும், கருத்து கேட்பு கூட்டங்களையும் நடத்திட வேண்டும்.
K பூர்வீகமாக விவசாயம் செய்து, குடியிருப்ப வர்களுக்கு 2006 வன மசோதா சட்டப்படி அனுபவ பட்டா, குடிமனை பட்டா வழங்கிட வேண்டும்.
K பாரம்பரியமாக காடுகளில் கால்நடைகள் மேய்ப்ப வர்களுக்கு பட்டி பாஸ் மற்றும் மேய்ச்சல் பாஸ் வழங்க வேண்டும். வனத்தையொட்டி 3 கி.மீ. மேய்ச்சல் உரிமை என்பதை அமலாக்க வேண்டும்.
K வன ஓரங்களில் விவசாயம் செய்து வருபவர்களை வெளியேற்றக் கூடாது.
K காடுகளில் சிறு மகசூல் சேகரிக்க 2006 வன மசோதா சட்டப்படி அனுமதிக்க வேண்டும். காட்டிற்குள் சென்று வர விவசாயிகள் பயன்படுத்தும் பாரம்பரிய பாதைகளை அடைக்கக் கூடாது.