articles

img

மீண்டும் கொந்தளிப்பில் டெல்டா விவசாயிகள் - ஆரூரான்

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் மற்றும்  ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த காலங்க ளில் ஒன்றிய அரசு திட்டமிட்டது அதற்கு  விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த னர்.  தொடர்ந்து பொதுமக்களும், விவசாயிகளும் தீவிர போராட்டங்களை நடத்தியதால் கடந்த அதிமுக ஆட்சி யில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்ட லமாக காவிரி டெல்டா மாவட்டங்கள் அறி விக்கப்பட்டன. அவ்வாறு அறிவிக்கப் பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்ட லத்தில் வேளாண் தொழில்களை பாழ்  படுத்தும் வகையில் எந்த செயல்பாடு களையும் மேற்கொள்ள கூடாது என்று தமிழ்நாடு அரசும் தடை விதித்து அர சாணையும் வெளியிட்டுள்ளது. அதே போல் நிலக்கரி படுகை மீத்தேன் திட்டத்  திற்கு தஞ்சை,திருவாரூர் மாவட்ட ஆட்சி யர்கள் கடந்த 2015ம் ஆண்டில் பிறப்பித்த நிரந்தர தடையும் இப்போது வரை தொடர்கிறது.  இந்த பின்னணியில் டெல்டா மாவட் டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க திடீர் திருப்பமாக ஒன்றிய மோடி அரசு ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்  பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழக்குறிச்சி ஆவிக்கோட்டை, அண்டமி, மோகூர்,  கருப்பூர், பரவாத்தூர், கண்ணுக்குடி, கொடியாலம், வடசேரி; திருவாரூர் மாவட்டத்தில் மகாதேவபட்டினம், உள்ளிக்கோட்டை, கண்டிதம்பேட்டை, கண்ணாரபேட்டை, கூப்பாச்சிகோட்டை, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை; அரியலூர் மாவட்டம் உடையார்பாளை யம் தாலுக்காவில் மைக்கேல்பட்டி, கட லூர் மாவட்டம் புவனகிரி தாலுகாவில் சேத்தியாதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு அழைப் பாணை வெளியிட்டிருப்பது டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும்  கலக்கத்தையும் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விவசாயிகளுக்கும்,விவசாயத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.திமுக அரசு பொறுப்பேற்ற உடன் விவ சாயிகளின் வளர்ச்சிக்காகவே தனி பட்  ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு வரு கிறது.  இந்த பிரச்சனையில் தமிழ்நாடு முத லமைச்சர் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் ஏல அறிவிப்பை தடுத்து நிறுத்த வலி யுறுத்தி ஒன்றிய மோடி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி யில் 60% க்கும் அதிகமாக நிலக்கரி யையே நம்பி இருக்க வேண்டியுள்ளது உண்மைதான்; இதற்கான நிலக்கரி உள்நாட்டில் போதிய அளவில் இல்லை என்பதும் உண்மைதான். ஒவ்வொரு ஆண்டும் 20கோடியே 80லட்சம் டன் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. இதற்காக 2022ம் நிதியாண்டில் 2லட்சத்து 30ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியா அந்நி யச் செலாவணியை இழந்தது. நிலக்கரி  இறக்குமதி செலவுகளைக் குறைக்கவும், புதிய நிலக்கரி வயல்களை கண்டுபிடிக்  கும் நோக்கிலும்,இந்திய புவியியல்  ஆய்வு மையம் பல ஆண்டுகளாக, நிலக கரி படிமங்கள் தொடர்பான அகழ்வு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.  இதன் படி 2011ம் ஆண்டு பிப்ரவரியில்  நடந்த ஆய்வில் தமிழகத்தின் பல இடங்க ளில் நிலக்கரி படிமங்கள் கண்டயறிப்  பட்டன. இதன் தொடர்ச்சியாகவே இப்  போது ஏல அறிவிப்பு வெளியாகியுள்ள தாக சொல்லப்படுகிறது. 

உலகின் வளர்ந்த நாடுகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக நிலக்கரியை எரித்த தால் வெளியான சாம்பல் துகள்கள் வெளி யேற்றிய கார்பன் வாயு ஆகியவை சுற்றுச்  சூழலை மிக கடுமையாக பாதித்துள்ளது.  இதனால் நிலக்கரி பயன்பாட்டை குறைத்து தூய்மையான எரிசக்தி உற் பத்தியை முன்னெடுக்க வேண்டுமென்று உலக நாடுகள் முடிவுக்கு வந்துள்ளன.  இந்தியாவில் நிலக்கரி பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கையை ஒன்றிய  மோடி அரசு மேற்கொள்ள வேண்டும். மொத்த எரிசக்தியில் 50% புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யவும் நிகர கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜிய  சதவிகிதமாக மாற்றும் முயற்சியை எடுக்க  வேண்டும். இதனடிப்படையில் சூரிய ஆற்  றல் மற்றும் காற்றாலை மின்னாற்ற லுக்கு ஒன்றிய மோடி அரசு அதிக முன்னு ரிமை கொடுக்க வேண்டும்.அப்போது தான் விவசாயிகளின் வாழ்வாதாரமான நெல் உற்பத்தி செய்யப்படும் சாகுபடி  நிலங்கள் பாதுகாப்பாக இருக்கும். உணவு பாதுகாப்பையும், கிராமப்புற மக்  களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும்.

- ஆரூரான்